Author Archives: Suryadevan

பிரிவு 19(1)(a) & திரைப்படம் 19(1)(a) – 2022

Article 19(1)(a) in The Constitution Of India 1949 – to freedom of speech and expression

எழுத்து உரிமைக்கும் கருத்துரிமைக்கும் பாதுகாப்பு அளிக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டம், அதனை அச்சிட்டு பிரசுரம் செய்யும் உரிமைக்கும் தனியே ஒரு பாதுகாப்பு சட்டம் கொண்டுவர வேண்டுமோ என்கிற எண்ணத்தை வலியுறுத்தும் ஒரு உண்மை நிகழ்வும் ஒரு நிழற்படமும்மாய் கெளரி லங்கேஷும் 19(1)(a)வும்.

Chief editor Gauri Lankesh (55)

இந்தத் திரைப்படம் பெங்களூரில் 2017 செப்டம்பர் 5ல் நடத்தப்பட்ட பெண் பத்திரிக்கையாளரான கெளரி லங்கேஷ் (வயது 55) அவர்களின் படுகொலையை கருவாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதனை குறிக்கவே விஜய் சேதுபதியின் பெயர் ‘கெளரி சங்கர்’ என கொண்டு வரப்பட்டது. (‘சங்கர்’ என பெயரிட்டதற்கும் உடுமலைப்பேட்டையில் 2016 மார்ச் 16ல் பட்டப்பகலில் வெட்டிக்கொல்லப்பட்ட கெளசல்யாவின் கனவர் ‘சங்கர்’-கும் தொடர்பு உள்ளதா என்று சரியாகத் தெரியவில்லை. அது கெளரவக் கொலை என்பது குறிப்பிடப்பட்டது.) கெளரி லங்கேஷ் ஒரு பெண் பத்திரிக்கையாளர் மட்டுமல்ல அவர் மனித உரிமைச் செயற்பாட்டாளரும் ஆவார். இவர் ‘கெளரி லங்கேசு பத்ரிகே’ என்ற கன்னட வார இதழின் தலைமையாசிரியர். இவரது அப்பா P.லங்கேஷ் அவர்கள் தொடங்கிய பத்திரிக்கை அது. கெளரி லங்கேஷ் அவர்கள் இந்துத்துவா அவர்களுக்கு எதிராக அவரது பத்திரிக்கையில் எழுதிவந்ததினால், மர்ம நபர்கள் இருவர் அவரது வீட்டிற்கு வந்து அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

இப்படத்திலும் கெளரி சங்கரை மர்ம நபர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில் வந்து சுட்டுக் கொல்கின்றனர். அதே அதிகாலை நேரம் அது. படத்தில் சங்கரைக் கொன்ற இடம் தருமபுரி மாவட்டம். தன்னை நோக்கி துப்பாக்கியை நீட்டும் போது கூட அவர் ஒரு சின்ன புன்னகையோடு தோட்டாக்களை பெற்றுக்கொள்வதாக காட்சியமைக்கப்பட்டிருக்கிறது.

கெளரி லங்கேஷ் அவர்கள் திருமணமாகி விவாகரத்தும் ஆனவர். குழந்தைகள் யாரும் இல்லை. சமூகத்தில் நடக்கும் அடக்குமுறைகளை அநியாயங்களை மக்களுக்கு எடுத்துரைக்கும் உண்மையான journalist-ஆக வாழ்ந்து வந்தார். திரைப்படத்திலும் கெளரி சங்கர் (விஜய் சேதுபதி) அவர்களை தனிமையான ஆளாகத்தான் காட்டுவார்கள். தன் ஜன்னலில் இருக்கும் சிலந்தி வலையைக் கூட அவர் சுத்தம் செய்ததாகத் தெரியவில்லை. ஆனால் தெருவில் கிடக்கும் ஒரு குப்பையை எடுத்து குப்பையில் போடுகிறார். சமூகத்தின் மீதுள்ள அக்கறையும் அன்பும் தன்மீதுகூட இருந்ததில்லை என்பது போன்ற காட்சியமைப்புதான். இதை மனதில் வைத்து எடுத்தார்களா என்று தெரியவில்லை. ஆனால் அவ்வாறே அமைந்து போனது.

இப்படத்தின் நாயகி பெண்குட்டி (நித்யா மேனன்), கேரளாவில் தன் அப்பாவின் ஜெராக்ஸ் கடையை நடத்தி வருகிறார். தனது அப்பா தொடங்கிய கடையை, அம்மாவின் இறப்பிற்கு பிறகு அவர் சரிவர பார்த்துக்கொள்ளாததால், பெண்குட்டியே எடுத்துக்கொள்கிறார். யாருடைய எதிர்பார்ப்பையும் ஏமாற்றிவிடாக்கூடாதென தன்னுடைய ஆசை எண்ணம் யாவற்றையும் பொருட்படுத்தாமல் வாழும் இந்தியப்பெண்கள் பெரும்பாலானோரது பிம்பமே இப்பெண். அதனாலோ என்னவோ இப்படத்தில் இவளது பெயர் இதுவென குறிப்பிட படவில்லை. இப்படத்தில் வரும் இசைகள் இப்பெண்குட்டியின் இதயத்துடிப்பாக எண்ண ஓட்டத்தின் இனிய சப்தமாக, அவளது உணர்வுகளை நம் மனதிற்கு கடத்தி விடுகிறது. உண்மையில் படத்தின் நாயகன் இசைதான். படம் மெதுவாக நகர்வதாக இருந்தாலும் தேவையான நேரம் கொடுத்தால்தான் பார்வையாளர்களின் மனதில் இப்பெண்குட்டியின் மனப்போராட்டம் சென்றடையும் என்ற முடிவு சரியானாதாகவே நம்புகிறேன்.

இப்படத்தின் திருப்புமுனையான ஒரு காட்சி. எழுத்தாளர் கெளரி சங்கர் (வி.சே.) தான் எழுதிய ‘கருப்பு’ என்னும் புத்தகத்தை நகல் எடுப்பதற்காக இப்பெண்குட்டியின் கடைக்கு வருகிறார். அதை நகல் எடுக்க சொல்லியும் அன்றிரவு வந்து வாங்கிக்கொள்வதாகவும் சொல்லிவிட்டு கிளம்புகிறார். கடைசியாக அப்பெண் கேட்கிறாள், பைண்டிங் பண்ணவா இல்ல ஸ்பைரல் போடவா என்கிறாள். கெளரி சங்கர், “உங்க இஷ்டம் போல பண்ணுங்க” என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். அவரது பணி எழுதுவது அதை என்ன செய்ய வேண்டும் என்பது இச்சமூகமே முடிவு செய்யட்டும் என்பதாகவே என் காதுகளில் விழுகிறது.

அதன் பிறகே அவர் கொல்லப்பட்டார். அவர் கைப்பட எழுதிய ‘கருப்பு’ எனும் புத்தகமும் அதன் நகலும் அப்பெண்குட்டியினிடமே இருந்துவிடுகிறது. கடைக்கு வந்து நகலெடுக்க சொன்னவர் யாரென்றே தெரியாத பெண்குட்டி அவரது இறப்புக்கு பின்பே அவரைப்பற்றியும் அவரது எழுத்துக்கள் பற்றியும் தெரிந்து கொள்கிறாள். இச்சமூகம் இறந்தபிறகுதான் ஒருவருக்கு மாலையிட்டு மரியாதை செய்கிறது. சிலை வைக்கிறது. வாழும் பலரையும் கொண்டாட மறந்துவிடுகிறது. பலரது படைப்புகளையும்கூட மறந்துவிடுகிறது.

அவரை தெரிந்து கொள்ளும் பயனத்தில் சமூகத்தில் சத்தமில்லாமல் கிடக்கும் பல கேள்விகளையும் அடையாளம் கண்டுகொள்கிறாள். தன் சகோதரியிடமும்கூட அவளது கேள்விகேட்கத் தயங்கும், தன் கருத்தை சொல்லாமல் தவிர்க்கும் மனப்போக்கை கண்டு சமூகம் எப்படி கேள்விகளுக்கும் அதை எழுப்பும் குரல்களுக்கும் பூட்டு போட்டுள்ளது என சாட்சி படுத்திக்கொள்கிறாள். அவ்வப்போது காட்டப்படும் கருப்புக்கொடியும் கம்யுனிசக் கொடியும் சொல்லாமல் நிறைய சொல்லிவிட்டுப்போகின்றன.

ஆற்றோடு மிதந்து வரும் ஏதோ ஒரு பறவையின் இறகை தன் மேசைவரை கொண்டு வந்து வைத்துக்கொள்கிறாள் அப்பெண்குட்டி. கெளரி எழுதிய பிற புத்தகங்களுக்கும் அப்படிதான் அவள் தன் மேசையில் இடம் கொடுக்கிறாள்.

இப்படத்தின் ஒரு காட்சியில் கெளரியின் வீட்டிற்கு மர்ம நபர்கள் தீ வைத்து விடுவார்கள். வீட்டுக்கு வந்த கெளரி பதறிப்போய் தேடுவது தான் எழுதிய புத்தகத்தின் தாள்களைத்தான். எதைவிடவும் தன் எழுத்துதான் முக்கியம் என இருக்கும் ஒரு எழுத்தாளர் தான் எழுதிய புத்தகத்தின் அசலை அப்பெண்ணிடம் நம்பிக்கையோடு கொடுத்துவிட்டுச் செல்கிறார். அப்பெண்ணும் அந்த நம்பிக்கையை வீணடிக்காமல் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்துவிடுகிறாள். அவள் இஷ்டம்போல செய்கிறாள். அதுவே சரியானதாக இருக்கிறது. எது சரியோ அதுவே எனது இஷ்டம் என்ற நிலைப்பாட்டிற்கும் வந்தடைகிறாள்.

எல்லாவற்றிற்கும் மேலாக “ஒரு எழுத்தாளருக்கு இந்த உலகம் என்ன தந்துவிடப்போகிறது?” என்ற கேள்விதான் “அவர் எழுத வேண்டுமா?“அப்படி எழுதினால் எதை எழுத வேண்டும்? ” போன்றவற்றை முடிவு செய்கிறது. நன்கு கவனித்தீர்களானால் ஒன்று புரியும். ஒரு எழுத்தாளர் இவ்வுலகுக்கு எவ்வளவோ தரலாம், பதிலுக்கு இவ்வுலகம் ஒரு எழுத்தாளருக்கு மரியாதையையும் வசதியையும் மட்டுமே தரவியலும். இதை உணர்ந்ததினால்தான் சில எழுத்தாளர்கள் கொடுக்கவல்ல இடத்தைவிட்டு விலக மறுக்கிறார்கள். ஒரு பத்திரிக்கை எழுத்தாளனை விலைக்கு வாங்கிவிட முடியாது. அப்படி வாங்க முடிந்தால் அவன் சாதாரன கதாசிரியராகத்தான் இருக்க முடியும். அப்படிப்பட்ட ஒரு சிறந்த நேர்மையான எழுத்தாளராகவும் ஒரு இயக்குனராகவும், நல்லதை கொடுக்கவல்ல இடத்தில் இருந்து பொறுப்புடன் திருமதி இந்து V. S. இப்படத்தை செதுக்கியுள்ளார்.

கெளரி சங்கரை கொலை செய்யும் மர்ம நபர்கள் வரும் இருசக்கர வாகனத்தின் ஒலி, படத்தின் இறுதியில் அப்பெண்குட்டி தன் கடையை அடைத்துவிட்டு வெளியே செல்லும்போதும் வரும். கெளரி சங்கரைக் கொன்ற போது வந்த அதே துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுவிடுமோ என்ற பதற்றத்தை அது தந்துவிடுகிறது. சத்தம் கேட்டதா இல்லையா என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். Hotstar-ல் படம் காணக்கிடைக்கிறது. தேட்டர் ரிலீஸ் ஆகியிருந்தால் நிச்சயமாக ஃப்லாப் லிஸ்டில் சேர்த்திருப்பார்கள். ஓடிடி என்பதால் இது மக்களுக்கு சென்றடைய போதுமான நேரம் எடுத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது.

விஜய் சேதுபதியின் பேச்சு இன்னும்கூட நன்றாக இருந்திருக்கலாம். க்ளைமேக்ஸ் இன்னும் வீரியமாக இருந்திருக்கலாம். இந்திய மசாலாப் படங்களைப் பார்த்து பார்த்து ஊறிப்போன மனதிற்கு இயல்பான இறுக்கட்ட காட்சிகள் சற்று சலூப்பூட்டுவதாகவே தோன்றுகிறது. இப்படத்தைப் போன்ற படங்கள் அதிகம் வரும் போது இந்த dramatic, cinematic எல்லாமும் மனதின் எதிர்பார்ப்புகளில் இருந்து குறைந்துவிடும்.

“ஒரு படத்தைக்காண்பவர் அப்படத்தில் என்ன காட்டப்படுகிறதோ அதைப் பார்ப்பதைக்காட்டிலும்ம் தான் என்ன நினைக்கிறோமோ அதைத்தான் காண்கிறார்.” – (இதைச் சொன்னவர் யாரென சரியாகத் தெரியவில்லை. மலையாள இயக்குநர் சனல் குமார் சசிதரன் சொல்லியதாக ஞாபகம். தெரிந்தவர்கள் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன்.)

-சூர்யா வாசு 10.00 pm 11-08-2022

பாலியல் தொழிலும் ஒரு தொழில்தான் – உச்சநீதிமன்றம்

பாலியல் தொழில் குற்றமல்ல என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சட்டம் அனுமதிக்கும் எல்லாமும் சரியும் அல்ல, சட்டம் தடைவிதித்த அனைத்தும் தீங்கும் அல்ல. குறிப்பாக பாலியல் தொழில் ஒரு குற்றமல்ல என்று கருதியிருக்கும் உச்ச நீதிமன்றம், இதில் உள்ள அனைத்து விளைவுகளையும் எண்ணி தொலைநோக்கு பார்வையுடன்தான் இந்த தீர்ப்பை வழங்கியிருக்க வேண்டும். இதன் ஒரு முனையை தொட்டால் இன்னும் பல பிரச்சனைகளும் இதில் சம்மந்தப்படும். இது ஒரு தனி பிரச்சனை அல்ல. பாலியல் தொழில் என்பது ஒரு சமூகம் நேர்த்தியாக செயல்பட முடியாமல் தோற்றுப்போனதற்கான முத்திரையாகவே நாம் புரிந்து கொள்ள வேண்டும். பாலியல் தொழில் சரியா தவறா தேவையா தேவையில்லையா என்ற முடிவுக்கு வரவேண்டுமென்றால் முதலில் வருங்கால சமுதாயத்தை நிரப்பவிருக்கும் மாணவர்களிடம் இருந்துதான் வரவேண்டும்.

வரும் தலைமுறையினரின் கல்வி:

ஏற்கனவே அரசு இயற்றியுள்ள புதிய கல்விக்கொள்கையினால் எத்தனை மாணவர்கள் மேற்படிப்புகளுக்கு செல்லப்போகிறார்கள் என்ற அய்யம் எனக்குண்டு. தொழில் முனைவோர்கள் நமது சமுதாயத்திற்கு வேண்டும்தான். ஆனால், கல்லூரி படிப்பினை முடிக்காமல் ஆரம்பிக்கும் ஒரு தொழிலை அவர்களால் எந்த உயரத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்று எண்ணிப்பாருங்கள். ஓயோ (oyo) நிறுவனர் போன்று உதாரணங்களை நம்மிடம் தூக்கிக்கொண்டு வந்து நிற்பார்கள். நம்பாதீர்கள். இந்த நூற்றாண்டில் மொத்தமே சில ஆயிரம் நிறுவனர்கள்தான் அப்படி கல்லூரி படிப்பை முடிக்காமல் மல்டி மில்லியனர் ஆக முடியும். பெரும்பாலான மாணவர்களுக்கு அது சாத்தியம் இல்லை.

இந்த புதிய கல்விக்கொள்கை நிறைய கூலிக்காரர்களையும் ஒப்பந்தத் தொழிலாலர்களையும் ‘non skilled’ லேபர்ஸ் என்று சொல்லப்படும் தினக்கூலிகளையும்தான் உருவாக்கும். பிறகு அவர்களது தகுதி அதுதான் என்று நமக்கே புத்தி போதிக்கும். ஜாதிக்கொரு வேலை என்றாக்கி குடும்பத்தொழிலையே மகனும் மகளும் ஏற்றுக்கொள்ளும் நிலை வரும்.

கல்வி என்பது ஒருவனது தகுதியை மேம்படுத்ததானே தவிற, ஏற்கனவே ஒருவனது தகுதி இதுதான், ஒரு படிப்பினை படிக்கும் அளவிற்கு ஒருவன் தகுதியில்லாதவன் என்பது எத்தகைய கயமம் என்று எண்ணிப்பாருங்கள். டாக்டர் ஆவதற்கு ஒருவனுக்கு என்ன தகுதி வேண்டும் என்பது அதற்கான புத்தகங்களைப் படித்துப்பார்த்தப் பிறகுதான் அவனுக்கு பரிட்சை வைக்க வேண்டும். நீட் போன்ற தகுதித்தேர்வுகள் சற்றும் அறமற்றது.

மாணவர்கள் குடும்ப சூழல் காரணமாக வேலைக்கு செல்வது ஒரு கொடுமை என்றால், (அரசாங்கம் என்பது இந்த இடத்தில்தான் மாணவர்களுக்கு கை கொடுக்க வேண்டும். ஆனால்?) படிப்பதற்கு வழி இல்லை, சட்டம் இல்லை, வாய்ப்பு இல்லை, இடம் இல்லை என்பதற்காக வேலைக்கு போவது கொடுமையிலும் கொடுமை.

இப்படி பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான கதவுகளை அரசாங்கம் ஒவ்வொன்றாக மூட, மாணவர்களும் வேறு ஒரு பக்கம் திசை திருப்பப்படுகின்றனர்.

புடிச்சத பண்ணுஎனும் மாய மந்திரம்:

கடந்த இருபது ஆண்டுகளில் மாணவர்களின் காதுகளில் தேனாக வந்து விழும் வார்த்தை “புடிச்சத பண்ணு”.

எனக்கு இதில் வியப்பு என்னவென்றால் எல்லாருக்கும், சினிமா சம்மந்தப்பட்ட வேலைதான் பேசனாக புடிச்சதாக இருக்கிறது.

முதல் தேர்வாக போட்டோகிராப்பர், டைரெக்டர், ஆக்டர், யுடியூபர்.

இரண்டாம் தேர்வாக பாடகர், பாடலாசிரியர், கேமராமேன், எடிட்டர்.

ஒரு வித்தியாசத்தை மாணவர்கள் நன்கு உள்வாங்கிக் கொள்ள வேண்டும். I like one thing. I’m good at one thing. இரண்டும் ஒன்றாக இருக்கவேண்டிய கட்டாயம் ஏதும் இல்லை.

Self assessment test நிறைய மேற்கொள்ளுங்கள்.

கண்டிப்பாக உங்களுக்குள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட திறமைகள் ஒளிந்திருக்கக்கூடும், அதை தேடிக் கண்டு பிடியுங்கள். ஆனால், அதற்கான விலையாக உங்களது பட்டப்படிப்பை கொடுக்காதீற்கள். ஒரு வேளை உங்களுக்கு எந்த வாய்ப்பும் கிடைக்காமல் போய்விட்டால், நீங்க படித்த படிப்புதான் உங்களுக்கு கை கொடுக்கும்.

உங்களைப் பரவசமூட்டும் வேலைகளை கையில் எடுத்துக்கொண்டு இதுதான் என் திறமை என்று உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள்.

Humans can be easily manipulated thru movies.

Movie dialogues are not true. They are fantasy.

படிப்பது கடினம்தான். அதுவும் கவனமாகப் படிப்பது மிகக்கடினம்தான். அதற்காகத்தான் டாக்டர்கள் அதிகக்கட்டனத்தை வசூலிக்கிறார்கள். மருத்துவச்செலவை சற்று கவனியுங்கள். அவர்கள் கஷ்டப்பட்டு படித்ததற்கு சன்மானம் நாம்தான் வழங்கிக்கொண்டிருக்கிறோம்.

வேலை என்பது சற்றும் ரசமில்லாத, அலுப்பான, கடியான, தலைவலியான, வெறியேற்றக்கூடிய, எத்தகைய வேலையாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதை செய்வதன் மூலமாகத்தான் எனது குடும்ப சந்திக்கும் சிரமங்கள் குறையும் என்றால் நான் தாரளமாக அந்த வேலையை செய்வேன். ஆனால் அதில் அறம் இருத்தல் வேண்டும். காசுக்காக எதை வேண்டுமானலும் செய்யலாம் என்று போனால், ஜங்கில் ரம்மி, ரம்மி சர்கிள், போன்ற சூதாட்டத்தில்தான் நிற்போம். சூதாட்டத்தில் ஒருவனுக்கு மட்டுமே வெற்றி அவன் அந்த சூதாட்டத்தை நடத்துபவனே. சில கிரிக்கெட் மொபைல் ஆப்களும் இதே ரகத்தில் இருப்பதாக அறிகிறேன். 11team என்பது போன்ற பெயரில். இன்னும் டிரேடிங், போன்ற ஆப்கள் மூலம் சம்பாரிப்பதையும் நான் காண்கிறேன். இதுவும் நிலையற்ற அறமற்ற வருமானம்தான்.

என்ன வேலை செய்வது?

வேலை என்பது இரண்டு வகைதான். சேவை மற்றும் உற்பத்தி. Service and Product.

நீங்கள் செய்வது சேவையாக இருத்தல் வேண்டும். அல்லது ஒரு பொருளை நீங்கள் உற்பத்தி செய்தல் வேண்டும். இது இரண்டும் இல்லாத எதுவும் திருத்தமான சம்பாத்தியத்தில் வராது. நல்ல சேவை வழங்கி அதன் மூலம் வரும் வருமானத்தில் வாழலாம். நல்ல தரமான பொருட்களை உருவாக்கி அதன் மூலமாக வரும் வருமானத்தில் வாழலாம். இவ்விரண்டில் நீங்கள் தொழிலாளியோ முதலாளியோ எதுவாக இருந்தாலும் உங்களுக்கு அது திருப்தியாக இருக்கும்.

மாணவர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் கொண்டாடப்பட வேண்டும் என்று நினைக்கிறார்களா என்று தெரியவில்லை. பிரபலமாக இருந்தால்தான் வாழ்வில் வெற்றிபெற்றவராக ஒருவர் மதிக்கப்படுவர் என்ற எண்ணம் வேறூன்றி இருப்பதாக நினைக்கிறேன். அதன் காரணமாகவே மக்கள் கொண்டாடும் சினிமாத்துறையையே தங்களது தனித்திறன் என்று போலியாகவோ மாயையிலோ நம்பிக்கொண்டிருக்கிறார்கள். உங்களை கொண்டாட வேண்டியது நீங்கள்தான். வேறு யாரும் இல்லை. உங்கள் குடும்பம், நண்பர்கள், சொந்தங்கள் உங்களைக் கொண்டடினால் போதும். செலபிரிட்டியாக ஆகி மக்கள் உங்களிடம் வந்து செல்பி எடுக்க ஆசைப்படும் அளவிற்கு வளர்ந்தால்தான் வெற்றியாளர் என்ற எந்த நிற்பந்தமும் இங்கு இல்லை. fame light விழும் இடத்தை தேடிச்செல்லாதீர்கள். நீங்கள் செய்யும் வேலை நன்கு செய்தால், fame light உங்களைத்தேடி வரும்.

இதற்கும் செக்ஸ் வொர்க்குக்கும் என்ன சம்மந்தம் என்று இன்னேரம் நீங்கள் எண்ணி இருக்கலாம்.

பொருளாதாரம் முக்கியம் தம்பி:

ஒரு குடும்பம் என்பது நிலையான வருமானம் இருந்தால் சீராக வளரும். நிலையான வருமானம் இல்லையென்றால் குடும்பத்தில் நிறைய குழப்பங்கள் வரும். பொருளாதார நெருக்கடியினால் தூக்கில் தொங்கிய குடும்பங்களின் எண்ணிக்கை அரசாங்கத்திடம் கூட இருக்காது. குடும்பத்துடன் தீயிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட நிகழ்வு இன்னும் நமது மனதில் இருந்து நீங்கி இருக்காது என்றே நம்புகிறேன்.

ஆணோ பெண்ணோ குடும்பத்தை பார்த்துக்கொள்ள நிலையான வருமானம் இருவருக்கும் இல்லை எனக்கொள்க, குழந்தைய வளர்க்க செக்ஸ் ஒர்க் ஒரு லாவகமான வழி என்ற சூழல் மிக சாதாரனமாக உருவாகிக்கொண்டிருக்கிறது. இதில் அந்த பெண்ணுக்கும் எந்த பாதுகாப்பும் இருக்காது. அந்த பெண்ணுடன் இருக்கும் குழந்தைக்கும் எந்த பாதுகாப்பும் இருக்காது.

பொது சேவைக்காக எந்தப் பெண்ணும் தனது உடலை தடிமாடுகளுக்கு வாடகைக்கு விடப்பொவது இல்லை. பணத்திற்காகத்தான், செக்ஸ் வொர்க் லீகல் என்று அறிவிற்க ஒரு நாடு வெக்கப்பட வேண்டும். அவர்களுக்கான குடும்பத்தை அவர்களால் நிலைநாட்டிக்கொள்ள முடியாத அளவிற்கு பொருளாதர சூழல், வேலை இன்மை இருந்தால் அதை சரி செய்ய வேண்டிய கடமை அரசினுடையது.

“பிழைக்க வழி இல்லை என்றால் உடலை விற்று பிழைத்துக்கொள் நாங்கள் யாரும் எதுவும் (தேவிடியா என்று) சொல்ல மாட்டோம். மரியாதையாக நடத்துவோம். பணம் கொடுத்து படுத்துவிட்டு செல்வோம்.” என்பதாகத்தான் என் காதுகளில் கேட்கிறது.

சுள்ளான் படத்தில் வரும் காட்சி

சுள்ளான் படத்தில் பஸ்ஸில் ஒரு ஆண் ஒரு பெண்ணை உரசிக்கொண்டே வருவான், அந்தப்பெண் பொறுமை இழந்து, வா கல்யாணம் பண்ணிக்கலாம் என்று சொன்னால், ஆண் ஜகா வாங்கி விடுவான்.

அப்படி ஒரு குடும்பத்தை மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நிறைவாக கொண்டுசெல்லமுடியாத ஆண்கள் நிறைந்த காலகட்டம் வருவதற்குள், தன்னை உரசிப் பார்க்கும் ஆண்களிடம் பெண்களே வந்து “ஒரு நைட்டுக்கு ரெண்டாயிரம் ரூபாதான்” என்று சொல்லக்கூடிய காலகட்டம் வருவதற்கு எல்லா திசைகளிலும் வழிவகைகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

வாழ்வதற்கே வேறு வழியின்றி பாலியல் தொழிலை செய்யும் பெண்களுக்கு தற்காலிகமாக இந்த சட்டம் பாதுகாப்பளிக்கலாம். நீண்ட கால நோக்கத்தில் பார்க்கும் போது இது அடுத்த தலைமுறைக்கு தவறான அறமற்ற வாழ்க்கை முறைக்கு வாசலை திறந்து வைப்பதாகவே இருக்கிறது.

வரும் தலைமுறை மாணவர்களுக்கு தேவை தெளிந்த நல்லறிவு. திசை மாற்றி விட்டால், வட மாநிலங்களைப் போன்ற முட்டாள் ரவுடிக்கூட்டம் நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு மாறுவது நிச்சயம்.

குடும்பம் என்ற கட்டமைப்பு கனிசமாகக் குறைய, நிலையான வருமானம், இல்லறம் பற்றின அறிவு, இரண்டும் இல்லாத ஆணும், பெண்ணும் போதும்.

பெண்களில் பலர் வேசிகளாவர். ஆண்களில் பலர் கூலிகளாவர். இதை சரி செய்யக்கூடிய இடத்தில் இருப்பது பெற்றோர்களும், அரசும்தான். அபாயகரமான ஒரு எதிர்காலம் இருக்கிறது. விதி அந்தப்பக்கம் செல்லாமல் நல்வழிப்படுத்த போராடுவோம். உழைப்போம் உயர்வோம், அறத்துடன் வாழ்வோம்.

-சூர்யதேவன். 8.50 pm 27-05-2022

தற்கொலைக் காதல்கள்

காட்சி 1:

வழக்கம் போல ஆஃபிஸுக்கு வெளியில் நின்று ஃபோனில் சில வீடியோக்களை பார்த்துக்கொண்டிருந்தேன். ஆபிஸுக்குள் என்ன செய்வதென்று தெரியாமல்தான் வெளியே வந்து  பால்கனியில் வசதியாக ஒரு கார்னரை தேர்வு செய்து சாய்ந்து நின்றுகொண்டேன். இப்போது ஃபோனில் பார்த்துக்கொண்டிருந்த வீடியோக்களும் ஒரு சலுப்பை ஏற்படுத்தின. ஃபோனை லாக் செய்து பேண்ட் பாக்கெட்டில் போட்டுக்கொண்டேன். சிலாகித்து ரசிக்கும் அளவிற்கு காற்று ஒன்றும் வீசவில்லை. சில நாட்களுக்கு முன்பு இரவு காணக்கிடைத்த காட்டுத்தீயும் அந்த மலையில் இன்று ஜொலிக்கவில்லை. சற்றே பெரும்மூச்சுடன் திரும்பி இரண்டாவது மாடியில் இருந்து அருகில் இருந்த ரவுண்டானாவை வேடிக்கைப்பார்த்தேன்.

எப்போதும் அந்த ரவுண்டானாவில் வாகனங்கள் சுழன்று சென்று கொண்டேயிருக்கும். உயரத்தில் இருந்த வாகன நெரிசலைக்காண்பதே ஒரு அலாதி இன்பம்தான் போல இருந்தது. எல்லாத்துக்கும் உயரத்தில் இருக்கும் கடவுளுக்கும் நாம் சுற்றிக்கொண்டிருப்பதைப் பார்ப்பதற்கும், நாம் முட்டிக்கொள்வதைப் பார்ப்பதற்கும் வேடிக்கையாக இருக்குமோ என்னவோ. நாமக்குள்ளும் கடவுள் இருப்பாரென்றால், கடவுளுக்குள்ளும் நாம் இருக்கலாம் தானே. இன்று அப்படி ஒரு சம்பவம்.

ஒரு பெண், சேலைக்கட்டிக்கொண்டு நடுரோட்டில் நிற்கிறாள். எவ்வளவு நேரமாக அங்கு நிற்கிறாள் என்று எனக்கு தெரியாது. பைக்கில ஒரு ஆள் வந்தான், அவளது கையைப்பிடித்து வண்டியில் ஏற சொன்னான். துல்லியமாக என்ன பேசினார்கள் என்று இரண்டாவது மாடியில் இருந்த எனக்கு தெரியாது. அங்கிருக்கும் ஐம்பது  வண்டிகளின் சத்தமும் அவற்றிலிருந்து  வரும் நூறு ஹாரன் சத்தமும்  அவர்களின் பேச்சை நசுக்கியிருந்தன. அவர்களை யாரும் மோதிவிடவில்லை. இருந்தாலும். வேறு என்ன சொல்லிருக்கப்போகிறான்? பத்து  நொடிகளாவது அவள் இசைவதாக இல்லை.

எனக்கு என் மனைவியின் ஞாபகம் வந்தது. அவளும் ஆஃபிசுக்கு உள்ளேதான் இருந்தாள். வேகமாக சென்று அவளை அழைத்து வந்தேன். அந்த முப்பது நொடிகளும் அவர்கள் அங்கேயே இருப்பார்கள் என்று பேராசைதான் எனக்கு. ரவுண்டானாவின்  அருகில் ஒரு ஜோடி நிற்பதையும் அவன் வந்த பைக்கும் நடுரோட்டிலே இருப்பதையும் அவள் பார்த்தாள். நாங்கள் அந்த எபிசோடுகளை கடந்து வந்தாயிற்று என்றவாறு பேசினோம். எப்படியும் அவ ஏறி போயிருவா. வேற என்ன செய்ய முடியும்? என நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். நாங்கள் அந்தக்காட்சியைப்  பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அந்த ஆள் அந்தப்பெண்ணின் காலில் விழுகிறான், அவள் பின்னால் நகர்ந்து அவனது கையை விலக்குகிறாள். அவள் அப்போதும் வண்டியில் ஏறி உட்காரவில்லை. நாங்கள் எதிர்பார்த்ததைவிடவும் ஐந்து ஆறு நிமிடங்கள் அவள் அசையவில்லை. அவனோ வண்டியில் ஏறி உட்கார்ந்துக்கொண்டு அவளது கைகளைப்பற்றி கெஞ்சிக்கொண்டு இருக்கிறான். இறுதியில் அவள் வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டாள். அவளது முந்தானையை அள்ளி மடியில் பிடித்துக்கொண்டாள். அவளது முகத்தில் கண்ணீர் இல்லை. சிரிப்பு இல்லை. வாழ்வின் மீதான பெரும் கோபமும், வெறுப்பும் மட்டும் நிறையவே இருந்தன. அவர்களது பைக் கிளம்பிப்போவதைப்பார்த்துக்கொண்டிருந்த செளமியா,”நீயா இருந்திருந்தா நேரா ஒரு ஹோட்டலுக்குதான் வண்டிய விடுவ.” என்று சொல்லி நகைத்தாள். “ஆமா, சாப்பாட்ட முன்னாடி வச்சிகிட்டு யாராலும் சண்ட போட முடியாது”என்று என் சாப்பாட்ராம கேரக்டருக்கு வக்காலத்து வாங்கினேன்.

காட்சி 2:

பிறகு பேசி முடித்துவிட்டு, வேலையையும் முடித்துவிட்டு ஆஃபிசில் இருந்து கிளம்பினோம். செளமியா வந்த டியோவில் அவளும், நான் வந்த காரில் நானும் கிளம்பினோம், அப்போது அன்றிரவு செய்வதற்கு நான் சில திட்டங்கள் வைத்திருந்தேன். அதில் செளமியா இல்லை. அவளிடம் அனுமதி கேட்டேன். ஒழுங்காக வீட்டுக்கு வா என்று அதட்டலுடன் ஆணையிட்டாள். வீட்டில் பேசிக்கொள்ளலம் என்று மலுப்பிக்கொண்டிருந்தேன். அந்நேரம், ஆஃபிசின் அருகில் ஒரு இருபதைத்தாண்டிய ஆண் பிள்ளை, நல்ல உயரம், யாருடனோ ஃபோனில் பேசிக்கொண்டிருந்தான். சட்டென சிறுபிள்ளைப்போல அழ ஆரம்பித்தான். அழுதுக்கொண்டே சில சில வார்த்தைகளை உச்சரித்தான். நான் செளமியாவிடம் கேட்டேன், “தம்பி என்ன பேசுறாரு?”. யாருக்கு தெரியும்? ஒன்னும் கேக்கல. ட்ராபிக் எத்தனை பேச்சுக்களை முழுங்கிக்கொண்டிருக்கும் ஒரு ராட்சசன் என்பதை உணர்ந்துகொண்டேன். அந்த ராட்சசனைத்தாண்டி ஒரே ஒரு வார்த்தை மட்டும் எனதிரு காதுகளில் விழுந்தது. “சொல்லுடி” என்ற வார்த்தை. பிறகு, இருவரும் அங்கிருந்து கிளம்பினோம்.

காட்சி 3:

நான் வீட்டுக்கு செல்லும் வழியில் எனது தம்பி அர்ஜுனை சந்திக்க வேண்டியிருந்தது. வழக்கமாக நாங்கள் செல்லும் டீக்கடைக்கு அருகில் காரை நிறுத்தினேன். அவன் வரும் வரை காரிலேயே காத்திருந்தேன். எல்லா ஜன்னல்களும் மூடியிருந்தும் யாரோ கத்தும் சத்தம் கேட்டது. வெளியே இறங்கி யாரெனப் பார்த்தேன். அவன் யாருடனோ ஃபோனில் பேசிக் கொண்டிருந்தான்‌. “ஏய், நீ, வா, போ, டி” என்ற சொற்களின் மூலம் மறுபக்கத்தில் இருப்பது ஒரு பெண் என யார் வேண்டுமானாலும் யூகித்துவிடலாம். இங்கு மட்டும் சாலையில் ஓடிக்கொண்டிருக்கும் வண்டி சத்தத்தை விடவும் இவனது சத்தம் பலமாய் இருந்தது. ஆத்திரத்துடன் கத்தி கத்திப் பேசினான்‌. நான்கு நடை கிழக்கும் திரும்பி நான்கு நடை மேற்கும் என திரும்பத் திரும்ப நடந்துக் கொண்டிருந்தான்‌. நான் எனது காரை சற்று நகர்த்தி அவனுக்கும் காருக்கும் பத்து மீட்டர் இடைவெளி விட்டு நிறுத்திக்கொண்டேன். ஆத்திரத்தில் அருகில் இருக்கும் பொருட்களை உடைப்பது ஆண்களின் இயல்பு என்று எண்ணினேன். ஏன்னா நான் அப்டிதான்.

காட்சி 4:

தம்பி  அர்ஜுன் வந்தப்பிறகு அவனுடன் பேசிக்கொண்டிருந்தேன். நான்சி யா காயத்ரியா என்பது அவனது குழப்பம். நான்சிக்கு அர்ஜுனைப் பிடித்திருக்கிறது. நான்சி க்ரிஸ்டின், அவளைக்கட்டிக்கொள்ள வேண்டுமானால் கிறுத்துவ மதத்திற்கு மாறவேண்டும் என்பது அவளின் அம்மாவது நிபந்தனை. நான்சியும் அம்மாவின் விருப்பப்படியே எல்லாமும் நடக்கனும் என்று சொல்லிவிட்டாள். நான்சி ஒரே பொண்ணு. வேற யாரும் இல்லை. அப்பா எப்போதோ இறந்துவிட்டார். குடும்ப சொத்தாக ஒரு கோடி இருக்கலாம். மேலும், நான்சி சொந்தமகள் இல்லை, வளர்ப்பு மகள் என்றும், இது அவளுக்கு மட்டும் தெரியாது என்றும் கூறினான். நான் குறுக்கிட்டேன், கண்டிப்பாக அப்படி இருக்க வாய்ப்பு இல்லை. நான்சியிடம் யாராவது இதை சொல்லி இருப்பார்கள். ரகசியத்தை ரகசியமாக வைத்திருப்பதில் நம்மூர் ஆட்களுக்கு எந்த ஒரு கிக்கும் கிடைக்கப்போவது இல்லை. ரகசியத்தை கசியவிடுவதிலேயே தனது கெத்தைக்காட்டிக் கொள்ளும் கூட்டம் இது.

பேசிக்கொண்டிருக்கும் போது இடையில் செளமியாவிற்கு கால் செய்து 

நான், “பத்து இருவதுக்கு மாமனிதன் படத்துக்கு போலாம் வரியா?”, 

அவள், “யாரெல்லாம் போறீங்க?”;

நான், “வேற யாரு நீயும் நானும் மட்டும்தான். வேற யார நீ எதிர்பாக்குற?”

அவள், “எப்டியும் உன் ஃப்ரெண்ட்ஸ், அர்ஜுன், யாராவது வருவாங்களே!”

நான், “அதெல்லாம் யாரும் இல்ல, நீயும் நானும் மட்டும்தான், சீக்கிரம் சொல்லு, இப்பவே மணி ஒம்பதே முக்கால்.”

அவள் நீண்ட யோசனைக்குப்பிறகு வரவில்லை என்றாள்.

அர்ஜுன், காயத்ரியைப்பற்றி பிறகொரு நாள் சொன்னான். போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கிறாள். அப்பா போலீஸ், அவர் இறந்தப்பிறகு அவரது போலீஸ் வேலையை இவள் வாங்கிக்கொண்டாள். வீட்டில் அம்மா அப்ரானி. மாமாதான் எல்லாமும். ஏற்கனவே ஒரு கல்யானம் நிச்சயம் ஆகி, கல்யாணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் காணாமல் போய்விட்டாளாம். நேப்பால் வரை தனியாக ரயிலில் பயணித்துவிட்டு திரும்ப வந்துவிட்டாலாம்.

காயத்ரி அர்ஜுனிடம், “நீ நல்ல ஃப்ரெண்டுன்னு தெரியும், ஆனா ஹஸ்பண்ட் மெட்டீரியலான்னு தெரியல, வேணும்னா ஒரு ரெண்டு மாசம் லிவிங்’ல இருந்து பாக்கலாமா?” என்று கேட்டிருக்கிறாள். இதை நானும் அர்ஜுனும் தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருந்தோம். ஹஸ்பண்ட் மெட்டீரியல்னா என்ன? எத மீன் பண்றா? காலைல எழுந்திரிச்சு பாத்தரமெல்லாம் வெளக்கி வைக்கனுமா? சலுப்பா இருக்குன்னு சொன்னா சமைச்சு தரனுமா? இல்ல, என்ன சொதப்பு சொதப்புனாலும் சூடு சொரனலாம் வராம கோவப்படாம இருக்கனுமா? ஒன்னும் புரியலையே.

எனக்கு தெரிஞ்சி அவ யாரையோ பாத்து நல்லா பயந்துருக்கா. கல்யாணம் பண்ணா இவ்ளோ அவஸ்தப்படனும்னு அவ மனசுல இருக்கு. அதனாலதான் உன்ன நல்ல ஃபிரண்டா தெரிஞ்சிருந்தும் நீயும் நாளைக்கு கல்யாணம் ஆனப்பிறகு காட்டுமிராண்டியா மாறிடுவியோனு பயப்படுறா. இந்த சொசைட்டீல நிறைய சைக்கோங்க இருக்கு, தாலி கட்ற வரைக்கும் நைஸ் டு பி பர்ஸனா நடந்துக்குவானுங்க, ஒன்ஸ் தாலிகட்டிட்டா போதும், இஷ்டத்துக்கு போட்டு ஹரஸ் பண்ணுவானுங்க. அப்டியும் இருக்கானுங்க. இது எந்த சைக்கோ நல்ல சைக்கோன்னு கண்டுபிடிக்கிறது ஒன்னும் அவ்வளவு ஈசியில்ல. காயத்ரி உன்கிட்ட ஓபன்னா கேட்டுட்டா. 

சொல்லு அவகிட்ட, “கல்யாணம் பண்ணினா எப்டியும் காலத்துக்கும் சண்ட போட்டுதான் ஆகனும். யார்கூட சண்ட போடப்போறங்கிறதுதான் நீ ச்சூஸ் பண்ண வேண்டியது. யார்கிட்ட சண்டப்போட்டாலும், மண்ணிப்பு கேட்டோ, இல்ல மண்ணிச்சோ, மறுபடி சமாதானம் ஆகி அடுத்த கணமோ, அடுத்த நாளோ இயல்பா பேசி சிரிச்சி வாழ்க்கைய வாழமுடியனும். அப்டி யார்கிட்ட தோனுதோ அவங்களையே கட்டிக்க சொல்லு”னு சொல்லிட்டேன்.

காயத்ரியே ஒத்துக்கொண்டாலும், அவளது வீட்டில் எப்படி பேசி சம்மதம்வாங்குவது என்று அர்ஜுனுக்கு ஒரே யோசனை. கண்டிப்பாக காதல் திருமணம் என்றால் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்றான். ஏன் என்றேன். ஏற்கன்வே ஒரு கல்யாணத்த நிறுத்தி எங்க மானத்த வாங்கின. இப்ப லவ் பண்ணி வேற அசிங்கப்படுத்துறியா என்று சண்டைக்கு வருவார்கள்.

நீ காயத்ரியையே கல்யாணம் பண்ணிக்கு. நான்சிய கட்டிக்கிட்டு உன்னால உன் இயல்புக்கு மாறா வாழமுடியாது. காயத்ரிக்கு சில மனக்குழப்பம்தான் இருக்கு, நம்ம வீட்டுக்கு கூப்டுட்டு வா, நானும் செளமியாவும் பேசுறோம். அவதான் உனக்கு செட் ஆவா. அவ ஃபோட்டோ காட்டு பாக்கலாம். அர்ஜுன் அவனது ஃபோனில் இருந்து ஓரிரு ஃபோட்டோவைக் காட்டினான். லட்சனமான முகம். உனக்கு காயத்ரியா நான்சியானுலாம் குழம்ப வேண்டாம். ஒரே முடிவா காயத்ரிய கல்யாணம் பண்ற வழிய பாரு.

காட்சி 5:

ஒரு வழியாக வீட்டுக்கு வந்துவிட்டேன். செளமியாவிடம் அர்ஜுனுடனான பேச்சுகளின் சுருக்கத்தை சொல்லிக்கொண்டிருந்தேன். 

அவள் குறுக்கிட்டு, “புங்கவாடில, பூங்கொடி மவ காவ்யா சூசைட் பண்ணிக்கிட்டாளாம்.” 

எனக்கு ஒரு நிமிடம் யாரென கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. 

சற்று நினைவுகளை திரட்டிக்கொண்டு, “யாரு?”

செளமியா, “பூங்கொடி மொவப்பா, காவியா, நீ கூட பூங்கொடி மவளா நீஈயி.. னு கிண்டல் பண்ணுவியே”

நான்,”ஆமா காவியா? அவளா அப்டி பண்ணா?”

செளமியா, “ஆமாம் எதோ லவ் மேட்டராம், வீட்ல தெரிஞ்சிரிச்சி போல, வேற மாப்ள பாத்து கல்யாணம் தேதி குறிச்சிட்டாங்க. அதான் சூசைட் பண்ணிக்கிட்ட”

காவியா காதலிக்கும் வயதுக்கு வளர்ந்துவிட்டாள் என்பது எனது முதல் ஆச்சர்யம். ஆனால், அந்த ஆச்சர்யத்தை நான் அடைவதற்குள் அவளுக்கு தற்கொலை செய்துகொள்ளவும் தெரியும் என்பது பெரும் அதிர்ச்சி. 

சின்ன பொண்ணுதான் அவ. பதினாறு இல்ல பதினெட்டு வயசுதான் இருக்கும்.

வீட்டுல என் தங்கச்சி சபியிஷா படுத்திருந்தா, அவள எழுப்பி என்ன ஏதுன்னு விசாரிச்சிட்டு இருந்தேன். சபியின் சிநேகிதிதான் காவியா. லவ் பண்ணினது அஜித்னு ஒரு பையன. முன்னாடி வீடாம். டிப்ளமோ படிச்சிட்டு சென்னைல வேலபாக்றானாம். எங்க ஊர்ல பொறந்துட்டு தெள்ளவாரி ஆகாம படிச்சிட்டு வேலைக்கு போறதுலாம் ஒரு பெரிய சவால். அந்தப்பையன் படிச்சிட்டு வேலைக்கு போறதே எனக்கு பெருசாதான் தெரிஞ்சிது. காவியாவோட அம்மா பூங்கொடிதான், “அவனதான் கட்டிகுவன்னா நீ செத்து ஒழிடி”னு சொல்லிருச்சாம். அவ கொஞ்ச நாளாவே யார்கிட்டயும் பேசுறதே இல்லையாம். அவங்க அப்பா செல்வம் வண்டிக்கு போயிருந்தாராம். அவர் வர வரைக்கும் காத்திருந்து, அவர பாத்துட்டு, வீட்ல யாரும் இல்லாத சமையம் அம்மா பூங்கொடியோட சேலைல தூக்கு போட்டுகிட்டாளாம்.

எல்லாரும் பூங்கொடிய திட்டினாங்க, செல்வம் உட்பட சிலர் அடிச்சாங்க. ஆனா, போஸ் மாடம் பண்ண விடாம, ப்ளஸ் டூவுல மார்க்கம்மி அதனால புள்ள சூசைட் பண்ணிக்கிச்சினு விசியத்த மூடி மறச்சிட்டாங்களாம். மார்க் எவ்வளவுன்னு கேட்டேன். ஐநூறுக்கு முன்னூத்தி தொன்னூத்தி ஏழுன்னா சபி. புங்கவாடி போலாமா சபின்னு கேட்டேன். இல்லண்ணா, அப்பவே அவள எடுத்துட்டாங்கண்ணா என்றாள்.

மனசு கேட்காமல், அவளைப்பற்றியும், ஆண் பெண் உறவுகளில் உள்ள சிக்கல்களைப்பற்றியும், குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் செய்யும் குற்றங்கள் பற்றியும், ஜாதி, பணம், எல்லாம் எப்படி எல்லாத்தையும் பாதிக்கிறது என்று என்னென்னமோ பேசினோம். இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு செளமியாவும் சபியும் தூங்கச் சென்றார்கள்.

நான் ஹெட்போன் மாட்டிக்கொண்டு, நெட்ஃபிலிக்ஸில் ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ் போட்டுவிட்டு, கிச்சன் சிங்க்கில் குதித்து தற்கொலை செய்துக்கொண்டிருந்த பாத்திரங்களை கழுவ ஆரம்பித்தேன்.

-சூர்யா வாசு // 27-ஜூன்-2022

காதல், மேட்டர் மற்றும் தமிழ் சினிமா

சினிமாவுல சொல்ற நிறைய விசியங்கள் முகம் சுளிக்கிற மாதிரிதான் இருக்கு. ஆண்-பெண் உறவுகளில் அது சொல்லவரும் கருத்து/நியாயம் என்பது பலவாறானது. அது அந்தந்த சினிமாக்காரர்களின் இலக்கணம், விருப்பம், ஆசை, நிராசை, கற்பனை இப்டிலாம் வச்சிக்கலாம் ரசிக்கலாம் தவிற, அது மக்களின் வாழ்க்கைக்கான நெறிகள் இல்லை. ஆனால் மக்கள் அவ்வளவு தெளிவா என்ன?


இப்போ, கல்யாணத்துக்கு முன்னாடி கற்பமாறதுதான் கான்சப்ட்.

லவ்’ங்கிற கான்செப்ட்ட ஓவர்ரேட் பண்ணி பண்ணி ரொமான்டிசைஸ் பண்ணி பண்ணி லவ்வுன்னா என்னன்னே தெரியாம நானும் லவ் பண்றேன்னு ஏதேதோ பண்ணிட்டு இருக்காங்க. (இருந்தோம், இருக்கிறோம், இன்னும் பலனூறு ஆண்டுகளுக்கு இருப்போம்.) 

சென்ஸிடிவ் விசியத்த சென்ஸிடிவா கையாளனும். அதுதான் சரி. அத வச்சி காமெடி பண்றது, நார்மலைஸ் பண்றது ரியாலிட்டிக்கு செட் ஆகாது. இவை பெரும்பாலும் வாழ்க்கையை கடினமாக்கும் விடயங்கள். ஒவ்வொன்றாக இதை வகைப்பிரிக்க முயற்சிக்கிறேன். நூறு சதவீதம் என்னால் இந்த சிக்கல்களை வகைப்பிரிக்க முடியாதுதான், இருந்தாலும் பரவால முயற்சிக்கிறேன்.

ஒரு ஆர்டராக வருவோம்.

  • புடிச்சிருக்கனும்
  • ப்ரொப்போஸ் பண்ணனும்
  • ஒன் சைட், டூ சைட் ஆகனும்
  • வீட்ல சொல்லனும், போராடி சம்மதிக்க வைக்கனும்
  • கல்யாணம்
  • ஃபஸ்ட் நைட் (90ஸ் கிட்ஸ் அப்டிதான் சொல்லுவோம். 2K கிட்ஸ்’கு மேட்டர்னு நெனைக்கிறேன்)
  • ப்ரெக்னெண்ட்
  • குழந்தை
  • அப்றம் ஸ்கூல் பீஸ் கட்ட போராடனும்.

இது யதார்த்த லவ் மேரேஜ் பண்ணவங்க லைப்ல நடக்கிற சம்பவங்கள். 

இதில் கல்யாணத்துக்கு முன்னாடி ஃபஸ்ட் நைட்/மேட்டர் வருதுனா அதுதான் ஆண் வர்க்கத்துக்கே உரித்தான லட்சியக் கனவு. அதற்காகவே ஏங்கித்தவிக்கும் வாலிபர்கள் இல்லாத பள்ளி, கல்லூரி, அலுவலகமே இல்லை.

அப்படி நடக்கும்போது மேட்டரின் போது இருந்த அதே காதலிதான் கல்யாணத்தின்போதும் இருக்க வேண்டும் என்பதெல்லாம் ஆண்களுக்கு கட்டாயம் இல்லை. ஆனால், இதை திரையில் கொண்டு வந்து நார்மலைஸ் ஆக்குவது ஆபத்து. ஆல்ரெடி மேட்டர்ங்கிறது அங்க இங்கன்னு நார்மலைஸ் ஆகிட்டு இருக்கு.

கல்யாணத்துக்கு முன்னாடி ப்ரெக்னெண்ட் ஆகுறதுதான் ட்விஸ்ட்டு. அதுக்கு முன்னாடி மேல சொன்ன 1 to 9 ஆர்டர்ல, சினிமா என்னவெல்லாம் கலேபரம் பண்ணிவச்சிருக்குன்னு ஒரு ரீவைண்ட் பண்ணி பாக்கலாம்.

கான்செப்ட் 1

காதல் – கல்யாணம் – சுபம். 

ஒரு பையனுக்கு ஒரு பொண்ண புடிச்சிபோச்சின்னா அவளையே கல்யாணம் பண்ணிகிட்டா போதும் அவங்க வாழ்க்கைல ஜெயிச்சுருவாங்க. இதுல முக்கியமா கீழ் ஜாதி மேல் ஜாதி கலக்கனும், இல்லன்னா கிக் இருக்காது. தொரத்தி தொரத்தி அந்த பையன் ‘நீ என்னத்தான் லவ் பண்ணனும்’னு டார்ச்சர் பண்ணி, ‘ஆமா நான் உன்னதான் லவ் பண்றேன்’னு அந்த பொண்ணே சொல்லிறனும். பல வருடங்களா மொத்த தமிழ் சினிமாவும் இதுதான். இப்பவும் இது தொடருது. இந்த மண்டையனுக்கு லவ் வந்துட்டா அந்தப் பொண்ணுக்கும் இவன் மேல லவ் வந்தே ஆகனும். உன் லவ் ட்ரூ லவ்தான் இல்லங்குல, ஆனா உனக்கு புடிச்சிருக்குன்னா அவங்களுக்கும் புடிச்சே ஆகனுங்கிறது ஒருவிதமான சைக்கோத்தனத்துல வரலையா? ஸ்டாக்கிங்-க்கும் லவ்வுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களிடம் சினிமா மாட்டுனா இதான் கதி.

எ.கா. காதலுக்கு மரியாதை, சிவாஜி, ஆடுகளம், இத்யாதி இத்யாதி, மெளனராகம்.

கான்செப்ட் 2

முதல் காதல் – தோல்வி – ரெண்டாவது காதல் – கல்யாணம் – சுபம்.

இது கொஞ்சம் யதார்த்தம், சில உஷாரான பொண்ணுங்க என்னதான் தொரத்தி தொரத்தி சைக்கோத்தனம் பண்ணினாலும் ஏமாறமாட்டாங்க. போடா டோமருன்னுட்டு தப்பிச்சு போயிடுவாங்க. (சினிமால இத ப்ரேக் அப்னு சொன்னா நல்லாருக்காதுன்னு, கதைப்படி முதல் காதிலி செத்துட்டான்னு ஒரே போடா போட்டுருவாங்க) ஆனா அதே பைத்தியக்காரத்தனம் சில பொண்ணுங்களுக்கு புடிச்சு போயிருக்கும். ஆமாம். 

எ.கா. வாலி, வாரணம் ஆயிரம், சில்லுன்னு ஒரு காதல், ராஜா ராணி, 7ஜி ரெயின்போ காலனி.

கான்செப்ட் 3

நிறைய காதல் – நிறைய தோல்வி – கடசியா ஒரு கல்யாணம் – சுபம்.

இத விளக்க தேவையில்லன்னு நினைக்கிறேன். கிடைக்கிற வரைக்கும் அலைய வேண்டியதுதான். பாக்குற எடத்துல எல்லாம் அப்ளிக்கேசன் போட்டறனும்.

எ.கா. ஆட்டோகிராஃப், ப்ரேமம், அட்டக்கத்தி.

இதுக்கு அடுத்த ஸ்டேஜ் மேட்டர். என்ன மாயமோ தெரியல தமிழ் சினிமால கல்யாணத்துக்கு முன்னாடி மேட்டர் பண்றதெல்லாம் ok cool / casual / not a problem / heavenly / so what? / they need it னு glorify பண்ற காலகட்டம் சீக்கிரமா முடிஞ்சிரிச்சி. அதிக டைம் எடுத்தக்கல.

கான்செப்ட் 4

காதல் – மேட்டர் – ப்ரேக்கப் – வேற ஒருத்தனோட கல்யாணம் – ஹீரோக்கும் வேற ஒரு புது லவ்.

எ.கா. வின்னைத்தாண்டி வருவாயா, த்ரிஷா இல்லனா நயன்தாரா.

கான்செப்ட் 5

கல்யாணம் – குழந்தை – டிவோர்ஸ் – ரெண்டாவது காதல்

எ.கா. என்னை அறிந்தால், ரிதம், வேட்டையாடு விளையாடு, 

கொஞ்ச காலத்துக்கு முன்னாடி கல்யாணம் ஆன கொஞ்ச வருசத்துல தன் கனவன் இறந்துட்டா, ரெண்டாவது கல்யாணம் பண்றதுன்னா அந்தப் பொண்ணுக்கே தப்புன்னு தோணும். அந்த அளவுக்கு சமூகம் போதிச்சு வச்சிருக்கும். இது வாழ்க்கைய இன்னும் கடினமாக்குறது. ரெண்டாவது கல்யாணம் எனும்போது, இது சரிதான் யார் என்ன சொன்னாலும் தன் நலனுக்காகவும் தன் குழந்தையின் நலனுக்காகவும் சில சமூக கட்டுபாடுகளை தாண்டி வந்துதான் கல்யாணம் செய்வார்கள். அது வரவேற்கத் தக்கது. வாழ்க்கை வாழ்வதற்கே. சமூகத்தை மனம் கோணாமல் வைத்து அழகு பார்ப்பதற்கு அல்ல.

திருமணத்திற்கு பிறகான காதலை பதிவு செய்த படங்கள் என்பது மிகச்சொற்பம். இருந்தா சொல்லுங்க நான் தெரிஞ்சிக்கிறேன். மிகைப்படுத்தப் படாத காதலை, யதார்த்த காதலை பதிவு செய்தப் படங்களுள் ஒன்று அட்டக்கத்தி. பசங்க அப்டிதான் லவ் பண்ணுவானுங்க. ஒன்னு போச்சினா இன்னொன்னு. 96 காதல்லாம் ரியாலிட்டில கோடில ஒன்னுதான். அதுவும் பைத்தியக்காரத் தனமாத்தான் தெரியுது எனக்கு. வேணும்னே கல்யாணம் பண்ணிக்காம இருந்துகிட்டு ஜானு மாதிரி யதார்த்த பொண்ணுக்கும் ஒரு கில்ட் ஃபீலிங் ஏற்படுத்த முயற்சிக்கிறது எவ்ளோ சைக்கோத்தனம்? அந்த கில்ட் போக அவ என்ன பண்ணனும். 96 படத்த பாத்துட்டு, கேரலாவுல நடந்த ஒரு ஸ்கூல் கெட்டுகெதர்ல ஒருவரது மனைவி தன் முன்னால் காதலனுடன் ஓடிப்போனதுதான் ரியாலிட்டி.

மேட்டர் லவ்வர் கூட மட்டுமா? இல்ல ஃபிரண்டஸ் வித் பெனிஃபிட்டா, மேட்டர் பண்ணிட்டா அந்த நபரையேத்தான் கல்யாணம் பண்ணிக்குவாங்களானுலாம் கேக்காதீங்க. பதில் இல்லை. பதில் இருந்தாலும் அது சரியா தவறா என்பதெல்லம் அந்தந்த சம்பந்தப்பட்ட நபர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்கிறார்களா இல்லை காயப்படுத்திக் கொள்கிறார்களா என்பதே தீர்மானிக்கும். 

சில டாக்ஸிக் நபர்களிடம் இருந்து உறவுகளை முறித்துக் கொண்டால் அது சரியே. அது திருமணமே ஆகி மூன்று குழந்தைகள் இருந்தாலும் சரி. நம் வீக்நெஸ்ஸை தெரிந்துக் கொண்டு, நம்மை எமோஷ்னலாக துண்புறுத்தும் ட்ரிக்கர் செய்யும் எவரையும் நம் வாழ்வில் இருந்து தூக்கி எறிவதே சரி.

ஒரே ஒரு படம் வந்துச்சு ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’னு அதுலையும் ஏகப்பட்ட நாராசமான விசியங்கள 18+ ஆ இல்ல அடல்ட் காமெடியா இல்ல என்ன எழவுன்னே வகைப்படுத்த முடியாத அளவுக்கு இருக்கும். நான் ஒரு விர்ஜின் பையன், எனக்கு விர்ஜின் பொண்ணுதான் வேணும்னு ஜி.வி. கேக்க, விடிவி கனேஷ் ‘அதெல்லாம் டைநோசர் காலத்துலையே அழிஞ்சி போச்சிடா தம்பி’னு சொல்லுவார். என்ன சொல்ல வர்றாங்க? ஊர்ல இருக்குற பொண்ணுங்கெல்லம் தேவிடியான்னா? இதுக்கும் தேட்டர்ல விசில் பறந்துச்சு. அந்த தேட்டர்ல பெரும்பாலும் பசங்கதான், சில லவ்வர்ஸ் கப்பில்ஸ் வந்திருந்தாங்க. ஒரு குடும்பமும் வந்திருந்துச்சு. அதுவும் இண்டர்வல்ல கிளம்பி போகல. முழுபடமும் பாத்துட்டுதான் போனாங்க. டிக்கட் காசு வீணாகக்கூடாதுன்னு நெனச்சிருப்பாங்க போல. அந்தக்குடும்பத்துல பத்து வயசுப் பையனும் அடக்கம்.

அடுத்து அப்டி மேட்டர் பண்ணி ப்ரெக்னன்ட் ஆகுறது தனி கிக் ஆடியன்ஸுக்கு. இப்போ என்ன பண்ண போறாங்கன்னு இவங்களாலையே யூகிக்க முடியலனாதான் படம் சுவாரசியமா போச்சின்னு மைக்ல, fbல, டிவிட்டர்ல, யுடியுப்ல எல்லாம் சொல்லுவாங்க. இல்லன்னா படம் ஓடாது. லாபம் வராது. சினிமாக்காரங்க சிலர் கார் வீடு பங்களானு செட்டில் ஆக முடியாது.

அந்த சினிமால எதுலையும் கண்டிப்பா ஒரு மாத்திரைல கருவ கலைக்க மாட்டாங்க. அந்த பொண்ணுக்கு கலைக்க மனசு வராது. வராதா? இல்ல வரக்கூடாதா? இப்டிதான் கொஞ்ச காலம் தாலி செண்டிமெண்ட்ட தூக்கி புடிச்சிட்டு இருந்தாங்க. தாலி கட்டிட்டா அவந்தான் புருசன், அது இதுன்னு சொல்லிட்டு இருந்தாங்க. புதுப்பேட்ட தனுஷ் மாதிரி எவனாச்சும் தாலி கட்டினா யாரும் தாலிக்கட்டினவன் கூடத்தன வாழனும்னு பேசப்போறதில்ல. கழட்டி போட்டுட்டு போயிட்டே இருப்பாங்க.

அப்போ தாலி, இப்போ கற்பம். 

கலைக்கவே கூடாதாம். ஏன்னா அது ஒரு உயிராம். அவசரப்பட்டு பையனும் பொண்ணும் தப்பு பண்ணிட்டாங்க அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும் சரி. குழந்த பொறந்து நாலு அஞ்சு வருசம் கழிச்சி அந்தப் பையனுக்கு ஒரு சந்தேகம் வருது. சுயமாகவோ இல்லை சொல்லிக்கொடுத்தோ வரலாம். அந்த குழந்தைக்கு டி.என்.ஏ டெஸ்ட் எடுக்க சொல்வார்கள். அந்த பொண்ணோட வாழ்க்கையே சூனியமாகிவிடும். மெண்டல் ஹெல்த் எவ்வளவு முக்கியம் என்பது எல்லருக்கும் இங்கு புரிய வாய்ப்பில்லை. மெண்டல் ஹெல்த் குறைவாக உள்ளவர்களிடம் நெருக்கமாக வாழ்ந்தவர்களுக்குதான் அது புரியும். ஒரு உயிர காப்பாத்தறதா சொல்லி, அந்த பொண்ண காயப்படுத்தி ரணமாக்கி கடசில அந்த குழந்தையோட மனசுலையும் நஞ்சுதான் வளரும்.

ப்ரோ டாடி படத்துல வர மாதிரியோ அர்ஜுன் ரெட்டி படத்துல வர மாதிரியோ அவ்ளோ ஈசியா கற்பமான பொண்ண ஒத்துக்க மாட்டாங்க. குடும்பம் அக்கம் பக்கம்னு அவள சுத்தி இருக்கிற எல்லாரும் அவள பேசிப்பேசியே சாவடிச்சிருவாங்க. அவ ஒரு தேவிடியாத்தான்னு நிரூபிக்க அவள எப்பவும் ஒரு கூட்டம் மொச்சிகிட்டே இருக்கும். அவளோட நடை உடை பாவனை பாவாடை மயிர் மட்டைன்னு எல்லாத்தையும் நோட்டம் விடும். எதாவது ஒரு நேரத்துல, அவ கால் சந்துல வேற யாரு இருக்கா, இருந்தா, இருப்பானு தெரிஞ்சிறாதானு தேடுவாங்க. அவ்ளோ அரிப்பு இருக்கு அடுத்தவங்க அந்தரங்கத்த தெரிஞ்சிக்கிறதுல.

சிங்கிள் மதர்களிடம் கேட்டுப்பாருங்கள், நியாமான காரணத்திற்காகவே அவர்கள் தன் கனவனை பிரிந்து தானே குழந்தையை வளர்க்க முயற்சித்தாலும், அது அவ்வளவு சுலபமாக இருந்திராது. பல ஆண்கள் தீண்டத்துடிப்பார்கள். சின்ன கேப் கிடைக்காதா எனக் காத்திருப்பர்கள். நல்லவர்கள் போல் நயமாக பேசி மனதைக்கவர மெனக்கெடுவார்கள். இவர்கள் அனைவரும் நரிகள்தான். அசந்த நேரம் வாயில் போட்டு மென்று தின்று சற்று கசந்தவுடன் சக்கையாய் துப்பிவிட்டு போடி தேவிடியா என்று வாயாற வாழ்த்திவிட்டு அடுத்த தேவிடியா யாரென்று தேடிப் போய் விடுவார்கள். ஆண்களுக்கு வெரைட்டியாக அனுபவிப்பதில் அவ்வளவு அலாதி இன்பம்.

ப்ரோ டாடில வர மாதிரி ரெண்டு பேர் வீட்லையும் அப்பா அம்மாலாம் எங்கயுமே இருக்க மாட்டாங்க. நாப்பது ஐம்பது வயச நெருங்கிய எல்லாருக்கும் தெரியும் சமூகத்துல நமக்கான மரியாத’ங்கிறது எவ்வளவு முக்கியம்னு. தன் பையனோ பொண்ணோ இப்டி பண்ணிட்டான்னு வெளிய தெரிஞ்சா தன்ன புறக்கனிப்பாங்கன்னு இங்க எல்லாருக்கும் தெரியும். ப்ரோ டாடில வர மாதிரி எல்லா அப்பாக்களும் இங்க கோடீஸ்வர முதலாளிகள் கிடையாது. பலரும் தமிழ்நாட்டுல மிடில் கிலாஸ்தான். இந்த எலைட் குடும்பங்கள் ஒரு பிரச்சனையை கையாளும் விதத்தை அளவுகோலாக வைத்துக்கொண்டு சாதாரன மக்கள் தங்களின் பிரச்சனைகளை ஒரு இன்ச் கூட அனுக முடியாது.

ஆதலால் காதல் செய்வீர்தான் ரியாலிட்டியை பதிவு செய்த படம். அதுதான் யதார்த்தம். சபையில் ஒருவர் “ஏன்யா சும்மா பேசிட்டு இருக்கீங்க? பொண்ணோட ஒரு நைட்டு ரேட்டு எவ்ளோன்னு சொல்லுயா.” என்பார். எந்தத் தகப்பனும் கேட்கக் கூடாத வார்த்தைகள்.

இந்த சினிமாக்காரனுங்க இப்டிதான் எதையாவது டிரெண்ட் பண்ணிட்டு சமூகத்துல ஒரு மனநிலையை உருவாக்கிட்டு அடுத்த டிரெண்ட செட் பண்ண போயிருவானுங்க. பாவம் இந்த மக்கள்தான் அந்த டிரெண்டை தங்களின் அன்றாட வாழ்க்கையில் ஃபாலோ பண்ண ட்ரை பண்ணி செத்துகிட்டு இருக்காங்க. நல்லத சொல்லவும் இங்க படங்கள் இருக்கு. ஆனா சொற்பம். பேசப்படாத பல விசியங்கள பேசி ஒரு தீர்வு கொண்டு வரனும், அதற்கு கலை ஒரு மிகப்பெரிய ஆயுதம். அதை திருத்தமா பயன்படுத்தனும். இல்லன்னா அது திசையறியாமல் எல்லாரையும்தான் சிதைக்கும். முக்கியமா சினிமாவ பாத்து இதுதான் உலகம்னு நினைக்கிற வளரும் தலைமுறையினர ரொம்ப பாதிக்கும்.

இங்க யார் என்ன சொல்லனும்ங்கிற வரைமுறைய வகுக்குறது மிகப்பெரிய சிரமம். பேச்சுரிமை அனைவருக்கும் உண்டு. தெரியுதோ இல்லையோ வாய்க்கு வந்தத பேசிவச்சிட்டும் தோன்றத எல்லாம் படமா எடுத்துவச்சிட்டும் போயிருவாங்க. அது நன்மையா தீமையானு தெரியாம பரவசத்துல எடுத்து வாழ்க்கைல பொறுத்திபாத்துட்டு, பின்னாடி அவதிபடுறது என்னமோ சாதாரண மக்கள்தான்.

ஆகையால், “எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்”ங்கிறத அடுத்த தலைமுறைக்கு நம் வாழ்வின் வழியாக வாழ்ந்து காட்டுவது நமது கடமை. நம் கடமை என்றென்றும் தவறேல். கலையை கலங்கமில்லாமல் உருவாக்கவும் உள்வாங்கவும் நல்லறிவுடன் முனைவோம்.

#brodaddymovie  #bachelormovie  #arjunreddymovie  #மா shortfilm #ஆதலால்_காதல்_செய்வீர்

-சூர்யா வாசு

-26-06-2022 11.20 am

ஆண் பெண் ஆற்றல்

தேடிக் களைக்கும் இம்மனம்.
கூடிக் களைக்கும் இவ்வுடல்.


மனம். உடல். இவ்விரண்டு தளங்களிலும் ஒரு ஆணின் வாழ்க்கை முழுவதும் சோர்வு தொடர்ந்தாலும், அவனின் ஆற்றலை கையாளும் சாவி என்றும் பெண்ணிடம்தான் பொதிந்துள்ளது.

ஆணுடைய ரத்தத்தில் உள்ள ஆற்றலை வேகப்படுத்த பெண்ணால் மட்டுமே முடியும். களைப்பில் வரும் உறக்கமே உடலின் முழு அமைதி. அமைதி இல்லாத மனம் நூலற்ற பட்டம்போல் அலைந்து திரியும். மனமும் உடலும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் அல்லவா?

செலவழிக்காத ஆற்றல் திசையறியாமல் திக்குமுக்காடி கிடைத்த இடத்தில் வெடித்துச் சிதறும். அதன் வடிவம் கோபமாக இருக்கலாம், கண்ணில் படும் பெண்களிடம் வழிவதாக, அளவுக்கு மீறி உழைப்பதாக, மது குடிப்பதாக, ஆங்காரமாய் கத்துவதாக, என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஆண் அத்து மீறும்போது, அவனது வீட்டில் இருக்கும் பெண்களும் அவனை கையாள தவறிவிட்டார்கள் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.


வீட்டில் சமைக்காத போது ஹோட்டலில் சாப்பிட்டுக் கொள்வார்கள். ஹோட்டல் போக வழியோ வசதியோ தைரியமோ இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? கௌரவம் பார்க்காதவர்கள் ரோட்டில் கையேந்தி பிச்சை எடுப்பார்கள். பசி தாங்காதவர்கள் இறுதியில் திருடுவார்கள். மாணத்திற்கும் பயந்து பசியையும் பொறுக்க முடியாதவர்கள் எச்சில் விழுங்கி குப்புற படுத்து உறங்குவது போல் பாசாங்கு செய்வார்கள். யாரும் பட்டினியோடு உறங்க மாட்டார்கள்.


தன் வீட்டு வாசலில் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்களின் மூஞ்சில் எச்சில் துப்பும்முன், தன் வீட்டில் நுழைய முயலும் திருடனின் கண்ணில் மிளகாய் தூவும்முன், தன் வீட்டு ஆண் பிச்சை எடுக்கிறனா திருடுகிறானா என்று பெண்ணும் யோசித்துப் பார்க்க வேண்டும். தன் வீட்டை எத்தனை பிச்சைக்காரர்கள் திருடர்கள் குறிவைத்து காத்திருக்கின்றனர் என்று ஒவ்வொரு ஆணும் யோசித்துப் பார்க்க வேண்டும்.

எதிர் பாலின ஈர்ப்பு என்பது டி என் ஏ வில் உள்ள சமாச்சாரங்களே தவிர, குணம் சார்ந்த விடயம் அல்ல. நல்லவன் கெட்டவன் குமரன் கிழவன் வீரன் கோழை ஞானி முட்டாள் என உடல் கொண்ட அனைவருக்கும் எதிர் பாலின ஈர்ப்புணர்வு என்பதுண்டு. அதை பதின்ம வயதுகளில் துளிர்விடும் போது அடக்கி வைக்க முற்படுவது வன்மம் கடந்தது. அவ்வாற்றலை முறையாகக் கையாள கற்றுத்தர வேண்டும்.


வயிற்றின் பசிக்கு ஊண் உண்பது போல,
உடலின் பசிக்கு ஊடல் கொள்வது இன்றியமையாதது.

எல்லோருக்கும் இக்கரைக்கு அக்கரை பச்சைதான். அக்கரையில் இருப்பவர்களின் கண்களில் பாருங்கள் இக்கரை எவ்வளவு பச்சை என்று தெரியும்.


உயிரினங்கள் அனைத்திலும் ஆண் இனமே அழகு பொருந்தியதாக இருக்கிறது. அழகு காரணமாகவே பெண்களை கவர்ந்து ஈர்க்கின்றன. மனித இனத்தில் மட்டும் பெண் இனம் அழகு என்பதன் வரையறையை தனதாக்கிக் கொண்டது. சிந்தியுங்கள். ஆணுக்கும் அழகு கட்டுபாடு என எல்லாம் உண்டு. பெண்ணுக்கும் அறிவு அத்துமீறல் என எல்லாமும் உண்டு.


பசி வந்தால் பத்தும் பறந்து போகும். இதுவும் நம் உடல் நித்தம் கோறும் பசிதான்.

ஆண்கள், நாக்கை தொங்க போடாதீர்கள். வாயிலும் வயிற்றிலும் குப்பையை கொட்டாதீர்கள். பேரழகு கொள்ளுங்கள். துர்நாற்றமில்லாத மேனி பேணுங்கள். கடப்போர் கடை கண்ணின் எல்லையை நீட்டுங்கள்.


பெண்கள், அழகுபோல் அறிவையும் மெருகேற்றுங்கள். வீட்டு ஆண்களை முந்தானையில் முடியுங்கள். சொக்கிக்கிரங்கி சொர்க்கம் அழைத்துச் செல்லுங்கள். குடும்பம் குதூகலித்தால் வாழ்க்கை வளம் பெரும்.


ஊடலை இன்னும் பூடகமாக்காதீர்கள். காதலும் ஊடலும் சொல் வேறு செயல் ஒன்றல்லவா!

– சூர்யா வாசு
21.05.2020. 3.30 AM

நம் கல்வி முறை சரியானதா ? பகுதி 1

தப்புன்னு எடுத்த எடுப்புல பதிலளிப்பது பேச்சு சுவைக்கு தகும். அது மேலோட்டமான பதிலே தவிற தெளிவான இறுதியான பதிலல்ல. மெய்யறிவுடன் அனைத்து கோணங்களையும் ஆராய்வதுதான் சரியான புரிதலை ஏற்படுத்தும். அதோடு தீர்வையும் கொடுக்கும்.

1.jpg

சரி முதலில் இருந்து வருவோம். இயல்பிலேயே நாம் வீட்டில் இருந்துதான் முதல் பாதி அறிவைப் பெறுகிறோம். இரண்டாம் பாதியை வகுப்பறைகள் கற்பிக்கும். பிறகு இவ்விரண்டு கல்வியும் மாறி மாறி ஒன்றை ஒன்று பிரதிபலிக்கும், பாதிக்கும். வீட்டில் கற்றுக்கொள்வதை வகுப்பிலும், பள்ளியில் கற்றுக் கொள்வதை வீட்டிலும் வெளிப்படுத்திப் பார்ப்போம். இப்படித்தான் குழந்தைகள் நம் சமூகத்தில் மெல்ல மெல்ல கலக்கிறார்கள்.

மதிப்பெண் முறை

இதைப் புரிந்துகொள்ள, இந்தக் கல்வி முறையை மிக உயரத்திற்கு சென்று கழுகு பார்வையில் பாருங்கள். நாம் குழந்தைகளுக்கு மனிதர்களாய் வாழ கற்றுக் கொடுக்கிறோமா, இல்லை பணம் சம்பாரிக்கும் மிஷினை உருவாக்குகிறோமா என்று தெரியும்.

பணம் சம்பாதிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. பொருள் ஈட்ட வேண்டும் என்று சொல்கிறேன். இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் புரிந்துவிட்டால், பொருளாதாரம் பற்றிய விவரம் தெரிந்துவிடும்.

எல்லாருக்குமே தத்தம் பிள்ளைகள் ஊரறிந்த கம்பெனியின் ஆபிசில் ஏசியில் உட்கார்ந்துதான் வேலைப்பார்க்க வேண்டும் என்று ஆசை. இதற்காக பிள்ளைகள் இழப்பவை என்னென்ன என்று பட்டியலிடுங்கள்.முதலாவது அவர்கள் கேள்வி கேட்கவே மறக்கடிக்கப் பட்டிருப்பார்கள்.

குழந்தைகளின் சுபாவமே தெரியாததை கேள்வி கேட்டு தெரிந்து கொள்வதுதான். ஆனால் இந்த கல்வி முறை குழந்தைகளிடம் கேள்வி மேல் கேள்வியாக கேட்டு அதற்கு மதிப்பெண் வைத்து குழந்தைகளை தரம்பிரிக்கிறது.

ஒரு வகுப்பில் முப்பது குழந்தைகளில் மூன்று பேரை மட்டும் அறிவாளி என்று முத்திரை குத்தி மற்ற எல்லா குழந்தைகளின் மனத்திலும் தாழ்வு மனப்பான்மையை விதைக்கின்றன. அந்த மூன்று குழந்தைகள் தனக்கு எல்லாம் தெரிந்துவிட்டது என்ற மிதப்பில் அதன் பிறகு எந்தக் கேள்வியுமே கேட்பதில்லை. கேள்வி கேட்காமல் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கும் பிள்ளைகளை எல்லாரும் எவ்வளவு மெச்சிக் கொள்வார்கள் என்று சொல்ல வேண்டாம். மற்ற குழந்தைகள் நாம் முட்டாள் என்று நம்பி எந்த கேள்வியும் கேட்க தயங்கி வாயை மூடிக்கொள்கிறார்கள். அடிமை சமூகம் அமைய அங்குதான் அடிக்கல் நாட்டப்படுகிறது. தன்னைச்சுற்றி எது நடந்தாலும் அதற்கு எந்த ரியாக்ஷனும் கொடுக்காத ஒரு மலட்டு சமூகம் உருவாகிக் கொண்டேயிருக்கிறது. இது சரியான கல்வி முறை அன்று. ஒரு குழந்தை கேள்வி கேட்கவும் பதில் சொல்லவும் பழகி இருக்க வேண்டும்.

2

பதில்களுக்கு மதிப்பெண் அளிப்பது போல் கேள்விகளுக்கும் மதிப்பெண் அளிக்கும் வண்ணம் ஒரு கல்வி திட்டம் கொண்டு வந்தால், அந்த பிள்ளைகள் வளர்ந்து ஊடுருவும் சமூகத்தில் இருக்கும் அதிகார வர்க்கம் தினறிப்போகும். ஒவ்வொரு இன்னல்களுக்கும் கேள்வி கேட்க பழகிய சமூகத்திடம் எந்த முறைகேடுகளும் எளிதில் அரங்கேறிவிட முடியாது.

ஆக, அடிமை சமூகம் உருவாக வேண்டுமெனில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலை மட்டும் எழுதப் போராட வைக்கும் கல்வி முறையை விட்டுவிடாமல் இருக்க வேண்டும்.

எல்லாவற்றையும் கேள்விக்கு உட்படுத்தும் சமூகம் எவ்வளவு ஆக்கப்பூர்வமான முன்னேற்றங்களை அடையும் என்று யூகித்துப் பாருங்கள்.

வளர்ப்பு

உங்கள் குழந்தை எவ்வளவு பெரிய பள்ளியில் படித்தாலும் சரி, அடிப்படை விசியங்களில் அவனுக்கு அடிமை குணம் ஊட்டப்பட்டிருக்கும்.

அவர்கள் ஒருபோதும் நல்ல ஆன்மாவை உடைய மனிதர்களாய், மனசாட்சிக்கு அஞ்சும் மனிதர்களாய், தத்தம் தவறுகளை உணர்ந்து திருத்திக் கொள்ளும் மனிதர்களாய், சக மனிதர்களை மனிதத்துடன் நடத்தும் மனிதர்களாய், பகுத்தறிவு கொண்ட மணிதர்களாய், எதிர்கால தொலைநோக்கு பார்வை கொண்ட மணிதர்களாய், பொதுவுடமை போற்றும் மனிதர்களாய் வளர்வதே இல்லை. பணத்திற்கும் சம்பளத்திற்கும் பெரிய கம்பெனியில் வேலை என்ற மோகத்திலும்தான் ஆசைப்படுகிறார்கள். விளைவு ?

உங்கள் பிள்ளைகளை வளர்க்காதீர்கள். வளர உதவுங்கள். உட்கார்ந்த இடத்திலே வேலை செய்யும் வேலை மட்டும் நல்ல வேலை இல்லை. சமூக முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் எந்த வேலையும் நல்ல வேலைதான்.

  1. ஆண் பெண் உறவுகளை கையாளத்தெரியாமல் மிக மிக மோசமான விபரீதங்கள் எட்டும்.
  2. உறவினர்கள் அற்று போவார்கள். வேலை செய்யும் அலுவலகத்தில் உள்ள நண்பர்கள் ஒட்டியும் ஒட்டாமல் ஃபேமிலி பிரண்டஸ் ஆவார்கள்.

சரி இது மட்டுந்தான் அவலமா என்றால் இல்லை. உங்களின் பிள்ளை சொகுசான வாழ்க்கை வாழ்வது என்றால் நீங்கள் எப்படி கனவு கண்டு வைத்திருப்பீர்கள்?

  • அவன்/அவள் சிட்டியில் சொந்தமான பெரிய அப்பார்ட்மெண்டிலோ பீச் அவுசிலோ இருக்க வேண்டும்.
  • காலை எழுந்ததும் டீ காபி போட்டுதர ஒரு வேலை ஆள் இருக்க வேண்டும்.
  • ஆபிசுக்கு கிளம்பிய உடன் வேலைக் காரர்கள் டிப்பன் செய்து ரெடியாக வைத்திருக்க வேண்டும்.
  • சாப்பிட்டு முடித்ததும் அங்கேயே கைகழுவிவிட்டு எழுந்து காருக்கு செல்ல வேண்டும்.
  • காரை டிரைவர் துடைத்து வைத்திருந்து, இவர் வந்தவுடன் கதவைத் திறந்து காத்திருந்து, காரினுள் ஏறிய பின்னர் கதவை மெல்ல முடவேண்டும்.
  • காரில் செல்லும் போது தி ஹிந்த ஆங்கில நாளிதழ் படிக்க வேண்டும்.
  • வானுயர்ந்த பில்டிங்கின் முகப்பில் கார் நின்றவுடன் அங்கு காத்திருந்த பி.ஏ. கார் கதவுகளை திறந்துவிட வேண்டும்.

இப்படி எல்லாமே சினிமாவில் வரும் காட்சிகள். பின்னணி இசை கொடுத்து மிகைப்படுத்தப்பட்ட தினிப்பு ஆசைகள்.

Image result for creative images about education system

இப்படியாக மெல்ல மெல்ல அனைவரும் ராஜாவாக மந்திரியாக வாழ ஆசை படுகிறோம். ஆனால் அதற்கான தகுதியை வளர்த்துக் கொள்வதில் யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. சொகுசாக படித்து, சொகுசாக பரீட்சை எழுதி, சொகுசாக வேலை வாங்கி, சொகுசாக செட்டில் ஆகிவிட வேண்டும் என்று அனைவரும் ஓடுகிறோம்.

பையன் பேங்குல மேனேஜரா இருக்கான்னு சொல்லவே எவ்வளவு ஆனந்தமாய் இருக்கிறது? உண்மையில் வங்கிகள் சமூக முன்னேற்றத்திற்கு எப்படி பின்னடைவை ஏற்படுத்துகிறது என்பதை இந்த தற்சார்பு பொருளாதாரம் பக்கத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

போட்டியும் படிப்பும்

இப்படியாக வைத்துக் கொள்வோம். ஒரு பெரிய மைதானத்தில் நூறு விளையாட்டுகள் நடைபெருகின்றன‌. ஒவ்வொரு விளையாட்டிலும் வெற்றிபெறும் முதல் மூன்று பேருக்கு பரிசுகள் வழங்கப்படும். நூற்றில் ஒரு விளையாட்டு படிப்பு. அதிலும் முதல் மூன்று பேருக்குதான் பரிசு கிடைக்கும். இருந்தும் அந்த விளையாட்டின் வியாபாரத்திற்காக கவர்ச்சிகரமான (அபாசமான அல்ல) பல விளம்பரங்களை பரப்பி படித்தால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என நம்ப வைத்து சொற்ப உதாரணங்களைக் காட்டி வசியப்படுத்துகிறார்கள். ஏனைய விளையாட்டுகளிலும் பரிசுகள் உண்டு என்பதையே மக்கள் மறந்து விடுகிறார்கள்.

Related image

உங்களை ஒரு சுய பரிசோதனைக்கு உட்படுத்திப்பாருங்கள். நீங்கள் செய்யும் வேலை எத்தகையதாக வேண்டுமானாலும் இருக்கட்டும், அந்த வேலையை திருத்தமாக செய்ய நீங்கள் கடந்து வந்த காலமும் அதற்கு நீங்கள் கொடுத்த விலையும் தகுமானதா ? இல்லை வெறும் கல்வி வியாபாரத்திற்காக நீங்கள் உபயோகப்படுத்தப்பட்டீர்களா ? நீங்கள் செய்யும் வேலையை செய்ய நிச்சயமாக இளங்கலை முதுகலை என கல்லூரி படிப்பு மிகவும் அவசியமானதா ? அல்லது அந்தத் துறைசார்ந்த ஒரு வருட படிப்பு போதுமானதா ?

இயல்பிலேயே நாம் புதிய முயற்சிகளை எடுக்க பயமூட்டப்பட்டு வளர்க்கப்படுகிறோம். அதன் விளைவுதான் பி.இ., எம்.இ, படித்த இளைஞர்கள் ஐயாயிரத்திற்கும் ஆறாயிரத்திற்கும் வேலை கிடைத்தால் போதும் என்று போராடும் அவலம் ஏற்படுகிறது. முதலீடு செய்யவும் தொழிலில் லாபம் ஈட்டவும் யாரும் இங்கு வகுப்பெடுப்பது இல்லை. வரி குறித்த அடிப்படை புரிதலும் யாரும் சொல்லிக் கொடுப்பது இல்லை. சட்டம் குறித்த அறிவும் சட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்.

இருபது வயது வரை பல லட்சங்கள் செலவு செய்து படிக்கும் படிப்பிற்கும் நாம் செய்யும் வேலைக்கும் சம்மந்தம் இல்லாமல் இருப்பதை யாரும் இங்கு ஆச்சர்யமாய் பார்ப்பதாய் தெரியவில்லை. மாறாக எல்லாருக்கும் இதுதான் நடக்கிறது என்றால் நமக்கும் இது நடந்தால் பரவாயில்லை என்ற எண்ணமே மேலோங்குகிறது.

Related image

ஒன்பதாவது, பத்தாவது, பதினொன்றாவது, பனிரெண்டாவது பாடதிட்டத்தை கவனியுங்கள். தமிழ், ஆங்கிலம், கணக்கு, இயற்பியல், வேதியல், தாவரவியல், விலங்கியல், சமூக அறிவியல் என பட்டியல் இருக்கிறது. தொண்ணூறு விழுக்காடு மாணவர்கள் சயின்ஸ் குருப் இல்லையென்றால் கம்ப்யுட்டர் குருப். ஏனென்றால் நாம் ஆனால் டாக்டர் இல்லையேல் இஞ்சினியர். இத்தனையும் படித்த மாணவர்கள் இவற்றை என்றாவது தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தி இருக்கிறார்களா ? வாழ்கைக்கு முக்கியமான உணவும் அதை உற்பத்தி செய்யும் விவசாயத்தையும் மூன்றாம் தர தொழிலாக சித்தரித்தது யார் ? சமூக வாழ்க்கைக்கு முக்கியமான பொருளாதாரத்தை யார் எப்போது நமக்கு கற்றுக் கொடுக்க போகிறார்கள். அரசியல் குறித்த அறிவு மாணவர்களுக்கு தேவை இல்லை என்று யார் முடிவு செய்தது ? பட்ஜெட் குறித்தும் வரிகள் குறித்தும் யார் நமக்கு எடுத்து சொல்வது ? நாம் ஓவ்வருவரும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய விடம் இவைதான். ஆனால் நாமோ கணக்கு பாடத்தில் நூறு வாங்கவே போராட பழகியுள்ளோம்.  நூறில் நூறு பேருக்கும் உணவு, விவசாயம், பொருளாதாரம், அரசாங்க படிநிலை, local governance, சட்டம், குறித்த அறிவு தேவை அல்லவா? இவற்றை விடுத்து ஏன் மற்ற பாடங்களின் அடிப்படையை தாண்டி ஆழ படிக்க வேண்டும்? இந்த கேள்வியை கேட்டால், கணிதவியல் Research and Development போன்ற உயர்ந்த படிப்புகளுக்கு கணிதவியல் முக்கியம் போன்ற பதில்கள் வருகின்றன. மாணவர்களில் யார் யார் எந்த எந்த துறையில் சிறந்து வருவார்கள் என்று கண்டறிய தெரியாமல் எல்லாருக்கும் ஒரே பாடத்திட்டம் போட்டு, அதில் சிலரை மட்டும் வேலைக்கு எடுத்துக் கொள்வது. இது எவ்வளவு பெரிய அய்யோக்கியத்தனம் ?

வெறுமனே மக்கள்தொகையில் இருந்து வேலைக்கு தகுதியான ஆட்களை வடிகட்டும் ப்ராசஸ்தான் இந்த இருவது வருட படிப்பு என்று புரியும்போது வாழ்வின் பாதி முடிந்துவிடுகிறது. மீதி கேள்விக்குறியாகி விடுகிறது.

சரி நூறில் பத்து பேரை வேலைக்கு எடுத்துக் கொள்கிறார்கள், மற்றவர்களின் நிலைமை ? Collateral damage ? எல்லாவற்றிற்கும் அதிகாரவர்கத்தை குறை சொல்வதை நான் சரி என்று நம்பவில்லை. மிக எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் வேலை வேண்டும் என்று அரசாங்கத்திடம் ஐ.டி. நிறுவனங்களிடம் கை ஏந்தி நிற்பதை நிறுத்தி விட்டு, நம் ஊரின் முன்னேற்றத்திற்கு எந்த வகையில் நம்மால் பங்களிக்க முடியும் என்று சிந்தியுங்கள். நம் ஊர் முன்னேறும் நாமும் முன்னேறுவோம். படித்தால் தான் செட்டில்மென்ட் என்ற மாயை விடுங்கள். கற்றல் இருந்தால்தான் செட்டில்மென்ட். அரசியல்வாதிகள் சிறந்த உதாரணங்கள்.

எல்லா கால கட்டத்திலும் மக்களின் அன்றாட வாழ்கையை கடப்பதில் ஒரு இடைவெளி இருக்கும், அதை நிறப்பும் நிறுவனம் வெற்றி பெரும். உதாரணம் Flipkart, சக்தி மசாலா  போன்ற நிறுவனங்கள்.

போலி விளம்பரங்களில் இன்னும் எத்தனை நாள்தான் மயங்கிக் கிடக்க போகிறோமோ.

இரண்டு விரல்களை நீட்டி ஒன்றை தொடு என்று அதிகார வர்க்கம் நம்மிடம் கேட்கும் நேரத்தில் மீதியுள்ள எட்டு விரல்களை பற்றியும் யோசித்து முடிவெடுங்கள்.

கல்வி வியாபாரம் சரியா ?

இன்று பல இருபாலர் பள்ளிகளில் நீங்கள் பார்த்திருப்பீர்கள், ஆண் பிள்ளைகள் தனி வகுப்புகளிலும் பெண் பிள்ளைகள் தனி வகுப்பிலும் இருந்து படிக்கிறார்கள். ஏன் இந்த பிரிவினை ? எத்தனை நாள் இந்த பிரிவினை பெண் பிள்ளைகளை துர்சம்பவங்களில் இருந்து காப்பாற்றும் ?

அந்தந்த பள்ளி நிர்வாகம் தொல்லையின்றி பெண்பிள்ளைகளை பத்திரமாக வீட்டிற்கு அனுப்பத்தான் இந்த ஏற்பாடுகள். அதன் விளைவு கல்லூரிக்கு சென்றவுடன் அடக்கிவைத்த ஆசைகள் பீறிட்டு கொட்டும். காதல் என்ற பெயரில் ஏதோதோ செய்யத் துணியும். சில இடங்களில் கல்லூரிகளிலும் பிரித்து வைத்திருந்து நாண்கு வருடங்கழித்து அனுப்பி விடுகிறார்கள். வேலைக்கு செல்லும் இடத்திலோ திருமணத்திற்கு பின் ஆணும் பெண்ணும் பேசவே மாட்டார்களா ? அப்போது ஒருவர் மீது ஒருவர்க்கு ஈர்ப்பு ஏற்படாதா ? சிறு பிசகு ஏற்பட்டாலும் வல்லுணர்வு‍, பாலியல் தொல்லை என எப்பெரும் விபரீதங்கள் ஏற்படும்? இதெல்லாம் ஹார்மோன்களின் வெளிப்பாடு என்று எண்ண வேண்டாம். அது தவறு.

குழந்தைகளுக்கு முறையாக காமத்தையும், இனப்பெருக்கத்தின் முக்கியத்துவத்தையும் அறிமுகப்படுத்தாதது பெற்றோர் மற்றும் பள்ளியின் தவறு இல்லையா ?

உணர்வுகளை வழிபடுத்த கற்றுத்தருவதும் கல்விதான். வெறுமனே பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற பிள்ளைகளை தள்ளுவதெல்லாம் பள்ளி நிர்வாகத்தின் சுயநலம். வியாபாரத்தில் லாபம் ஈட்ட பிள்ளைகளை பலியாடாக ஆக்கிவிடுகிறார்கள்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் எதிர் பாலினத்தின் உடல்மீதிருக்கும் மாயையை உடைத்தெறியும் முக்கியமான பொறுப்பை யார்தான் ஏற்றுக்கொள்வது ? பள்ளி அல்லது கல்லூரி நிர்வாகிகளுக்கு இதெல்லாம் தெரியாமல் இல்லை. தவறு நடக்கும் என்று அவர்களுக்கு நன்கு தெரியும். அது தம் இடத்தில் நடக்காத வண்ணம் பார்த்துக் கொள்கிறார்கள். உண்மையில் மாணவர்கள் மீது அவர்களுக்கு அக்கரையே இல்லை. கல்வியை வியாபாரமாக்கியதின் விபரீதம் இதுதான். இது ஒரு பக்கம் இருக்கட்டும் வெறும் பத்துகிலோ புத்தகம் பிள்ளைகளின் வாழ்வை நிர்ணையித்து விடுமா ? அதைப் பெற்றோர்களும் நம்புவது எவ்வளவு பெரிய அறிவீனம் ?

Related image

(பகுதி 2ல் தொடரும்…)

மேலும் தங்களின் பொன்னான நேரத்தை ஒதுக்கி படித்தமைக்கு நன்றி எதுவும் கிடையாது. இவற்றை தீர ஆராய்ந்து நல்ல முறையில் செயல்படுத்துங்கள் சிலையே வைக்கிறேன்.

Image result for comment please

பின்னுட்டம் முக்கியம். உரையாடி அறியாமை களை.

Surya devan V —— 16.09.2018