கற்பழிப்பை தடுப்பது எப்படி?

இந்த கற்பழிப்பு சம்பவங்களை உடனடியாக நிறுத்துவது எப்படி? சட்டங்களை கடுமையாக்குதல், சமூக வலைத்தளங்களில் கண்ணீர்வடித்து கவிதை எழுதுதல், அந்த ரேபிஸ்ட்டை கண்டந்துண்டமாக வெட்டி வீச பரிந்துரைத்தல் என எல்லாமே ஓட்டை பானையில் உலை வைக்கும் யோசனைகள்தான். மீண்டும் மீண்டும் அது போன்ற அவலங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கும். சிறு வயது முதலே வக்கிர எண்ணங்களை மனதில் நீருற்றி வளர்த்துவிட்டு, ஒருவன் இச்சமூக்தின் அழுக்கை பிரதிபலித்தவுடன் அவனை தூக்கிலிடுவது மெய்யறிவற்ற செயலாகும். அதற்காக அவனை விட்டுவிடச் சொல்லவில்லை. அவனை என்ன … Read more

தனிமனித ஒழுக்கம்

“இப்ப எதுக்கு தனிமனித ஒழுக்கத்த பத்தி பேசிகிட்டு, எல்லாரும் ஒழுக்கமாத்தன இருக்காங்க? ” என்பது உங்களின் வாதமாக இருந்தால், பொது கழிப்பறை, தெருமுனை குப்பைத்தொட்டி, நடைபாதை ஒரம், போன்ற இடங்களை சற்று நிதானமாக நினைவுகூருங்கள். அங்கிருக்கும் மலம் சிறுநீர் எல்லாம் தாமாக அங்கு உருவெடுத்தவை அல்ல. ஒவ்வொரு தனிமனிதனின் பொறுப்பற்ற போக்கே அந்த நிலைக்கு காரணம் ஆகும். ஏதோ ஒரு இடம்தானே, வீதியோரம்தானே, என்று தனிமனிதன் செய்யும் அவலத்தில் தொடங்கி முடிவின்றி அந்த அறுவருப்பு தொடர்ந்து அரங்கேறிக் … Read more

தற்சார்பு பொருளாதாரம்

தற்சார்பு பொருளாதாரத்தைப பற்றி பேசுவதற்கு முன்னால் நிறைய அடிப்படை உண்மைகளை நாம் திரும்ப ஞாபகப் படுத்திக்கொள்ளல் வேண்டும். நான் புதிதாக எதையும் சொல்லப் போவதில்லை. நாம் மறந்த வாழ்வியலை வழிமுறையை கோடிட்டு காட்டப்போகிறேன். அவ்வளவே. முதலில் ஆசைக்கும் அத்தியாவசிய தேவைக்கும் உள்ள வேறுபாட்டை நாம் யோசிக்க வேண்டும். பிறகுதான் தேவையானவை மட்டும் எவை என்ற புரிதல் கிடைக்கும். பணப்பரிமாற்றம் முறையை முதலில் மெல்ல மெல்ல தவிற்க வேண்டும். குறைந்தபட்சம் பணத்தை வங்கியில் முதலீடு செய்வதை நிறுத்துங்கள். 1.வங்கியில் … Read more

போதை

சரக்கு தம்மு கஞ்சா மட்டும் போதை பொருட்கள் இல்ல… உன் அத்தியாவசிய பிரச்சனைய, உரிமைய மறக்கடிச்சு, உன் உழைப்ப, ரத்தத்த உறிஞ்சும் எதுவும் போதைப் பொருட்கள்தான். அது கிரிக்கெட்டோ, டிவி நிகழ்ச்சியோ, பேஸ்புக்கோ, வாட்ஸப்போ, யூடியூபோ, கிக் ஏத்தி உன் நேரத்த அதுக்காக செலவிட வைக்குற எல்லமே போதைப் பொருள்தான். மறவாதே உன் வாழ்வை. தவறாதே உன் வழியை. போதைப் பழக்கம் உன் வாழ்வில் முன்னேற்றத்தைத் தடுக்கும். Suryadevan Vasu 09.04.2018

தற்கொலை

தனிமை படுத்திக் கொள்வது தற்கொலைக்கு சமமானது‌. தன்ன தன் ஜாதிப் பெயர வச்சி ஒருத்தன் அடையாளப் படுத்திக்கிறான். அவன் ஜாதிக்காரன் பத்து பேர் அத பாத்து பெரும படுவான். பிற ஜாதிக்காரன் நூறு பேரு அத பாத்து வேறு படுவான். இவன் நம் ஜாதி இல்லையென்று‌. சும்மா இருந்த ஒருத்தன் தன் ஜாதிப் பேர பொது வெளியில் பயன்படுத்த ஆரமிச்சா அது அவன அந்த மக்களிடத்தில் இருந்து பிரித்து நானும் நீயும் ஒன்றல்ல, நான் வேறு நீ … Read more

எது நம் பெருமைமிகு அடையாளம்?

எது என் (அ) நம் பெருமைக்குரிய அடையாளம்? தமிழ் நம் அடையாளம்னு பிதற்றகூடாது. உண்மையில் தமிழை ஓரளவிற்காவது கற்றரிந்தவர் அதன் சிறப்புகளை பயின்று வியந்தவர்கள் அப்படி சொல்லிக்கொள்ளலாம். தமிழில் பிழையின்றி எழுதிப்படிக்கக்கூட தெரியாதவர்கள் தமிழ் என் அடையாளம் என்பதை அறியாமையின் உச்சம் என்றே நினைக்கிறேன். சரி வேறு எது நம் அடையாளம் ? நம் பெருமை ? நாம் பிறந்த மதமா ? நாம் பிறந்த ஜாதியா ? மதம் ஜாதி இரண்டிலும் நமக்கு எந்த பங்கும் … Read more