Monthly Archives: April 2018

கற்பழிப்பை தடுப்பது எப்படி?

இந்த கற்பழிப்பு சம்பவங்களை உடனடியாக நிறுத்துவது எப்படி? சட்டங்களை கடுமையாக்குதல், சமூக வலைத்தளங்களில் கண்ணீர்வடித்து கவிதை எழுதுதல், அந்த ரேபிஸ்ட்டை கண்டந்துண்டமாக வெட்டி வீச பரிந்துரைத்தல் என எல்லாமே ஓட்டை பானையில் உலை வைக்கும் யோசனைகள்தான். மீண்டும் மீண்டும் அது போன்ற அவலங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கும். சிறு வயது முதலே வக்கிர எண்ணங்களை மனதில் நீருற்றி வளர்த்துவிட்டு, ஒருவன் இச்சமூக்தின் அழுக்கை பிரதிபலித்தவுடன் அவனை தூக்கிலிடுவது மெய்யறிவற்ற செயலாகும். அதற்காக அவனை விட்டுவிடச் சொல்லவில்லை. அவனை என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள். அதற்கு முன் இன்னொரு Rapist உருவாகாமல் இருக்க என்ன முயற்சி எடுத்தோம் என்பதை சிந்தியுங்கள்.

குற்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வளவு செய்தாலும் குற்றங்கள் குறையாது. குற்றவாளிகள் குற்றத்திற்கான மாற்று வழியைதான் கண்டுபிடிப்பார்கள். பிறகு எப்படித்தான் குற்றங்களை நிறுத்துவது என்றால், மக்களுக்கு குற்றம் புரிவதற்கான தேவையை இல்லாமல் செய்வதே ஒரே வழி. அதுபோலவே கற்பழிப்பும். ஒருவனை கற்பழிக்க தூண்டியது எது என்று ஆராய்ந்து அவற்றை களைந்தால் மட்டுமே கற்பழிப்பு சம்பவங்களை விரைவில் நிறுத்த முடியும். (குறைந்தது ஒரு தலைமுறை காலமாவது தேவைப்படும்)

கற்பழிப்பை தடுக்க என்று தலைப்பு வைத்துவிட்டு ஏன் இவ்வளவு அளக்கிறேன் என்று நீங்கள் நினைக்கலாம், பெண்களை சக மனிதத்துடன் பார்க்கும் மனநிலைக்கு தடைகளாக இருக்கும் ஒவ்வொன்றையும் சுட்டிக்காட்டி அவற்றை சரிசெய்ய தீர்வையும் ஆராய்ந்தால் மட்டுமே பெண்களை போகப் பொருளாகப் பார்க்கும் எண்ணம் குறையும். குறைந்தபட்சம் அடுத்த தலைமுறைக்கு இந்த புரிதல்களை ஏற்படுத்தினாலே போதும் அவர்கள் தத்தம் வாழ்க்கையில் தகுந்த சூழ்நிலைகளில் சரியான முடிவுகளை எடுக்கவும் முன்னெடுப்புகளை மேற்கொள்ளவும் பெரிதும் உதவும்.

பெண்களை ஏன் பலப்படுத்த வேண்டும் ?

என்னதான் பெண் என்பவள் ஆண்களைக்காட்டிலும் அதிக வலியைத் தாங்கிக் கொள்ளக்கூடியவள் (மகப்பேறு மற்றும் மாதவிடாய் நேரங்களில் உள்ள வலியை சில வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது) என்றாலும், உடல் வலிமை இல்லாத ஒரே காரணத்தாலேயே பல இடங்களில் தன்னை பகுதியாகவோ முழுவதுமாகவோ இழக்க நேரிடுகிறாள். அவளை பலசாலியாக்குவதே சில ஆண் மிருகங்களிடம் இருந்து அவளை தற்காத்துக் கொள்ள உதவும். உதாரணமாக விளையாட்டில் பங்குபெறும் பெண்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களின் நடையே ஆண்களின் நடையைப் போன்று கம்பீரமாக இருக்கும்.

இப்படிப்பட்ட பெண் தனியாக வந்தாலும் நான்கு ஆண்கள் இருப்பினும் கை வைக்க சற்று யோசிப்பார்கள். சுற்றி வளைத்து பின்னாலிருந்து இறுக்கி பிடித்துக் கொண்டாலும் திமிறி கொண்டு விடுபடுவாள். ஒங்கி ஒரு அறை விட்டாலும், மயங்கி கீழே விழாமல் அதே வேகத்தில் பதிலறை விடுவாள். எதிர்க்கும் ஆணுக்கு பயம் வரும். பெண் தப்பிக்க வாய்ப்பிருக்கும். எனவே பெண் பிள்ளைகளுக்கு லெக்கின்ஸ், நகை, செல்போன் வாங்கி தருவதோடு, தடகளப் போட்டி, நீச்சல், போன்ற விளையாட்டுகளையும் கற்றுத்தாருங்கள். இது உடல் வலுபெற உதவும். தற்காப்பு கலைகளையும் கற்று கொடுக்க மறவாதீர்கள். அதுதான் யுக்தி. சமயோசித புத்தியும் உடல்வலிமையும் இணைந்தே எந்த ஒரு மோசமான சூழலையும் எதிர்த்து போராடி தப்பிக்க உதவும்.

மேலும் பெண் மனவலிமை பெற வீட்டில் அவளுக்கு சக மரியாதை கொடுங்கள். தானும் மதிக்கத்தக்கவள் என்ற எண்ணம் தாழ்வு மனப்பான்மையை போக்கும். தன்னை பலவீனத்தின் சின்னமாக நினைக்கும் பெண்கள் வெற்றிபெறுவதே இல்லை. உடல் வலிமை, மன வலிமை, யுக்தி இது மூன்றும் உள்ள பெண் எந்த ஒரு கெட்ட எண்ணம் கொண்ட ஆண் மிருகத்தையும் உதைத்தெறிவாள்.

ஆண்களின் வக்கிர எண்ணத்தை நீக்குவது எப்படி ?

ஆணின் மனதில் வக்கிர எண்ணங்கள் எழுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. உடலுறவு என்பது இனப்பெருக்கத்தின் ஒரு படி என்பதை யாரும் குழந்தை பருவத்தே சொல்லிக்கொடுப்பது இல்லை. பெற்றோருக்கே இந்த விசயத்தில் விழிப்புணர்வு தேவை. எதிர் பாலின ஈர்ப்பு, மரபிலேயே ஊரிய ஒன்றுதான். அதாவது உயிரினங்கள் அனைத்தும் இயல்பிலேயே சோம்பேறித்தனம் கொண்டவை என்பதால், மிக முக்கியமான செயல்களை நம் உடலே அதன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளும். செரிமானம், இதயத்துடிப்பு, கல்லீரல், மண்ணீரல், நுரையீரல், சிறுநீரகம் போன்ற பெரும்பாலான உடலியக்கங்களை நமது உடலே கவனித்துக் கொள்ளும். சுவாசம், கண்ணிமைத்தல் போன்ற சில இயக்கங்களை நாம் விருப்பப் பட்டால் ஒரு குறிப்பிட்ட நிலை வரை கட்டுப்படுத்த முடியும். அப்படி நம்மால் ஒரு குறிப்பிட்ட நிலை வரை காம உணர்வுகளையும் கட்டுபடுத்த முடியும். மற்றபடி இனப்பெருக்கம் என்பது நம் மரபியல் ஞாபகம் (genetical memory) ஆகும். தன் இனம் அழியாமல் இருக்க இந்த காம உணர்வுகள் நம் அனுமதி இருந்தாலும் இல்லையென்றாலும் சுயத்தையும் மீறியாவது வெளிப்படும்.

எனவே, என் பையன் பொண்ணுங்கள ஏறெடுத்து கூட பார்க்க மாட்டான் என்பது நிஜமல்ல. அப்படி நிஜம் என்றால் அவனை டாக்டரிடம் கூட்டிச் செல்வது நலம்.

உளவியல் ரீதியாக எதிர்பாலின ஈர்ப்பை கையாள பலருக்கும் தெரிவதில்லை.

உயிரினங்களின் இருப்பு

இனப்பெருக்கம் என்பது முழுவதும் நம் கட்டுப்பாட்டில் இருந்திருந்தால் நம் இனம் என்றோ அழிந்திருக்கும். அந்த இனப்பெருக்கத்தின் ஒரு பகுதியான பிரசவத்தில் உயிர் போகும் வலி இருப்பதால், உயிரினங்கள் அவற்றை வெறுத்து ஒதுக்கிவிடாதிருக்கவே, அதனை சமன் செய்ய அல்லது ஈடுகட்ட மற்றொரு பகுதியான ஊடலில் இன்பம் என்பது இணைக்கப் பட்டுள்ளது. இப்படி அமைத்தது யார் என்று கேட்டால், பரிணாம வளர்ச்சியின் ஞானம் என்பேன் நான். உங்களின் நம்பிக்கை கடவுளின் செயலென்றால் வாதிட மாட்டேன். யாராக அல்லது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். உயிரினங்களின் இருப்பை உறுதிப்படுத்தவே இத்தகைய வழிமுறைகள்.

அதிலும் மெய்சிலிர்க்க வைக்கும் விதமாக, எதிர் பாலின ஈர்ப்பு இருபாலினத்தவருக்கும் இருந்தாலும், இருபாலினத்தவரும் கட்டுப்பாடோது இருந்தால் இனம் பெருகாது. அதனால், வலியின்றி சுகம் மட்டும் பெறும் ஆணுக்கு உணர்வுகளை கட்டுப்படுத்துவதில் குறைந்த திறனையும், உடல்ரீதியாக மாற்றத்தையும் பிரசவ வலியையும் அனுபவிக்கும் பெண்ணுக்கு உணர்வுகளை கட்டுப்படுத்துவதில் அதிக திறனையும் அமைத்ததெல்லாம் படைப்பின் உச்சம். இது மனிதர்களுக்கு மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் பொருந்தும். எனவேதான் ஆண்களே பெரும்பாலும் கற்பழிக்கிறார்கள்.

முறையாக கற்பித்தல்

நாம் மனிதர்களாக பரிணாம வளர்ச்சி அடைந்து நாகரிகங்கள் பல கடந்தபிறகு இந்த இருபத்தி ஓராம் நூற்றாண்டில் உடலுறவு / Sex என்பது பேசத்தகாத வார்த்தையைப் போன்று திரித்து வைத்திருப்பதுவே முதல் சூழ்ச்சி. உங்கள் குழந்தைகளுக்கு நீங்களே இனப்பெருக்கத்தை பற்றி கற்றுக்கொடுப்பதுவே நல்லது. “இதெல்லாம் நான் எப்புடி சொல்வேன் ? இந்த வயசுலையே இதபத்தி தெரிஞ்சிகிட்டா தப்பா போயிருவான்/ள். ” என்று நினைப்பீர்களானால், டி.வி, சினிமா, டீக்கடை போஸ்டர், வார இதழ்களின் முகப்பு, நடுபக்கம் என எல்லாமே அவர்களைச்சுற்றிலும் காமத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கும். தவறான வழியில் அவனை இட்டுச் செல்லும். Porn videos குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் இல்லை என்பதை மறவாதீர்கள். நண்பர்கள் மூலமோ மொபைல் மூலமோ காமம் குறித்த தவறான கருத்துக்களை மனதில் ஏற்றிக் கொள்வர். பிறகு எல்லாமே சிக்கல்கள்தான்.

உங்கள் குழந்தைகளிடம், இனப்பெருக்கத்தின் முக்கியத்துவத்தை சொல்லி அதில் பருவமடைதல், உடலுறவு கொள்ளுதல், கருவுறுதல், கற்பகாலம், பிரசவம் என்ற நிலைகள் இருப்பதையும், அப்படி ஆணும் பெண்ணும் சேரும் நிகழ்வை சுற்றத்தார் அனைவரும் கொண்டாடுவதே திருமணம் என்றும், எதிர்பாலின ஈர்ப்பு தவறல்ல, அதை சரியான வயதில் ஒழுக்கத்துடன் வெளிப்படுத்துவதே நாகரிகம் என்றும், தகாத உறவுகள் ஆபத்தானவை என்பதையும் சொல்லிக் கொடுங்கள். வெறுமனே good touch bad touch மட்டும் சொல்லிக் கொடுத்தால் போதாது.

இணையத்தில் இருக்கும் porn videos ஐ முடக்குவதோ, தடை செய்வதோ தற்போதுள்ள நிலையை இன்னும் மோசமாக்கும். எதிர்பாலினத்தின் உடலமைப்பை மறைத்து வைக்க வைக்க அதைப் பார்க்கவே ஆர்வம் அதிகரிக்கும். மிக எளிமையாக இனப்பெருக்கத்தை குழந்தை பருவத்தே அறிமுகப் படுத்துவது பல தவறுகளை தவிர்க்க உதவும்.

இத்தனை புரிதல்களோடு சமூகத்தில் கலக்கும் குழந்தைகள் ஒருபோதும் பாலியல் தொந்தரவுகளை ஏற்படுத்த மாட்டார்கள். அவற்றிற்கு பலியும் ஆக மாட்டார்கள். தன் உணர்வுகளை ஹார்மோன்களின் வெளிப்பாடு என்று புரிந்து கொள்வார்கள்.

காதல் ?

காம உணர்வுகளுக்கு, எதிர் பாலின ஈர்ப்புக்கு காதல் என பெயர்சூட்டுவது புனிதப்படுத்துவது எல்லாம் கவிஞர்கள் செய்த சுயநலம். தன் மொழித்திறனை வெளிப்படுத்த காதலுக்கான வரையறையை அவரவர் விருப்பத்திற்கு அமைத்து விட்டார்கள். எதிர் பாலின ஈர்ப்பு, உடலுறவு, இல்வாழ்க்கையில் உள்ள அப்பட்டமான உண்மைகளை விளக்க சொற்ப கவிஞர்களுக்கே அறிவிருந்திருக்கிறது.

அப்புறம் காதல்னா என்ன? என்று கேட்காதீர்கள். நானும் எனக்கு ஏற்றாற்போல் என் சவுகரியத்துக்கு ஒரு விளக்கத்தை கொடுத்து உங்கள் மனதை குழப்ப விரும்பவில்லை. உற்ற துணையோடு வாழ்ந்து பாருங்கள், காதலுக்கான விளக்கம் அர்த்தம் எல்லாம் தன்னால் புரியும்.

சினிமாவில் வரும் டூயட் பாடல்களைக் கண்டு ஆசைப்பட்டு நீங்களும் பீச்சு பார்க்கு தியேட்டர் ஹோட்டல் என்று ஜோடியாக சென்றிருப்பீர்கள். யதார்த்தத்தில் அவ்வளவு கவித்துவமாகவும் காதல் ததும்பவும் உங்களின் பயணம் இருந்திருக்காது. ஏனென்றால் நிஜத்தில் பொருளாதாரம் என்ற வில்லன் எல்லா இடங்களிலும் இருப்பான். குப்பை என்ற காமெடியன் எங்கு திரும்பினும் கிடப்பான். படத்தில் பரவசமூட்ட காதலுக்காக எந்த எல்லையையும் ஹீரோ தாண்டுவார். சினிமா சண்டைகள் எப்படி நிஜத்தில் சாத்தியமில்லையோ, சினிமா காதல்களும் அப்படி நிஜத்தில் சாத்தியமில்லை. அதற்காக காதல் கேவலமானது என்று சொல்லவில்லை. காதல் இயற்கையானது. காதலை அழகுபடுத்த முயற்சிப்பது அதனை மேலும் கொச்சைப்படுத்துவதாகும். எதிர் பாலின ஈர்ப்பை (காதலை) உள்ளவாறே ஏற்றுக்கொள்ளுங்கள். அதைவிடவும் இல்வாழ்க்கையில் பேரின்பம் வேறேதும் கிடையாது.

அழகு ?

வெள்ளைத்தோல் நடிகைகளை கழிவறைக் கற்பனைகளில் கற்பழிக்கும் ஆண்களுக்கு நிஜத்தில் ஒரு வாய்ப்பு கிடைத்தால் தவறவிடுவார்களா ? ஒரு பெண்ணின் வாழ்வை சூறையாடி விடுவார்கள்.

நிறத்திற்கும் அழகிற்கும் வாழ்விற்கும் தொடர்பில்லை என்று உணர்வதும் சுற்றத்தாருக்கு உணர்த்துவதும் பகுத்தறிவு கொண்டவர்களின் கடமையாக கருதுகிறேன். நம்பவில்லை என்றால் அவரவர் பெற்றோர்களைக் கண்டாவது புரிந்து கொள்ளுங்கள். அவர்களின் நிறம் அழகு அன்பு எதற்கும் சம்பந்தம் இருக்காது. அழகு நிறம் தோற்றம் எல்லாம் வியாபாரத்திற்குதான் தேவை, வாழ்க்கைக்கு இல்லை.

ஆதி மனிதன் பகல் நேரத்தில் (வெளிச்சம்-வெள்ளை) பாதுகாப்பாகவும் இரவு நேரத்தில் (கருப்பு-இருள்) பயமாகவும் உணர்ந்ததின் பரிணாம வளர்ச்சியே வெள்ளையின் மீதான நம்பிக்கையும் கருப்பின் மீதான அவநம்பிக்கையும். இந்த உளவியல் உண்மையின் அடிப்படையில்தான், வெள்ளையர்கள் நம்மைவிட மேம்பட்டவர்கள் என நம்பினோம். அவர்களின் வாழ்க்கை முறையை கண்டு ஆசைப்பட்டோம், ஏமாந்தோம், ஏமாறுகிறோம். இப்போதும் அது தொடர்வதற்கு சாட்சி, வெள்ளை தேகத்துடன் பெண்கள் நடிக்கும் விளம்பரங்களும், சினிமாக்களும்தான். பெண்மை மீதான ஈர்ப்பும் வெண்ணிறத்தின் மீதான நம்பிக்கையும் இணைந்துதான் பல சமயங்களில் நகைகடை திறப்புவிழாவிற்கு வரும் நடிகைகளால் நகரமே ஸ்தம்பித்து விடுகிறது‌.

மேலும் அழகு என்பதற்கு வெள்ளைதான் அர்த்தம் என்று நம் மூளையை கழுவி வைத்திருக்கிறார்கள். பேர் அன்ட் லவ்லி, பவுடர் டப்பா இல்லாத வீடுகளே இல்லை அல்லவா. அப்படியானால் கருப்புதான் அழகா என்றால் அதுவும் இல்லை. உலகில் அழகு என்ற சொல்லுக்கு வரையறையே கிடையாது. ஏனென்றால் ஒருவரை அழகு என்று நாம் எண்ணுவதற்கு காரணம் நம் மூளையில் உள்ள அமிக்டலா என்ற இடம்தான். அங்குதான் அழகு குறித்த நிபந்தனைகள் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும். அதாவது முதலில் அவரவர் அம்மாவின் முகவமைப்பு அங்கு நம்பிக்கைக் உரியவர்களாக பதிவாகும். ஆதுவே அழகு என்றும் வரையறை நிர்ணயமாகும். பிறகு வளர வளர தன் சுற்றம் மதிப்பிடும் அழகை அங்கு பதிவேற்றிக் கொள்ளும்.

பெண்களின் மார்பை கவர்ச்சிப் பொருளாக்கிய பெருமை ஊடகத் துறையையே சாரும். பெண்களை சதைப் பிண்டமாய் காட்டுவது மட்டுமே ஆதாயம் தரும் என்பதே பல பத்திரிக்கைகளின் தார்மீக மந்திரம். லாபம் வந்து என்ன செய்வது ? தத்தம் பிள்ளைகள் வீதியில் பாதுகாப்பாய் நடக்கக் கூட முடியாத சமூகத்தை உருவாக்கிவிட்டு, வங்கிக் கணக்கு புத்தகங்களில் சேமிப்புத் தொகையை திரும்பத் திரும்பப் பார்த்து பாதுகாப்பாய் உணர்வது அடிமுட்டாள்தனமே. என்றுதான் பத்திரிகை முதலாளிகளுக்கு இது புரியப்போகிறதோ. சிலரது லாபத்திற்காக ஊடகம் செய்யும் இந்த சீரழிப்பை சமூகத்தில் இருந்துதான் பிரதிபலிக்கிறோம் என்று சப்பை கட்டு கட்டுவார்கள்.

ஊரு ஒலகத்துல நடக்காததையா நாங்க பேப்பர்ல/ டிவில/ சினிமாவுல காட்டுறோம் ?

என்று கேட்பார்கள். ஓரிடத்தில் நடந்ததை தண்டோரா அடித்து லட்சக்கணக்கானோரின் அறிவுக்கு கொண்டு சென்று அதில் ஏதாவது ஓரிரண்டு லூசுகள் பின்பற்றிவிட்டால் அவர்களை சமூகத்தின் பிரதிநிதிகளாக சித்தரித்து இந்த சமூகமே இப்படித்தான் என நம்மையே நம்ப வைப்பார்கள்.

மறுபுறம், அழுக்குகளில் ஆதாயம் தேடும் இந்த அற்ப பிறவிகளின் வலையில் இருந்து பெண்கள் சமூகத்தை மீட்டெடுப்பது சற்று கடினம். பத்திரிகை தர்மம் மீறும் இவர்களின் உரிமத்தை அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும். அயிட்டம் சாங் இல்லாத சினிமா, டூ பீஸ் நடிகை படம் இல்லாத வார இதழ், கள்ளக்காதல் செய்திகள் இல்லாத நாளிதழ், என எப்போது திருந்துகிறார்களோ அப்போதுதான் பெண்ணை கவர்ச்சிப் பொருளாக பார்ப்பது குறையும்.

Make-up எல்லை உண்டு

பெண்களுக்கும் ஆடை உடுத்துவதில் சற்று அதிக கவனம் தேவை. அழகான தோற்றம் அத்தியாவசிய தேவை ஆகிவிட்டது என்றாலும், மனித மிருகங்கள் எங்கு எந்த உருவத்தில் இருக்கும் என்று தெரியாதல்லவா, எனவே சமூகம் காமம்குறித்த பகுத்தறிவு பெரும் வரை உடலை மார்பை தொடைகளை அப்பட்டமாக காட்டும் உடைகளை தவிர்த்திடுங்கள். முக்கியமாக லெக்கின்ஸ். Modern culture என்று நினைத்துக் கொண்டு உள்ளூரில் டீசர்ட்டுடன் திரிவீர்கள் என்றால் பல ஆண்களுக்கு பார்க்கத் தூண்டும், சில ஆண்களுக்கு தீண்டத் தூண்டும். வெறி கொண்டு விரட்டும் ஆண்மிருகத்திடம் பெண்ணியம் பேச எல்லாம் நேரமிருக்காது. வெளிநாடுகளில் பெண்களின் உடல்குறித்த தெளிவு எல்லா ஆண்களுக்கும் இருக்கும். நம்மூரில் அப்படி இல்லை. ஏ படங்களின் போஸ்டரையே ஏக்கமாக பார்க்கும் ஆண்களே அதிகம். இந்த நிலை மாறும் வரை உடை குறித்த கவனம் பெண்களுக்கு தற்காத்துக் கொள்ள உதவும்.

மேக்கப் போடும் போது இரவு நேர பொது இடங்களில் ஆண்களை கவர நிற்கும் விலை மாதர்கள் அளவிலான பூச்சுகளை உதட்டுச் சாயங்களை தவிர்ப்பது உத்தமம்.

உடனே ஆண்மகன்கள் “அப்புடி சொல்லுங்க பாஸு ” என்று மனதுக்குள் ஆறுதலடைவது தெரிகிறது. உங்களுக்கும் பெண்களை ரசிக்க பாடம் எடுக்க வேண்டும்.

பெண்ணை ரசிப்பதற்கும் வக்கிர எண்ணத்தோடு பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அவளுக்கு உறுத்தாத வரை அவளது வெளிப்புற அழகை (முகம் மற்றும் உடல் வடிவம்) தள்ளி நின்று தீண்டாமல் ரசிக்கலாம். மேலும் ஆணின் பார்வை பெண்ணிற்கு உறுத்தலை ஏற்படுத்துவதற்கு முன்பான நிலைதான் ரசிப்பதற்கான எல்லை. அத்துடன் நாம் ரசிப்பதற்கான அனுமதி முடிகிறது. பின்தொடர்வதோ, வைத்த கண் வாங்காமல் பார்ப்பதோ, பயமுறுத்துவதாகும். இவை பெண்களுக்கு ஆண்கள் மீதான வெறுப்பையே அதிகரிக்கும்.

பெண்கள் உளவியல்

பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்குவது மட்டும் பெண்களுக்கு எதிரான அத்துமீறல் இல்லை. அவளின் வாழ்வை வடிவமைக்கும் முக்கியமான முடிவுகளையும் ஆண்களே எடுப்பது (என்ன படிக்க வேண்டும், எப்போது யாரை திருமணம் செய்து கொள்ள வேண்டும், எப்போது குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும், என்ன வேலை செய்ய வேண்டும் போன்ற முக்கியமான முடிவுகள்), பொருளாதார ரீதியாக அவளின் சுதந்திரத்தை பறிப்பது, சமூக தொடர்புகளை தடுப்பது, கண்ணத்தில் அறைவது உட்பட அதட்டும் அடக்குமுறைகள், வீட்டிலேயே அடைப்பது, என அவளின் உரிமைகளை சுதந்திரத்தை பறிக்கும் எல்லாமும் வன்கொடுமைகள்தான்.

இந்த ஈர வெங்காயமெல்லா எங்களுக்கு தெரியும், அவ வேலைக்கு போயி ஒன்னும் குடும்பத்த காப்பாத்த வேணாம், பெண்புத்தி பின்புத்தி, பொண்ணுங்கள எல்லாம் வைக்குற எடத்துல வைக்கனும், போன்ற பெண்களுக்கு எதிரான கருத்துக்கள் எல்லாவற்றிற்கும் ஒரே பதில்தான். அவளையும் சமூகத்தில் ஒரு அங்கமாக அங்கீகாரம் கொடுங்கள், பொறுப்புகளை கொடுங்கள், பிறகு பாருங்கள், சீரியலில் வரும் கதாபாத்திரங்கள் போல இல்லாத அர்த்தங்களை கண்டுபிடிக்க அவளுக்கு நேரமில்லாமல் போகும். பெண்கள் மட்டுமல்ல எந்த ஒரு ஆணையும் பெண்களின் உலகிற்கான இருபத்தி நான்கு மணி நேர வேலைகளை பணித்தால், அவனும் அவ்வாறே நடந்து கொள்வான். பிரச்சினை ஆணா பெண்ணா என்பதில் இல்லை. எந்த சூழலுக்கு ஆளாக்கப்படுகிறோம் என்பதில்தான் இருக்கிறது.

ஆண் பெண் உறவுகளில் இருக்கும் சிக்கல்களை அவிழ்க்க தன்னார்வலர்கள், பகுத்தறிவாளர்கள், முற்போக்கு எழுத்தாளர்கள் போன்றவர்கள் எந்த அளவுக்கு முயற்சிக்கிறார்களோ, அதைவிட அதிகமாகன சிக்கல்களை ஊடகங்களும், சமூகமும், அதை விளைத்த குடும்பமும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. ஆணும் பெண்ணும் சமம் என்று நான் சொல்லவில்லை. இருவரும் அவரவர் வழியில் சிறந்தவர்கள். அதேசமயம், ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை உண்டு என்பதை நாம் உணர வேண்டும்.

பெண்ணை புரிந்து கொள்ளவே முடியாது. பொண்ணுங்க மனசு ஆழம் நீளம் என்று அளப்பதை முதலில் நிறுத்திவிடுங்கள். அவளை புரிந்து கொள்வது மிக சுலபம். கீழே உள்ள வாசகத்தை நன்கு மனதில் பதிந்து கொள்ளுங்கள்.

Whatever you give a woman, she is going to multiply. If you give her sperm, she’ll give you a baby. if you give her a house, she will give you a home. If you give her groceries, she’ll give you a meal. If you give her a smile, she’ll give you her heart. She multiplies and enlarges what is given to her. So, if you give her any crap, you will receive a ton of shit.

நீங்கள் பெண்ணிடம் என்ன கொடுக்கிறீர்களோ அதையே அவள் பல்கிப் பெருக்கி தருவாள்.

முரண்

பெண்களை ஒரு பக்கம் ஊடகம் வர்ணித்து தள்ளியும், இன்னொரு பக்கம் சமூகம் வசைபாட பெண்களது பிறப்புறுப்பை பயன்படுத்தியும் அடுத்த தலைமுறையை வளர்க்கிறது. இந்த முரணின் அர்த்தம்தான் என்ன ? திருமணம் ஆகும்வரை உள்ள காதலை கவித்துவமாகவும் திருமணத்திற்கு பிறகு பெண்கள் ஒரு தொல்லை எனவும் இளைஞர்கள் மனதில் ஊடகங்கள் புகுட்டுவதின் விளைவுகள் என்ன ? பெண்ணின் உடலைப் பார்த்த பின்பு ஆன்களுக்கு பெண்கள் மீது உள்ள மோகம் தீர்ந்து விடுகிறது என்பதா ? இந்த முரண்களை ஆராய்ந்தால் ஒரு உண்மை புரியும். பெண்கள் எவரும் அழகானவர்கள் அல்ல. அனைவருமே இயல்பானவர்கள். அவர்களை அழகாக்குவது திருமனத்திற்கு பின் உள்ள அன்பான வாழ்க்கைதான்.

உணவு

உணவுப் பழக்கத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று சிந்திக்காதீர்கள். நிறையவே தொடர்பிருக்கிறது. இன்றைய இளைஞர்களின் உணவுப் பழக்கத்தை கவனியுங்கள். பரோட்டா, சிக்கன் ரைஸ், ப்ரைட் ரைஸ், நூடுல்ஸ், மற்றும் பிராய்லர் கோழியை அதிகம் உட்கொள்கிறார்கள். இவை அனைத்தும் மூளையின் வளர்ச்சியில் சிறிதும் உதவாதவை. மேலும் பக்கவிளைவுகளாக ஹார்மோன்கள் சீரற்று சுரக்கும் அபாயமும் இருக்கிறது‌. உடல் சோர்வு, சோம்பேறித்தனம் என எல்லாம் இலவசங்கள். இப்படி சோம்பேறித்தனங்களின் மொத்த உருவமாய் இருக்கும் ஒரு இளைஞனை பரவசப்படுத்தும் ஒரே விஷயம் காமம். தனிமையில் காமக் கற்பனைகளை கட்டவிழ்த்துவிட்டு இன்புற்று போலியான திருப்தி அடைகிறார்கள். மோசமான சூழ்நிலையில் எதிர்நிற்கும் பெண்ணின் உடலை வெறும் இச்சையை தனிக்கும் பொருளாகவே பார்க்கிறான். இப்படி மந்தை போன்ற இளைஞர் சமுதாயம் உருவாக உணவு முறைகளும் முக்கிய காரணம்.

சிறுதானியங்கள் காய்கறிகள் பழவகைகள் என்று மூளையின் வளர்ச்சிக்கு தேவையான fatty acids, omega acids, போன்ற அத்தியாவசிய மூலக்கூறுகள் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ளவதே இதற்கு தீர்வாக அமையும்.

தண்டனைகள்

மேற்கூறிய அனைத்து புரிதல்கள் இருந்தாலும், மிருகத்திலிருந்து மனிதன் முழுவதுமாக பரிணாம வளர்ச்சி அடையவில்லை என்பதற்கு உதாரணமாக தினமும் கற்பழிப்பு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. குற்றம் நொடியில் நிகழ்ந்திட அதற்கான நீதி, தண்டனை என எல்லாமும் பேசி பேசி இழுத்து அடுத்த குற்றமே நிகழ்ந்து மக்களின் கவனம் திசைதிருப்பப்பட்டுவிடும். இதற்கு ஒரே தீர்வு குற்றம் புரிவோருக்கு தண்டனை குறித்த பயத்தை ஏற்படுத்துவதே. குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒரு ரேபிஸ்ட் தண்டனைக்கு உள்ளாக்குவதை நேரலையில் ஒளிபரப்ப வேண்டும். நான்கு சுவற்றுக்குள் தூக்கிலிடுவது முடிந்த குற்றத்திற்கான தண்டனை மட்டுமே. அதை ஒளி பரப்புவது நடக்கவிருக்கும் குற்றத்திற்கான எச்சரிக்கையாக இருக்கும்.

இதுபோக ஏகப்பட்ட காரணங்களுக்காக பெண்கள் கற்பழிக்கப் படுகிறார்கள். இவற்றில் சாதி, மதம், பழியுணர்வு, காதல் என எதை எதையோ உள்நுழைத்து வதை செய்கிறார்கள். அம்மிருகங்களை சமூகத்தில் இருந்து நீக்குவதே சமூகத்திற்கு நலம்.

மேலும் தங்களின் பொன்னான நேரத்தை ஒதுக்கி படித்தமைக்கு நன்றி எதுவும் கிடையாது. இவற்றை தீர ஆராய்ந்து நல்ல முறையில் செயல்படுத்துங்கள் சிலையே வைக்கிறேன்.

Image result for comment please

பின்னூட்ட தவறேல். உரையாடி அறியாமை களை.

Surya devan V — 30.04.2018

தனிமனித ஒழுக்கம்

இப்ப எதுக்கு தனிமனித ஒழுக்கத்த பத்தி பேசிகிட்டு, எல்லாரும் ஒழுக்கமாத்தன இருக்காங்க? ” என்பது உங்களின் வாதமாக இருந்தால், பொது கழிப்பறை, தெருமுனை குப்பைத்தொட்டி, நடைபாதை ஒரம், போன்ற இடங்களை சற்று நிதானமாக நினைவுகூருங்கள். அங்கிருக்கும் மலம் சிறுநீர் எல்லாம் தாமாக அங்கு உருவெடுத்தவை அல்ல. ஒவ்வொரு தனிமனிதனின் பொறுப்பற்ற போக்கே அந்த நிலைக்கு காரணம் ஆகும். ஏதோ ஒரு இடம்தானே, வீதியோரம்தானே, என்று தனிமனிதன் செய்யும் அவலத்தில் தொடங்கி முடிவின்றி அந்த அறுவருப்பு தொடர்ந்து அரங்கேறிக் கொண்டேயிருக்கும்.

எங்கிருந்து இதனை சரி செய்வது ? பதில் பள்ளி மற்றும் வீடு. அதாவது குழந்தைகள் வளரும்போதே சுத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பள்ளியை சுத்தமாக வைத்திருக்க ஆயமாவை பணிக்கு வைப்பதைக் காட்டிலும், பள்ளியை பயன்படுத்தும் ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகள் இணைந்து தினமும் ஒருமணிநேரம் பள்ளியின் சுத்தத்திற்காக செலவிடலாம். “ஆயிர கணக்குல பணத்தகட்டி எம்புள்ளய குப்ப பொறுக்கவும் கக்கூஸ் கழுவவும் அனுப்ப சொல்றியா?” என்று சண்டைக்கு வருபவர்களின் சிந்தனைக்கு ஒரு கேள்வி, “ஆயிர கணக்குல் பணத்தக்கட்டி உம் பிள்ளைக்கு ஆய் இருந்துட்டு தன்னி ஊத்தகூட தெரியலனா பரவாயிலையா? “. குளிப்பது, சிந்தாமல் சாப்பிடுவது, சாப்பிட்ட தட்டை சுத்தமாக கழுவி வைப்பது, குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடுவது என எல்லாமே தனிமனித ஒழுக்கம்தான்.

வீட்டு குப்பைகளை அம்மாக்கள் மட்டுமே அப்புறப்படுத்துவதை தவிர்த்து, ஆண் பெண் என இருபாலரும் சுத்தமான வீட்டிற்கு பங்களிக்க வேண்டும் என்பதை குழந்தைகளின் மனதில் பதிய வையுங்கள். குப்பைகளை சேகரித்து கிடங்கிற்கு கொண்டு செல்லும் துப்புரவு பணியாளர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தான் என்று புரியவையுங்கள். அவர்களது வேலையை சேவையை எளிமையாக்க உதவுங்கள். மக்கும் குப்பை மக்கா குப்பை என பிரிக்கக் கற்றுக் கொடுங்கள்.

தனிமனித ஒழுக்கம் என்பது ஒரு சிறந்த குணம். உங்கள் குழந்தைகளுக்கு சுத்தம் மற்றும் சுகாதாரத்தின் நன்மைகளை கூறி வளருங்கள். கழிவறையில் தகாத வார்ததைகளை எழுதுவது வரைவது எல்லாம் அவரவர் மனதில் இருக்கும் அழுக்கையே உணர்த்துகிறது. அந்த கழிவறையைக் காட்டிலும் அவர்களது மனம் நாறிக்கிடக்கிறது என்றே அர்த்தம். பள்ளியில் இருந்தே கழிவறை கிறுக்கல்களை களைய வேண்டும்.

“ஒரு மனிதன் தனிமையில் இருக்கும் போது எதைப்பற்றி சிந்திக்கின்றானோ அப்படியே அவனது வாழ்வும் அமையும்.” என்பதை வலியுறுத்துங்கள்.

தனிமையில் நல்ல சிந்தனையை மேற்கொள்ள meditation யோகா போன்ற அகத்தூண்டல்களின் பங்களிப்பு முக்கியமானதாகும். அதைப் பயிற்றுவிக்க மறவாதீர்கள். அதோடு குப்பைகளை நல்ல முறையில் அப்புறப்படுத்தவும் கற்றுக் கொடுங்கள். நெகிழி (plastic) குப்பைகளை தவிர்க்க, நெகிழி கொண்டு அடைக்கப்பட்ட பொருட்களை விலை கொடுத்து வாங்க தவிர்ப்பதும், கடைகளுக்கு பழையபடி துனிப்பைகளை கொண்டு செல்வதுமே தீர்வாகும்.

சரி குழந்தைகளுக்கு தனிமனித ஒழுக்கம் குறித்த அறிவைப் புகுத்திவிட்டால் சமூகத்தில் எல்லாம் சரியாகிவிடுமா ? என்றால் ஆகாது என்பதே பதில். ஏனென்றால் நகர்புறங்களில் மக்கள்தொகை, அடர்த்தியான இடங்களில் எத்தனை நபர்களுக்கு ஒரு கழிவறை இருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள். அதிர்ந்து போவீர்கள்.

குறைந்தது ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ஒரு கழிவறை வேண்டும். ஆண் பெண் மாற்று திறனாளி என்று தனித்தனியாக கட்டமைக்க வேண்டும். 500 மீட்டருக்கு ஒரு டாஸ்மாக் திறக்கும் அரசாங்கம், தாராளமாக ஆயிரம் மீட்டருக்கு ஒரு கழிவறையை திறக்கலாம். இவையெல்லாம் அரசு அதிகாரிகளின் அறிவுக்கு எட்டாமல் இல்லை. சமூகம், சுத்தம் சுகாதாரம் என்று செழிப்பதைக் காட்டிலும் கல்லா கட்டுவதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளுங்கள். இப்படி கழிவறைகளே இல்லாத சமூகத்தில், மலம் இடுப்பை முட்டும் போது தனிமனித ஒழுக்கம் இருந்துமட்டும் என்ன செய்வது ? சாலையோரமும், குப்பைத்தொட்டி மறைவும், ரயில்பாதை ஒரமும்தான் கழிவறையாகும். மேலும் பெண்கள் பயனத்தின்போது சிறுநீர் கழிக்க நல்ல பொது கழிப்பிடங்கள் இருக்காது என்பதால், பயனத்திற்கு முன்பும் பயனத்தின்போதும் தண்ணீர் அருந்துவதில்லை என்பதெல்லாம் அரசாங்கம் செய்யும் வதை.

கழிவறைக் கட்டுவது நம் கையில் இல்லை. அரசாங்க வேலை என்று பின்வாங்காதீர்கள். உங்கள் குழந்தைகளுக்கு கழிவறைகளின் முக்கியத்துவத்தை சொல்லிக் கொடுங்கள், குறைந்த பட்சம் ஆயிரம் குழந்தைகளில் ஒரு குழந்தைகூடவா மாவட்ட ஆட்சியர் ஆகாமல் போய்விடும் ?. அந்த ஒரு குழந்தை கழிவறைகளை நகரெங்கும் அமைக்கும், மற்ற குழந்தைகள் அவற்ற நல்ல முறையில் பயன்படுத்தும்.

வீடு மற்றும் பள்ளியில் இருந்தே ஒரு நல்ல சமூகத்தை உருவாக்க முடியும் என்பதை உணர்ந்து அதை செயல் படுத்துங்கள். 25 வயதைத் தாண்டியும் சுத்தம் இல்லாமல் குளிக்க தெரியாமல் கழிவறையை பயன்படுத்தத் தெரியாத சுகாதாரமற்ற, ஆனால் ஊருக்குள் கெத்தாக சுற்றும் இளைஞர்களை நாம் நாள்தோறும் பார்த்துக் கொண்டேதான் இருக்கிறோம். நாம் எப்படி இருந்திருந்தாலும் பரவாயில்லை, அடுத்த தலைமுறை நல்ல சமூகத்தில் வாழ வித்திட்டு செல்வோம்.

மேலும் தங்களின் பொன்னான நேரத்தை ஒதுக்கி படித்தமைக்கு நன்றி எதுவும் கிடையாது. இவற்றை தீர ஆராய்ந்து நல்ல முறையில் செயல்படுத்துங்கள் சிலையே வைக்கிறேன்.

Image result for comment please

பின்னுட்டம் முக்கியம். உரையாடி அறியாமை களை.

Surya devan V —— 15.04.2018

தற்சார்பு பொருளாதாரம்

தற்சார்பு பொருளாதாரத்தைப பற்றி பேசுவதற்கு முன்னால் நிறைய அடிப்படை உண்மைகளை நாம் திரும்ப ஞாபகப் படுத்திக்கொள்ளல் வேண்டும். நான் புதிதாக எதையும் சொல்லப் போவதில்லை. நாம் மறந்த வாழ்வியலை வழிமுறையை கோடிட்டு காட்டப்போகிறேன். அவ்வளவே. முதலில் ஆசைக்கும் அத்தியாவசிய தேவைக்கும் உள்ள வேறுபாட்டை நாம் யோசிக்க வேண்டும். பிறகுதான் தேவையானவை மட்டும் எவை என்ற புரிதல் கிடைக்கும்.

பணப்பரிமாற்றம் முறையை முதலில் மெல்ல மெல்ல தவிற்க வேண்டும். குறைந்தபட்சம் பணத்தை வங்கியில் முதலீடு செய்வதை நிறுத்துங்கள்.

Image result for banks in India

1.வங்கியில் நீங்கள் சேமிக்கும் பணத்திற்கு குறைந்த வட்டியே தருவார்கள். உங்கள் பணத்தை ஊராருக்கு கடனாக கொடுத்து அதிக வட்டி பெருவார்கள்‌. இந்த வட்டி வித்தியாசம்தான் வங்கிக்கு லாபம். வங்கியில் கடன் வாங்கியவர்கள் அதிக வட்டியுடன் கடனை திருப்பித் தரவேண்டுமானால் அவர்களின் தொழிலில் லாபத்தைக் கூட்ட வேண்டும், அதாவது அவர்கள் தயாரிக்கும் பொருட்களின் (காய்கறிகள், இறைச்சி, பழவகைகள், போன்றவை) விற்பனை விலையை அதிகரிக்க வேண்டும். வங்கியில் பணத்தைப் போட்டுவிட்டு விலைவாசி உயர்வதற்கு பிள்ளையார் சுழியும் நீங்களே போடுகிறீர்கள்‌. இடையில் நோகாமல் நொங்கு தின்பது வங்கி. நீங்கள் மாதந்தோறும் வங்கியில் வாங்கும் வட்டி, விலைவாசி ஏற்றத்திற்கு சரியாக போய்விடும். நீங்களும் வங்கியில் பணம் டெபாசிட் பண்ணாமல் இருந்திருந்தால் இந்த விலைவாசி ஏற்றத்தை தாக்குபிடித்திருக்க முடியாது என்று நம்பிவிடுவீர்கள். பாவம் அந்த விலைவாசி உயர்வுக்குப் பிரதான காரணமே வங்கிதான் என்பதை இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள்.

2.வங்கி முறை முதலில் சரியானதா ? நிச்சயம் இல்லை. உதாரணமாக ரிசர்வ் வங்கி 100 கோடி ரூபாய் அச்சடிப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். 10 தேசிய வங்கிகளுக்கு தலா 10 கோடி கடனாக தருகிறது. அந்த பத்து வங்கிகளும் இரண்டு ஆண்டுகள் கழித்து வட்டியுடன் 11 கோடியாக தரவேண்டும். பத்து வங்கிகளும் 11 கோடி தந்தால் மொத்தம் 110 கோடி. அச்சடிக்கப்பட்ட மொத்த தொகையே 100 கோடிதான். எப்படி 110 கோடி வரும்? என்ன நடக்குமென்றால், ஒன்பது வங்கிகள் பதினொரு கோடியை மக்களிடம் பெற்று தரும். மீதி ஒரு வங்கி ஒரு கோடி ரூபாய் வட்டியை மட்டும் கட்டிவிட்டு தனது கடனுக்கான வட்டி விகிதங்களை மாற்றி மக்களின் தலையில் சுமையை வைத்துவிடும். அந்த இல்லாத பத்து கோடிக்குதான் ஊரே அடித்துக் கொள்ளும். இதன் பக்க விளைவுகளே சொத்துக்களை ஏலத்தில் விடுவது, ஜப்தி செய்வது போன்ற நடவடிக்கைகள். குழப்பமாக இருக்கிறதா? எளிதில் புரிந்துவிட்டால் வங்கியை நீங்கள் புறக்கணிக்க மாட்டீர்களா? அதற்குத்தான் இந்த தெளிவற்ற தன்மையை வங்கிகள் பின்பறறுகின்றன.

3.பணத்தை என்னதான் செய்வது ? வங்கியில் போடுவதே பாதுகாப்பானது என்று உங்களை நம்ப வைத்திருப்பார்கள். அம்பானியை எடுத்துக் கொள்ளுங்கள். அவரது வங்கிக் கணக்கில் கடன்தான் இருக்கும். ஏனெனில் லாபத்தை பண வடிவில் சேத்து வைப்பது முட்டாள்தனம். தொழில் வடிவத்தில் சேத்து வைப்பதே நலம். ஏனென்றால் பணத்தை மூட்டைகட்டி வைப்பதால் அது வளராது. திட்டமிட்டு ஒரு தொழில் தொடங்குங்கள். முதலீடு செய்யுங்கள். லாபமோ நஷ்டமோ ஒரு தொழிலில் வெற்றிபெருவதற்கான யுக்தி உங்களின் கைகளில் இருக்கும். மீண்டும் மீண்டும் முயற்சி செய்யுங்கள். சுற்றத்தார் சிலரிடம் நல்ல தொழில் சிந்தனைகள் யோசனைகள் இருக்கும் அவரிடம் மூதலீடு செய்யுங்கள், கடன் வழங்குங்கள். ஏனென்றால் 501 என கலாய் வாங்கின ரிலயன்ஸ்சின் பாடமே ஜியோவின் வெற்றிக்கு வித்திட்டது. வங்கியில் கட்டுக்கட்டாக பணம் டெப்பாசிட் செய்வது உங்கள் வாழ்க்கை சக்கரத்தில் நீங்களே காற்றை இறக்கிக்கொள்வதற்கு சமம். தனிநபர் வளர்ச்சியை மட்டுமல்லாமல் சமூக வளர்ச்சியையும் இது தடுக்கும்.

இப்படி மெல்ல மெல்ல உங்களின் சொத்துக்களை, பொருளாதார சுதந்திரத்தை உங்களிடம் இருந்து பறித்து ஏலத்தில் விட்டும், விலைவாசியை உயர்த்தியும், வளர்ச்சியை தடுத்தும் ஊளை சதைப்போட்டு வளரும் வங்கிகளின் துரித திருட்டு இதுதான்.

உணவு உடை இருப்பிடம் இது மூன்றும் அத்தியாவசியம் தான். ஆனால் நம் வாழ்க்கையை உற்று பார்த்தால் தெரியும், அதில் ஆடம்பர பொருட்களே அதிகம் என்று.

இன்னொரு முக்கியமான குறிப்பு, கீழே சொல்லியிருக்கும் ஒவ்வொரு செயலையும் முயற்சிக்க சில குறிப்பிட்ட நேரம் செலவாகும். (யோசித்துப் புரிந்து கொள்ளவே நிறைய நேரம் ஆகலாம்). எனக்கு time இல்ல. Office வேல பாக்கவும், வீட்ட கவனிக்கவுமே time சரியா இருக்குன்னு நொண்டி சாக்கு சொல்பவர்களுக்கு ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புறேன். இதில்தான் தற்சார்பு பொருளாதாரத்திற்கான தேவை என்ன என்பதும் அடங்கியிருக்கு.

வேலைக்கு செல்வதற்கு நாம் பிறக்கவில்லை, வாழ்வதற்கு பிறந்திருக்கோம். வாழ்வது என்றால் உலகில் உள்ள அற்புதங்களை ஐம்புலன்களால் அனுபவிப்பது. (அதைப்பற்றி விரிவாக இன்னொரு பதிவில் எழுதுகிறேன்.)

Image result for hard work

வேலைக்கு செல்வதே வாழ்வின் தேவைகளை பூர்த்தி செய்வதற்குதான். அதாவது வாங்குற சம்பளத்தில் என்ன வாங்குவீர்கள் ? வீட்டில் வாழ தேவையான பொருட்களைத்தானே வாங்குவீர்கள். அதில் பல உள்ளரசியல் இருக்கின்றன. அதை கவனியுங்கள். நீங்கள் வேலை செய்யும் அலுவலகத்திற்கு உங்கள் மூலமாக கிடைக்கும் லாபம் கண்டிப்பாக உங்களின் சம்பளத்தைவிட சிலபல மடங்கு அதிகமாகத்தான் இருக்கும். இல்லாவிடில் உங்களை வேலையில் வைத்திருக்க மாட்டார்கள். உதாரணமாக உங்கள் சம்பளம் பத்தாயிரம் என்று வைத்துக் கொள்வோம். உங்களால் உங்களின் கம்பெனிக்கு குறைந்தது முப்பதாயிரம் லாபம் இருக்கும். இல்லை முப்பதாயிரம் மிச்சப்படும். நீங்கள் எட்டு மணி நேரம் உழைப்பதில் உங்களுக்கு ஊதியமாக ஒரு நறுக்கு மட்டும் தரப்படும். மீதி முதலாளிக்கு லாபம். இப்போது அந்த பத்தாயிரத்தை வைத்துக் கொண்டு நீங்கள் எதை வாங்கினாலும் அதில் பொருளின் மதிப்புடன் கூடுதலாக லாபம் வரி பேக்கிங் என மொத்தமும் உங்கள் தலையிலே விடியும். பத்தாயிரத்தில் நீங்கள் வாங்கிய பொருட்களின் மதிப்பும் பெற்ற சேவையின் மதிப்பும் கூட்டினால் தோராயமாக நாலாயிரத்தில் அடங்கிவிடும். மீதி ஆறாயிரமும் மற்றவர்களின் லாபத்திற்கும் அரசாங்க லாபத்திற்கும் சென்றுவிடும். எனவேதான், வேலைக்கு போய் சம்பாரித்து செட்டில் ஆனவர்கள் யாரும் இலர். மேலும் அன்பளிப்பாக உடல்நலக் குறைவு, மன அழுத்தம், டாக்டர் செலவு, பணப்பற்றாகுறை, கடன் தொல்லை என அத்தனை உயிர் கொல்லிகளும் வாரி வழங்கப்படும்.

இப்போது இப்படி வைத்துக் கொள்வோம், 24 மணி நேரத்தில் 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் தூக்கம், 8 மணி நேரம் சொந்த மற்றும் இதர வேலைகள் என்க. இந்த 8 மணி நேரம் வேலை பார்ப்பதை தவிர்த்து, உங்கள் தேவைகளை நீங்களே பூர்த்தி செய்ய உழைத்தீர்களானால் ? உங்கள் உழைப்பின் பலன் உங்களுக்கே கிடைக்கும். ஏதோ பௌர்ணமி பிதற்றல் போல் தோன்றும்.

சற்று நிதானமாக நம் தாத்தா பாட்டி காலத்தை ஞாபகப் படுத்திப் பாருங்கள். அவர்கள் வேலை விவசாயமாக இருக்கும். சொந்த நிலத்தில் விளைந்ததை அறுவடை செய்து விற்றும் உண்டும் வாழ்ந்தார்கள். அவர்களின் இதர தேவைகளுக்காக மட்டும் நெல் விற்ற பணத்தைப் பயன்படுத்துவார்கள். உழைப்பதால் உடல் ஆரோக்கியமும் கிடைக்கும். லாபமும் கிடைக்கும். மருத்துவ செலவு என்பதே இருந்திருக்காது. “விவசாயிகளே தற்கொலை பண்ணிக்கிட்டு சாவுறாங்க, இதுல நம்மல போய் விவசாயம் பண்ண சொல்லுறானே”னு பயப்படாதீர்கள். எல்லோரையும் அத்தியாவசிய பொருட்களை தயாரிக்க சொல்லவில்லை. சிலர் உணவு பொருட்கள் சிலவற்றை உற்பத்தி செய்யுங்கள். சிலர் உடைகளை உற்பத்தி செய்யுங்கள். சிலர் இருப்பிடம் கட்டிக் கொடுங்கள். இப்படி ஒரு ஊர் மக்கள் தங்கள் தேவைகளை தங்கள் ஊர் மக்களைக் கொண்டே பூர்த்தி செய்து கொள்ளலாம்.

Related image

மேலும் இதை நடைமுறைப்படுத்துவதில் உளவியல் பிரச்சினைகளும் உண்டு. என்னவென்றால், மக்களுக்கு சுகமான வாழ்க்கை என்றால் பீச்சோர பங்களாவில், swimming poolக்கு பக்கத்தில் நீட்டமான மரப்படுக்கையில் படுத்துக் கொண்டு நான்கைந்து வேலையாட்களை அடிமைகளைப் போல் ஏவியேவி வேலை வாங்குவதும், தேவையோ இல்லையோ மனதை வசீகரிக்கும் எல்லா டி.நகர் குப்பைகளையும் வாரந்தோரும் தன் வீட்டில் குவித்துக் கொள்வதும், பார்ப்பவரை பொறாமைப் பட வைக்கும் அளவிற்கு மிடுக்காய் உடையணிந்து கொள்வதுமாக எல்லாமுமே TV விளம்பரங்களில் வரும் காட்சிகள்தான். அந்த தவறான சித்தரிப்புகளை உங்கள் கற்பனையில் இருந்து நீக்குங்கள். அதில் வரும் முதலாளியாக நீங்கள் உங்களை நினைப்பீர்கள். ஆனால், சமூகத்தைக் கட்டுபடுத்தக் கூடியவர்கள் உங்களை அந்த வேலை ஆட்களாகவே வைத்திருப்பார்கள்.

பிறகு ஏன் அந்த ஆசையை காட்டுகிறார்கள் என்றால், அதன் விளைவாகவே உங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ வேலைக்கு வந்தே தீருவீர்கள். ஏதோ ஒரு குறிப்பிட்ட நாளிலிருந்து சொகுசான வாழ்வை அனுபவிக்கலாம் என்று உங்களை நம்பவைத்து ஆசைப்பட வைப்பார்கள். “நீ நிம்மதியாய் இல்லை, மோசமான கஷ்டமான வாழ்வை அனுபவித்து வருகிறாய்” என்று மூளைச் சலவை செய்வார்கள். இப்படி மந்தை போன்ற சமூகத்தை பாத்திக்கட்டி திசைதிருப்பும் யுக்தி சில multi millionaireகளின் அதிகார மேசைக்கு மட்டுமே தெரியும். இந்த அதிபயங்கர அதிபுத்திசாலிகளின் சிலந்தி வலையில் இருந்து தப்பித்து ஆரோக்கியமான, நல்ல அனுபவகரமான வாழ்வை மேற் கொள்ளவே இந்த தற்சார்பு பொருளாதாரம்.

Image result for handshake with knife

தோற்றம் அல்லது Image. இந்த சமூகத்தில் ஒரு தனிநபரின் தோற்றமே அவரை யாரென நிர்ணயிக்கிறது. இதன் விரிவான விளக்கங்களை புரிந்து கொள்ள Halo Effect மற்றும் Horn Effect பற்றி படியுங்கள். கருத்தவன்லாம் கலீஜு, செவப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான். கண்ணாடிய திருப்புனா ஆட்டோ எப்டி ஜீவா ஓடும் ? போன்ற எண்ணங்களுக்கு உளவியல் ரீதியாக பின்னாலிருக்கும் உண்மையை உணருங்கள்.

சமூகம் எதிர்பார்க்கும் அல்லது அங்கீகரிக்கும் image ஐ தூக்கி எறியுங்கள். உங்கள் வாழ்க்கையை உங்களுக்கு பிடித்தாற்போல் நீங்கள் மாற்றலாம். ஆனால் அனைவரும் ஒன்று திரள வேண்டும். குறைந்தது நூறு குடும்பங்கள் பண்ட மாற்று முறையையும் தற்சார்பு பொருளாதாரத்தையும் புரிந்து செயல்பட்டால் போதும், அவர்களின் வளர்ச்சி, வாழ்க்கை தரத்தை பார்க்கும் அனைவரும் தற்சார்பு பொருளாதாரத்தை பின்பற்றுவார்கள்.

வீட்டில் சமைப்பதற்குத் தேவையான மூலப் பொருட்கள் தோராயமா நூறு இருக்கு என்று கொள்வோம். இதில் எவையெல்லாம் localல் கிடைக்கும் என்று பாருங்கள். ஏறத்தாழ எண்பது பொருட்கள் இருக்கும். பல பொருட்கள் plastic packet ல் அடைத்து பெரிய brandன் பெயர் போட்டு ஜிகுஜிகுவென்று இருக்கும். அவற்றை வாங்காதீர்கள். அதே பொருட்கள் localல் அதைவிடவும் குறைந்த விலையில் கிடைக்கும். அதையே வாங்குங்கள். மீதி இருக்கும் இருபது பொருட்களும் நீங்களே உற்பத்தி செய்ய முடியும்.

Related image

உதாரணமாக மிளகாய்த்தூள் வேண்டும் என்றால் நீங்களே வரமிளகாய் மல்லி எல்லாம் வாங்கி வீட்டில் காயவைத்து அருகில் இருக்கும் மாவு அரைக்கும் கடைகளில் அரைத்து மிளகாய் தூள் தயாரிக்கலாம். இதைப் போலவே ஒவ்வொரு பொருளையும் trial and error முறையில் வீட்டிலேயே தயாரிக்கலாம். முயற்சியுங்கள் பிறகு உங்களுக்கே அது எளிதாகி விடும். ஒரே நாளில் இருந்து எல்லாவற்றையும் தயாரிக்க முயற்சிக்க வேண்டாம். ஒவ்வொரு பொருளாக தயாரிக்க தொடங்குங்கள். ஒரே வருடத்தில் உங்கள் சமையலறையில் இருக்கும் பொருட்களில் எதுவும் பெரிய brandன் பொருட்களாக இருக்காது. அப்போது மாத budgetல் ஆயிரம் ரூபாய் மிச்சப் பட்டிருக்கும். மருத்துவ செலவு எதிர்காலத்தில் அறவே தவிர்க்கப்படும்.

இவை அனைத்தும் மூலப் பொருட்கள் அல்ல, உப பொருட்களே. நிலம் இருப்பவர்களின் அடுத்த நகர்வு விளைச்சலை நோக்கி இருக்க வேண்டும். சொந்த விவசாய நிலம் அற்றவர்கள் மற்ற அத்தியாவசிய தேவைகளான உடை மற்றும் இருப்பிடத்தின் கூறுகளை கவனியுங்கள். ஆயிரம் ரூபாய்க்கு ஒரு jeans ஒரு சட்டை கூட நல்லதாக வாங்கிவிட முடியாது. ஆனால் அதே ஆயிரம் ரூபாய்க்கு நீங்கள் எத்தனை மணி நேரம் உழைக்க வேணடும் என்பதை கணக்கிடுங்கள். ஏறத்தாழ பதினாறு மணி நேரம் உழைப்பீர்கள். இப்போது ஒரு வேட்டி ஒரு சட்டையின் மெட்டீரியல் வாங்கிக் கொள்ளுங்கள். நீங்களே சட்டையை தையுங்கள். அதிக பட்சம் நான்கு மணி நேர உழைப்பில் உங்களுக்கான சட்டையை நீங்களே தயாரித்துவிடலாம். முதலில் கோனல் மானலாகத்தான் வரும், பத்து சட்டை தைத்த பிறகு, கடைகடையாக தேடி வாங்கும் சட்டையை கடகடவென்று நீங்களே தைக்கலாம். சிரிப்பாக வரலாம். ஏனென்றால் பல வருடம் அறியாமையோடே இச்சமூகத்தில் வாழ்ந்துவிட்டு ஒரே நாளில் நன்மை தரும் சிந்தனைகளை உங்களுக்கு உள்ளில் இருந்து வெளிப்படுத்தினாலே சிரிப்பாகத்தான் இருக்கும். இந்த தற்சார்பு பொருளாதார வாழ்க்கை முறையில் உள்ள நன்மைகளை புரிந்து கொள்ள முயற்சியுங்கள்.

இப்படி ஒவ்வொரு பொருளாக தயாரித்து, உங்கள் சமூகத்திற்கான தேவையை நீங்களே கட்டமைப்பீர்களானால், ஐந்து முதல் பத்து வருடங்களில் அத்தியாவசிய பொருட்களின் உற்பத்தியில் உங்களுக்கு தயாரிக்க ஏதுவான பொருள் எது என்பதை கண்டறிந்து, அதை சிறந்த முறையில் தயாரித்து சந்தைபடுத்தக்கூடிய ஆற்றலும் அறிவும் பெற்றிருப்பீர்கள். சமூக வளர்ச்சியில் உங்களின் வளர்ச்சியும் இன்றியமையாதிருக்கும்.

தெளிந்த நல்லறிவு பெற தடையாக இருக்கும் போதை என்ன என்பதை அறியுங்கள்.

“வெளிநாடு போய் சம்பாரிசசிட்டு ஊருல வந்து செட்டில் ஆகலாம்.”

“நல்ல ஐ.டி. கம்பெனில சேந்து லட்ச லட்சமா சம்பாரிச்சு தண்ணியிருக்க காடா பாத்து வளைச்சுபோட்டு இயற்கை விவசாயம் பண்ணலாம்” போன்ற அதிமேதாவித்தனமான யோசனை கொண்டிருப்பவர்களின் கவனத்திற்கு,

சந்தன மரம், செம்மரக் கட்டை, ஐம்பொன் சிலைகள் மட்டும் மதிப்புள்ளவை அல்ல. உங்களது மூலையும் தான். பிற நாட்டின் வளர்ச்சிக்காக உன்னுடைய உழைப்பையும் நேரத்தையும் செலவிட்டு விட்டு வருடங்கள் கழித்து திரும்பிப்பார்க்கையில் உன் நாடு அங்கேயே நின்றிருக்கும். நீ வாழப் போகும் சமூகத்திற்காக நீ பாடுபடு. உன் குடும்பம் வம்சம் சமூகம் என எல்லாமும் செழிக்கும். அயல் நாட்டுக்கு மனித வளத்தை கடத்துவதும் தார்மீக ரீதியில் குற்றமே. மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஏன் இதை கண்டுக்கொள்ளவில்லையெனில் வரி வருவாய் அதிகம். அதாவது லஞ்சம் பெற்றுக் கொண்டு உன் திறனை நாடு கடத்துவதாகும். மேலும் பல லட்சங்களோ சில கோடிகளோ சேமித்து சிட்டிக்கு தூரத்தில் அமைதியான சூழலில் காடு வீடு பங்களா என செட்டில் ஆகும்போது நீங்கள் வீனடித்த மறைநீரை, வளத்தை சமன் செய்வதற்கு உங்களின் மீதி காலம் போதாது. உங்களின் அடுத்தடுத்த சந்ததிக்கு எதுவும் மிஞ்சாது.

மேலும் தங்களின் பொன்னான நேரத்தை ஒதுக்கி படித்தமைக்கு நன்றி எதுவும் கிடையாது. இவற்றை தீர ஆராய்ந்து நல்ல முறையில் செயல்படுத்துங்கள் சிலையே வைக்கிறேன்.

Image result for comment please

பின்னூட்டம் முக்கியம். உரையாடி அறியாமை களை.

Surya devan V —— 14.04.2018

போதை

சரக்கு தம்மு கஞ்சா மட்டும் போதை பொருட்கள் இல்ல…

உன் அத்தியாவசிய பிரச்சனைய, உரிமைய மறக்கடிச்சு, உன் உழைப்ப, ரத்தத்த உறிஞ்சும் எதுவும் போதைப் பொருட்கள்தான்.

Related image

அது கிரிக்கெட்டோ, டிவி நிகழ்ச்சியோ, பேஸ்புக்கோ, வாட்ஸப்போ, யூடியூபோ, கிக் ஏத்தி உன் நேரத்த அதுக்காக செலவிட வைக்குற எல்லமே போதைப் பொருள்தான்.

மறவாதே உன் வாழ்வை.
தவறாதே உன் வழியை.
போதைப் பழக்கம் உன் வாழ்வில் முன்னேற்றத்தைத் தடுக்கும்.

Suryadevan Vasu
09.04.2018

தற்கொலை

தனிமை படுத்திக் கொள்வது தற்கொலைக்கு சமமானது‌.

Image result for suicide

தன்ன தன் ஜாதிப் பெயர வச்சி ஒருத்தன் அடையாளப் படுத்திக்கிறான். அவன் ஜாதிக்காரன் பத்து பேர் அத பாத்து பெரும படுவான். பிற ஜாதிக்காரன் நூறு பேரு அத பாத்து வேறு படுவான். இவன் நம் ஜாதி இல்லையென்று‌.

சும்மா இருந்த ஒருத்தன் தன் ஜாதிப் பேர பொது வெளியில் பயன்படுத்த ஆரமிச்சா அது அவன அந்த மக்களிடத்தில் இருந்து பிரித்து நானும் நீயும் ஒன்றல்ல, நான் வேறு நீ வேறு என்ற வேற்றுமையையே விதைக்கிறது.

நாம் என்பதில் இல்லாத பெருமை, நான் இந்த சமூகத்தை சேர்ந்தவன் என்று பறை சாற்றுவதில் வந்து விடுமா ?

சுயலாபத்திற்காக கெத்திற்காக எந்த ஜாதியையும் ப்ரான்டிங் மார்கெட்டிங் செய்யாதீர்கள். எல்லாம் வீன். பிரித்தாளும் யுக்தியின் ஒரு படிநிலைதான் ஜாதி.

மாடு மாதிரி பிரிந்து பலியாகாமல் புறாக்கள் போன்று ஒன்றுபட்டு தப்பிப்பிழையுங்கள்.

பொது நலம் கருதி வெளியிடுவோர், இல்லுமினாட்டியின் எனிமி
– Suryadevan Vasu
19.03.2018

எது நம் பெருமைமிகு அடையாளம்?

எது என் (அ) நம் பெருமைக்குரிய அடையாளம்?

Image result for identity

தமிழ் நம் அடையாளம்னு பிதற்றகூடாது. உண்மையில் தமிழை ஓரளவிற்காவது கற்றரிந்தவர் அதன் சிறப்புகளை பயின்று வியந்தவர்கள் அப்படி சொல்லிக்கொள்ளலாம். தமிழில் பிழையின்றி எழுதிப்படிக்கக்கூட தெரியாதவர்கள் தமிழ் என் அடையாளம் என்பதை அறியாமையின் உச்சம் என்றே நினைக்கிறேன்.

சரி வேறு எது நம் அடையாளம் ? நம் பெருமை ?

நாம் பிறந்த மதமா ?
நாம் பிறந்த ஜாதியா ?

மதம் ஜாதி இரண்டிலும் நமக்கு எந்த பங்கும் இல்லை. நம் பெற்றோர் அந்த சமூகத்தை சார்ந்தவரென்பதால் நாமும் அச்சமூகத்தை சேர்தவராகிறோம். அதிலென்ன சாதித்துவிட்ட பெருமை? நிகழ்தகவில் பலித்துவிட்ட வாய்ப்புதான் நம் பிறப்பென்பது.

நாம் படித்த படிப்பா ? இல்லை. நாம் படித்ததை நம் நலனுக்காக மட்டுமே பயன்படுத்தும் வரை அதில் பெருமை கொள்ள ஒன்றும் இல்லை.
(வேறெப்படி பயன்படுத்துவது என்று வினவுவர்களுக்கு தர்சார்பு பொருளாதாரம், விழிப்புணர்வு பற்றிய பதிவுகள் பின்னர் வரும்)

ஊர சொல்லி பெருமைபட்டுக் கொள்ளவும் ஒரு கூட்டம் இருக்கு. ஊருல என்னடா பெருமனு கேட்டா நாலு பெரியவங்க பேர சொல்லி அவரு பொறந்த ஊருங்குறான். ஏலே அவரு சொன்ன எதையாவது நீ பாலோ பண்ணியாலன்னு கேட்டா சத்தமில்லாம போயிருவான்.

இன்னும் சிலர் ப்ரவுட் டு பி இந்தியன் லாம் சொல்லுறாங்க. சிரிப்புதான் வருது.

ஆம்பள சிங்கம் னு ஒருபக்கம் அலையுறாங்க. பரிதாபமா இருக்கு.

என்னைய கேட்டா, ஆறறிவு மனிதனா பிறந்ததும், ஒரளவிற்காவது என்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை அறிவியல் அடிப்படையில் புரிந்து கொள்வதும், மனித மாண்புடன் சக மனிதனை மனிதனாக பார்க்கவும், என்னுள் இருக்கும் அறியாமையை நீக்கி பிறரின் அறியாமையையும் நீக்க உதவும் பகுத்தறிவையுமே என் பெருமைமிகு அடையாளமாக சுட்டிக்காட்டுவேன்.

13.03.2018