தற்கொலை

தனிமை படுத்திக் கொள்வது தற்கொலைக்கு சமமானது‌.

Image result for suicide

தன்ன தன் ஜாதிப் பெயர வச்சி ஒருத்தன் அடையாளப் படுத்திக்கிறான். அவன் ஜாதிக்காரன் பத்து பேர் அத பாத்து பெரும படுவான். பிற ஜாதிக்காரன் நூறு பேரு அத பாத்து வேறு படுவான். இவன் நம் ஜாதி இல்லையென்று‌.

சும்மா இருந்த ஒருத்தன் தன் ஜாதிப் பேர பொது வெளியில் பயன்படுத்த ஆரமிச்சா அது அவன அந்த மக்களிடத்தில் இருந்து பிரித்து நானும் நீயும் ஒன்றல்ல, நான் வேறு நீ வேறு என்ற வேற்றுமையையே விதைக்கிறது.

நாம் என்பதில் இல்லாத பெருமை, நான் இந்த சமூகத்தை சேர்ந்தவன் என்று பறை சாற்றுவதில் வந்து விடுமா ?

சுயலாபத்திற்காக கெத்திற்காக எந்த ஜாதியையும் ப்ரான்டிங் மார்கெட்டிங் செய்யாதீர்கள். எல்லாம் வீன். பிரித்தாளும் யுக்தியின் ஒரு படிநிலைதான் ஜாதி.

மாடு மாதிரி பிரிந்து பலியாகாமல் புறாக்கள் போன்று ஒன்றுபட்டு தப்பிப்பிழையுங்கள்.

பொது நலம் கருதி வெளியிடுவோர், இல்லுமினாட்டியின் எனிமி
– Suryadevan Vasu
19.03.2018

Leave a Comment