உறவுகள் – உணர்வுகள் – மாயை Relativity of Relationship

Relativity of Relationship

உறவுகளின் பிம்பம் உண்மையா? மாயையா?

அம்மா, அப்பா, அண்ணன், அக்கா, தம்பி, தங்கை, நண்பன், மாமன், மச்சான் என்று எந்த ஒரு உறவை எடுத்துக்கொண்டாலும் அவர்களை நாம் புரிந்து வைத்திருப்பதும், அவர்கள் தங்களை இப்படிப்பட்ட நபர் என வெளிப்படுத்திக் கொள்வதும் மாறுதல்களுடன்தான் இருக்கும். நாம் ஒருவரை ஒரு மாதிரியாக புரிந்து வைத்திருக்கலாம். அது உண்மையிலேயே அவர் அப்படித்தான் என்பதாகவும் இருக்கலாம், அல்லது உண்மையில் அவர் வேறு விதமாகக்கூட இருக்கலாம். அவரிடம் அதை சொன்னோமேயானால் பெரும்பாலானோர் அதை அப்படியே ஒத்துக்கொள்ள மாட்டார்கள். தன்னிலை விளக்கம் தருவார்கள், வாதிடுவார்கள், சண்டைக்கு வருவார்கள், வஞ்சம் வைத்துக்கொள்வார்கள், கோபித்துக்கொள்வார்கள், அரிதாக சரிசெய்ய வேண்டியதை திருத்திக்கொள்வார்கள். இதில் நாம் ஒருவரை புரிந்து வைத்திருப்பதிலும்கூட திருத்தம் தேவைப்படலாம். தன் தவறை உணரும்போது தயங்காமல் அதை திருத்திக்கொள்வதும் நன்று.

நான் என்னை எப்படிப்பட்டவனாக வெளிக்காட்டிக்கொள்ள நினைக்கிறேன் என்பதும், என்னை மற்றவர்கள் எப்படி உள்வாங்கிக் கொள்கிறார்கள் என்பதும் நிச்சயமாக வெவ்வேறாகத்தான் இருக்கும். நம்மை உள்ளபடியே யாரும் புரிந்துக்கொள்வதும் இல்லை. நாமும் யாரையும் உள்ளபடியே புரிந்து வைத்திருப்பதும் இல்லை.

உதாரணமாக ஒருவரின் அப்பா நிஜத்தில் கஞ்சனாக இருப்பார். அவர் மகனுக்கோ மகளுக்கோ சல்லி காசு கூட செலவு செய்திருக்க மாட்டார். பணத்தின் மீது அளவற்ற பற்றுதலுடன் இருப்பார். ஆனால், அவர் தன்னை அவ்வாறே வெளிப்படுத்திக்கொள்ள மாட்டார். மாறாக, தன் பிள்ளைகளுக்காகத்தான் நான் பணத்தை சேத்துவைக்கிறேன் என்று சொல்லுவார். உண்மையில் அந்த அப்பாவின் நோக்கம் பிள்ளைகளுக்கு பணம் சேர்ப்பதாகக்கூட இருக்கலாம். அல்லது பணத்தின் மீதான ஒரு மாயை, ஒரு பற்றுதல் கூட இருக்கலாம். சிலர் தன்னிடம் இருக்கும் பணத்தின் எண்ணிக்கையைப் பார்த்து பார்த்து மனநிறைவு அடைவர். நாம் ஒருவர் மீது வைக்கும் கருத்தும் அவர் அதற்கு தரக்கூடிய தன்னிலை விளக்கமும் நிச்சயம் ஒத்துப்போகாது. ஆனால் இருவரில் ஒருவருக்கு நிச்சயம் உண்மை யாதென்று புரிந்திருக்கும்.

மாயைகள் பலவிதம்

ஒருவரை அளவுக்கு அதிகமாக நம் அருகிலோ, நம் எண்ணத்திலோ இடம் கொடுக்கும் போது, பலவிதமான இல்லூஷன்கள் நமக்குள் நடக்க வாய்ப்பு உள்ளது.

தள்ளி இருக்கும்போது பிடித்திருக்கும், நெருங்க நெருங்க வெறுப்பீர்கள்.

தள்ளி இருக்கும் போது வசீகரிக்கும், நெருங்கும் போது பிடித்துவிடும், சிலாகிக்கும், சற்று விலகி நின்று பார்த்தால் மட்டுமே மயக்கத்தில் இருந்தது தெரியும்.

தள்ளி இருக்கும்போது பிடிக்காது, அருகில் செல்ல செல்ல பிடித்துவிடும்.

சிலருக்கு மனிதர்களை எப்போதுமே பிடிக்காது. மற்றவர்களின் குணங்களில் உள்ள குறைகளையே பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்துக்கொண்டு இருப்பார்கள். அனைவரையும் வெறுப்பார்கள்.

அரிதாக சிலர் மட்டும் இந்த வகைமைக்குள் வராமல் ‘நீங்கள் நல்லவரா கெட்டவரா’ என்று கேட்கும்படியாக இருப்பார்கள். இவர்கள் நியுட்ரெல் கேரக்டர் இல்லை. இவர்கள்தான் இயல்பானவர்கள். தான் செய்யும் செயல்களை மற்றவர் எப்படி புரிந்துகொள்கிறார் என்பதை விடவும் தான் செய்யும் செயல்கள் தன்னைப்பொறுத்தவரை நியாயமாக இருக்கிறதா என்பதையே அதிகம் சிந்திப்பவர்கள். இவர்களை இவர்களாகவே ஏற்றுக்கொள்வது சற்றுக்கடினம்.

இப்போது கீழே உள்ள படத்தைப்பாருங்கள். இடது பக்கம் இருப்பவரைப் பாருங்கள். கோபத்துடன் முகம் சுழிப்பதைப்போல இருக்கிறார் அல்லவா? வலது பக்கம் உள்ளவரைப் பாருங்கள் சாந்தமான முகத்துடன் இருக்கிறாரா? நீங்கள் இதை மொபைலிலோ கம்ப்யூட்டர் மானிட்டரிலோ பார்த்துக்கொண்டிருக்கலாம். டிஸ்பிளேவை விட்டு சற்று விலகிச்சென்று கொண்டே பாருங்கள். முறைத்தவரின் முகம் சாந்தமாகவும், சாந்தமானவரின் முகம் முறைப்பதைப் போலவும் தோற்றமளிக்கும். சும்மா ஒரு ட்ரை பண்ணுங்க.

Credit: COURTESY OF AUDE OLIVA M.I.T. AND PHILIPPE G. SCHYNS University of Glasgow

இது போலதான். நாம் ஒரு நபருடன் அளவுக்கு அதிகமாக பழகும்போது பல மாதிரியான நிலைப்பாட்டை எடுக்கிறோம். இதுமாதிரியான தருணங்களில் எந்த ஒரு விளிம்புக்கும் போகாமல், ஒருவரை பிடிக்கும் என்ற தூரத்தில் மட்டுமே வைத்துக்கொண்டு அவரை அனுகுவதோ பழகுவதோ என்றென்றைக்கும் நன்மை தரும். நல்ல நட்பில், நல்ல உறவில் நீண்ட காலம் பயணிக்க முடியும்.

யாராக இருந்தாலும் ஒரு அளவுக்கு மேல் அவர் பேசுவதை நாம் கேட்கும் போது நிச்சயமாக நாம் முரண்படுவோம். அந்த முரண் மிக இயல்பானது. ஒருவரது எண்ணமும் மற்றவரின் எண்ணமும் நூறு விழுக்காடு அப்படியே ஒற்றுப்போகாது. ஒரு நபரை பிடித்திருக்கிறது என்றால் அவரை அந்த தூரத்திலேயே வைத்து ரசிப்பதுதான் நமக்கும் நல்லது, அந்த நபருக்கும் நல்லது.

The more you know a person, either you hate or you love. The less you know a person, you can like and admire him.

உங்களோடு நெருக்கமாக இருந்த போது நீங்கள் வெறுத்த ஒரு நபரை சிறிது காலம் கழித்து பார்க்கும் போது அந்த வெறுப்பு அறவே இல்லாமல் இருக்கும். அந்த நபரின் நல்ல பிம்பம் புலப்படும்.

உங்களோடு நெருக்கமாக இருந்தபோது நீங்கள் சிலாகித்து நேசித்த ஒரு நபரை, சிறிது காலம் விலகி நின்று பார்க்கும்போது, அவர் எப்படி உங்களை இன்ஃப்லூயன்ஸ் செய்தார் என்பது உங்களுக்கே ரிவீல் ஆகும்.

நீங்கள் ஒரு நண்பருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் அறையை பகிர்ந்து கொள்ள விரும்பி, அறையில் அவருடன் இருந்து பிறகு அது சரிபட்டு வராமல், அறையை காலி செய்த அனுபவம் நிச்சயம் இருக்கும் அல்லவா? காலி செய்யவில்லை என்றாலும் அந்த நண்பர் மீது முன்பு இருந்த அபிப்ராயம் குறைந்து வேண்டா வெறுப்பாகவே இருக்கவேண்டி வந்திருக்கும்.

மகாத்மா அவர்களுடன் நீங்களும் நானும் முழு நாளும் முழு வாரமும் இருந்திருந்தால் எப்படியெல்லாம் அவரை வெறுத்திருப்போம் என்று யோசித்துப் பாருங்கள். நமக்குத் தெரிந்ததெல்லாம் பொக்கைவாய் சிரிப்பு மட்டுமே. அவர் இருமி நாம் கேட்டதில்லை. அவர் குரட்டைவிட்டு நாம் கேட்டதில்லை. அவர் பெண்களிடம் கொஞ்சிப்பேசி நாம் பார்த்ததில்லை. அவர் அசட்டு ஜோக் சொல்லி நாம் கேட்டதில்லை. அவர் முன்னுக்கு பின் முரணாகப் பேசி நாம் பார்த்ததில்லை. பூமர் வசனங்கள் மொழிந்து பார்த்ததில்லை. அதனால்தான் அவர் மகாத்மா என்ற புனித பிம்பத்தை நாம் ஏற்கிறோம்.

Gandhi’s unusual diet very often left him highly constipated and spending hours at a time in the bathroom. But where things get weird (at least for most Westerners) — according to Gandhi: Naked Ambition, a 2010 biography by Jad Adams — is in how Gandhi dealt with his constipation. According to Adams, Gandhi would routinely invite one or more of the many female companions he kept around into the bathroom to visit with him while he was on the toilet.

https://allthatsinteresting.com/gandhi-facts-quotes-dark-side#:~:text=He%20was%20staunchly%20racist%20for,20s%20through%20his%20mid%2D40s.

இது மகாத்மா காந்தி அவருக்கு மட்டும் இல்லை, நாம் உயர்வாக நினைக்கும் பல ஆளுமைகளுக்கும், புனிதமாகக் கருதும் பல மதகுருக்களுக்கும், ஹீரோவென வாழும் பல டம்மி பீசுகளுக்கும் பொருந்தும். நிஜத்தில் அவர்களுடன் சிறிது காலம் பயணித்தாலே அவர்களின் குணங்களில் உள்ள நிறைகுறைகள் பட்டவர்த்தனமாகத் தெரிந்துவிடும். ஒருவர் கஞ்சனாக இருக்கலாம், ஓட்டைவாயாக இருக்கலாம், சுயநலவாதியாக இருக்கலாம், பீடோபைலாக இருக்கலாம், நல்லதாக இருக்கும் யாவற்றையும் கெடுத்து வைக்கும் சேடிஸ்ட்டாகக்கூட இருக்கலாம். இவை அனைத்து குணங்களும் யாரிடம் வேண்டுமானாலும் இருக்கலாம். அது நமக்குத் தெரியாத வரையில், நம்மை பாதிக்காத வரையில் நமக்கு எந்தப்பிரச்சனையும் இல்லை.

இதனால்தான் விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள் என்று எளிதாக சொல்லி வைத்திருக்கிறார்கள். யாராக இருந்தாலும் நூறு நாட்கள் ஒரே வீட்டில் இருக்கும் போது அதில் ஆயிரமாயிரம் முரண்கள் வரக்கூடும். இது மிகமிக இயல்பான ஒன்று. அடுத்தவரின் பிழைகளை பேசிப்பேசி ஆர்கஸம் அடைவது ஒன்றும் ஆகச்சிறந்த செயல் இல்லை. ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் உள்ளது.

ஞாபகம் என்னும் துரோகி

நம் மூளை ஒன்றும் கணினி கிடையாது. தரவுகளை அப்படியே பதிவேற்றி வைத்திருந்து வேண்டிய நேரத்தில் அப்படியே பதிவிறக்கம் செய்துகொள்ள. கணினியில் 0 மற்றும் 1 என எல்லாவற்றையும் பைனரியில் பதிவேற்றிக் கொள்ளும். ஒரு தரவானது ‘சூழியம்’ என இருக்க முடியும் அல்லது ‘ஒன்று’ என இருக்க முடியும்.

மூளை அப்படிக்கிடையாது. சின்ன சைபர், பெரிய சைபர், பச்சை நிற சைபர், மங்கலான சைபர், ஒல்லியான ஒன்று, குட்டையான ஒன்று, பாதி, முக்கால், கால், .625 என எண்ணில் அடங்காத வித்தியாசங்கள் இந்த சைபர் முதல் எண் ஒன்று வரை இருக்கின்றன. இந்த எர்ரர்கள் ஏற்படுத்தும் விளைவு ஒருவரை ஃபிராடு என்றும் ஏமாற்றுக்காரனென்றும் பெயர் வாங்கிக் கொடுத்துவிடும். (சிலர் உண்மையிலேயே ஃபிராடாகவும் ஏமாற்றுக்காரர்களாகவும் இருப்பதை மறுப்பதற்கில்லை)

பொய்கள் பல வகைப்படும். சுயநினைவுடன் பொய் சொல்வதை நான் கணக்கில் வைத்துக்கொள்ளவில்லை. தூங்குபவரை எழுப்ப முடியும். தூங்குவது போல் நடிப்பவரை எழுப்ப முடியாத அல்லவா? அது போல் தன்னை அறியாமல் பொய் சொல்ல நேரிடும் வகைமைகளை நான் பட்டியலிடுகிறேன். நான் தவறவிட்டதை நீங்கள் பின்னூட்டத்தில் பதிவிடுங்கள். நான் தெரிந்து கொள்கிறேன்.

Glitch/Repaired memory lies: மூளை தரவுகளை நினைவு படுத்தும் போது, அதில் பழுது ஏற்பட்டு வேறு ஒரு தரவை அது எடுத்து தரும். உதாரணமாக நண்பரிடம் ஒருவர் நான்காயிரம் பணம் வாங்கியிருப்பார். ஒரு மாதம் கழித்து யோசித்துப்பார்க்கும் போது மூவாயிரம் வாங்கியதாகவே அவருக்கு ஞாபகத்தில் இருக்கும். பேசும் போது மூவாயிரம் என்று சொல்லி, நண்பர் இல்லை நாலாயிரம் என்று சொல்லி, கடைசியில் வேறு எங்காவது சோதித்து உறுதிபடுத்தும் போது, ஆமாம், நாலாயிரம்தான் என்று உண்மையை உணர்ந்து சாரி மச்சான். கன்ஃப்யுஸ் ஆகிட்டேன் என்று ஒப்புக்கொண்டுவிடுவார். இதில் ஒருவர் பொய் சொல்வதாகத் தெரியும். ஆனால், மூளை செய்யும் சிறு பிழையினால் அவரது கேரக்டரையே இப்படித்தான் என்ற முன்முடிவுக்கும் பலரும் வந்துவிடுவர்.

Influenced memory lies: இன்ஃப்லூயன்ஸ் பொய்கள். ஒருவரது நினைவில் மங்கலாக இருக்கும் ஒரு தரவை, இன்னொருவர் சொல்லும் தரவு மறைத்துவிடும். உதாரணமாக, ஒருவர் நண்பரிடம் நான்காயிரம் வாங்கி இன்னொருவருக்கு தருகிறார் என்று வைத்துக்கொள்வோம். வாங்கியவர் திருப்பித்தரும் போது மூவாயிரம் தந்து அவ்வளவுதான் வாங்கியதாக சொன்னால், இவரது நினைவில் தெளிவில்லாமல் இருந்த நாலாயிரம் என்ற பிம்பத்தை மூவாயிரம் என்ற பிம்பம் மறைத்துவிடும். முதலாவது நண்பரிடம் இவர் மூவாயிரம் திருப்பித் தர அவர் நாலாயிரம் கேட்க, இவரும் மூவாயிரம்தான் வாங்கியதாக வாதிட நேரிடலாம். இதில் இவருக்கு எந்த லாபமும் இல்லைதான். ஆனால் மூவாயிரம்தான் தான் வாங்கியாதாக நம்ப வைக்கப்பட்டிருக்கிறார். இதற்கும், அக்கவுண்ட் எதாவது எடுத்து செக் செய்யும் போதுதான் உண்மை வெளிப்படும். பிறகு சாரி நண்பா கன்ப்யூஸ் ஆகிட்டேன் என சர்ரண்டர்தான். இதிலும் கேரக்டர் டேமேஜ்தான் மிச்சம்.

Defensive memory lies: ஒருவர் தன் நண்பரிடம் ஒரு பைக் சாவியைக் கொடுக்கிறார். நண்பர் அதை அவரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார். பிறகு பைக் சாவி தேவைப்படும் போது கொடுத்தது ஞாபகம் இருக்குமே தவிர, திரும்பி வாங்கியது ஞாபகம் இருக்காது. இப்பொது அந்த நபர் சாவியை வாங்கி எங்கு வைத்திருப்போம் என்பதை யோசிக்க மாட்டர். சாவியை தான் திரும்ப பெறவே இல்லை என்றும் வாதிடுவார். அல்லது மறுபடியும் கொடுத்துவிட்டேன் என்று வாதிடுவார். (மூளை அவ்வாறு ரீகிரியேட் செய்துவிடும்.) உண்மையில் சாவி எங்கவது அலமாரியில்தான் வைத்திருப்பார். தேடுவதற்கு மூளை சலுப்பு பட்டுக்கொண்டு, என்னிடம் சாவி குறித்த தகவலே இல்லை என வாதிடும். மூளையின் சோம்பேறித் தனம் அல்லது தேடி கிடைக்காவிட்டால் பொறுப்பில்லாமல் நடந்து கொண்டது வெளியே தெரிந்து அவமானம் வரும் என்ற பயத்தினால், நடந்த ஒரு சம்பவத்தை, இல்லை என மறுத்து பேச மூளையே நிர்ப்பந்திக்கும். சாவி கிடைத்தப்பிறகு ‘சாரிடா சுத்தமா ஞாபகமே இல்லை!, மறந்துட்டேன்.’ என சமாளிப்பார்கள். இது மூளை செய்யும் சொதப்பல்களே அன்றி சம்மந்தப்பட்டவரின் கேரக்டர் இல்லை. இந்தப் பிரச்சனை இருப்பவர்களிடம் பரிவர்த்தனை செய்யும் போது குறைந்தபட்ச கவனமாவது அல்லது ஆதாரத்துடன் பரிவர்த்தனை செய்துக்கொள்வது அவசியத் தேவை.

Profit memory lies: இதுதான் மிகமிக ஆபத்தான பொய் வகை. தன்னுடைய லாபத்திற்காகவே, மூளை தான் முன்பு கூறியதை மாற்றி அமைத்துக்கொண்டு, நடக்காத ஒன்றை, சொல்லாத ஒன்றை அல்லது சொல்லிய ஒன்றை மாற்றிப்பேசும். உதாரணமாக இரு நண்பர்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள், அவர்கள் ஒரு ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுகிறார்கள். சாப்பிட்டு முடித்ததும், பில் கட்டும் போது, ‘மச்சான் போன தடவ நான் பே பண்ணிட்டேன். இப்போ நீ பே பண்ணிடு’ என்று ஒரு நண்பன் கூற. ‘டேய் போன தடவயும் நான்தான்டா பே பண்ணினேன்.‘ என்று வசனங்கள் ஆரம்பித்து அவரவர் ஞாபகத்தைக்கொண்டே வாதிடுவரே தவிர, ‘சரி எனது ஞாபகம் தவறாகக்கூட இருக்கலாம்‘ என்று இருவரில் ஒருவர்கூட விளங்கிக்கொள்ளமாட்டார்கள். அவர்களது ஞாபகம் அவர்களுக்கு அப்படி ஒரு நம்பிக்கையை கொடுக்கிறது. ஏனென்றால் செலவை மிச்சப்படுத்த லாப நோக்கத்திலேயே நெடுங்காலமாக இயங்கி வரும் மூளைக்கு இப்படித்தான் யோசிக்கத்தோன்றும். இந்த லாப நோக்கத்தில் இயங்கும் மூளையை நம்பி நல்ல நண்பர்கள்கூட சண்டை போட்டுக்கொண்டிருப்பார்கள்.

இப்படி நடந்த ஒரு சம்பவத்தையோ, பேசிய வார்த்தைகளையோ, மூளையின் ஞாபகத்தில் இருந்து ஒருவர் எடுத்து தரும்போது நிச்சயமாக அதில் மாறுதல்கள் ஏற்படும். நடந்ததை நடந்ததுபோலவே எடுத்துசொல்லும் ஆற்றல் நம்மிடம் மிகமிகக் குறைவுதான். அதனால்தான் முக்கியமான தகவல்களை எல்லாம் எழுத்துவடிவத்தில் அச்சிட்டு வைக்கிறார்கள். காலங்கள் மாறினாலும் அச்சிட்ட எழுத்துக்கள் மாறுவதில்லை. ஞாபகங்கள் மாறிவிடும். இப்போது யோசித்துப்பாருங்கள் நம்முடன் பழகியவர்களை பழகிக்கொண்டிருப்பவர்களை அவர்களின் ஞாபகம் பிழையாகிப்போனதன் விளைவாக அவர்களை எவ்வளவு தாழ்வாக நினைத்திருப்போம் என்று. இனியும் அப்படி யாரையும் ஞாபகத்தினால் ஏற்படும் முரண்களைக்கொண்டு தவறாக எடைப்போட வேண்டாம். முடிந்த அளவிற்கு பிற தரவுகளைக்கொண்டு பழுதடைந்த ஞாபகத்தை சரிசெய்ய முயற்சியுங்கள். ஞாபகத்தை விடவும் மனிதர்களின் உணர்வு பெரிது.

தனது ஞாபகம் தவறாக இருக்கிறது’ என்பதற்கும் ‘தான் தவறானவன்’ என்பதற்கும் எவ்வளவு வித்தியசங்கள் இருக்கிறது என்பதை யாவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

Stockholm Syndrome

நெட்ஃப்லிக்ஸ்-ல் மனி ஹெயிஸ்ட் பார்த்தவர்களுக்கு இந்த வார்த்தை பரிட்சையம் ஆகியிருக்கலாம். பார்க்காதவர்களுக்கும் இந்த வார்த்தை தெரிந்திருக்கக்கூடும். நல்ல வார்த்தை. ஏன் நல்ல வார்த்தை என்று சொல்கிறேன் என்று உங்களுக்கே புரியும்.

ஒரு நபருடன் மட்டுமே குறிப்பிட்ட காலம் நெருக்கமாக சேர்ந்து இருக்கும் போது, அவர்மீது ஒரு இனம்புரியாத பந்தம் மனதினுள் ஏற்படும். உங்களுடைய எல்லா உணர்வுகளையும் ஒரு நபருடனே நீங்கள் பகிர நேரும்போது, அந்த நபர் உங்களின் மனதிற்கு மிகமிக நெருக்கமாகி விடுகிறார். அது அவர்மீது அன்பு இருப்பதாக, பாசம் இருப்பதாக, காதல் இருப்பதாகக்கூட சித்தரித்துக்கொள்ளும். அவர் இல்லாமல் இருக்கும் சூழலை மனதினால் எளிதில் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. ஏனென்றால் மனதிற்கு சமீபத்தில் ஒரு நபருடன் 24 மணி நேரமும் பயணித்திருக்கிறது. அதன் விளைவு, அந்த நபர் இல்லாமல் எதையுமே கற்பனை செய்வது சற்று கடினமாக இருக்கும். இந்த உணர்விற்கு அன்பு, பாசம், நேசம், காதல், என்று என்ற க்ளோரிஃபிகேசனும் தேவையில்லை. புனிதப்படுத்த முயற்சிக்காமல், பி.ஜி.எம். போடாமல் உற்று கவனியுங்கள்.

ஒரே நபருடன் ஒரே அறையில் உண்டு, உறங்கி, பேசிப் பழகும் போது, அந்த நபரின் இயல்பு புதிதாக இருப்பதால் மனித மனமானது அந்த ஒருவரை எளிதில் மனதில் ஒட்டிக்கொள்ளும். இதைத்தான் கமல்ஹாசன் குணா படத்தில் அபிராமிக்கு இந்த எஃபக்டை வரவழைத்துக்காண்பித்தார். காதல் கொண்டேன் படத்தில் செல்வராகவன் சொல்லிப்போனார்.

மூளையைப் பொறுத்தவரையில் சமீபத்தில் எது அதை மிகவும் பாதித்தத்தோ அதை எளிதில் மறக்காது. அது ஒரு பாட்டாக இருக்கலாம். ஒரு படமாக இருக்கலாம். ஒரு பொருள், வாகனம், இடம், செயல், நபர், சூழல் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இது ஒரு நிறத்தின் சாயம் விரல்களில் ஒட்டிக்கொள்வது போல என்று புரிந்துகொள்ளலாம். தேய்த்து கழுவாத வரையில் அது விரல்களை விட்டுப் போவதேயில்லை அல்லவா? அது போலதான் சில இசை, வார்த்தை, பாடல், முகம், நபர் என மனதிற்கு இதமளிக்கும் அல்லது பழகிப்போன அல்லது எந்தவொரு ஆழ்மன உணர்விற்கு உட்படுத்தும் எதுவாகவும், யாராகவும் இருக்கலாம், அதன் இருப்பை நீண்டகாலம் உள்வாங்கிக் கொண்டிருக்கும் ஒரு மனம், அதன் இன்மையை எளிதில் கையாளத்தெரியாமல் அதன் இருப்பைத் தேடித்திரியும். இதுதான் Stockholm Syndrome.

இந்த சிண்ட்ரோம் எவருக்கு வேண்டுமானாலும் வரலாம். வராமலும் போகலாம். ஆனால் வருவதேற்கே அதிக வாய்ப்புள்ளது. ஏனென்றால் நாமெல்லாம் சாதாரன மனிதர்கள்தானே. உணர்ச்சிவசப்பட்டு நம் அறிவை மீறி அவசரப்பட்டு செயல்பட்டுவிடும் இயல்பான மனிதர்கள்தான்.

சரி இது வஞ்சகர்கள் மட்டுமே செய்யும் வசியம் போன்ற செயலா என்றால் இல்லை. சாதாரனவரும் இதை அவரை அறியாமலே செய்ய முடியும். இரு இயல்பான நபர்கள் ஒரு அறையில் இருந்தாலே இந்த சிண்ட்ரோம் இருவருக்குள்ளும் எளிதாக தானாக உருவாகிக்கொள்ளும். திட்டமிட்டு இதனை செயல்படுத்தவேண்டிய அவசியம் இல்லை. (எதிர்பாலினமாக இருந்தால் மிகச்சுலபமாக இது அரங்கேறும்) ஆனால், அதே சமயம், சில டாக்சிக் நபர்களுடன் நாம் இதே சிண்ட்ரோமினால் ஆட்கொள்ளப்பட்டு அந்த நபருடனே நெடுங்காலம் பயனிக்க நேரலாம். அதுமாதிரியான நேரங்களில் நாம் டாக்சிக் நபருடன் ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோமினால் பாதிக்கப் படுகிறோமா என்று சோதித்துக்கொள்ளவது அவசியம். டாக்சிக் நபர்களின் உறவைப்பற்றி சுருக்கமாக (ஆம் சுருக்கமாகப்) பார்ப்போம்.

டாக்சிக் ரிலேசன்ஷிப்

யாரெல்லாம் டாக்சிக்? நமக்கு பிடிக்காதவரெல்லாரையும் டாக்சிக் என்று முத்திரைக் குத்தி அவப்பெயரை உண்டாக்கிடலாமா? கோபப்படுபவரெல்லாம் டாக்சிக்கா? குறை சொல்லுபவர்கள் எல்லாம் டாக்சிக்கா? இதற்கான வரைமுறை அவரவர் வசதிக்கேற்ப மாறிக்கொண்டேதான் இருக்கிறது. டாக்சிக் என்றால் நச்சு, விசம். நம் மன நலனுக்கும், வாழ்க்கை நலனுக்கும் கேடான எந்த ஒரு உறவையும் டாக்சிக் எனலாம். ஆனால் டாக்சிக் நபர்களை வேறு சில வார்த்தைகளைக்கொண்டு புனிதப் படுத்த முயற்சிப்பார்கள். அதனை பட்டியலிடுகிறேன்.

தாய்ப்பாசம் என்ற பெயரில் Toxicity: சில குடும்பங்களில் அம்மாக்கள் டாக்சிக் நபர்களாக இருப்பார்கள். தாய்ப்பாசம் என்ற பெயரில் அழுதுப் புலம்பி புரனிப்பேசி குடும்ப நபர்களின் நிம்மதியை குலைப்பதையே முழுநேர வேலையாக வைத்திருப்பார்கள். எதிர்த்து யார் பேசினாலும் தாய்மையின் வேதனைகளை மேற்கோள்காட்டி சென்மெண்ட்டாக தாக்கி மடக்கிவிடுவார்கள். இவர்களை யாரும் எதுவும் செய்ய முடியாது. டாக்சிக் மம்மிக்கள்.

அப்பாபாசம் என்ற பெயரில் Toxicity: சிறந்த உதாரணம் சமீபத்தில் வந்த டான் படத்தின் ஆகச்சிறந்த அப்பா சமுத்திரக்கனி. பாசத்தைக்கூட அடித்துதான் காட்டுவாராம். அடங்கப்பா.

வாழ்க்கை மீதோ, வேலைமீது, எதன் மீதோ, ஏன் கனவன்மீதோ/ மனைவிமீதோ இருக்கும் கோபத்தைக்கூட, வயதிலும் உருவத்திலும் சிறியதாக இருப்பதாலே குழந்தைகள் மீது ஒட்டுமொத்தக் கோபத்தையும் கட்டவிழ்த்துவிடும் அப்பா அம்மாக்களை 90ஸ் கிட்ஸ் தலைமுறைவரை பார்த்திருப்பார்கள். விதவிதமான சாமான்களைக்கொண்டு தன் மகன்களை வெளுத்து வாங்குவார்கள். குழந்தைகள் தவறு செய்ததற்காக அடிவாங்கியதை விடவும், பெற்றோர்களுக்கு கோபம் வரும்போதெல்லாம் அடிவாங்கியதுதான் அதிகமாக இருக்கும். அனுபவித்தவர்களுக்கு நன்கு புரியும். ஏன் பிறந்தோமோ என்கிற அளவிற்கு அடி பின்னி பெடலெடுத்திருப்பார்கள். குழந்தை வளர்ப்பு என்ற சொல்லின் தேவையே இவ்வகை டாக்சிக் பெற்றோர்களால் வந்ததுதான். இவர்களைப் பொருத்தவரை சோறு போட்டு, துணி மணி வாங்கிக்கொடுத்து, ஸ்கூலுக்கு பணம் கட்டிவிட்டால், இவர்களின் கடமை நூறுக்கு இருநூறு விழுக்காடு நிறைவடைகிறது. இதையே அரும்பெரும் தியாகமாகக் கருதுவார்கள். இதுபோக அடித்து துன்புறுத்தியது, வசைப்பாடி தாழ்வு மனப்பாண்மையை மனதில் நிரப்பியது, வாழ்க்கையை வெறுக்குமளவிற்கு அவமானப்படுத்தியது, போன்றவையெல்லாம் எந்தக்கணக்கிலும் வராதவை. இதுபோக தலைக்கு மேல் கடனை வாங்கிவிட்டு மகன்களை மகள்களை கடனை திருப்பி செலுத்தைவைக்கும் பெற்றோர்களையும் நாம் பார்க்காமல் இல்லை. உங்களுக்கு புள்ளையா பொறந்தது ஒரு குத்தமாடா? என்று புலம்பும் அளவிற்கு சிக்கல்களை அள்ளி அள்ளி கொடுக்கிறார்கள் அன்பான பெற்றோர்கள்.

நிறைய இடங்களில் பார்த்திருப்பீர்கள், பிள்ளைகள் பெற்றோரை விட்டுவிட்டு போய் விடுவார்கள். பிள்ளைகள் அப்படி செய்ய பெற்றோர்கள்தான் முதல் காரணமாக இருப்பார்கள். அன்பாக பாசமாக சரியாக வளர்க்கும் குழந்தைகள் வளர்ந்து பெரியவரானப்பிறகு பெற்றோர்கள் மீது நன்றி கொள்வார்கள். (இங்கும் விதிவிலக்குண்டு) ஆனால், பலவிதமான கொடுமைகளுக்கு ஆளாக்கி, மனதிலும், உடலிலும், ஆரோக்கியத்திலும் சரி செய்ய முடியாத காயங்களை பிள்ளைகளின் வாழ்வில் ஏற்படுத்தும் பெற்றோர்களுக்கு, பிள்ளைகள் புறக்கனிப்பதே பிள்ளைகள் அவர்களுக்கு வழங்கும் விடுதலை என்றே நான் பார்க்கிறேன்.

வசதியாக வளர்த்தால்தான் நல்ல குழந்தை வளர்ப்பு என்றில்லை. எந்த வசதியும் இல்லை என்றாலும், அன்புடன், நற்பண்புகளுடன் குழந்தைகளை வளர்க்கும் அவர்களுக்காக உழைக்கும் அத்தனை பெற்றோர்களுக்கும், குழந்தைகள்தான் சாமி. அருவி படத்தில் வரும் குக்கோட்டி குன்னாட்டி என்ற பாடலின் வரிகள் எப்போதும் என்னை மெய்சிலிர்க்க தவறியதே இல்லை.

வந்தாயே என் சேயாக
என் தாயும் அது நீயாக
ஏழைன்னு நினையாதே
என் சாமி நீ தானே

Baby Track (Kukkotti Kunaatti) – Video Song | Aruvi | Arun Prabu | Bindhu Malini, Vedanth

அதற்காக பிள்ளைகளை அடித்து வளர்த்தால் டாக்ஸிக் பேரண்டின்க் என்று அர்த்தம் இல்லை. “பயபக்தி” என்று படித்திருப்பீர்கள். பயம் தான் முதலில். பிறகுதான் பக்தி. குழந்தைகள் மனம்போனபோக்கில் போகாமல் இருக்க அவ்வப்போது சில சில திருத்தங்கள் தேவைப்படும். அவர்களாக புரிந்துகொள்ளும் வயதிற்கு வரும்வரை சிலபல சமயங்களில் அவர்களை கண்டிப்புடன் நடந்த வேண்டிய சூழல் வரும். அப்போது, அம்மு குட்டி, செல்லம் என்றெல்லாம் கொஞ்சிக்கொண்டு இருத்தலாகாது. திருடுவது அறமற்ற செயல் என்ற முடிவுக்கு வர ஒரு குறிப்பிட்ட வயது தேவைப்படும். அந்த வயதிற்கு வரும் முன்பே திருடப்பழகும் குழந்தைக்கு அறம் குறித்த பாடம் புரியாது. ஆனால் வலி குறித்த அறிவு இருக்கும். திருடினால் அடிப்பார்கள். அடித்தால் வலிக்கும். அதனால் திருட வேண்டாம் என்று சில காலம் வளர்வார்கள். அறம் குறித்த அறிவு வந்தப்பிறகு, திருடினால் வலிக்கிறதோ இல்லையோ, மனம் உருத்தும் என்ற நிலைக்கு வருவார்கள். அதுவரை திருடாமல் இருக்கவும், திருட்டின் மூலம் சுகத்தை அனுபவிக்காது இருக்கவும் பெற்றோர்கள், தேவையான கண்டிப்புடன் இருப்பதும், முறையான குழந்தை வளர்ப்புதான். (போலீஸ் அடிக்குப் பயந்து மறுமுறை திருடாமலும் வம்பு தும்புக்கு போகாமலும் வாழ்பவர்கள் பலர். வலி ஒன்றே சிறந்த மொழி)

நண்பர் என்ற பெயரில் Toxicity: இவ்வகை நபர்களை கடந்து வராத ஆட்களே இருக்க மாட்டீர்கள். பள்ளி, கல்லூரி, ஹாஸ்டல், ஆஃபீஸ், ரூம், ஏரியா, என்று திசையெங்கும் டாக்சிக் நண்பர்கள் பரவிக்கிடப்பார்கள். பொதுவாக இவர்களை நான் வசைப்பாடுவது இல்லை. ஏனென்றால் இவர்கள் நமக்கு நிறைய பாடங்களை சொல்லிக்கொடுப்பார்கள். பெற்றோர்கள், வாழ்க்கைத் துணை, போல இவர்களிடம் விலகுவது ஒன்றும் முடியாத காரியம் இல்லை. டாக்சிக் நண்பர்களை சிறு முயற்சியில் வாழ்க்கையில் இருந்தேக்கூட தூக்கி எறிந்துவிடலாம். பெற்றோரையோ, கணவன் மனைவியையோ, மகன், மகளையோ அப்படி தூக்கி எறிந்துவிட முடியாது. நண்பர் என்ற பெயரில் நம்மை சுற்றி சிதறிக்கிடக்கும் டாக்சிக் நபர்களை இனங்காண்பது எளிது. உங்கள் பணத்தில் மங்கலம் பாடிக்கொண்டிருப்பார். அல்லது பணத்தை அவர் செலவு செய்து உங்களின் பொன்னான நேரத்தை உறிஞ்சிக்கொண்டிருப்பார். அல்லது உங்களின் பலவீணம் தெரிந்து அதைக்கொண்டே உங்களின் நிம்மதியைக் கெடுக்க முக்காலமும் வேலைபார்த்துக்கொண்டே இருப்பார்.

காதல் என்ற பெயரில் Toxicity: விரிவாக சொல்ல வேண்டுமா என்ன? காதல் என்ற பெயரில் மன்மதன் படத்தில் வரும் ரீமாசென்னிடமோ, அர்ஜுன் ரெட்டியில் வரும் அர்ஜுனிடமோ சிக்கிய ஆணோ பெண்ணோ, அவர்களிடம் கேட்டால் கண்ணீர் வடித்திடுவார்கள். லவ் என்ற ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டு நெஞ்சை புண்ணாக்கி, ரனமாக்கி வைத்திடுவார்கள். ஒன்னுமே இல்லாத விசியத்திற்கெல்லாம், அப்ப உனக்கு என் மேல லவ் இல்லல என்று ஆரம்பித்து, நான் சாகுறேன் என்பது வரை. எல்லாமே ஸ்பாய்லர்ஸ்தான். கட்டம் சரியில்லாத நேரம் யாருக்கும் லவ்வுக்கு ஓகே சொல்லிவிடாதீர்கள். சிலர் காதல் என்ற பெயரில் நேரத்தை தின்பார்கள், சிலர் பணத்தை சுரண்டுவார்கள், சிலர் உடலை அனுபவிப்பார்கள், சிலர் ஸ்ட்ரெஸ் பஸ்ட்ராக பயன்படுத்திக் கொள்வார்கள். ஒருவர் எத்தகைய புத்திசாலியாக இருந்தாலும் டாக்சிக் பேர்வழிகளிடம் மாட்டாமல் இருப்பதற்கு அசாத்தியமான துனிச்சலும் முடிவெடுக்கும் திறனும் வேண்டும். துர்-அதிர்ஷ்டவசமாக துனிச்சலும் முடிவெடுக்கும் திறனும் பலரிடமும் இருப்பதில்லை.

வாழ்க்கைத்துனை என்ற பெயரில் Toxicity: கணவனோ மனைவியோ எதோ ஒரு வகையில் நிம்மதியைக் கெடுத்து வைக்கும் துனை டாக்சிக்தான். இதில் பாலின பேதமில்லாமல் ஆணோ பெண்ணோ யார்வேண்டுமானாலும் டாக்சிக்காக இருக்கலாம். அவர்கள் டாக்சிக் என்பது அவர்களுக்கே கூட தெரியாமல் இருக்கலாம். பாம்புகள் குடும்பமாக இருக்கின்றன என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்தக்குடும்பத்தில் கிளி ஒன்று வாக்கப்படுகிறது. பாம்பு கடித்தவுடன் கிளிக்கு விஷமேறும். கடித்த பாம்புக்கு இத்தனை நாட்களாக நாங்கள் எல்லாம் இப்படித்தான் கடித்துக்கொண்டு நிம்மதியாக மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கிளி மட்டும் ஏன் மயங்குவது போல் நடிக்கிறது? என்றே தோன்றும். ஒன்றும் செய்வதற்கில்லை. கிளி அதுவாகப் பார்த்து பறந்து தனக்கு தானே விடுதலை அளித்துக்கொண்டால்தான் உண்டு. இல்லையென்றால் விஷத்துடனே, கடியுடனே, அடியுடனே, உதையுடனே வாழப் பழகிக்கொள்ளும். கிளிகள் பெரும்பாலும் பெண்ணாகவே இருக்கின்றன. யாரும் மறுப்பதற்கில்லை. அதற்காக பெண்களும் டாக்சிக்கில் சலைத்தவர்கள் இல்லை. கனவனை கைக்குள் போடுவதில் இருந்து, கனவனின் அம்மாவை வில்லியாக்கி வீட்டை ரெண்டாக்குவது வரை, கனவர்களின் தாலியறுப்பதில் பட்டையை கிளப்பி வருகிறார்கள். சபாஷ் சரியான போட்டி என்று விசிலடித்து கைத்தட்டி குதூகலிக்கும் அளவிற்கு ஆண்களுக்கு டார்ச்சர் தருகிறார்கள். டார்சச்ர் என்று சொல்லிவிட்டால் வேறு அழுது உருண்டு புரண்டு ஒப்பாரி வைத்து பஞ்சாயத்து வைத்துவிடுவார்கள்.

பிள்ளை என்ற பெயரில் Toxicity: இது மிக அரியவகை டாக்சிக். பெரும்பாலும் பெண்கள்தான் இவ்வகை டாக்சிக்கில் ஈடுபடுவார்கள். பெற்றோரின் உழைப்பை, சேமிப்பை, சொத்தை, நிம்மதியை, அபேஸ் செய்வதிலேயே முழுநேரத்தையும் செலவிடுவார்கள். இவர்களின் உழைப்புச் சுரண்டல் கார்ப்பரேட்டைவிடவும் மோசமாக இருக்கும். குடும்ப அரசியலில் பி.ஹெச்.டி, டாக்டரேட், என உச்சம் தொட்டவர்கள். ஆங்காங்கே ஆண் பிள்ளைகளும் அப்பாக்களின் நிம்மதியை ஊதாரித்தனமாக கெடுக்காமல் இல்லை. வீட்டில் எல்லாம் இருந்தும் மகனின் பொறுப்பற்ற போக்காலும், ஆனவத்திற்கென்றே செய்யும் திருச்செயல்களாலும் பெற்றோரின் நிம்மதி கெட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

சொந்தம் என்ற பெயரில் Toxicity: சொந்தம் என்றாலே நிச்சயம் டாக்சிக்காகத்தான் இருப்பார்கள். அதுதான் அவர்களின் இயல்பு. பலரும் கேட்கத் தயங்கும் ஒரு கூர்மையான கேள்வியை சித்தப்பனோ மாமனோ மூஞ்சி மேலேயே கேட்பார்கள். அத்தையும் பெரியம்மாவும் புரனிப்பேசியே புதுப்புது புரளிகளை கிளப்பி விடுவார்கள். இவர்களை இப்படியே விட்டுவிடுங்கள், இவர்களிடம் தன்னிலை விளக்கம் கொடுப்பதோ, விவரிப்பதோ, பயனற்றது, ஒவ்வொரு சம்பவத்திற்கும் அவரவருக்கேற்ப ப்ளாக்பஸ்டர் திரைக்கதை ஒன்றை தீட்டி வைத்திருப்பார்கள். அதை பப்ளிஷ் செய்தால்தான் அவர்களுக்கு தூக்கம் வரும். அவர்கள் நிம்மதியாக உறங்கட்டும். விட்டுவிடுங்கள். இவர்களை முடிந்த அளவிற்கு மண்டைக்குள் ஏற்றாதீர்கள். நல்லது கெட்டதில் பார்ப்பதோடும் பேசுவதோடும் இவர்களின் இருப்பை, பேச்சை மறந்துவிடுவது மனநிம்மதியை கெடுக்காமல் இருக்கும்.

அம்மா, அப்பா, கனவன், மனைவி, மகன், மகள், சொந்தம் என இத்தனை இடத்திலும் டாக்சிக் நபர்கள் சூழ்ந்திருப்பார்கள். ஏதேனும் ஒன்றிரண்டு தருணங்களில் நமக்கு நன்மையும் இவர்கள்தான் செய்திருப்பார்கள். பல சமயங்களில் பாவங்களையும் இவர்கள்தான் செய்திருப்பார்கள். இவர்களை அறவே நம் வாழ்வில் இருந்து விலக்குவது அவ்வளவு எளிதானக்காரியம் இல்லை. அதே சமயத்தில் இவர்களின் அத்தனை டாக்சிக் சித்ரவதைகளையும் பொறுத்துக்கொண்டும் சகித்துக்கொண்டு விதியே என வாழ்வதும் அவசியமில்லை. சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுப்பது ஒருவரின் மன அமைதிக்கு மிக முக்கியம். பல உறவுகளும் திருவிழா பலூன் போல நம்மை விரல் நுணியில் அழுத்திப்பிடித்துக்கொண்டு அடிப்பார்கள், பட்டெனெ விலகிப்போனால் ரப்பர் பேண்ட் கயிறு நம்மை அந்த கையிடமே திரும்ப இழுக்கும். திரும்பத் திரும்ப நம்மை அடிப்பதும் நாம் சிறுது விலகிப் பின் அவரிடமே போவதும் அவர்களுக்கு உள்ளுக்குள் ஒருவித லியிப்பை ஏற்படுத்தும். விளையாடும் போது ஒரு ஹார்மோன் சுரக்கும் அது போல ஒரு டோப்பமைன் திருப்தி நம்மை வாட்டி வதைப்பதில் கிடைக்கும்.

இதில் டாக்சிக் நண்பர்களிடம் இருந்து விலகுவது மட்டும் எளிது. அதிக பட்சம் ஒரு வாரத்திற்கு ரீல்ஸ், வாட்சப் ஸ்டேடஸ் என்று எதையாவது உருட்டிக்கொண்டிருந்துவிட்டு அடுத்த ஜோக்கரைத்தேடி போய்விடுவார்கள்.

Stockholm syndrome with Toxic personalities

டாக்சிக் நபர்களின் பிடியில் இருப்பதே ஒரு சாபம்தான். அதுவும் நமக்கே தெரியாமல் அவர் மீது நமக்கு அன்பு இருக்கிறது, பாசம் இருக்கிறது, நேசம் இருக்கிறது, மயிறு இருக்கிறது என்றெல்லாம் நமக்கு நாமே சொல்லிக்கொள்வது எவ்வளவு பெரிய கொடுமை என்று யோசித்துப்பாருங்கள். ஒன்றாக இருப்பதாலே ஒருவர்மீது அன்பும், காதலும், மரியாதையும் வந்துவிடுமா என்ன? மனதிற்கு பழகிப்போனதால் வரும் இருப்பின்மீதான ஏக்கம். ஒருவரது இன்மையை எதிர்கொள்ள தயாராக இல்லாத மனதின் பெருங்குழப்பம். ஒருவருடன் இருப்பதாலேயே நாம் அவரை விரும்புகிறோமா? அல்லது அவரை விரும்புவதாலேயே நாம் அவருடன் இருக்கிறோமா?

நாம் டாக்சிக் நபருடன் ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோமினால் பாதிக்கப் படுகிறோமா என்று சோதித்துக்கொள்ளவது அவசியம். எனக்கு தெரிந்த சில வழிமுறைகளை குறிப்பிடுகிறேன். எனக்கு தெரியாததை நீங்கள் பின்னூட்டத்தில் குறிப்பிடுங்கள்.

யாருடன் நீங்கள் முக்கியமான நேரங்களையோ அல்லது அதிகப்படியான நேரங்களையோ செலவிடுகிறீர்களோ, அவரைப்பற்றீ நீங்கள் மற்றவரிடம் புலம்பித் தள்ளுகிறீர்களா என்று யோசித்துப்பாருங்கள். மனதிற்குள்ளே குமுறினாலும் அதுவும் புலம்பல்தான்.

இந்த புலம்பல்களை சம்மந்தப்பட்ட நபரிடமே கொண்டு செல்லும்போது. சரியான விசியங்களுக்கு மறுத்துப்பேசாமல் சரி என்று தன்னைத்திருத்திக் கொள்ள முற்படுபவர் டாக்சிக் இல்லை. நீங்கள் குழப்பிக்கொள்கிறீர்கள் என்று ஆரம்பித்து உங்களையே குற்ற உணர்விற்கு ஆளாக்கி உங்களைப் பெருந்தன்மையாக மண்ணிக்கிறாரா என்று சோதித்துப்பாருங்கள். அவர் உங்களை கஷ்டப்படுத்தியற்கும் அவரே உங்களை பெருந்தன்மையாக மன்னித்தாரென்றால் டாக்சிக்தான்.

அந்த டாக்சிக் நபர் சொல்லும் வார்த்தைகளைக் கொண்டு, உங்கள் மூளை உங்களின் உள்ளுணர்வு சொல்வதை பொருட்படுத்தாமல் போட்டு புதைக்க முற்படும். இந்தப்போராட்டத்தின் மனரனங்களை இதை எதிர்கொண்டவர்களால் மட்டுமே உணரமுடியும். (இதில் நீங்களும் ஒருவரென்றால், உங்களோடு நானும் நிற்கிறேன்).

சம்மந்தப்பட்ட நபர் வருத்தப்படும் போதோ, அழுவும் போதோ, வலியினால் துடிக்கும்போதோ, உங்களின் மனதில் எந்த ஒரு சலனமும் ஏற்படாது. ஏனென்றால் உங்கள் ஆழ்மனதில் அந்த நபர் டாக்சிக் என்று நன்கு பதிவாகி இருக்கும். உங்கள் அறிவு உங்களையும் ஏமாற்றிக்கொண்டிருக்கும் படி அந்த நபர் இருந்திருப்பார். உங்களின் மீது அத்தகைய ஆளுமையை நிறுவியிருப்பார்.

உங்களின் எல்லா முடிவுகளையும் பாதிப்பார். அதில் அவரது விருப்பம், லாபம், எல்லாமும் இருக்கும். ஆனாலும் அவையெல்லாம் உங்களின் நல்லதிற்காகத்தான் கூறுவதாக தங்க முலாம் பூசுவார்.

உங்களிடம் இருந்து ஏதேனும் ஒன்றை சுரண்டிக் கொண்டிருப்பார். அது உழைப்போ, உடலோ, நேரமோ, பணமோ, இடமோ, எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இவ்வுலகில் எல்லாமும் tradeதான். உங்களின் உடலுக்கே நீங்கள் உணவளித்தால்தான் அது உங்களுக்காக இயங்கும். இப்படிதான் உலகில் எல்லாமும் இயங்குகிறது. ஒன்றைக்கொடுத்தால்தான் எது ஒன்றும் இயங்கும். ஆனால், கிடைக்கும் யாவற்றையும், தேவைக்கு மீறி, அளவுக்கு மீறி, ஒருவரின் பேராசைக்காக சுரண்டுவது மனிதர்களின் குரூர் குணங்களில் ஒன்று. உங்களுடன் இருப்பவர், உங்களிடம் தேவைக்கு அதிகமாக் எதை சுரண்டுகிறார் என்று கவனியுங்கள். சுரண்டினால் டாக்ஸிக். இல்லையென்றால் ஓகே.

கொடுமைப்படுத்துதல், துன்புறுத்துதல், தண்டித்தல், அவமானப்படுத்துதல், குற்றவுணர்வுக்கு ஆளாக்குதல், பாலியல் ரீதியாக தாழ்மையுணர்வை உண்டாக்குதல், அத்துமீறல்கள், காட்டுமிராண்டி போல் கத்துதல், குரலை உயர்த்தி அழுகையை நிறுத்துதல், அசிங்கமாக பேசி கார்னர் செய்தல், மிரட்டுதல், மற்றவரிடமோ யாரிடமோ நடந்ததை சொல்லிவிடுவேன் என மிரட்டுதல், கொலை மிரட்டல், குழந்தையை கொன்றுவிடுவேன் என்று மிரட்டுதல், தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டுதல், தூக்குப்போட்டுக் கொள்வதாக நாடகமாடுதல், இத்யாதி, இத்யாதி, இத்யாதி, வன்கொடுமைகளும் டாக்சிக் நபர்களின் ஆகச்சிறந்த பண்புகள்.

இவற்றில் ஏதேனும் அறிகுறிகள் தெரிந்தால், உங்கள் வாழ்க்கை உங்கள் கையில். சரியான நபரை அனுகி, அப்படி யாரும் இல்லாத பட்சத்தில், காவல் நிலையத்தில் புகாரளித்து, டாக்சிக் டார்ச்சரில் இருந்து முதலில் உங்களை நீங்கள் பாதுகாத்துக்கொள்ளுங்கள். பிறகு இந்த சொர்க்கபூமியில் வாழ்ந்துவிட ஒரு வேலையும், பாதுகாப்பான ஒரு வீடு அல்லது விடுதி, கீழான எண்ணம் கொண்டு நெருங்கும் மனிதர்களையும் எதிர்கொள்ளும் துணிச்சல், இவை போதும். வாழ்வை அமைதியுடன் ரசனையுடன் வாழ்ந்திடலாம்.

மாயத்திரை விலகும்

எல்லோருடனும் பழகுங்கள். எல்லா உறவுகளும் மாயை போன்றது. யாரையும் அவ்வளவு புனிதமாக, பெர்ஃபெக்ட்டாக நினைக்க வேண்டாம். அதற்காக எல்லோரையும் சைக்கோ சேடிஸ்ட் என்றும் என்ன வேண்டாம். எல்லாரிடமும் பரிவுடனும், அன்புடனும் அதே நேரத்தில் ஜாக்கிரதையுடனும் தேவையான இடைவெளி விட்டும் நடந்து கொள்வது என்றென்றைக்கும் நன்மை தரும். யாரும் இங்கு black-உம் இல்லை. யாரும் இங்கு white-உம் இல்லை. இங்கு எல்லோருமே க்ரே கேரக்டர்கள்தான். சந்தர்ப்பவாதிகள், சுயநலவாதிகள், காரியவாதிகள், அன்பர்கள், நண்பர்கள், நல்லவர், கெட்டவர், கயவர்கள் எல்லோருமே ஒன்றுதான். ஒவ்வொரு சூழலிலும் ஒவ்வொரு குணம் வெளிப்படும். நெகட்டிவ் குணங்கள் நம்மிடையே பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பளிக்காமல் இருங்கள்.

Nobody is black; Nobody is white; We all are grey. Not black & white. Its pure GREY.

பல நேரங்களில் பல மனிதர்கள் பலவாறாக நடந்துக்கொள்வர். அவர்களின் நடத்தை நம்மை பாதிக்காத அளவிற்கு நாம்தான் நம்மைப் பார்த்துக்கொள்ள வேண்டும். நம் மன அமைதி, நம் வாழ்க்கைக்கான நிம்மதி, நம் மகிழ்ச்சி எல்லாமும் நமக்குதான் முக்கியம். அவற்றை நம்மைவிடவும் யாரும் பத்திரமாக சீரழிக்காமல் பார்த்துக்கொள்ள மாட்டார்கள். நல்லவர், கெட்டவர், பிடித்தவர், பிடிக்காதவர், பொய் பேசுபவர், சண்டை மூட்டிவிடுபவர், கேடு நினைப்பவர், சேடிஸ்ட், டாக்சிக், என எல்லா வகையான மனிதர்களையும் நாம் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். எல்லாரிடம் வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு நிற்காமல், அவர்களில் கீழான செயல்களுக்கு மதிப்பளிக்காமல், உங்களை அதன் பாத்திப்பில் இருந்து விலக்கிக்கொண்டு, படு உஷாராக வாழ்க்கையை கொண்டு சென்றீர்கள் என்றால், இவ்வினிய வாழ்க்கை உங்கள் வசம்.

பின்னூட்டம் முக்கியம் அன்பர்களே. உரையாடி அறியாமை களைவோம்.

Surya devan V —— 30.04.2023

Leave a Comment