Category Archives: Social

உறவுகள் – உணர்வுகள் – மாயை Relativity of Relationship

Relativity of Relationship

உறவுகளின் பிம்பம் உண்மையா? மாயையா?

அம்மா, அப்பா, அண்ணன், அக்கா, தம்பி, தங்கை, நண்பன், மாமன், மச்சான் என்று எந்த ஒரு உறவை எடுத்துக்கொண்டாலும் அவர்களை நாம் புரிந்து வைத்திருப்பதும், அவர்கள் தங்களை இப்படிப்பட்ட நபர் என வெளிப்படுத்திக் கொள்வதும் மாறுதல்களுடன்தான் இருக்கும். நாம் ஒருவரை ஒரு மாதிரியாக புரிந்து வைத்திருக்கலாம். அது உண்மையிலேயே அவர் அப்படித்தான் என்பதாகவும் இருக்கலாம், அல்லது உண்மையில் அவர் வேறு விதமாகக்கூட இருக்கலாம். அவரிடம் அதை சொன்னோமேயானால் பெரும்பாலானோர் அதை அப்படியே ஒத்துக்கொள்ள மாட்டார்கள். தன்னிலை விளக்கம் தருவார்கள், வாதிடுவார்கள், சண்டைக்கு வருவார்கள், வஞ்சம் வைத்துக்கொள்வார்கள், கோபித்துக்கொள்வார்கள், அரிதாக சரிசெய்ய வேண்டியதை திருத்திக்கொள்வார்கள். இதில் நாம் ஒருவரை புரிந்து வைத்திருப்பதிலும்கூட திருத்தம் தேவைப்படலாம். தன் தவறை உணரும்போது தயங்காமல் அதை திருத்திக்கொள்வதும் நன்று.

நான் என்னை எப்படிப்பட்டவனாக வெளிக்காட்டிக்கொள்ள நினைக்கிறேன் என்பதும், என்னை மற்றவர்கள் எப்படி உள்வாங்கிக் கொள்கிறார்கள் என்பதும் நிச்சயமாக வெவ்வேறாகத்தான் இருக்கும். நம்மை உள்ளபடியே யாரும் புரிந்துக்கொள்வதும் இல்லை. நாமும் யாரையும் உள்ளபடியே புரிந்து வைத்திருப்பதும் இல்லை.

உதாரணமாக ஒருவரின் அப்பா நிஜத்தில் கஞ்சனாக இருப்பார். அவர் மகனுக்கோ மகளுக்கோ சல்லி காசு கூட செலவு செய்திருக்க மாட்டார். பணத்தின் மீது அளவற்ற பற்றுதலுடன் இருப்பார். ஆனால், அவர் தன்னை அவ்வாறே வெளிப்படுத்திக்கொள்ள மாட்டார். மாறாக, தன் பிள்ளைகளுக்காகத்தான் நான் பணத்தை சேத்துவைக்கிறேன் என்று சொல்லுவார். உண்மையில் அந்த அப்பாவின் நோக்கம் பிள்ளைகளுக்கு பணம் சேர்ப்பதாகக்கூட இருக்கலாம். அல்லது பணத்தின் மீதான ஒரு மாயை, ஒரு பற்றுதல் கூட இருக்கலாம். சிலர் தன்னிடம் இருக்கும் பணத்தின் எண்ணிக்கையைப் பார்த்து பார்த்து மனநிறைவு அடைவர். நாம் ஒருவர் மீது வைக்கும் கருத்தும் அவர் அதற்கு தரக்கூடிய தன்னிலை விளக்கமும் நிச்சயம் ஒத்துப்போகாது. ஆனால் இருவரில் ஒருவருக்கு நிச்சயம் உண்மை யாதென்று புரிந்திருக்கும்.

மாயைகள் பலவிதம்

ஒருவரை அளவுக்கு அதிகமாக நம் அருகிலோ, நம் எண்ணத்திலோ இடம் கொடுக்கும் போது, பலவிதமான இல்லூஷன்கள் நமக்குள் நடக்க வாய்ப்பு உள்ளது.

தள்ளி இருக்கும்போது பிடித்திருக்கும், நெருங்க நெருங்க வெறுப்பீர்கள்.

தள்ளி இருக்கும் போது வசீகரிக்கும், நெருங்கும் போது பிடித்துவிடும், சிலாகிக்கும், சற்று விலகி நின்று பார்த்தால் மட்டுமே மயக்கத்தில் இருந்தது தெரியும்.

தள்ளி இருக்கும்போது பிடிக்காது, அருகில் செல்ல செல்ல பிடித்துவிடும்.

சிலருக்கு மனிதர்களை எப்போதுமே பிடிக்காது. மற்றவர்களின் குணங்களில் உள்ள குறைகளையே பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்துக்கொண்டு இருப்பார்கள். அனைவரையும் வெறுப்பார்கள்.

அரிதாக சிலர் மட்டும் இந்த வகைமைக்குள் வராமல் ‘நீங்கள் நல்லவரா கெட்டவரா’ என்று கேட்கும்படியாக இருப்பார்கள். இவர்கள் நியுட்ரெல் கேரக்டர் இல்லை. இவர்கள்தான் இயல்பானவர்கள். தான் செய்யும் செயல்களை மற்றவர் எப்படி புரிந்துகொள்கிறார் என்பதை விடவும் தான் செய்யும் செயல்கள் தன்னைப்பொறுத்தவரை நியாயமாக இருக்கிறதா என்பதையே அதிகம் சிந்திப்பவர்கள். இவர்களை இவர்களாகவே ஏற்றுக்கொள்வது சற்றுக்கடினம்.

இப்போது கீழே உள்ள படத்தைப்பாருங்கள். இடது பக்கம் இருப்பவரைப் பாருங்கள். கோபத்துடன் முகம் சுழிப்பதைப்போல இருக்கிறார் அல்லவா? வலது பக்கம் உள்ளவரைப் பாருங்கள் சாந்தமான முகத்துடன் இருக்கிறாரா? நீங்கள் இதை மொபைலிலோ கம்ப்யூட்டர் மானிட்டரிலோ பார்த்துக்கொண்டிருக்கலாம். டிஸ்பிளேவை விட்டு சற்று விலகிச்சென்று கொண்டே பாருங்கள். முறைத்தவரின் முகம் சாந்தமாகவும், சாந்தமானவரின் முகம் முறைப்பதைப் போலவும் தோற்றமளிக்கும். சும்மா ஒரு ட்ரை பண்ணுங்க.

Credit: COURTESY OF AUDE OLIVA M.I.T. AND PHILIPPE G. SCHYNS University of Glasgow

இது போலதான். நாம் ஒரு நபருடன் அளவுக்கு அதிகமாக பழகும்போது பல மாதிரியான நிலைப்பாட்டை எடுக்கிறோம். இதுமாதிரியான தருணங்களில் எந்த ஒரு விளிம்புக்கும் போகாமல், ஒருவரை பிடிக்கும் என்ற தூரத்தில் மட்டுமே வைத்துக்கொண்டு அவரை அனுகுவதோ பழகுவதோ என்றென்றைக்கும் நன்மை தரும். நல்ல நட்பில், நல்ல உறவில் நீண்ட காலம் பயணிக்க முடியும்.

யாராக இருந்தாலும் ஒரு அளவுக்கு மேல் அவர் பேசுவதை நாம் கேட்கும் போது நிச்சயமாக நாம் முரண்படுவோம். அந்த முரண் மிக இயல்பானது. ஒருவரது எண்ணமும் மற்றவரின் எண்ணமும் நூறு விழுக்காடு அப்படியே ஒற்றுப்போகாது. ஒரு நபரை பிடித்திருக்கிறது என்றால் அவரை அந்த தூரத்திலேயே வைத்து ரசிப்பதுதான் நமக்கும் நல்லது, அந்த நபருக்கும் நல்லது.

The more you know a person, either you hate or you love. The less you know a person, you can like and admire him.

உங்களோடு நெருக்கமாக இருந்த போது நீங்கள் வெறுத்த ஒரு நபரை சிறிது காலம் கழித்து பார்க்கும் போது அந்த வெறுப்பு அறவே இல்லாமல் இருக்கும். அந்த நபரின் நல்ல பிம்பம் புலப்படும்.

உங்களோடு நெருக்கமாக இருந்தபோது நீங்கள் சிலாகித்து நேசித்த ஒரு நபரை, சிறிது காலம் விலகி நின்று பார்க்கும்போது, அவர் எப்படி உங்களை இன்ஃப்லூயன்ஸ் செய்தார் என்பது உங்களுக்கே ரிவீல் ஆகும்.

நீங்கள் ஒரு நண்பருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் அறையை பகிர்ந்து கொள்ள விரும்பி, அறையில் அவருடன் இருந்து பிறகு அது சரிபட்டு வராமல், அறையை காலி செய்த அனுபவம் நிச்சயம் இருக்கும் அல்லவா? காலி செய்யவில்லை என்றாலும் அந்த நண்பர் மீது முன்பு இருந்த அபிப்ராயம் குறைந்து வேண்டா வெறுப்பாகவே இருக்கவேண்டி வந்திருக்கும்.

மகாத்மா அவர்களுடன் நீங்களும் நானும் முழு நாளும் முழு வாரமும் இருந்திருந்தால் எப்படியெல்லாம் அவரை வெறுத்திருப்போம் என்று யோசித்துப் பாருங்கள். நமக்குத் தெரிந்ததெல்லாம் பொக்கைவாய் சிரிப்பு மட்டுமே. அவர் இருமி நாம் கேட்டதில்லை. அவர் குரட்டைவிட்டு நாம் கேட்டதில்லை. அவர் பெண்களிடம் கொஞ்சிப்பேசி நாம் பார்த்ததில்லை. அவர் அசட்டு ஜோக் சொல்லி நாம் கேட்டதில்லை. அவர் முன்னுக்கு பின் முரணாகப் பேசி நாம் பார்த்ததில்லை. பூமர் வசனங்கள் மொழிந்து பார்த்ததில்லை. அதனால்தான் அவர் மகாத்மா என்ற புனித பிம்பத்தை நாம் ஏற்கிறோம்.

Gandhi’s unusual diet very often left him highly constipated and spending hours at a time in the bathroom. But where things get weird (at least for most Westerners) — according to Gandhi: Naked Ambition, a 2010 biography by Jad Adams — is in how Gandhi dealt with his constipation. According to Adams, Gandhi would routinely invite one or more of the many female companions he kept around into the bathroom to visit with him while he was on the toilet.

https://allthatsinteresting.com/gandhi-facts-quotes-dark-side#:~:text=He%20was%20staunchly%20racist%20for,20s%20through%20his%20mid%2D40s.

இது மகாத்மா காந்தி அவருக்கு மட்டும் இல்லை, நாம் உயர்வாக நினைக்கும் பல ஆளுமைகளுக்கும், புனிதமாகக் கருதும் பல மதகுருக்களுக்கும், ஹீரோவென வாழும் பல டம்மி பீசுகளுக்கும் பொருந்தும். நிஜத்தில் அவர்களுடன் சிறிது காலம் பயணித்தாலே அவர்களின் குணங்களில் உள்ள நிறைகுறைகள் பட்டவர்த்தனமாகத் தெரிந்துவிடும். ஒருவர் கஞ்சனாக இருக்கலாம், ஓட்டைவாயாக இருக்கலாம், சுயநலவாதியாக இருக்கலாம், பீடோபைலாக இருக்கலாம், நல்லதாக இருக்கும் யாவற்றையும் கெடுத்து வைக்கும் சேடிஸ்ட்டாகக்கூட இருக்கலாம். இவை அனைத்து குணங்களும் யாரிடம் வேண்டுமானாலும் இருக்கலாம். அது நமக்குத் தெரியாத வரையில், நம்மை பாதிக்காத வரையில் நமக்கு எந்தப்பிரச்சனையும் இல்லை.

இதனால்தான் விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள் என்று எளிதாக சொல்லி வைத்திருக்கிறார்கள். யாராக இருந்தாலும் நூறு நாட்கள் ஒரே வீட்டில் இருக்கும் போது அதில் ஆயிரமாயிரம் முரண்கள் வரக்கூடும். இது மிகமிக இயல்பான ஒன்று. அடுத்தவரின் பிழைகளை பேசிப்பேசி ஆர்கஸம் அடைவது ஒன்றும் ஆகச்சிறந்த செயல் இல்லை. ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் உள்ளது.

ஞாபகம் என்னும் துரோகி

நம் மூளை ஒன்றும் கணினி கிடையாது. தரவுகளை அப்படியே பதிவேற்றி வைத்திருந்து வேண்டிய நேரத்தில் அப்படியே பதிவிறக்கம் செய்துகொள்ள. கணினியில் 0 மற்றும் 1 என எல்லாவற்றையும் பைனரியில் பதிவேற்றிக் கொள்ளும். ஒரு தரவானது ‘சூழியம்’ என இருக்க முடியும் அல்லது ‘ஒன்று’ என இருக்க முடியும்.

மூளை அப்படிக்கிடையாது. சின்ன சைபர், பெரிய சைபர், பச்சை நிற சைபர், மங்கலான சைபர், ஒல்லியான ஒன்று, குட்டையான ஒன்று, பாதி, முக்கால், கால், .625 என எண்ணில் அடங்காத வித்தியாசங்கள் இந்த சைபர் முதல் எண் ஒன்று வரை இருக்கின்றன. இந்த எர்ரர்கள் ஏற்படுத்தும் விளைவு ஒருவரை ஃபிராடு என்றும் ஏமாற்றுக்காரனென்றும் பெயர் வாங்கிக் கொடுத்துவிடும். (சிலர் உண்மையிலேயே ஃபிராடாகவும் ஏமாற்றுக்காரர்களாகவும் இருப்பதை மறுப்பதற்கில்லை)

பொய்கள் பல வகைப்படும். சுயநினைவுடன் பொய் சொல்வதை நான் கணக்கில் வைத்துக்கொள்ளவில்லை. தூங்குபவரை எழுப்ப முடியும். தூங்குவது போல் நடிப்பவரை எழுப்ப முடியாத அல்லவா? அது போல் தன்னை அறியாமல் பொய் சொல்ல நேரிடும் வகைமைகளை நான் பட்டியலிடுகிறேன். நான் தவறவிட்டதை நீங்கள் பின்னூட்டத்தில் பதிவிடுங்கள். நான் தெரிந்து கொள்கிறேன்.

Glitch/Repaired memory lies: மூளை தரவுகளை நினைவு படுத்தும் போது, அதில் பழுது ஏற்பட்டு வேறு ஒரு தரவை அது எடுத்து தரும். உதாரணமாக நண்பரிடம் ஒருவர் நான்காயிரம் பணம் வாங்கியிருப்பார். ஒரு மாதம் கழித்து யோசித்துப்பார்க்கும் போது மூவாயிரம் வாங்கியதாகவே அவருக்கு ஞாபகத்தில் இருக்கும். பேசும் போது மூவாயிரம் என்று சொல்லி, நண்பர் இல்லை நாலாயிரம் என்று சொல்லி, கடைசியில் வேறு எங்காவது சோதித்து உறுதிபடுத்தும் போது, ஆமாம், நாலாயிரம்தான் என்று உண்மையை உணர்ந்து சாரி மச்சான். கன்ஃப்யுஸ் ஆகிட்டேன் என்று ஒப்புக்கொண்டுவிடுவார். இதில் ஒருவர் பொய் சொல்வதாகத் தெரியும். ஆனால், மூளை செய்யும் சிறு பிழையினால் அவரது கேரக்டரையே இப்படித்தான் என்ற முன்முடிவுக்கும் பலரும் வந்துவிடுவர்.

Influenced memory lies: இன்ஃப்லூயன்ஸ் பொய்கள். ஒருவரது நினைவில் மங்கலாக இருக்கும் ஒரு தரவை, இன்னொருவர் சொல்லும் தரவு மறைத்துவிடும். உதாரணமாக, ஒருவர் நண்பரிடம் நான்காயிரம் வாங்கி இன்னொருவருக்கு தருகிறார் என்று வைத்துக்கொள்வோம். வாங்கியவர் திருப்பித்தரும் போது மூவாயிரம் தந்து அவ்வளவுதான் வாங்கியதாக சொன்னால், இவரது நினைவில் தெளிவில்லாமல் இருந்த நாலாயிரம் என்ற பிம்பத்தை மூவாயிரம் என்ற பிம்பம் மறைத்துவிடும். முதலாவது நண்பரிடம் இவர் மூவாயிரம் திருப்பித் தர அவர் நாலாயிரம் கேட்க, இவரும் மூவாயிரம்தான் வாங்கியதாக வாதிட நேரிடலாம். இதில் இவருக்கு எந்த லாபமும் இல்லைதான். ஆனால் மூவாயிரம்தான் தான் வாங்கியாதாக நம்ப வைக்கப்பட்டிருக்கிறார். இதற்கும், அக்கவுண்ட் எதாவது எடுத்து செக் செய்யும் போதுதான் உண்மை வெளிப்படும். பிறகு சாரி நண்பா கன்ப்யூஸ் ஆகிட்டேன் என சர்ரண்டர்தான். இதிலும் கேரக்டர் டேமேஜ்தான் மிச்சம்.

Defensive memory lies: ஒருவர் தன் நண்பரிடம் ஒரு பைக் சாவியைக் கொடுக்கிறார். நண்பர் அதை அவரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார். பிறகு பைக் சாவி தேவைப்படும் போது கொடுத்தது ஞாபகம் இருக்குமே தவிர, திரும்பி வாங்கியது ஞாபகம் இருக்காது. இப்பொது அந்த நபர் சாவியை வாங்கி எங்கு வைத்திருப்போம் என்பதை யோசிக்க மாட்டர். சாவியை தான் திரும்ப பெறவே இல்லை என்றும் வாதிடுவார். அல்லது மறுபடியும் கொடுத்துவிட்டேன் என்று வாதிடுவார். (மூளை அவ்வாறு ரீகிரியேட் செய்துவிடும்.) உண்மையில் சாவி எங்கவது அலமாரியில்தான் வைத்திருப்பார். தேடுவதற்கு மூளை சலுப்பு பட்டுக்கொண்டு, என்னிடம் சாவி குறித்த தகவலே இல்லை என வாதிடும். மூளையின் சோம்பேறித் தனம் அல்லது தேடி கிடைக்காவிட்டால் பொறுப்பில்லாமல் நடந்து கொண்டது வெளியே தெரிந்து அவமானம் வரும் என்ற பயத்தினால், நடந்த ஒரு சம்பவத்தை, இல்லை என மறுத்து பேச மூளையே நிர்ப்பந்திக்கும். சாவி கிடைத்தப்பிறகு ‘சாரிடா சுத்தமா ஞாபகமே இல்லை!, மறந்துட்டேன்.’ என சமாளிப்பார்கள். இது மூளை செய்யும் சொதப்பல்களே அன்றி சம்மந்தப்பட்டவரின் கேரக்டர் இல்லை. இந்தப் பிரச்சனை இருப்பவர்களிடம் பரிவர்த்தனை செய்யும் போது குறைந்தபட்ச கவனமாவது அல்லது ஆதாரத்துடன் பரிவர்த்தனை செய்துக்கொள்வது அவசியத் தேவை.

Profit memory lies: இதுதான் மிகமிக ஆபத்தான பொய் வகை. தன்னுடைய லாபத்திற்காகவே, மூளை தான் முன்பு கூறியதை மாற்றி அமைத்துக்கொண்டு, நடக்காத ஒன்றை, சொல்லாத ஒன்றை அல்லது சொல்லிய ஒன்றை மாற்றிப்பேசும். உதாரணமாக இரு நண்பர்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள், அவர்கள் ஒரு ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுகிறார்கள். சாப்பிட்டு முடித்ததும், பில் கட்டும் போது, ‘மச்சான் போன தடவ நான் பே பண்ணிட்டேன். இப்போ நீ பே பண்ணிடு’ என்று ஒரு நண்பன் கூற. ‘டேய் போன தடவயும் நான்தான்டா பே பண்ணினேன்.‘ என்று வசனங்கள் ஆரம்பித்து அவரவர் ஞாபகத்தைக்கொண்டே வாதிடுவரே தவிர, ‘சரி எனது ஞாபகம் தவறாகக்கூட இருக்கலாம்‘ என்று இருவரில் ஒருவர்கூட விளங்கிக்கொள்ளமாட்டார்கள். அவர்களது ஞாபகம் அவர்களுக்கு அப்படி ஒரு நம்பிக்கையை கொடுக்கிறது. ஏனென்றால் செலவை மிச்சப்படுத்த லாப நோக்கத்திலேயே நெடுங்காலமாக இயங்கி வரும் மூளைக்கு இப்படித்தான் யோசிக்கத்தோன்றும். இந்த லாப நோக்கத்தில் இயங்கும் மூளையை நம்பி நல்ல நண்பர்கள்கூட சண்டை போட்டுக்கொண்டிருப்பார்கள்.

இப்படி நடந்த ஒரு சம்பவத்தையோ, பேசிய வார்த்தைகளையோ, மூளையின் ஞாபகத்தில் இருந்து ஒருவர் எடுத்து தரும்போது நிச்சயமாக அதில் மாறுதல்கள் ஏற்படும். நடந்ததை நடந்ததுபோலவே எடுத்துசொல்லும் ஆற்றல் நம்மிடம் மிகமிகக் குறைவுதான். அதனால்தான் முக்கியமான தகவல்களை எல்லாம் எழுத்துவடிவத்தில் அச்சிட்டு வைக்கிறார்கள். காலங்கள் மாறினாலும் அச்சிட்ட எழுத்துக்கள் மாறுவதில்லை. ஞாபகங்கள் மாறிவிடும். இப்போது யோசித்துப்பாருங்கள் நம்முடன் பழகியவர்களை பழகிக்கொண்டிருப்பவர்களை அவர்களின் ஞாபகம் பிழையாகிப்போனதன் விளைவாக அவர்களை எவ்வளவு தாழ்வாக நினைத்திருப்போம் என்று. இனியும் அப்படி யாரையும் ஞாபகத்தினால் ஏற்படும் முரண்களைக்கொண்டு தவறாக எடைப்போட வேண்டாம். முடிந்த அளவிற்கு பிற தரவுகளைக்கொண்டு பழுதடைந்த ஞாபகத்தை சரிசெய்ய முயற்சியுங்கள். ஞாபகத்தை விடவும் மனிதர்களின் உணர்வு பெரிது.

தனது ஞாபகம் தவறாக இருக்கிறது’ என்பதற்கும் ‘தான் தவறானவன்’ என்பதற்கும் எவ்வளவு வித்தியசங்கள் இருக்கிறது என்பதை யாவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

Stockholm Syndrome

நெட்ஃப்லிக்ஸ்-ல் மனி ஹெயிஸ்ட் பார்த்தவர்களுக்கு இந்த வார்த்தை பரிட்சையம் ஆகியிருக்கலாம். பார்க்காதவர்களுக்கும் இந்த வார்த்தை தெரிந்திருக்கக்கூடும். நல்ல வார்த்தை. ஏன் நல்ல வார்த்தை என்று சொல்கிறேன் என்று உங்களுக்கே புரியும்.

ஒரு நபருடன் மட்டுமே குறிப்பிட்ட காலம் நெருக்கமாக சேர்ந்து இருக்கும் போது, அவர்மீது ஒரு இனம்புரியாத பந்தம் மனதினுள் ஏற்படும். உங்களுடைய எல்லா உணர்வுகளையும் ஒரு நபருடனே நீங்கள் பகிர நேரும்போது, அந்த நபர் உங்களின் மனதிற்கு மிகமிக நெருக்கமாகி விடுகிறார். அது அவர்மீது அன்பு இருப்பதாக, பாசம் இருப்பதாக, காதல் இருப்பதாகக்கூட சித்தரித்துக்கொள்ளும். அவர் இல்லாமல் இருக்கும் சூழலை மனதினால் எளிதில் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. ஏனென்றால் மனதிற்கு சமீபத்தில் ஒரு நபருடன் 24 மணி நேரமும் பயணித்திருக்கிறது. அதன் விளைவு, அந்த நபர் இல்லாமல் எதையுமே கற்பனை செய்வது சற்று கடினமாக இருக்கும். இந்த உணர்விற்கு அன்பு, பாசம், நேசம், காதல், என்று என்ற க்ளோரிஃபிகேசனும் தேவையில்லை. புனிதப்படுத்த முயற்சிக்காமல், பி.ஜி.எம். போடாமல் உற்று கவனியுங்கள்.

ஒரே நபருடன் ஒரே அறையில் உண்டு, உறங்கி, பேசிப் பழகும் போது, அந்த நபரின் இயல்பு புதிதாக இருப்பதால் மனித மனமானது அந்த ஒருவரை எளிதில் மனதில் ஒட்டிக்கொள்ளும். இதைத்தான் கமல்ஹாசன் குணா படத்தில் அபிராமிக்கு இந்த எஃபக்டை வரவழைத்துக்காண்பித்தார். காதல் கொண்டேன் படத்தில் செல்வராகவன் சொல்லிப்போனார்.

மூளையைப் பொறுத்தவரையில் சமீபத்தில் எது அதை மிகவும் பாதித்தத்தோ அதை எளிதில் மறக்காது. அது ஒரு பாட்டாக இருக்கலாம். ஒரு படமாக இருக்கலாம். ஒரு பொருள், வாகனம், இடம், செயல், நபர், சூழல் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இது ஒரு நிறத்தின் சாயம் விரல்களில் ஒட்டிக்கொள்வது போல என்று புரிந்துகொள்ளலாம். தேய்த்து கழுவாத வரையில் அது விரல்களை விட்டுப் போவதேயில்லை அல்லவா? அது போலதான் சில இசை, வார்த்தை, பாடல், முகம், நபர் என மனதிற்கு இதமளிக்கும் அல்லது பழகிப்போன அல்லது எந்தவொரு ஆழ்மன உணர்விற்கு உட்படுத்தும் எதுவாகவும், யாராகவும் இருக்கலாம், அதன் இருப்பை நீண்டகாலம் உள்வாங்கிக் கொண்டிருக்கும் ஒரு மனம், அதன் இன்மையை எளிதில் கையாளத்தெரியாமல் அதன் இருப்பைத் தேடித்திரியும். இதுதான் Stockholm Syndrome.

இந்த சிண்ட்ரோம் எவருக்கு வேண்டுமானாலும் வரலாம். வராமலும் போகலாம். ஆனால் வருவதேற்கே அதிக வாய்ப்புள்ளது. ஏனென்றால் நாமெல்லாம் சாதாரன மனிதர்கள்தானே. உணர்ச்சிவசப்பட்டு நம் அறிவை மீறி அவசரப்பட்டு செயல்பட்டுவிடும் இயல்பான மனிதர்கள்தான்.

சரி இது வஞ்சகர்கள் மட்டுமே செய்யும் வசியம் போன்ற செயலா என்றால் இல்லை. சாதாரனவரும் இதை அவரை அறியாமலே செய்ய முடியும். இரு இயல்பான நபர்கள் ஒரு அறையில் இருந்தாலே இந்த சிண்ட்ரோம் இருவருக்குள்ளும் எளிதாக தானாக உருவாகிக்கொள்ளும். திட்டமிட்டு இதனை செயல்படுத்தவேண்டிய அவசியம் இல்லை. (எதிர்பாலினமாக இருந்தால் மிகச்சுலபமாக இது அரங்கேறும்) ஆனால், அதே சமயம், சில டாக்சிக் நபர்களுடன் நாம் இதே சிண்ட்ரோமினால் ஆட்கொள்ளப்பட்டு அந்த நபருடனே நெடுங்காலம் பயனிக்க நேரலாம். அதுமாதிரியான நேரங்களில் நாம் டாக்சிக் நபருடன் ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோமினால் பாதிக்கப் படுகிறோமா என்று சோதித்துக்கொள்ளவது அவசியம். டாக்சிக் நபர்களின் உறவைப்பற்றி சுருக்கமாக (ஆம் சுருக்கமாகப்) பார்ப்போம்.

டாக்சிக் ரிலேசன்ஷிப்

யாரெல்லாம் டாக்சிக்? நமக்கு பிடிக்காதவரெல்லாரையும் டாக்சிக் என்று முத்திரைக் குத்தி அவப்பெயரை உண்டாக்கிடலாமா? கோபப்படுபவரெல்லாம் டாக்சிக்கா? குறை சொல்லுபவர்கள் எல்லாம் டாக்சிக்கா? இதற்கான வரைமுறை அவரவர் வசதிக்கேற்ப மாறிக்கொண்டேதான் இருக்கிறது. டாக்சிக் என்றால் நச்சு, விசம். நம் மன நலனுக்கும், வாழ்க்கை நலனுக்கும் கேடான எந்த ஒரு உறவையும் டாக்சிக் எனலாம். ஆனால் டாக்சிக் நபர்களை வேறு சில வார்த்தைகளைக்கொண்டு புனிதப் படுத்த முயற்சிப்பார்கள். அதனை பட்டியலிடுகிறேன்.

தாய்ப்பாசம் என்ற பெயரில் Toxicity: சில குடும்பங்களில் அம்மாக்கள் டாக்சிக் நபர்களாக இருப்பார்கள். தாய்ப்பாசம் என்ற பெயரில் அழுதுப் புலம்பி புரனிப்பேசி குடும்ப நபர்களின் நிம்மதியை குலைப்பதையே முழுநேர வேலையாக வைத்திருப்பார்கள். எதிர்த்து யார் பேசினாலும் தாய்மையின் வேதனைகளை மேற்கோள்காட்டி சென்மெண்ட்டாக தாக்கி மடக்கிவிடுவார்கள். இவர்களை யாரும் எதுவும் செய்ய முடியாது. டாக்சிக் மம்மிக்கள்.

அப்பாபாசம் என்ற பெயரில் Toxicity: சிறந்த உதாரணம் சமீபத்தில் வந்த டான் படத்தின் ஆகச்சிறந்த அப்பா சமுத்திரக்கனி. பாசத்தைக்கூட அடித்துதான் காட்டுவாராம். அடங்கப்பா.

வாழ்க்கை மீதோ, வேலைமீது, எதன் மீதோ, ஏன் கனவன்மீதோ/ மனைவிமீதோ இருக்கும் கோபத்தைக்கூட, வயதிலும் உருவத்திலும் சிறியதாக இருப்பதாலே குழந்தைகள் மீது ஒட்டுமொத்தக் கோபத்தையும் கட்டவிழ்த்துவிடும் அப்பா அம்மாக்களை 90ஸ் கிட்ஸ் தலைமுறைவரை பார்த்திருப்பார்கள். விதவிதமான சாமான்களைக்கொண்டு தன் மகன்களை வெளுத்து வாங்குவார்கள். குழந்தைகள் தவறு செய்ததற்காக அடிவாங்கியதை விடவும், பெற்றோர்களுக்கு கோபம் வரும்போதெல்லாம் அடிவாங்கியதுதான் அதிகமாக இருக்கும். அனுபவித்தவர்களுக்கு நன்கு புரியும். ஏன் பிறந்தோமோ என்கிற அளவிற்கு அடி பின்னி பெடலெடுத்திருப்பார்கள். குழந்தை வளர்ப்பு என்ற சொல்லின் தேவையே இவ்வகை டாக்சிக் பெற்றோர்களால் வந்ததுதான். இவர்களைப் பொருத்தவரை சோறு போட்டு, துணி மணி வாங்கிக்கொடுத்து, ஸ்கூலுக்கு பணம் கட்டிவிட்டால், இவர்களின் கடமை நூறுக்கு இருநூறு விழுக்காடு நிறைவடைகிறது. இதையே அரும்பெரும் தியாகமாகக் கருதுவார்கள். இதுபோக அடித்து துன்புறுத்தியது, வசைப்பாடி தாழ்வு மனப்பாண்மையை மனதில் நிரப்பியது, வாழ்க்கையை வெறுக்குமளவிற்கு அவமானப்படுத்தியது, போன்றவையெல்லாம் எந்தக்கணக்கிலும் வராதவை. இதுபோக தலைக்கு மேல் கடனை வாங்கிவிட்டு மகன்களை மகள்களை கடனை திருப்பி செலுத்தைவைக்கும் பெற்றோர்களையும் நாம் பார்க்காமல் இல்லை. உங்களுக்கு புள்ளையா பொறந்தது ஒரு குத்தமாடா? என்று புலம்பும் அளவிற்கு சிக்கல்களை அள்ளி அள்ளி கொடுக்கிறார்கள் அன்பான பெற்றோர்கள்.

நிறைய இடங்களில் பார்த்திருப்பீர்கள், பிள்ளைகள் பெற்றோரை விட்டுவிட்டு போய் விடுவார்கள். பிள்ளைகள் அப்படி செய்ய பெற்றோர்கள்தான் முதல் காரணமாக இருப்பார்கள். அன்பாக பாசமாக சரியாக வளர்க்கும் குழந்தைகள் வளர்ந்து பெரியவரானப்பிறகு பெற்றோர்கள் மீது நன்றி கொள்வார்கள். (இங்கும் விதிவிலக்குண்டு) ஆனால், பலவிதமான கொடுமைகளுக்கு ஆளாக்கி, மனதிலும், உடலிலும், ஆரோக்கியத்திலும் சரி செய்ய முடியாத காயங்களை பிள்ளைகளின் வாழ்வில் ஏற்படுத்தும் பெற்றோர்களுக்கு, பிள்ளைகள் புறக்கனிப்பதே பிள்ளைகள் அவர்களுக்கு வழங்கும் விடுதலை என்றே நான் பார்க்கிறேன்.

வசதியாக வளர்த்தால்தான் நல்ல குழந்தை வளர்ப்பு என்றில்லை. எந்த வசதியும் இல்லை என்றாலும், அன்புடன், நற்பண்புகளுடன் குழந்தைகளை வளர்க்கும் அவர்களுக்காக உழைக்கும் அத்தனை பெற்றோர்களுக்கும், குழந்தைகள்தான் சாமி. அருவி படத்தில் வரும் குக்கோட்டி குன்னாட்டி என்ற பாடலின் வரிகள் எப்போதும் என்னை மெய்சிலிர்க்க தவறியதே இல்லை.

வந்தாயே என் சேயாக
என் தாயும் அது நீயாக
ஏழைன்னு நினையாதே
என் சாமி நீ தானே

Baby Track (Kukkotti Kunaatti) – Video Song | Aruvi | Arun Prabu | Bindhu Malini, Vedanth

அதற்காக பிள்ளைகளை அடித்து வளர்த்தால் டாக்ஸிக் பேரண்டின்க் என்று அர்த்தம் இல்லை. “பயபக்தி” என்று படித்திருப்பீர்கள். பயம் தான் முதலில். பிறகுதான் பக்தி. குழந்தைகள் மனம்போனபோக்கில் போகாமல் இருக்க அவ்வப்போது சில சில திருத்தங்கள் தேவைப்படும். அவர்களாக புரிந்துகொள்ளும் வயதிற்கு வரும்வரை சிலபல சமயங்களில் அவர்களை கண்டிப்புடன் நடந்த வேண்டிய சூழல் வரும். அப்போது, அம்மு குட்டி, செல்லம் என்றெல்லாம் கொஞ்சிக்கொண்டு இருத்தலாகாது. திருடுவது அறமற்ற செயல் என்ற முடிவுக்கு வர ஒரு குறிப்பிட்ட வயது தேவைப்படும். அந்த வயதிற்கு வரும் முன்பே திருடப்பழகும் குழந்தைக்கு அறம் குறித்த பாடம் புரியாது. ஆனால் வலி குறித்த அறிவு இருக்கும். திருடினால் அடிப்பார்கள். அடித்தால் வலிக்கும். அதனால் திருட வேண்டாம் என்று சில காலம் வளர்வார்கள். அறம் குறித்த அறிவு வந்தப்பிறகு, திருடினால் வலிக்கிறதோ இல்லையோ, மனம் உருத்தும் என்ற நிலைக்கு வருவார்கள். அதுவரை திருடாமல் இருக்கவும், திருட்டின் மூலம் சுகத்தை அனுபவிக்காது இருக்கவும் பெற்றோர்கள், தேவையான கண்டிப்புடன் இருப்பதும், முறையான குழந்தை வளர்ப்புதான். (போலீஸ் அடிக்குப் பயந்து மறுமுறை திருடாமலும் வம்பு தும்புக்கு போகாமலும் வாழ்பவர்கள் பலர். வலி ஒன்றே சிறந்த மொழி)

நண்பர் என்ற பெயரில் Toxicity: இவ்வகை நபர்களை கடந்து வராத ஆட்களே இருக்க மாட்டீர்கள். பள்ளி, கல்லூரி, ஹாஸ்டல், ஆஃபீஸ், ரூம், ஏரியா, என்று திசையெங்கும் டாக்சிக் நண்பர்கள் பரவிக்கிடப்பார்கள். பொதுவாக இவர்களை நான் வசைப்பாடுவது இல்லை. ஏனென்றால் இவர்கள் நமக்கு நிறைய பாடங்களை சொல்லிக்கொடுப்பார்கள். பெற்றோர்கள், வாழ்க்கைத் துணை, போல இவர்களிடம் விலகுவது ஒன்றும் முடியாத காரியம் இல்லை. டாக்சிக் நண்பர்களை சிறு முயற்சியில் வாழ்க்கையில் இருந்தேக்கூட தூக்கி எறிந்துவிடலாம். பெற்றோரையோ, கணவன் மனைவியையோ, மகன், மகளையோ அப்படி தூக்கி எறிந்துவிட முடியாது. நண்பர் என்ற பெயரில் நம்மை சுற்றி சிதறிக்கிடக்கும் டாக்சிக் நபர்களை இனங்காண்பது எளிது. உங்கள் பணத்தில் மங்கலம் பாடிக்கொண்டிருப்பார். அல்லது பணத்தை அவர் செலவு செய்து உங்களின் பொன்னான நேரத்தை உறிஞ்சிக்கொண்டிருப்பார். அல்லது உங்களின் பலவீணம் தெரிந்து அதைக்கொண்டே உங்களின் நிம்மதியைக் கெடுக்க முக்காலமும் வேலைபார்த்துக்கொண்டே இருப்பார்.

காதல் என்ற பெயரில் Toxicity: விரிவாக சொல்ல வேண்டுமா என்ன? காதல் என்ற பெயரில் மன்மதன் படத்தில் வரும் ரீமாசென்னிடமோ, அர்ஜுன் ரெட்டியில் வரும் அர்ஜுனிடமோ சிக்கிய ஆணோ பெண்ணோ, அவர்களிடம் கேட்டால் கண்ணீர் வடித்திடுவார்கள். லவ் என்ற ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டு நெஞ்சை புண்ணாக்கி, ரனமாக்கி வைத்திடுவார்கள். ஒன்னுமே இல்லாத விசியத்திற்கெல்லாம், அப்ப உனக்கு என் மேல லவ் இல்லல என்று ஆரம்பித்து, நான் சாகுறேன் என்பது வரை. எல்லாமே ஸ்பாய்லர்ஸ்தான். கட்டம் சரியில்லாத நேரம் யாருக்கும் லவ்வுக்கு ஓகே சொல்லிவிடாதீர்கள். சிலர் காதல் என்ற பெயரில் நேரத்தை தின்பார்கள், சிலர் பணத்தை சுரண்டுவார்கள், சிலர் உடலை அனுபவிப்பார்கள், சிலர் ஸ்ட்ரெஸ் பஸ்ட்ராக பயன்படுத்திக் கொள்வார்கள். ஒருவர் எத்தகைய புத்திசாலியாக இருந்தாலும் டாக்சிக் பேர்வழிகளிடம் மாட்டாமல் இருப்பதற்கு அசாத்தியமான துனிச்சலும் முடிவெடுக்கும் திறனும் வேண்டும். துர்-அதிர்ஷ்டவசமாக துனிச்சலும் முடிவெடுக்கும் திறனும் பலரிடமும் இருப்பதில்லை.

வாழ்க்கைத்துனை என்ற பெயரில் Toxicity: கணவனோ மனைவியோ எதோ ஒரு வகையில் நிம்மதியைக் கெடுத்து வைக்கும் துனை டாக்சிக்தான். இதில் பாலின பேதமில்லாமல் ஆணோ பெண்ணோ யார்வேண்டுமானாலும் டாக்சிக்காக இருக்கலாம். அவர்கள் டாக்சிக் என்பது அவர்களுக்கே கூட தெரியாமல் இருக்கலாம். பாம்புகள் குடும்பமாக இருக்கின்றன என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்தக்குடும்பத்தில் கிளி ஒன்று வாக்கப்படுகிறது. பாம்பு கடித்தவுடன் கிளிக்கு விஷமேறும். கடித்த பாம்புக்கு இத்தனை நாட்களாக நாங்கள் எல்லாம் இப்படித்தான் கடித்துக்கொண்டு நிம்மதியாக மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கிளி மட்டும் ஏன் மயங்குவது போல் நடிக்கிறது? என்றே தோன்றும். ஒன்றும் செய்வதற்கில்லை. கிளி அதுவாகப் பார்த்து பறந்து தனக்கு தானே விடுதலை அளித்துக்கொண்டால்தான் உண்டு. இல்லையென்றால் விஷத்துடனே, கடியுடனே, அடியுடனே, உதையுடனே வாழப் பழகிக்கொள்ளும். கிளிகள் பெரும்பாலும் பெண்ணாகவே இருக்கின்றன. யாரும் மறுப்பதற்கில்லை. அதற்காக பெண்களும் டாக்சிக்கில் சலைத்தவர்கள் இல்லை. கனவனை கைக்குள் போடுவதில் இருந்து, கனவனின் அம்மாவை வில்லியாக்கி வீட்டை ரெண்டாக்குவது வரை, கனவர்களின் தாலியறுப்பதில் பட்டையை கிளப்பி வருகிறார்கள். சபாஷ் சரியான போட்டி என்று விசிலடித்து கைத்தட்டி குதூகலிக்கும் அளவிற்கு ஆண்களுக்கு டார்ச்சர் தருகிறார்கள். டார்சச்ர் என்று சொல்லிவிட்டால் வேறு அழுது உருண்டு புரண்டு ஒப்பாரி வைத்து பஞ்சாயத்து வைத்துவிடுவார்கள்.

பிள்ளை என்ற பெயரில் Toxicity: இது மிக அரியவகை டாக்சிக். பெரும்பாலும் பெண்கள்தான் இவ்வகை டாக்சிக்கில் ஈடுபடுவார்கள். பெற்றோரின் உழைப்பை, சேமிப்பை, சொத்தை, நிம்மதியை, அபேஸ் செய்வதிலேயே முழுநேரத்தையும் செலவிடுவார்கள். இவர்களின் உழைப்புச் சுரண்டல் கார்ப்பரேட்டைவிடவும் மோசமாக இருக்கும். குடும்ப அரசியலில் பி.ஹெச்.டி, டாக்டரேட், என உச்சம் தொட்டவர்கள். ஆங்காங்கே ஆண் பிள்ளைகளும் அப்பாக்களின் நிம்மதியை ஊதாரித்தனமாக கெடுக்காமல் இல்லை. வீட்டில் எல்லாம் இருந்தும் மகனின் பொறுப்பற்ற போக்காலும், ஆனவத்திற்கென்றே செய்யும் திருச்செயல்களாலும் பெற்றோரின் நிம்மதி கெட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

சொந்தம் என்ற பெயரில் Toxicity: சொந்தம் என்றாலே நிச்சயம் டாக்சிக்காகத்தான் இருப்பார்கள். அதுதான் அவர்களின் இயல்பு. பலரும் கேட்கத் தயங்கும் ஒரு கூர்மையான கேள்வியை சித்தப்பனோ மாமனோ மூஞ்சி மேலேயே கேட்பார்கள். அத்தையும் பெரியம்மாவும் புரனிப்பேசியே புதுப்புது புரளிகளை கிளப்பி விடுவார்கள். இவர்களை இப்படியே விட்டுவிடுங்கள், இவர்களிடம் தன்னிலை விளக்கம் கொடுப்பதோ, விவரிப்பதோ, பயனற்றது, ஒவ்வொரு சம்பவத்திற்கும் அவரவருக்கேற்ப ப்ளாக்பஸ்டர் திரைக்கதை ஒன்றை தீட்டி வைத்திருப்பார்கள். அதை பப்ளிஷ் செய்தால்தான் அவர்களுக்கு தூக்கம் வரும். அவர்கள் நிம்மதியாக உறங்கட்டும். விட்டுவிடுங்கள். இவர்களை முடிந்த அளவிற்கு மண்டைக்குள் ஏற்றாதீர்கள். நல்லது கெட்டதில் பார்ப்பதோடும் பேசுவதோடும் இவர்களின் இருப்பை, பேச்சை மறந்துவிடுவது மனநிம்மதியை கெடுக்காமல் இருக்கும்.

அம்மா, அப்பா, கனவன், மனைவி, மகன், மகள், சொந்தம் என இத்தனை இடத்திலும் டாக்சிக் நபர்கள் சூழ்ந்திருப்பார்கள். ஏதேனும் ஒன்றிரண்டு தருணங்களில் நமக்கு நன்மையும் இவர்கள்தான் செய்திருப்பார்கள். பல சமயங்களில் பாவங்களையும் இவர்கள்தான் செய்திருப்பார்கள். இவர்களை அறவே நம் வாழ்வில் இருந்து விலக்குவது அவ்வளவு எளிதானக்காரியம் இல்லை. அதே சமயத்தில் இவர்களின் அத்தனை டாக்சிக் சித்ரவதைகளையும் பொறுத்துக்கொண்டும் சகித்துக்கொண்டு விதியே என வாழ்வதும் அவசியமில்லை. சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுப்பது ஒருவரின் மன அமைதிக்கு மிக முக்கியம். பல உறவுகளும் திருவிழா பலூன் போல நம்மை விரல் நுணியில் அழுத்திப்பிடித்துக்கொண்டு அடிப்பார்கள், பட்டெனெ விலகிப்போனால் ரப்பர் பேண்ட் கயிறு நம்மை அந்த கையிடமே திரும்ப இழுக்கும். திரும்பத் திரும்ப நம்மை அடிப்பதும் நாம் சிறுது விலகிப் பின் அவரிடமே போவதும் அவர்களுக்கு உள்ளுக்குள் ஒருவித லியிப்பை ஏற்படுத்தும். விளையாடும் போது ஒரு ஹார்மோன் சுரக்கும் அது போல ஒரு டோப்பமைன் திருப்தி நம்மை வாட்டி வதைப்பதில் கிடைக்கும்.

இதில் டாக்சிக் நண்பர்களிடம் இருந்து விலகுவது மட்டும் எளிது. அதிக பட்சம் ஒரு வாரத்திற்கு ரீல்ஸ், வாட்சப் ஸ்டேடஸ் என்று எதையாவது உருட்டிக்கொண்டிருந்துவிட்டு அடுத்த ஜோக்கரைத்தேடி போய்விடுவார்கள்.

Stockholm syndrome with Toxic personalities

டாக்சிக் நபர்களின் பிடியில் இருப்பதே ஒரு சாபம்தான். அதுவும் நமக்கே தெரியாமல் அவர் மீது நமக்கு அன்பு இருக்கிறது, பாசம் இருக்கிறது, நேசம் இருக்கிறது, மயிறு இருக்கிறது என்றெல்லாம் நமக்கு நாமே சொல்லிக்கொள்வது எவ்வளவு பெரிய கொடுமை என்று யோசித்துப்பாருங்கள். ஒன்றாக இருப்பதாலே ஒருவர்மீது அன்பும், காதலும், மரியாதையும் வந்துவிடுமா என்ன? மனதிற்கு பழகிப்போனதால் வரும் இருப்பின்மீதான ஏக்கம். ஒருவரது இன்மையை எதிர்கொள்ள தயாராக இல்லாத மனதின் பெருங்குழப்பம். ஒருவருடன் இருப்பதாலேயே நாம் அவரை விரும்புகிறோமா? அல்லது அவரை விரும்புவதாலேயே நாம் அவருடன் இருக்கிறோமா?

நாம் டாக்சிக் நபருடன் ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோமினால் பாதிக்கப் படுகிறோமா என்று சோதித்துக்கொள்ளவது அவசியம். எனக்கு தெரிந்த சில வழிமுறைகளை குறிப்பிடுகிறேன். எனக்கு தெரியாததை நீங்கள் பின்னூட்டத்தில் குறிப்பிடுங்கள்.

யாருடன் நீங்கள் முக்கியமான நேரங்களையோ அல்லது அதிகப்படியான நேரங்களையோ செலவிடுகிறீர்களோ, அவரைப்பற்றீ நீங்கள் மற்றவரிடம் புலம்பித் தள்ளுகிறீர்களா என்று யோசித்துப்பாருங்கள். மனதிற்குள்ளே குமுறினாலும் அதுவும் புலம்பல்தான்.

இந்த புலம்பல்களை சம்மந்தப்பட்ட நபரிடமே கொண்டு செல்லும்போது. சரியான விசியங்களுக்கு மறுத்துப்பேசாமல் சரி என்று தன்னைத்திருத்திக் கொள்ள முற்படுபவர் டாக்சிக் இல்லை. நீங்கள் குழப்பிக்கொள்கிறீர்கள் என்று ஆரம்பித்து உங்களையே குற்ற உணர்விற்கு ஆளாக்கி உங்களைப் பெருந்தன்மையாக மண்ணிக்கிறாரா என்று சோதித்துப்பாருங்கள். அவர் உங்களை கஷ்டப்படுத்தியற்கும் அவரே உங்களை பெருந்தன்மையாக மன்னித்தாரென்றால் டாக்சிக்தான்.

அந்த டாக்சிக் நபர் சொல்லும் வார்த்தைகளைக் கொண்டு, உங்கள் மூளை உங்களின் உள்ளுணர்வு சொல்வதை பொருட்படுத்தாமல் போட்டு புதைக்க முற்படும். இந்தப்போராட்டத்தின் மனரனங்களை இதை எதிர்கொண்டவர்களால் மட்டுமே உணரமுடியும். (இதில் நீங்களும் ஒருவரென்றால், உங்களோடு நானும் நிற்கிறேன்).

சம்மந்தப்பட்ட நபர் வருத்தப்படும் போதோ, அழுவும் போதோ, வலியினால் துடிக்கும்போதோ, உங்களின் மனதில் எந்த ஒரு சலனமும் ஏற்படாது. ஏனென்றால் உங்கள் ஆழ்மனதில் அந்த நபர் டாக்சிக் என்று நன்கு பதிவாகி இருக்கும். உங்கள் அறிவு உங்களையும் ஏமாற்றிக்கொண்டிருக்கும் படி அந்த நபர் இருந்திருப்பார். உங்களின் மீது அத்தகைய ஆளுமையை நிறுவியிருப்பார்.

உங்களின் எல்லா முடிவுகளையும் பாதிப்பார். அதில் அவரது விருப்பம், லாபம், எல்லாமும் இருக்கும். ஆனாலும் அவையெல்லாம் உங்களின் நல்லதிற்காகத்தான் கூறுவதாக தங்க முலாம் பூசுவார்.

உங்களிடம் இருந்து ஏதேனும் ஒன்றை சுரண்டிக் கொண்டிருப்பார். அது உழைப்போ, உடலோ, நேரமோ, பணமோ, இடமோ, எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இவ்வுலகில் எல்லாமும் tradeதான். உங்களின் உடலுக்கே நீங்கள் உணவளித்தால்தான் அது உங்களுக்காக இயங்கும். இப்படிதான் உலகில் எல்லாமும் இயங்குகிறது. ஒன்றைக்கொடுத்தால்தான் எது ஒன்றும் இயங்கும். ஆனால், கிடைக்கும் யாவற்றையும், தேவைக்கு மீறி, அளவுக்கு மீறி, ஒருவரின் பேராசைக்காக சுரண்டுவது மனிதர்களின் குரூர் குணங்களில் ஒன்று. உங்களுடன் இருப்பவர், உங்களிடம் தேவைக்கு அதிகமாக் எதை சுரண்டுகிறார் என்று கவனியுங்கள். சுரண்டினால் டாக்ஸிக். இல்லையென்றால் ஓகே.

கொடுமைப்படுத்துதல், துன்புறுத்துதல், தண்டித்தல், அவமானப்படுத்துதல், குற்றவுணர்வுக்கு ஆளாக்குதல், பாலியல் ரீதியாக தாழ்மையுணர்வை உண்டாக்குதல், அத்துமீறல்கள், காட்டுமிராண்டி போல் கத்துதல், குரலை உயர்த்தி அழுகையை நிறுத்துதல், அசிங்கமாக பேசி கார்னர் செய்தல், மிரட்டுதல், மற்றவரிடமோ யாரிடமோ நடந்ததை சொல்லிவிடுவேன் என மிரட்டுதல், கொலை மிரட்டல், குழந்தையை கொன்றுவிடுவேன் என்று மிரட்டுதல், தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டுதல், தூக்குப்போட்டுக் கொள்வதாக நாடகமாடுதல், இத்யாதி, இத்யாதி, இத்யாதி, வன்கொடுமைகளும் டாக்சிக் நபர்களின் ஆகச்சிறந்த பண்புகள்.

இவற்றில் ஏதேனும் அறிகுறிகள் தெரிந்தால், உங்கள் வாழ்க்கை உங்கள் கையில். சரியான நபரை அனுகி, அப்படி யாரும் இல்லாத பட்சத்தில், காவல் நிலையத்தில் புகாரளித்து, டாக்சிக் டார்ச்சரில் இருந்து முதலில் உங்களை நீங்கள் பாதுகாத்துக்கொள்ளுங்கள். பிறகு இந்த சொர்க்கபூமியில் வாழ்ந்துவிட ஒரு வேலையும், பாதுகாப்பான ஒரு வீடு அல்லது விடுதி, கீழான எண்ணம் கொண்டு நெருங்கும் மனிதர்களையும் எதிர்கொள்ளும் துணிச்சல், இவை போதும். வாழ்வை அமைதியுடன் ரசனையுடன் வாழ்ந்திடலாம்.

மாயத்திரை விலகும்

எல்லோருடனும் பழகுங்கள். எல்லா உறவுகளும் மாயை போன்றது. யாரையும் அவ்வளவு புனிதமாக, பெர்ஃபெக்ட்டாக நினைக்க வேண்டாம். அதற்காக எல்லோரையும் சைக்கோ சேடிஸ்ட் என்றும் என்ன வேண்டாம். எல்லாரிடமும் பரிவுடனும், அன்புடனும் அதே நேரத்தில் ஜாக்கிரதையுடனும் தேவையான இடைவெளி விட்டும் நடந்து கொள்வது என்றென்றைக்கும் நன்மை தரும். யாரும் இங்கு black-உம் இல்லை. யாரும் இங்கு white-உம் இல்லை. இங்கு எல்லோருமே க்ரே கேரக்டர்கள்தான். சந்தர்ப்பவாதிகள், சுயநலவாதிகள், காரியவாதிகள், அன்பர்கள், நண்பர்கள், நல்லவர், கெட்டவர், கயவர்கள் எல்லோருமே ஒன்றுதான். ஒவ்வொரு சூழலிலும் ஒவ்வொரு குணம் வெளிப்படும். நெகட்டிவ் குணங்கள் நம்மிடையே பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பளிக்காமல் இருங்கள்.

Nobody is black; Nobody is white; We all are grey. Not black & white. Its pure GREY.

பல நேரங்களில் பல மனிதர்கள் பலவாறாக நடந்துக்கொள்வர். அவர்களின் நடத்தை நம்மை பாதிக்காத அளவிற்கு நாம்தான் நம்மைப் பார்த்துக்கொள்ள வேண்டும். நம் மன அமைதி, நம் வாழ்க்கைக்கான நிம்மதி, நம் மகிழ்ச்சி எல்லாமும் நமக்குதான் முக்கியம். அவற்றை நம்மைவிடவும் யாரும் பத்திரமாக சீரழிக்காமல் பார்த்துக்கொள்ள மாட்டார்கள். நல்லவர், கெட்டவர், பிடித்தவர், பிடிக்காதவர், பொய் பேசுபவர், சண்டை மூட்டிவிடுபவர், கேடு நினைப்பவர், சேடிஸ்ட், டாக்சிக், என எல்லா வகையான மனிதர்களையும் நாம் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். எல்லாரிடம் வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு நிற்காமல், அவர்களில் கீழான செயல்களுக்கு மதிப்பளிக்காமல், உங்களை அதன் பாத்திப்பில் இருந்து விலக்கிக்கொண்டு, படு உஷாராக வாழ்க்கையை கொண்டு சென்றீர்கள் என்றால், இவ்வினிய வாழ்க்கை உங்கள் வசம்.

பின்னூட்டம் முக்கியம் அன்பர்களே. உரையாடி அறியாமை களைவோம்.

Surya devan V —— 30.04.2023

Love Today❤️, Breakup Tomorrow💔, 2nd Love Day after Tomorrow❤️‍🩹

உங்களில் பலரும் படத்தைப் பார்த்திருப்பீர்கள். நெட்ஃபிலிக்ஸிலும் காணக்கிடைக்கிறது. படம் ஹிட். ப்ரதீப் ரங்கநாதன் செம நடிப்பு. ரஜினி பாராட்டினார். விஜய் ஃபோன் பண்ணினார். எல்லாம் ஓகே. எனக்கும் சிலபல கேள்விகள் உள்ளன. அதற்கு முன் படம் பேசும் அரசியலுக்கு வருவோம்.

நிகிதாவும் மாமாகுட்டியும் பாண்டிச்சேரியில் ரூம் போட்டிருந்தால்? ? ? ? ?” இதுதான் ப்ரதீப்’களால் கற்பனைகூட செய்துபார்க்க முடியாத காட்சி. படம் இங்குதான் விறுவிறுப்புடன் வேகமெடுக்கிறது. சொல்லுங்க மாமாகுட்டி பாடலை போட்டு ப்ரதீப் படும் அவஸ்தைகளை துள்ளலாக காட்சிப்படுத்தியுள்ளார். ஏன் நமக்கும் அந்த ஆர்வம் தொற்றிக்கொள்கிறது? விரிவாகப் பார்ப்போம். இது ஒரு டீட்டெயில்டு கட்டுரை. அதனால் பல தலைப்புகள் உள்ளே வரும். பொறுமையாக வாசியுங்கள். Dots will connect.

மோனோகமி (Monogamy)

ஒருவனுக்கு ஒருத்தி என்று எளிமையாக சொல்லலாம். விரிவாக சொல்வதென்றால், ஒருவர் அவரது வாழ்நாளில் ஒரே ஒரு நபருடன் மட்டும் உடலாலும் மனதாலும் இணைந்து வாழ்வது. பறவைகளில் 95 விழுக்காடு மோனோகமி உறவுமுறையை உடையவை. ஆனால் பாலூட்டிகளில் வெறும் 5 விழுக்காடு மட்டுமே மோனோகமி உறவுமுறையை பின்பற்றுபவை. மனிதர்கள் ஏன் மோனோகமி வகையில் வரமாட்டார்கள்? உலகின் பல கலாச்சாரங்களில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற வரையறை இருந்தாலும் அது சமூகத்திற்காகவும் வாழ்க்கைக்காகவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறதே தவிற பறவைகள் போல இயற்கையாகவே ஒருவனுக்கு ஒருத்தி என்ற உறவுமுறையை நாம் பின்பற்றுவதில்லை. (வாய்ப்பு கிடைக்காத வரை அனைவருமே மோனோகமி எனலாம்.) பறவைகளிலும் socially monogamous என்ற உறவுமுறை இருக்கிறது. அதாவது வாழ்நாள் முழுக்க ஒரு துணையுடன் தான் வாழும். ஆனால் அதற்காக வேறு எந்த துணையையும் இணைசேர அனுமதிக்காது என்றில்லை. வேறு ஒரு பறவையுடன் இணை சேரும் ஆனால் அதுனோடு வாழாது. கூடு கட்டுவது, இறை தேடுவது, முட்டைகளை அடைகாப்பது என எல்லாமும் ஒரு பறவையோடு மட்டும்தான் இருக்கும். serial monogamy என்றொரு உறவுமுறை உள்ளது. ஒரு துணை இறந்துவிட்டாலோ அல்லது பிரிந்து விட்டாலோ அதன் பிறகு இன்னொரு துணையுடன் இணை சேர்வது. ஒரு நேரத்தில் ஒரு துணையுடன் மட்டுமே வாழ்வது.

மனிதர்கள் (மோனோகமி) ஒருதார உறவு கொள்பவர்களா?

“சிய்யான் நாலு பொண்டாட்டி கட்டி ஆண்டு அனுபவிச்சிட்டு போயிருக்காப்ள” என்னும் போது அதில் எந்த வார்த்தையும் கசப்பது இல்லை. “ஆயா நாலு புருசன கட்டி ஆண்டு அனுபவிச்சிட்டு போயிருக்காங்க” என்னும் போது எவ்வளவு எதிர்மறை எண்ணங்கள் மனதில் எழுகின்றன. OCDயே தான். இங்கே ஆண்கள் எதிர்பார்ப்பது, நிறுவ நினைப்பது எல்லாமே female monogamy. அதாவது பெண்கள் தன் வாழ்நாளில் ஒருவனுடன் மட்டுமே இணை சேர வேண்டும். ஆண்கள் எத்தனை பேருடன் வேண்டுமானாலும் இணைசேரலாம். சிறிது தசாப்தத்திற்கு முன்பு வரை இரண்டு பொண்டாட்டி கலாச்சாரம் சாதாரணமாக இருந்தது. அது ஒரு கெத்து போல கட்டி வாழ்ந்தார்கள். இந்த இரண்டு பொண்டாட்டி, மூன்று பொண்டாட்டி கட்டிக்கொள்வது சாதாரணமாக இருந்ததற்கு சமூகக்காரணங்கள் சில உள்ளன. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

ஒரு ஊரில் நூறு குழந்தைகள் பிறக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். அதில் நிச்சயம் பெண் குழந்தைகள்தான் அதிகமாக இருக்கும். ஏனென்றால் உயிரின் தேர்வு அவ்வாறானது. ஒரு உயிர் தனது இனத்தைக் காத்துக்கொள்ள எடுக்கும் தன்னிச்சையான முடிவு அது. உயிர் உருவாகும் போது அது ஆணாக வேண்டுமா அல்லது பெண்ணாக வேண்டுமா என்பது அதுவே எடுத்துக்கொள்ளும் முடிவு. பெரும்பாலும் பெண்ணாகத்தான் முடிவு எடுக்கும். அதற்கான உயிரியல் காரணம் இதோ.

ஒரு ஊரில் பத்து குழந்தைகள் பிறக்கின்றன. அதில் ஐந்து ஆண் குழந்தைகளும் ஐந்து பெண் குழந்தைகளும் பிறக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இனப்பெருக்கம் அந்த ஐந்து பெண் குழந்தைகள் மூலமாக மட்டுமே நிகழும். அந்த ஐந்து பெண் குழந்தைகளும் பருவமடைந்தப் பிறகு, குழந்தையை சுமப்பதற்கு தயராகிவிடுகிறார்கள். வருடத்திற்கு ஒரு குழந்தை வீதம் அந்த ஐந்து பெண்களாலும் பத்து வருடங்களில் ஐம்பது குழந்தைகளைத்தான் பெற்றுதர முடியும். அதுவே ஒன்பது பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் இருந்தால், பருவமடைந்த பிறகு வருடத்திற்கு ஒன்பது குழந்தைகள் வீதம் பத்து வருடங்களில் தொன்னூறு குழந்தைகளை பெற்று தர இயலும். இந்தக் கணக்கில்தான் பிறக்கும் குழந்தைகளில் பெரும்பாலும் பெண் குழந்தைகள் பிறக்கின்றன. (சரி நான் சொல்வதை அப்படியே நம்ப வேண்டாம். கடந்த பத்து அல்லது பதினைந்து வருடங்களில் உங்களுக்குத்தெரிந்த யாருக்கெல்லாம் குழந்தை பிறந்திருந்தது, அதில் எத்தனை ஆண் குழந்தைகள், எத்தனை பெண் குழந்தைகள் என்று விரல் விடுங்கள். நிச்சயமாக பெண் குழந்தைகளே அதிகம் பிறந்து இருப்பார்கள்.)

ஆண் குழந்தைகள் குறைந்த விகிதத்தில் பிறக்கின்றன. அதனால் ஆண் குழந்தைகள் அரிதாகப் பார்க்கப்படுகின்றன. மேலே குறிப்பிட்டது போல ஒரு ஆண் குழந்தைக்கு ஒன்பது பெண் குழந்தை என்றால் அவர்கள் பருவமடைந்தப் பிறகு ஒரு ஆணுக்கு ஒன்பது பொண்டாட்டி என்பதாகத்தான் ஆகும். பெண்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக அவர்களுக்கான டிமாண்ட் குறைந்து அவர்கள் மீது ஒரு சலிப்பான எண்ணமும் ஏற்படும். அதனாலேயே பெண்கள் மீதான வன்முறைகளும் அதிகம் நிகழ்த்தப்பட்டு வந்தது. பாதுகாப்பு என்பதும் அதிகம் தேவைப்படுகிறது.

தற்போது இருப்பது போல கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறியும் தொழில்நுட்பம் அப்போது இல்லை. அதனால், பிறந்த பிறகே ஆணா பெண்ணா என்று தெரியும். பெண்ணாக இருந்தால் கள்ளிப்பால்தான். சில ஆண்டுகளுக்கு முன்னர் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்று கண்டறிந்து பெண்ணாக இருந்தால் கலைத்து வந்தனர். அதனைத் தடுக்கும் நோக்கத்தில் அரசு ஒரு சட்டத்தை இயற்றி கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்று கண்டறிவதை சட்டவிரோதமாக்கியது. நல்ல விசியம்தான். ஆனால் அதே அரசாங்கம், பெண்களுக்கு பாதுகாப்பான சமூகத்தை கட்டமைக்கும் நோக்கத்தில் ஏதேனும் செயல்படுகிறதா என்றால், இல்லை என்றுதான் கூற வேண்டும். சில நல்ல மனிதர்களால் பெண்களுக்கு கல்வி உரிமையும், ஓட்டு உரிமையும் கொண்டுவரப்பட்டது ஆறுதலானது. ஆனால், போதுமான பாதுகாப்பு என்பது இன்னும் ஏற்படவில்லை என்றே சொல்லவேண்டும்.

https://ourworldindata.org/sex-ratio-at-birth

மேலே உள்ள விளக்கப்படத்தில் பார்த்தால் 1950களில், 100 பெண் குழந்தைகளுக்கு 105 ஆண் குழந்தைகள் வீதம் பதிவாகியிருக்கும். அந்தக்காலகட்டத்தில் வீட்டுலேயே பிரசவம் நடந்தது அதிகம். எதன் அடிப்படையில் இந்தத் தகவல்கள் வந்தன என்று தெரியவில்லை. ஆனால், மருத்துவமனையில் தரவுகள் பதிவுசெய்வது 80, 90களில் இருந்துதான் முழுமையாகக் கொண்டுவரப்பட்டது. இன்று மருத்துவமனையில் மட்டுமே 100 விழுக்காடு பிரசவங்கள் நடைபெறுகின்றன. வீட்டில் மருத்துவர் துணையின்றி பிரசவம் பார்ப்பது குற்றமாகவே கருதப்படுகிறது. அதனால் மேலுள்ள விளக்கப்படத்தின் தரவுகளை இந்தியாவின் 90களில் இருந்து எடுத்துக்கொள்வோம். ஆண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் 107ல் இருந்து 110 வரை உயர்ந்திருக்கும். இந்தக்காலகட்டத்தில்தான் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்று கண்டறிந்து பெண்ணாக இருந்தால் கருகலைப்பு செய்வது அதிகரித்தது. அதைத்தொடர்ந்து கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிந்து சொல்வது சட்டவிரோதம் எனக் கொண்டுவரப்பட்டது. பிறகு ஆண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்து தற்போது 107ல் வந்திருக்கிறது. இது இன்னமும் குறையும். நூறு பெண் குழந்தைகளுக்கு நூறுக்கும் குறைவான ஆண் குழந்தைகளே பிறக்கும் நிலை வரும். அப்போது மீண்டும் பெண்களுக்கான டிமேண்ட் குறையும். இதனை அரசு எப்படி எதிர் கொள்ளப்போகிறது என்று தெரிந்துகொள்ள நானும் ஆர்வமாக இருக்கிறேன்.

இதுவரை பெண்களில் நிலை என்ன?

மனிதர்கள் குழுவாக வாழ்ந்து வந்த காலம் தொட்டே பிற இனக்குழுவின் பெண்களை காமத்திற்காக கடத்தி, கொன்று, விற்று, அடிமைப்படுத்தி, கொடுமை படுத்தி, பல இன்னல்களுக்கு ஆளாக்கினர். விளையாடி தீர்த்தனர். பிற இனக்குழு போக, அவரவர் குழுவிலும் தனியாக இருக்கும் பெண்களை ஆண்கள் தனியே விட்டுவைப்பதில்லை. ஆகவே பெண்களுக்கான சமூக பாதுகாப்பிற்காக அவளை இரண்டாம் தாரமாகவாவது ஒரு ஆணுக்கு கட்டி வைத்துவிட்டால் அவள் ஒரு ஆணுடைய உடைமை ஆகிவிடுவாள். வேற்று ஆண்கள் யாரும் அவளை சீண்ட மாட்டார்கள் என்ற நிலைக்கு வந்தனர். அவளை கட்டிக்கொண்டவன் அவளுக்கு வாழ்க்கை கொடுத்தது போல் உணர்வான். உணர்ந்தான். அவளைத் தன் உடமைப் போல நடத்தினான். உடமை என்ன உடமை, அடிமைதான். அதன் நீட்சியே பெண்களை குறிக்கும் போது அஃறிணையில் சாடுவது அம்மா வந்திச்சி, அக்கா சொன்னிச்சி, என்பதெல்லாம் இன்றும் தொடர்கிறது. இந்த பெண்ணடிமைத்தனத்தை நான் ஆதரிக்கவில்லை. ஆனால் அது எப்படி அமைந்தது என்று விளக்குகிறேன் அவ்வளவுதான். பெண்களுக்கு சம்பாதித்து போடுவதாலும் சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாலுமே அவளை தன் அடிமையாகப்பார்த்தான். அவளை பிற ஆண்கள் தீண்டாதவாறு பார்த்துக்கொள்வான். ஒரு நிலத்தை, பொருளை பாதுகாப்பது போல தன் மனைவிகளையும் பாதுகாத்து வருவான். இந்நிலையில் தன் மனைவி இன்னொருவனுடன் தொடர்பில் இருக்கிறாள் என்பதை எந்தக்கணவனாலும் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது. தான் பராமரிக்கும் ஒரு பொருளை இன்னொருவன் அனுபவிப்பதை யாரும் விரும்பமாட்டார்கள் அல்லவா? சமூகத்தில் கள்ளத்தொடர்பு என்பது எந்த அளவிற்கு பரவிக்கிடக்கிறது என்பதை தினசரி நாளிதழ் வாசிப்பவர்களால் புரிந்து கொள்ள முடியும். தினசரி ஒரு செய்தியாவது கள்ளத்தொடர்பு சம்மந்தப்பட்ட குற்றங்களில் நடந்திருக்கும். கள்ளத்தொடர்பு ஏற்படுவதற்கு ஏகப்பட்ட காரணங்கள் இருக்கலாம், ஆனால் அது கொலையிலோ, தற்கொலையிலோ, கொலை முயற்சியிலோ, தற்கொலை முயற்சியிலோ சென்று முடிவதன் காரணம் பெண்களின் மீது கட்டமைக்கப்பட்டிருக்கும் ‘பத்னி’ என்ற கூற்றுதான்.

வேற்று ஆள் தன்னுடைய மனைவியை புணர்ந்துவிட்டால் தன் மனைவிமீது வரும் அருவருப்பு, மாற்றான் மனைவியை தான் புணரும்போது தன்மீதோ அந்தப் பெண்மீதோ (புணரும் வரை) வருவதில்லை.

இது போக தன் மனைவியுடன் உறவுகொண்டு அதன்வழி வரும் குழந்தையையும் ஒரு பிண்டமாகவே பார்த்து வந்தான். பத்து பதினைந்து குழந்தைகள் இருக்கும்போது, அனைவரின் மீதும் அளவுகடந்த பாசம் வருவதில்லை. அந்த வாரிசுகளையும் ஒரு சுமையாகவே எண்ணுவர். இப்படி இருக்கும்போது அந்தப்பிள்ளைகளில் யாரேனும் தன்னுடைய வாரிசு இல்லை என்பது தெரியவந்தால்? யாருடைய வாரிசுக்கு நான் உழைத்துக்கொட்டுவது என்ற கோபமும் வரும்.

இப்படி இருக்க, பெண்களுக்கு மாப்பிளை கிடைப்பது அரிதாகி கிடைத்த மாப்பிளையின் கையில் பெண் பிள்ளைகளை பிடித்துக்கொடுப்பதற்கு பெண்ணுடன் சேர்த்து பணம், தங்கம், பொருள், காடு, மாடு, சொத்து, எல்லாத்தையும் கொடுக்க வேண்டியிருந்தது. ஆண் பிள்ளைகளின் மீதான மோகத்திற்கு இதுவும் ஒரு காரணம். வரதட்சனையாக ஒரு புடி புடித்துவிடலாம். நான்கு பெண் பிள்ளைகளாக இருந்தால் அவர்களுக்கு நகை போட்டு கட்டிக்கொடுப்பதே வாழ்நாள் சாதனையாகும்.

பெண் குழந்தைகளை வளர்த்து கட்டிக்கொடுப்பது சவாலான அந்தக் காலத்தில் ஐந்து பெண்குழந்தைகள் பிறந்த வீட்டில் ஆறாவதும் ஒரு பெண் குழந்தை பிறந்தால், அதனை கள்ளிப்பால் ஊற்றிக்கொன்று விடுவர். இதற்கு பிஜிஎம் போட்டு ஹாரிஃபை பண்ண வேண்டாம். நானும் க்ளோரிஃபை பண்ணப்போவதில்லை. வத வதவென பிள்ளைகளை பெற்று தள்ளிக்கொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு குழந்தை பிறத்தல் என்பது மிக சாதாரண விசயமாக இருந்தது. பத்துப் பதினைந்து பிள்ளைகளில் ஒன்று இரண்டு தவறி விடுவதே சாதாரணமாக நிகழும் ஒன்றுதான். ஆதலால், பெண் சிசுக் கொலை என்பது தேவைப்பட்ட ஒன்றாக இருந்தது. குழந்தையை கொல்வது பாவம் என்று தோன்றாதா? தோன்றாது! பிழைக்க வழியில்லாத இந்த உலகில் இன்னொரு உயிரையும் தன் விருப்பத்திற்கு கொண்டுவந்து கொடுமைகளுக்கு ஆளாக்குவதற்கு பதில் அதை இறக்கச் செய்வதே மேல் என்றும், தனக்கு மேலும் மேலும் சுமைகள் வேண்டாம் என்றும் கள்ளிப்பால் ஊற்றிக் கொன்றுவிடுவார்கள். ஆண் குழந்தை பிறந்தால் எந்தக் கவலையும் இல்லை. அதுவே இருப்பதை உண்டு வளர்ந்து, கிடைக்கும் வேலைய செய்து பிழைத்துக்கொள்ளும். இதனால்தான் எல்லாருக்கும் ஆண் பிள்ளைதான் வேண்டும் என்று ஆசை. சற்று கவலையின்றி இருக்கலாம்.

சரி இவையெல்லாம் அந்தக்காலம். தற்போது? பெண்கள் அவர்களை அவர்களே பார்த்துக்கொள்கிறார்கள். தன் பெற்றோர்களையும் சேர்த்து பார்த்துக்கொள்கிறார்கள். சிங்கில் மதர் என்று தானே பிள்ளையை வளர்க்கிறார்கள். பல நிறுவனங்களை உருவாக்கி நடத்துகிறார்கள். நாடாளுகிறார்கள். சிகரம் தொட்டு நிற்கிறார்கள். ஆனாலும், இன்னமும் சமூக பாதுகாப்பிற்காக ஒரு ஆணின் நிழலில் நிற்க வேண்டிய கதிதான் தொடர்கிறது. ஏனென்றால் எவனும் பட்டா போடவில்லை என்றால் தற்காலிகமாக நாம் கொட்டா போட்டுக்கொள்ளலாம் என்ற துடிப்பு ஒவ்வொரு ஆணிடமும் இருக்கிறது. யாருக்கும் சொந்தமில்லாத ஒரு பொருளை சிறிதுகாலம் தான் அனுபவித்துக்கொள்ளலாம் என்றுதான் எண்ணுவார்கள். காலத்திற்கும் சொந்தமாக்கிக் கொள்ள விரும்பமாட்டாரகள். இதெல்லாம் பெண்களுக்கும் ஆரம்பத்தில் புரியாது. சற்று லேட்டாகத்தான் புரியும்.

வரலாற்றில் ஆண்கள் எப்போதும் ஒரு தார உறவுமுறையில் வாழ்ந்ததில்லை. ஆனால், பெண்களை ஒரு தார உறவு முறையில் நிற்கவைக்க அனைத்து விதிகளையும் வகுத்து வந்துள்ளான். பத்தினி, கன்னி, சுமங்கலி, விதவை/கைம்பெண், தேவிடியா, ஐடம், மேட்டர், கேஸு, என்று எல்லா வார்த்தைகளும் ஒரு பெண்ணை பல ஆண்களுடன் பழகுவதைத் தடுக்கத்தான். ஆண்களுக்கு பெண்களின் மீது அக்கறை எல்லாம் இல்லை. இத்தனை விதிகளைப்போட்டு பாதுகாக்க. ஒரு ஆண் இன்னொரு ஆணிடமிருந்து ஒரு பெண்ணைக் காப்பாற்ற நினைப்பான். அந்த ஆண் பிற ஆண்களிடம் இருந்து அதே பெண்ணைக் காப்பாற்ற நினைப்பான். ஆக மொத்தம் திருடனும் கணவனும் ஆண்கள்தான். பலியாடு மட்டுமே பெண்கள்.

சமகாலக காதலி(யி)ன் கதி என்ன?

சமகாலத்தில் காதல், கல்யாணம், ரிலேசன்ஷிப் எல்லாம் எப்படி என்பது உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்லை. ஆனால், அதன் சிக்கல்களை புரிந்து கொள்வதற்கு மேலே குறிப்பிட்ட விசியங்களை இவ்வளவு ரீவைண்ட் செய்ய வேண்டியுள்ளது. பையனோ பொண்ணோ நிறைய நபர்களுடன் பேசிப்பழக வேண்டும். கேரக்டர்கள் பலவிதம் உண்டு. அவர்களை படிப்பதன் மூலமாகவே வாழ்க்கையை கற்றுக்கொள்ள முடியும். ஒரு கேவலமான பிறவியையாவது சந்தித்து அதனுடன் ஓராண்டாவது வாழ்ந்துவிடுவீர்கள். அதன்பிறகு வாழ்க்கையில் நீங்கள் ஒரு கேவலமான செயலையும் சுயநினைவுடன் செய்ய மாட்டீர்கள்.

சரி பழகும் அத்தனை பேரையும் லவ்வர் என்று சொல்லிவிடலாமா? பெண்களுக்கு அப்படி சொல்ல விருப்பமில்லை என்றாலும், ஆண்களின் கொக்கியே ‘ஐ லவ் யு சொல்லு’, ‘லவ் பண்றன்னு சொல்லு’, ‘ஓகே சொல்லு’ என்பதாகத்தான் இருக்கிறது. அதாவது ஒருவனை முழுதாக தெரிந்துகொள்ளும் முன்பே கமிட்மெண்ட்டை கொடுக்க சொல்லி அடம்பிடிப்பது. “ஓய் செல்ஃபி எனக்கு எப்போ ஓகே சொல்ல போற?” என்று பின்னாடியே சுத்துவார்கள். எஸ்.கே ரசிகைகளும் ‘அவன் என்னை தொரத்தி தொரத்தி லவ் பண்ணினான் அதான் ஓகே சொன்னேன்’ என்று தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொள்ளவார்கள். உண்மையில் பையனோ பொண்ணோ ஒருவர் “சுத்த லூசு, மெண்டல், சைக்கோ” என என்று தெரிகிறதோ, அன்று முதல் அவனோ அவளோ எக்ஸ் (Ex) ஆகிவிடுகிறார்கள். பிறகு மீண்டும் ஜோடி தேடும் காட்சிகள் தொடரும். இது ஒரு லூப் போல போயிக் கொண்டே இருக்கும்.

சினிமாவில் பையனும் பொண்ணும் காதலிக்காமல், காதல், லவ் என்ற வார்த்தை இல்லாமல் பழகுவது போன்ற காட்சிகளோ, பாடல்களோ ரெஃபரென்ஸாகக்கூட இல்லை என்றே எண்ணுகிறேன். ( ஆட்டோகிராஃப் படத்தில் சேரனும் ஸ்னேகாவும் நண்பர்களாக இருப்பார்கள். குலு குலு படத்தின் அன்பரே பாடல் மட்டுமே ஞாபகத்திற்கு வருகிறது). அதனாலே ஒரு பெண் தன்னிடம் பேசினாலே லவ் என்று கற்பனை கட்டிக்கொள்கிறார்கள். காதலின்றி ஆணும் பெண்ணும் பழகுவது எவ்வளவு அழகானது என்று யார் இவர்களுக்கு சொல்லித்தருவது?

பள்ளி, கல்லூரி, அலுவலகம், தெரு, ஊர், பஸ், ட்ரெயின், மால், பேஸ்புக், வாட்சப், இன்ஸ்டா, ட்விட்டர், ஸ்னாப்ச்சேட், டெலிக்ராம், டிண்டர், அன்பே, டன் டன், இத்யாதி இத்யாதி இடங்களிலும் தளங்களிலும் ஆண்கள் பெண்களைத் துரத்திக்கொண்டுதான் இருப்பார்கள். பெண்கள் யாரிடமும் சிக்காமல் தப்பி வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பலகீனமான இடம், காலம், சூழல், வார்த்தை, பாடல், பெயர் என்று எப்படியும் இருக்கும் அல்லவா? அதில் சிக்கிவிடுவார்கள். ஆண்களும் லேசுபட்ட ஜீவன்கள் இல்லை. பெரும்பாலும் பெண்கள் எளிதில் சிக்கிக் கொள்வர்.

ஒரு பையனை பிடிக்கும் என்பதற்கும் அவனோடு வாழவேண்டும் என்பதற்குமான இடைவெளி பெண்களின் பார்வையில் மைல் தூரமிருக்கும். ஆண்களின் பார்வையில் அது மயிர் தூரத்தில்கூட இல்லை. பிடித்துவிட்டால் வேறென்ன? வாழந்துவிட வேண்டியதுதானே என்பதாகத்தான் இருக்கிறது.

வாழ்நாள் முழுவதும் சகித்துக்கொண்டு வாழும் அளவிற்கு தான் என்ன தகுதியுடன் வாழ்கிறோம் என்பதையெல்லாம் சிறிதும் யோசிக்க மாட்டார்கள். படங்களில் வரும் காதல் காட்சிகளை மனதில் ஊறப்போட்டு அதன் பாதிப்பில் காதலித்தவர்கள்தான் இங்கு ஏறாளம். உண்மையில் ஒரு நபரின் மீது நல்ல எண்ணம் தோன்றி, அவரை வாழ்நாளில் தவறவிடக்கூடாது என்று உணர்ந்து, அவருக்கும் தன்மீது அதே எண்ணம் இருக்கிறதா என்பதை உறுதிபடுத்தி, பிறகு காதலிப்பதோ, கல்யாணம் செய்து கொள்வதோ அரிதிலும் அரிதாகவே நடக்கிறது. சினிமாத்தனம் கலக்காத காதல் எங்கேனும் உண்டா என்ன?

Chatbox📱

மெசேஜ் செய்யும் போது ஒரு தைரியம் வரும். ரியால்டியில் அது வராது. மெசேஜ் செய்யும் போது ஒரு ஸ்பரிசம் வரும். நேரில் அது வராது. (நேரில் வேறு விதமான ஸ்பரிசம் வரும்.) மெசேஜ் செய்யும் போது ஒரு கோபம் வரும். நேரில் அது வராது. (நேரில் வேறு விதமான கோபம் வரும்.) ஏனென்றால் ச்சேட்டிங்கில் நாம் பேசுவது, பதில் வருவது எல்லாம் நம் மூளைக்குள் கற்பனையாக மறு உருவாக்கம் செய்யப்படுவது. அதனை நம் மூளை மிகைப்படுத்திக் கொண்டே வரும். communication என்பது முகபாவனை, வார்த்தையின் உச்சரிப்பு, வார்த்தை பயன்பாடு என எல்லாமும் சேர்ந்தது. இதில் வெறும் வார்த்தையை மட்டும் வைத்துக்கொண்டு நம் மூளை அதற்கு கற்பனையாக ஒரு முகபாவனையையும், உச்சரிப்பு தொனியையும் உருவாக்கும் பொழுது மறுமுனையில் இருந்து பேசுபவர் சொல்ல வருவதில் 50% விழுக்காடு நாம் தவறாகத்தான் உள்வாங்கிக்கொள்வோம். உதாரணமாக நீங்கள் சமீபத்தில் சேட்டிங்க் செய்தபோது, “I mean…” என்று நீங்களோ மற்றவரோ முன்பு சொன்னதையே நிச்சயம் விளக்கிக்கூற வேண்டிய சூழல் வந்திருக்கும். நேரில் பேசும்போது ஏற்படும் communication gaps மிகக்குறைவாக இருக்கும். சேட்டிங்கில் குழப்பம் இல்லாமல் இருக்காது. ரிலேஷன்சிப்பும் இப்படித்தான். மிக எளிதாக தவறாக உள்வாங்கிக்கொள்ளப்படும். ‘I feel low today 😞’ என்று ஒருவர் மெசேஜ் செய்தால் உடனே நாம் ஒரு 🥸 motivational speaker 🫵🏻 ஆகி சொற்பொழிவை நிகழ்த்த ஆரம்பித்துவிடுவோம். எதிரில் இருப்பவர் ‘hey tk it ez 🤪. Im alryt . Im jst not feel g8 2day. But thats 5n. Chill 🙃’ என்று சொல்வதற்குள் நாம் நிறைய பேசிருப்போம். இதுதான் சேட்பாக்ஸின் மிகப்பெரிய பிரச்சனை. ஒரு ஸ்மைலியும் ஓரிரு வார்த்தையும் நாம் நினைப்பதை அவ்வாறே மறுபக்கத்தில் இருப்பவரிடம் கொண்டு சேர்க்காது. மாறாக அவர் புரிந்துகொள்ளும்போது அது நாம் சொல்லிய விசியத்தின் அளவை, தன்மையை, அழுத்தத்தை கூட்டியோ குறைத்தோதான் வெளிப்படுத்தும்.

இது போக ஒருவரிடம் மெசேஜ்ஜில் பேசுவதற்கும் நேரில் பேசுவதற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் வரும். மெசேஜ்ஜில் பேசுவதை வைத்து ஒருவரின் குணங்களை எடைப்போடுவது, நல்லவர் வல்லவர் என நம்புவது நன்றல்லது. அப்படி பேசுபவர்களை மெசேஜ்ஜுடன் வைத்துக்கொள்வதே நன்று. நேரில் சந்திப்பதோ, வீட்டிற்கு அழைப்பதோ, பணம் அனுப்புவதோ, பாஸ்வேர்ட் கொடுப்பதோ, எல்லாமும் ரிஸ்க் நிறைந்ததுதான்.

மெளனம்

சமூக வலைதளங்களில் நண்பராகும் பலரும் சில காலம் நெருக்கமாக பேசிக்கொள்வர். யாரு என்ன என்பது போன்ற விசியங்களை பரிமாரிக்கொள்வர். பிறகு அந்த பேச்சுக்கள் அப்படியே நீர்த்துப்போகும். இது மிக மிக சாதாரணமான ஒன்று. மேலும் ஆன்லைனில் இருக்கும் நபர் நம்முடன் பேசவில்லை என்றால் அதற்கு ஆயிரம் இல்லை பத்தாயிரம் காரணம் இருக்கலாம். அதில் முதல் காரணம், நம்முடன் பேசுவது மட்டுமே அவருக்கு வேலை இல்லை என்பதுதான். நம்மைத் தவிற மற்ற தலைவலிகளும் அவருக்கு இருக்கக்கூடும் அல்லவா? இந்த யதார்த்தத்தைக்கூடப் புரிந்து கொள்ள நம் மூளை மறுக்கும். காரணம் அது கற்பனையில் ஒருவரை உருவாக்கியுள்ளது. நம் மூளை அவருக்கு ஒரு சராசரி மனிதர் செய்யும் வேலைகளை கற்பனைகூட செய்து பார்க்காது. சமீபத்தில் ஒரு வாக்கியம் படித்தேன். ‘People are not rude. They are just busy’. எவ்வளவு உண்மை இது. எதையும் சிந்திக்காமல் “reply me, reply pannu, saaptiya, enna panra, yen pesa matra, ennaachi, en mela kovama?, naan ethum thappa pesitana, antha msg nan pannala, awlothana?” என்று ஐம்பது நூறு மெசேஜ்களை அனுப்பித் தள்ளுவான். சனியன் இம்சகட்றானே என்று ப்ளாக் செய்தால், இன்னொரு ஐ.டி. ஓபன் பண்ணி மாறு வேடத்தில் வந்து உயிரெடுப்பான். மாப்ளைக்கு அவ்வளவு வெறி.

பெண்கள் பத்தினியாக இருக்க வேண்டுமா? வேண்டாமா?

இந்த விஷயத்தில் ஆண்களில் இரண்டு பிரிவினர் என் கண்களுக்குப் புலப்படுகிறார்கள்.

முதல் வகையினர், போலி புரட்சியாளர்கள். ‘பெண்கள் யாருடன் வேண்டுமனாலும் உறவு வைத்துக்கொள்ளட்டும்’, ‘அவள் உடல் அவளது சுதந்திரம்’, ‘உடலைப் பகிர்வதும் விற்பதும் அவளது உரிமை’, என்றெல்லாம் பெண்களின் சுதந்திரத்தை அவளது உடலைக் குறித்தே முன்வைப்பார்கள். இவர்கள் யாரும் பெண்களுக்கு காவலர்கள் இல்லை. காசு கொடுத்தால் பெண்கள் கிடைப்பார்கள் என்ற சூழல் வரும் போது, பெண்களின் உடலை காசு கொடுத்து அனுபவித்துக்கொள்ளலாம் என்ற பேரன்பு கொண்டவர்கள். பாவம் காசு சம்பாதிக்க பெண்கள் ஏன் படித்து வேலைக்குச் சென்று உழைக்க வேண்டும்? உடலை விற்றாலே காசு வரும் என்றால் இவர்களின் வாழ்க்கை சற்று சுலபம்தானே. பெண்கள் ‘தான் ஒருவனுடந்தான் வாழ்வேன், அந்த ஒருவனுடன் தான் புணர்வேன்’ என்பது இவ்வகை ஆண்களுக்கு மிகவும் கசக்கும். எனவே அதை பழமைவாதம் என்றும், பெண்ணடிமைத்தனம் என்றும் பெரியாருக்கே லெக்சர் எடுப்பதுபோல பேசுவார்கள். பெண்களின் மோனோகமியை எதிர்ப்பவர்கள். புரட்சியாளர்கள் போல் வேடமிடும் இவ்வகை ஆண்களுக்கு பெண்களின் மீது அளவற்ற அன்பொன்றும் இல்லை. அடக்கமுடியாத ஆசைதான் அவர்களை அப்படி பேச வைக்கிறது. இந்தக்கசாப்புக் கடைக்காரர்களிடமும் ஆடுகள் தானாக வந்து சிக்காமலில்லை.

இரண்டாம் வகையினர், கலாச்சாரக் காவலர்கள். பெண்களை பத்தினியாகத்தான் இருக்கவேண்டும் என்று நிர்பந்திப்பவர்கள். அதன் காரணமாக பெண்களை யாருடனும் பழக அனுமதிக்க மாட்டார்கள். வெளியில் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். பெண்களின் வாழ்க்கையில் கல்யாணமும் குழந்தையை வளர்ப்பதும் மட்டுமே முக்கியம் என்ற எண்ணத்தில் ஊறியவர்கள். சமூகத்திலும் இதனையே முன் வைப்பார்கள். கலாச்சாரம், பண்பாடு, மதநெறிகள், குடும்ப மானம், கெளரவம், வம்ச வீரம், என சகலத்தையும் துணைக்கு வைத்துக்கொள்வார்கள். பெண்களின் நலனில் அக்கரை காட்டுவதாக சொல்லிக்கொண்டு அவர்களின் சிறகுகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கி பெண்களுக்கென்று சொல்லி ஒரு மிருதுவான மெத்தை செய்து அதில் இவர்களும் படுத்து அதே பெண்களை புணர்வார்கள். கன்னித்தன்மையின் மீது ஆண்கள் அடுக்கும் இந்த எண்ணற்ற கூற்றுகள் யாவும் ஆண்களுக்கு பொருந்தாது இருப்பதுதான் ஆச்சர்யம். இவர்களின் முழு நோக்கமும், ஒரு பெண் திருமணம் வரை கன்னித்தன்மையோடும் திருமணத்திற்குப் பிறகு பத்தினியாகவும் இருந்துவிட்டால் போதும், ‘அவள் படித்து என்ன சாதிக்கப்போகிறாள்?’, ‘வேலைக்கு சென்று யாரைக்காப்பாற்றப் போகிறாள்?’, என்ற கீழ்நிலையிலே சிந்தித்துக்கொண்டு இருப்பார்கள். பெண்களை ஆட்டிவைக்கவும் இந்தக்கூற்றுகள் வசதியாக இருக்கின்றன. மற்றவருடன் பழகுவதையே விரும்பாத பொசசிவ் பேர்வழிகளுடன் காலந்தள்ளுவது சற்று கடினமான விசயம்தான். ஆனால், மற்றவருடன் பேசுவதை பழகுவதை நம்பி அனுமதிக்கும் அளவிற்கு யாரும் யோக்கியஸ்தன் இல்லை என்பது பெண்களுக்கும் நன்கு தெரியும். (அத்துமீறுவது ஆண்கள் மட்டும்தான் என்ற முடிவிற்கு நான் வரவில்லை. அதுதான் உண்மை. பெரும்பாலான தருணங்களில் ஆண்கள்தான் அத்துமீறுகிறார்கள். பெண்களும் ஆங்காங்கே ஆண்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக விதவிதமாக கள்ளத்தொடர்பில் தூள் கிளப்பி வருகிறார்கள்.)

இருவகையினருமே பெண்கள் ஏன் கன்னித்தன்மையுடன் இருக்கவேண்டும் என்கிற அடிப்படையை புரிந்துக்கொள்ளாதவர்கள்.

ஒன்று சமூகக்காரணம். மனிதன் ஒரு சமூக விலங்கு. அவன் தனியே வாழ்பவன் அல்ல. குடும்பமாகவும் சமூகமாகவும் உறவாடுவதிலேயே மனதில் அமைதியைக் காண்பவன். பெண்ணுக்கும் அதேதான். பிற மனிதர்களிடம் பேசி உறவாடுவதிலே தன்னை அறிந்துக்கொள்ளக்கூடியவர்கள். ஒரு ஆணும் பெண்ணும் முறையே ஒருவருக்கு ஒருவர் உண்மையாக குடும்பமாக வாழவில்லை என்றால் அவர்களது குடும்பத்திற்கு சமூகத்தில் அங்கீகாரமும் மரியாதையும் கிடைக்காது. இதில் பாதிக்கப்படுவது கணவன் மனைவி மட்டுமல்ல, அவர்களது வழிவந்த குழந்தைகளும்தான். சுற்றம் யாவும் கீழாக நடத்தும் சூழ்நிலையில் வளரும் ஒரு குழந்தையின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டாவது ஆணும் பெண்ணும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற உறவுமுறையை பின்பற்ற வேண்டும். (சைக்கோ, டாக்ஸிக், சந்தேகப்பேர்வழி, துணையுடன் வாழவேண்டும் என்றில்லை. நல்ல குடும்ப உறவில் இருக்கும் போது மனசஞ்சலங்களை தவிர்க்கவேண்டும் என்கிறேன்.)

மற்றொன்று உயிரியல் காரணம். இரு உயிர் சேர்ந்து மூன்றாவதாக ஒரு உயிரை உருவாக்குவதே உடலுறவு. இன்னொரு உயிரை இப்பூமிக்கு கொண்டுவருபவர்கள், அவ்வுயிரை தன்னால் இயன்றவரை துயரத்தில் இருந்தும் ஆபத்துகளில் இருந்தும் காப்பாற்றி ஆளாக்கிவிட வேண்டும். ஒரு பெண் பல ஆண்களுடன் உறவில் இருந்துவந்தால் அவளால் ஒரு அழகான, லட்சனமான குழந்தையை பெற்றெடுக்க இயலாது. உடலுறவு முதல் கருவுற்று பிரசவித்து தாய்பாலூட்டி வளர்க்கும் வரை ஒரு பெண் எந்த மனநிலையில் இருக்கிறாளோ அதுதான் குழந்தையின் குணமாக மாறும். உதாரணத்திற்கு ஒரு பெண் தான் உடலுறவு கொண்டது முதல் பேறு காலம் வரை கொடுமைகளுக்கு ஆளாகாமல் இயல்பாகவும் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் உணர்ந்து வருகிறாள் என்றால் அவளது குழந்தை அழகாகவும் லட்சனமாகவும் புத்திக்கூர்மையுடனும் பிறக்கும். இதுவே அவளை பல கொடுமைகளுக்கு ஆளாக்கி, துன்புறுத்தி, அல்லது அவளே பெரும் குழப்பத்திலும் மனம் போன போக்கிலும் வாழ்கிறாள், குழந்தையை ஒரு சுமையாக எண்ணுகிறாள் என்றால் அந்தக்குழந்தை அவலட்சனமாகவும், விகாரமாகவும், குறைபாடுகளுடனும் பிறக்கும். ஒரு உயிர் உருவாகும் போது அதை சுமக்கும் உயிரும் உடலும் மனதும் இன்புற்றிருக்க வேண்டும். குழப்பத்திலும், விரக்தியிலும், துயரத்திலும் பிறத்தல் நன்றன்று.

அப்படியானால், பெண்கள் பாதுகாப்பு முறைகளை பயன்படுத்தி யாருடன் வேண்டுமானாலும் புணர்ந்துக்கொண்டு, திருமணத்திற்குப் பிறகு ஒரு ஆணுடன் மட்டும் வாழ்ந்து நல்லபடியாக குழந்தைய பெற்றுக்கொண்டு. பிறகு மீண்டும் பாதுகாப்பு முறைகளை பயன்படுத்தி யாருடன் வேண்டுமானாலும் உறவு கொள்ளலாமா என்று கேட்கலாம். அதுதான் இல்லை. ஒரு குடும்பத்தில் இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் இருந்தால் அதில் அனைவருமே புத்திசாலியாக இருப்பது அரிதே. முதல் குழந்தை அறிவாளியாக இருக்கும், இரண்டாவது குழந்தை சற்று மந்தமாக இருக்கும். அல்லது முதல் குழந்தை மந்தமாக இருக்கும், இரண்டாவது குழந்தை புத்திசாலியாக இருக்கும். இதற்குக் காரணம் பெற்றோர்களின் மனநிலையே. முதல் கர்ப்பம் திருமணம் முடிந்த முதல் வருடமே ஏற்படும்போது, பெண்ணுக்கு கணவனின் குடும்பம், இல்லற வாழ்க்கை எல்லாம் புதிதாக இருக்கும். கொடுமைகார ஆட்கள் இல்லை என்றால், கர்பகாலம் இனிமையாக அமையும், குழந்தையும் ஆரோக்யமாகவும் புத்திக்கூர்மையுடனும் பிறக்கும். பிறகு கனவன் மனைவி சண்டைகள் ஆரம்பித்து முத்தி, வாழ்க்கையை வெறுத்து, குழந்தையை வளர்க்கும் பாரம் தெரிந்தப்பிறகு ஒரு கர்ப்பம் நிகழும்பொழுது, முதல் குழந்தைக்கு இருந்த அதே ஆர்வமும் குதூகலமும் இரண்டாவது குழந்தைக்கு இருக்காது. எனவே இரண்டாவது குழந்தை சற்று புத்திக்கூர்மை குறைவாகப் பிறக்கும். பலதார உறவுகளில் எந்த மனக்குழப்பமும் இருக்காது என்று யார் உத்தரவாதம் தரமுடியும்? இந்த வாதங்கள் ஆண் பெண் இருவருக்கும் பொருந்தும். நம் மன ஓட்டங்கள் நாளுக்கு நாள் மாறும், அந்தப்பொழுதில் ஒரு குழந்தை உருவாகும் போது அது அந்த குணங்களுடனே பிறக்கும்.

கன்னித்தன்மையுடனும் பத்தினியாகவும் இருப்பது ஒரு பொறுப்பு. அதன் அர்த்தமறிந்து பின்விளைவுகளைப் புரிந்து அந்தப்பொறுப்புகளை ஏற்க வேண்டும். ஆண்கள் வரைவதற்காகவே எந்தக்கோட்டையும் தாண்டாமல் இருக்கவேண்டிய அவசியமில்லை. வரைமுறைகளின் அர்த்தமறிந்து அதனை ஏற்றுக்கொண்டால் போதுமானது.

ப்ரதீப் காட்சிப்படுத்தும் (நிகிதா) பெண்கள்

நிகிதா ரெவியை தம்பி என்றுதான் அறிமுகப்படுத்தினாள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அவளே பின் அதை மாற்றிப்பேசுவதாக காட்சி அமைத்திருக்கிறார் திரு.உத்தமன் ப்ரதீப். நம் மூளை நாம் பேசுவதை அப்படியே ஞாபகம் வைத்துக்கொள்வதில்லை. சிலசில வார்த்தைகள் எண்கள் இடங்கள் அளவுகளை நம் மூளை தவறாகத்தான் பதிவேற்றிக்கொள்ளும். அது நாம் உச்சரித்த வார்த்தைகளாக இருக்கலாம் அல்லது பிறர் உச்சரித்த வார்த்தைகளாக இருக்கலாம். ஆனால், இதை நிகிதாவின் கேரக்டரை டேமேஜ் செய்வதாக, அவள் பச்சையாக பொய் சொல்கிறாள் என்று காட்சி அமைத்துள்ளார் உத்தமன் ப்ரதீப்.

சொல்லுங்க மாமாகுட்டிக்கு துள்ளலாக பாடல் அமைத்த திரு.உத்தமன் ப்ரதீப்களால், ட்ரைபல் ஃபோட்டோஸ் கேட்டு அலைந்ததற்கு ஒரு பாட்டுகூட போடமுடியாமல் போனதுதான் ஆச்சர்யமே. நிகிதாவின் இன்ஸ்டாகிராமில் இருக்கும் மெசேஜ்களை படிக்கும்போது வரும் விஷுவலில் பல ஆண்களை காட்டி இருப்பார் உத்தமன் ப்ரதீப். சாப்டியா, சாப்டியா, சாப்டியா என என்னேரமும் அக்கரைக்கொள்ளும் ஆண்கள் முதல், கெளதம் வாசுதேவ் மேனன் பானியில் வரும் போலி இன்டெலக்சுவல் உமனைசர் வரை மிக நேர்த்தியாக காட்சி அமைத்த உத்தமன் ப்ரதீப்பும் அவர்களில் ஒருவர்தான். பலருக்கும் கொக்கி போட்டு வைத்திருப்பவர். மற்ற ஆண்கள் நிகிதாவிடம் நெருங்க முயற்சிப்பது க்ரின்ஜ் என்றால் இவர் மற்ற பெண்களிடம் பழக முயற்சிப்பதற்கு பெயர் என்ன?

நிகிதாவின் ஆபாச வீடியோ வந்தப்பிறகு யாரும் அவளை நம்ப மாட்டர்கள். உத்தமன் ப்ரதீப் மட்டும் அவளை நம்புவான். எப்படி? பாண்டிச்சேரி போய்விட்டு வந்ததையே சந்தேகப்பட்டவன், இப்போது எப்படி வீடியோவைக்கண்டப் பிறகும் நிகிதாவை நம்புகிறான்? மாமரத்தைக் கண்டதாலா? ராதிகா கண்திறந்துவிட்டதாலா? உத்தமன் ப்ரதீப் போன்ற ஆவரேஜ் ஆண்களுக்கு நிகிதாவே அதிகம். அதனால் இவன் பெருந்தன்மையாக நிகிதாவை ஏற்றுக்கொள்ளும்படியான காட்சியமைக்க வேண்டுமானால் அவளை அசிங்கமாகக் காட்ட வேண்டும். அங்குதான் நிகிதாவின் கற்பை துணைக்கு வைத்துக்கொள்கிறார் புத்திசாலி உத்தமன் ப்ரதீப்.

ஆண்களிடம் இருக்கும் காஜி மனப்பான்மையை நார்மலைஸ் செய்வதே தவறு, அதிலும் இறுதிகட்ட காட்சியில் நிகிதாவை அவளது அப்பாவே நம்பாதது போலவும், ஆனால் உண்மையான காதலால் உத்தமன் ப்ரதீப் அவர்கள் நிகிதாவை நம்புவதாக காட்சி அமைத்திருக்கிறார். ஏன் உத்தமன் ப்ரதீப் அவர்களின் ஆபாச வீடியோ வைரலாகி நிகிதா அதே உண்மையான காதலால் உத்தமன் ப்ரதீப்பை ஏற்றுக்கொள்ளக்கூடாதா? அப்படி ஒரு காட்சி, ஆம்பள ஐட்டத்தை பெண் ஒருத்தி ஏற்றுக்கொள்வது போல ஒரு காட்சி இருந்திருந்தால் அது அனைவருக்குமே (பெண்கள் உட்பட) உறுத்தும், கசக்கும், உமட்டும், ஒவ்வாது, படம் ஓடாது. ஆனால் கெட்டுப்போனதாக நம்பப்படும் நிகிதாவை ப்ரதீப்கள் நம்புவதாக காட்சி அமைத்தால் படம் ஹிட். பெண்களை மட்டப்படுத்தி ஆண்களை க்ளோரிஃபை செய்யும் ஹிட் ஃபார்முலாவை முன்பு ரஜினி காப்பாற்றி வந்தார், பிறகு விஜய், தனுஷ், சிம்பு, சிவா கார்த்திகேயன், இவர்களின் வரிசையில் தற்போது திரு.உத்தமன் ப்ரதீப் கற்று தேர்ந்து மெரிட்டில் தொழிலுக்கு வந்துள்ளார். இன்னும் நிறைய லெக்சர் ப்ராஜெக்டுகள் இவரிடமிருந்து நாம் எதிர்பார்க்கலாம். உத்தமன் ப்ரதீப் படத்தில் ஹீரோ, நிஜத்தில் அவர் நல்ல தரமான பிஸ்னஸ்மேன். க்ரியேட்டிவ் பிஸ்னஸ்மேன். நல்லவன் கெட்டவன் என வகைமைக்குள் வராத லாபம் பார்க்கும், வெற்றி ஒன்றே இலக்காகக் கொண்ட இண்டெலெக்சுவல் பிஸ்னஸ்மேன்.

கிட்டதட்ட அனைவருமே லவ் டுடேவை ரசித்துக் கொண்டாடிக்கொண்டிருக்கும் போது எனக்கு மட்டும் இதில் இருக்கும் ஆபத்து கண்ணுக்கு தெரிந்தது. நண்பர்களுடன் கலந்துரையாடும் போது இதில் இருக்கும் அபத்தங்களை அவர்கள் என்ஜாய் செய்கிறார்கள் என்பது ஆச்சர்யமாக இருந்தது. என்னிடம், “ஒரு படத்தை இவ்வளவு சீரியசாக பார்க்காதே, இது வெறும் ஒரு படம்”, “ஏன் ஹுமரெஸ்சாவே பாக்க மாட்ற?”, என்றெல்லாம் நண்பர்கள் சொல்லுகிறார்கள். ஆனால் யதார்த்தில், சினிமா நம்மையும் நம் வாழ்வையும் பலமாக பாதிக்கிறது. எம்.ஜி.ஆர், கலைஞர், என சினிமாவில் வந்தவர்கள் நாடாளும் வரை செல்கிறார்கள். சினிமாவை சினிமாவாக மட்டும் பார்க்க வேண்டும் என்றால், சினிமாவில் சீரியஸான விசயங்களை சீரியஸாகவும், ஜாலியான விசியங்களை ஜாலியாகவும் காட்சிபடுத்த வேண்டும். யதார்தத்தில் சீரியஸான விசயங்களை சினிமாவில் ஜாலியாக காட்டுவதன் மூலம் பல அபத்தங்களை நார்மலைஸ் செய்வதும் க்ளோரிஃபை செய்வதும் பெரும் ஆபத்தானது. அதை மிகக்கவனமாக கையாள வேண்டும். என்னைப்போலவே RJ ஆனந்தி அவர்களும் இப்படத்தில் இருக்கும் அபத்தங்களை எடுத்துரைத்தார். இன்னும் பலரும் இந்தப்படத்தில் இருக்கும் அபத்தங்களை புரிந்திருக்கக்கூடும், அவர்களும் வாய்திறந்து பேச வேண்டும். கலந்துரையாடி களையவேண்டிய தேவை இதில் இருக்கிறது.

‘ரிலேஷன்சிப் பற்றி அடுத்த தலைமுறைக்கு நாம் நல்லவிதமாக சொல்லிக்கொடுக்கிறோம்’ என்ற பொறுப்பை நான் சினிமாக்காரர்களிடம் எதிர்பார்க்கவில்லை. பெற்றோர், ஆசிரியர், அரசாங்கம் என யாருமே அதை கையில் எடுக்காமல் இருப்பதால்தான் ஆண் பெண் உறவுகளைப் பற்றி சினிமா பாடம் எடுத்துக்கொண்டிருக்கிறது. சினிமா ஒரு வணிகம். இங்கு நல்லதை எதிர்பார்க்க முடியாது. எது வியாபார ரீதியாக வெற்றி அடையுமோ அதைத்தான் நாம் பார்க்க நேரிடுகிறது.

பின்னூட்டம் முக்கியம் அன்பர்களே. உரையாடி அறியாமை களைவோம்.

Surya devan V —— 02.01.2023

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-4/4 படங்கள் வளர்க்கும் எதிர்காலம்

திரைப்படங்கள் நம்மை எந்தளவிற்கு பாதிக்கும் என்பது யாரும் சொல்லித் தெரிய வேண்டிய விசயம் அல்ல. இருந்தாலும் சில உதாரணங்கள் அல்லது நினைவூட்டலகள் பின்வருமாறு.

கர்நாடகாவில் ஒரு இளைஞன் அருந்ததி படம் பார்த்து தன் உடலைத் தீயிட்டுக் கொள்கிறான். பிறகு மருத்துவமனையில் சிகிச்சைப்பலனின்றி இறந்து போகிறான்.

ஹைதராபாத்தில் ஒரு குழு மனி ஹெய்ஸ்ட் வெப் சீரிஸ்சால் கவரப்பட்டு அதே பாணியில் திட்டமிட்டு ஆட்களைக் கடத்தி பணம் பறித்து வந்துள்ளனர். பிறகு ஒருநாள் போலீஸில் மாட்டிக்கொள்கின்றனர்.

கே.ஜி.எஃப் படம் பார்த்து தவறாக ஊக்கமடைந்த 19 வயது இளைஞன், டான் ஆகும் ஆசையில் இரவு நேர காப்பாளர்கள் மூவரை கொலை செய்துள்ளான்.

இதுபோல பல சம்பவங்களை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.

சரி இதெல்லாம் இயல்பான மனநிலையில் இருப்பவர்கள் யாரும் செய்யப்போவதில்லை, மனநிலையில் சமன் இல்லாதவர்கள்தான் இப்படி சினிமாத்தனங்களை நிஜ வாழ்வில் பிரதிபலிப்பர் என்று நாம் எண்ணலாம். அதுதான் இல்லை. மேலே குறிப்பிடப்பட்டவர்கள் பெரிதாக பாதிக்கப்பட்டவரகள். நாம் சிறிது சிறிதாக தொடர்ந்து பாதிக்கப்படுபவர்கள். சிறிது சிறிதாக நிறைய விசயங்களை சினிமாக்கள் ட்ரெண்டாக்கிக் கொண்டே செல்லும், நார்மலைஸ் ஆக்கிக்கொண்டே செல்லும், எல்லாவற்றுக்கும் நாமும் தலையாட்டிக் கொண்டே பின்பற்றுகிறோம்.

சினிமாவில் சாராயம், சரக்கு, பீர், சிகரெட்

சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் ஒரு சிகரெட் கூட குடித்ததில்லை என்றாலும், தமிழ்நாட்டில் நிச்சயம் பல்லாயிரக் கணக்கானோர் சிகரெட்டிற்கு அடிமையாகியிருப்பார்கள். இல்லை என நான் மறுக்கவில்லை. ஆனால், ரஜினி சிகரெட் குடித்து அதை ஒரு ஸ்டைல் என ப்ராண்டிங் செய்துவிட்டபடியால் சிகரெட் குடித்திருக்காதவர்களும் தன் இமேஜை ரஜினி போல ரிசம்பில் பண்ண சிகரெட்டை பழக்கப்படுத்தி இருப்பார்கள். இதை இல்லை என யாராலும் மறுக்க முடியாது. பிறகு வயதான காலத்தில் “அனுபவத்தில் சொல்றேன்” என டயலாக் அடித்து சிகரெட்டை வேண்டாம் என அட்வைஸ் செய்வதெல்லாம் யார் கேட்டது? அவர் பற்றவைத்த சிகரெட்தான் இன்னமும் அணையாமல் எரிந்துக் கொண்டே இருக்கிறது.

சரக்கும் என்னும் சாராயத்தையும் மிகப்பிரபலம் ஆக்கி அதை நார்மலைஸ் செய்ய முயற்சித்து பெருமளவிற்கு நார்மலைசும் செய்துவிட்டார்கள். சினிமாவின் வளர்ச்சிக்கு முன்பும் நமது ஊர்களில் சுப நிகழ்ச்சிகளில் பெரியவர்கள் சாராயம் அருந்துவார்கள்தான். மறுப்பதற்கில்லை. ஆனால் அது இலைமறைக் காய்மறையாக நடந்து வந்தது. அதனை சினிமாக் காட்சிகளில், நகைச்சுவை, ஹீரோயிசம், மேன்லினஸ் என்று அடையாளப்படுத்தி பதினைந்து வயதினரும் இன்று மது அருந்துவது சாதாரணமாக்கி வைத்திருக்கிறார்கள். எப்போதும் ஒரு திரைப்படத்தில் படம் பார்ப்பவர்கள் தங்களை கதையின் நாயகனுடனே பொருத்திக் கொள்வார்கள். அதுதான் மனித இயல்பு. அந்த ஹீரோ செய்யும் அனைத்தையும் நியாயப்படுத்தும் போது அது எவ்வளவு பெரிய அபத்தமாக ஆகிறது. திரைப்படத்தில் ஒரு நடிகர் பிறர் பணத்திற்கு ஆசைப்பட மாட்டார் என்பதாலேயே பல ரசிகர்கள் பிறர் பணத்திற்கு ஆசைபடுவதை தவிர்த்திருப்பார்கள். ஒரு நடிகர் தன் கதாப்பாத்திரத்தின் மூலம் மக்களுக்கு நல்ல கருத்துக்களை எடுத்து சொல்லலாம். அது ரசிகர்களின் கொள்கையாகக்கூட உருமாறி நிற்கும். ஆனால், மக்களை குஷிபடுத்துவதற்காக போதைக்காட்சிகளை பழக்கப்படுத்திவிட்டு அதில் வரும் வருமானத்தில் செட்டில் ஆவது ரசிகர்களின் மீதுள்ள அக்கறையை நன்கு வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. இதை சரி செய்வதாக எண்ணிக்கொண்டு வளர்ந்து பெரிய நடிகர் ஆனப்பிறகு அதற்கு வருத்தம் தெரிவித்து ஒரு அறிக்கை விட்டால் போதும் அதற்கும் விசிலடித்து கைதட்டி ஆரவாரம் செய்ய கோடி ரசிகர்கள் இங்குண்டு.

சமீப நாட்களில்தான் இவர்கள் கஞ்சாவை பிரபலப்படுத்திவருகிறார்கள். அரசாங்கம் இதை தடை செய்த போதிலும், இது போன்ற போதை வஸ்துகளை வைத்து படம் வந்து கொண்டுதான் இருக்கிறது. அரசாங்கம் கஞ்சாவை தடை செய்திருப்பது மக்கள் மீதிருக்கும் அக்கறையினால் மட்டும் இல்லை. இதற்குப் பின்னால் ஒரு வியாபார நோக்கமும் உள்ளது. ஒரு நாளைக்கு இந்தியர்கள் ஊதித்தள்ளும் சிகரெட்டுகளின் மதிப்பு மட்டும் நூறு கோடியாவது வரும். கஞ்சாவின் மீதிருக்கும் தடையை நீக்கிவிட்டால், அவரவர் வீட்டிலேயே வளர்த்து காயவைத்து சுருட்டி ஊதிக்கொள்வார்கள். நாள்தோறும் நூறு கோடி ரூபாய் வருமானம் பார்க்கும் அரசாங்கத்திற்கு மிகவும் வேண்டப்பட்டவர்களின் கம்பெனிகள் எப்படி பிழைப்பது? கள்ளுக்கு தடை போட்டு அரசே டாஸ்மாக் நடத்துவது தனியாருக்கு லாபம். மரத்தடியில் சீட்டாடினால் அடித்து விரட்டிவிட்டு ஆன்லைன் ரம்மியை கண்டுகொள்ளாமல் இருப்பது தனியாருக்கு லாபம். கஞ்சாவை தடை செய்துவிட்டு சிகரெட் கம்பெனிகளுக்கு அனுமதியளிப்பது தனியார் கம்பெனிகளுக்கு லாபம். எல்லாமும் யாரோ சில பண முதலைகள் சில ஆயிரம் கோடிகளை பல ஆயிரம் கோடிகளாக்கக் திட்டம் வகுக்கின்றனர். மக்களாகிய நாம், அவர்களின் வளர்ச்சிக்கு நாள்தோறும் கண்விழித்து உழைத்துக்கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

சினிமாவில் காதல்

சரக்கு, சிகரெட், சில்லறைத்தனங்கள் எல்லாம் ஓகே, அவையெல்லாம் அதைப்பயன்படுத்தும் நபர்களையும் அவர்களது குடும்பங்களையுமே பாதிக்கும். காதல்? காதலை இந்த சினிமாக்காரர்கள் கற்பழித்தேவிட்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும். கேட்க ஆளில்லாமல் போனதுதான் காரணமோ என்னமோ தெரியவில்லை. காதலை வளைத்து வளைத்து சீரழித்தே விட்டார்கள். 19ஆம் நூற்றாண்டில்தான் ரொமாண்டிசேஷன் என்பது உலகம் முழுக்க பரவியது. அதாவது காதலை உருகி உருகி ரசித்துக் கொண்டாடித்தீர்ப்பது. ஏன் அதற்கு முன்பு வரை காதலை வெறுத்தார்களா என்று கேட்காதீர்கள். சங்ககாலம் தொட்டே காதலைக் கொண்டாடிதான் வந்திருக்கிறார்கள். ஆனால், அதை சாமானியரும் கொண்டாடித் தீர்க்க ஒரு பெரிய மேடை இல்லாததால் அது பெருமளவிற்கு மக்களிடையே பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

சற்று விளக்கமாக சொல்கிறேன். 1920களில் ஒரு தம்பதி திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்களின் அன்யோன்யம் எப்படிப்பட்டதாக இருக்கும்? கண்டிப்பாக காதல் சார்ந்த எந்த உணர்வுகளையும் அவர்களால் வெளிக்காட்டிக்கொள்ளவே முடியாது. ஏனென்றால் அப்போது இருந்தது கூட்டுக்குடும்ப முறை. ஒரு தம்பதிக்கென தனி அறை கிடைப்பதே அரிது. இதில் ஒரு போர்வைக்குள் இரு தூக்கம் என்பதெல்லாம் அரிதிலும் அரிது. “புதுசா கல்யாணம் ஆனதுக ரொம்பத்தான் கொஞ்சிக்குதுங்க, எல்லாம் எத்தன நாளைக்கின்னுதான் பாக்குறேன்” என்று காது படவே பேசுவார்கள். அதற்காகவே தம்பதிகள் முகத்தை இறுக்கமாம வைத்துக் கொள்வார்கள். ஆசை உணர்வுகளை வெளிப்படுத்த போதிய பாடல்களோ, காலர் ட்யுன்களோ, பேஸ்புக் ஸ்டோரிகளோ, இன்ஸ்டா போஸ்டுகளோ இல்லாத காலக்கட்டம் அது. இதில் இருந்து வெளியே வருவதற்கு, அச்சு ஊடகங்களும் ரேடியோக்களும் பெரிதும் உதவின. புத்தகங்கள், பத்திரிக்கைகள் என எங்கும் காதல் குறித்த பாடல்கள், கவிதைகள், ஓவியங்கள், கதைகள் என திசையெங்கும் காதல் பரவத் தொடங்கியது. உலகம் முழுவதும் இதுதான் நிலை. இந்தக்கூட்டத்தில் சினிமா என்ற ஒரு பொக்கிஷமும் கிடைத்தது. ஆனால், யார் கைகளில் அது கிடைத்தது என்பதுதான் அதன் தரத்தை நிர்ணயித்தது. சினிமா பல அபத்தங்களை உடைத்தும் உள்ளது. மறுப்பதற்கில்லை. ஆனால், அதைவிட பல அபத்தங்களை அறிமுகம் படுத்தியுள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.

சமீப நாட்களில் இன்ஸ்டாவில் பள்ளி உடையணிந்து காதல் காட்சிகளாக நிறைய ரீல்ஸ்கள் வந்துக்கொண்டிருந்தன. யுடியூபிலும் இது தொடர்ந்தது. பொதுமக்களுள் ஒளிந்து வாழ்ந்துக்கொண்டிருக்கும் பல Pedophiles-ஐ இது உசுப்பிவிடும் செயல்களாகத்தான் நான் பார்க்கிறேன். யோசித்துப்பாருங்கள், இருபத்தி ஏழு வயதுள்ள யுவதி ஒருவள் இருக்கமான பள்ளி சீருடை அணிந்து ஒரு பாட்டுக்கு நடனமாடி இன்ஸ்டா, பேஸ்புக், யுடியூப் என பதிவிடுகிறாள் என்று வைத்துக்கொள்வோம். அது ஏதோ ஒரு மூலையில் உள்ள ஒரு ஆணின் பாலுணர்வை வலுவாகத் தூண்டும். அந்த ஆசாமிக்கு இந்த கவர்ச்சி நடனம் ஆடிய யுவதி எட்டாக்கணி. ஆனால், அவனது ஊரில், அவனது தெருவில் தினமும் பள்ளிக்கு சென்று திரும்பும் பதினான்கு பதினைந்து வயது சிறுமி அவனுக்கு பலியாடு. 10K லைக்ஸ்-ஐப் பார்த்து சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் யுவதிகள், ஆண்களின் காம வெறிக்கு பாலூத்தி வளர்ப்பதைவிட பெரிதாக ஒன்றும் சாதித்துவிடவில்லை. பெண்களின் தேக அழகைத்தாண்டி அவர்களிடம் பகிர்வதற்கும், படைப்பதற்கும் எண்ணற்ற திறன்கள், ஆற்றல்கள் இருக்கின்றன. அதையெல்லாம் தவிர்த்து பிரபலமாகும் போதையில் பல முட்டாள் பெண்கள் செய்யும் க்ளாமர் கூத்துகளால் பாதிக்கப்படுவதென்னவோ அப்பாவிப் பெண்கள்தான். பிரபலமடைந்த பெண்கள் தன்னைப்பாதுகாத்துக்கொள்ள பவுன்சர்கள் வைத்துக் கொள்வார்கள். பவுன்சர்கள் இல்லையென்றால் நடிகைகளின் நிலமையை யோசித்துப்பாருங்கள். குதறி வைத்து விடுவார்கள் ஆண்கள். குறைந்த பட்சம் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளோ, தன்னார்வலர்களோ இத்தகைய வீடியோக்களை படம் பிடிப்பதற்கும், ஒளிபரப்புவதற்கும் தடைவிதிக்கலாம். மீறினால் கடும் தண்டனை என எச்சரிக்கலாம். பள்ளி மாணவிகள் மீது நடத்தப்படும் பாலியல் சீண்டல்களுக்கு வழிவகுக்கும் திரைப்படங்கள், குறும்படங்கள், இன்ஸ்டாகிராம் வீடியோக்கள், யுடியூப் வீடியோக்கள் என அனைத்து வகையான பதிவுகளும் நிச்சயமாக தடுக்கப்பட வேண்டியவைகள்தான். பிறகு மாணவன் டீச்சரைக் காதலிப்பது. யெப்பா டேய். தயவுசெய்து யாராவது இந்த ஆகச்சிற்ந்த இயக்குநர்களிடமிருந்து காப்பாத்திச் செல்லுங்கள் இந்த பாலாய்ப்போன சினிமாவை. டீச்சர்கள் என்றுமே தேவதைகள்தான் ஆனால் அவர்களுடனே வாழ நினைப்பது எனக்கு இன்செஸ்ட் போலத் தெரிகிறது.

எங்கோ எப்போதோ யாருக்கோ நடந்த விசயங்களை படமாக்குவதினால், அந்தப் படத்தை உருவாக்கியவர்களுக்கு அது லாபம் ஈட்டித்தரும். ஆனால், அதைப் பார்த்து வளரும் இளைய சமுதாயம் தன்னையும் அந்த ஹீரோவுடன் பொருத்திப் பார்த்துக்கொண்டு, தானும் அப்படித்தான் உணர்வதாக கற்பனைக் கோட்டை கட்டிக்கொண்டு சீரழியும்.

Stalking. ஒரு ஆணுக்கு ஒரு பெண் மீது எப்போது காதல் வரும். அந்த ஆண் அவளை எங்காவது பார்த்திருப்பான். அவள் அழகாக இருப்பான். அவனுக்கு அவளது உடல்கூறுகள் பிடித்திருக்கும். கிறுக்குப் பிடிக்கும் அளவிற்கு அவளைப்பிடித்திருக்கும். காதல் மலர இது போதும். வேறு என்ன வேண்டும்? அவளது ஒப்புதலா? வேண்டாம் வேண்டாம். ஆணுக்கு காதல் வந்துவிட்டப் பிறகு வேறென்ன வேண்டும். அவளுக்கும் இவன்மீது காதல் வந்தே தீரவேண்டும். எப்படி வராமல் இருக்கும். கண்டிப்பாக அந்தப்பெண்ணிற்கும் இதே ஆணின் மீது காதல் வரவேண்டும். இல்லை என்றால். இவன் அவள் பின்னாடியே திரிவான். தாடி வளர்ப்பான். சோகப்பாடல் பாடுவான். தற்கொலைக்கு முயல்வான். (செய்துகொண்டால் நல்லது). தற்கொலை செய்துகொள்வதாக கடிதம் எழுதுவான். தூது அனுப்புவான். சொப்ப்ப்பாஆஆ. தலையே சுற்றுகிறது. குணா படமெல்லாம் இன்னும் சற்று உச்சம். Stolkhome Syndrome-ல் கமல் செய்த சோதனை முயற்சியாகக்கூட இருக்கலாம்.

சினிமா வளர்க்கும் எதிர்காலம்

சினிமாவும் நம்மை வெகுவாக அல்ல பெரிதாகவே பாதிக்கும். வெறுமென மூன்று மணி நேரம் திரையரங்கில் பார்த்துவிட்டு கைதட்டிவிட்டு வரும் நாடகம் மட்டுமல்ல சினிமா. அது நம்முடனே பயணிக்கும். நமது காதல் எத்தகையதாக இருக்க வேண்டும், நமது வேலை எத்தகையதாக இருக்க வேண்டும், நமது தோற்றம் எத்தகையதாக இருக்க வேண்டும், நமது எதிர்வினைகள் எத்தகையதாக இருக்க வேண்டும், நமது பைக் எத்தகையதாக இருக்க வேண்டும், அவ்வளவு ஏன் நமது ஹேர்கட் எத்தகையதாக என்பதைக்கூட பெரும்பாலும் அந்தந்த காலத்து சினிமாதான் தீர்மானிக்கின்றன.

இதற்கு இணையாக இன்னொரு விசயத்தையும் பார்ப்போம். செக்ஸ் எஜுகேஷன். ஊடலை யார் சொல்லித்தருவது? ஆசிரியரா? ஆசிரியையா? மாணவர்களுக்கு யார் சொல்லித்தருவது? மாணவிகளுக்கு யார் சொல்லித்தருவது? அவரவரே திருட்டுத்தனமான அங்கும் இங்குமாக தெரிந்துக்கொள்ளட்டுமா? அது சரியா? பாட புத்தகத்தில் பிறப்புறுப்புகளின் குறுக்குவெட்டு தோற்றத்தை அச்சிட்டுவிட்டு அந்தப் பாடம் வரும்போது மட்டும் கவனமாக பக்கங்களை கடந்து விடலாமா? காதலையும் காமத்தையும் சினிமாவே சொல்லித்தந்து கொண்டிருந்தால் வருங்காலம் என்னவாகும்? சின்ன உதாரணம் கீழுள்ள இணைப்பில்.

https://tamil.news18.com/news/cuddalore/a-student-gave-birth-in-a-school-toilet-in-cuddalore-797078.html?fbclid=IwAR1Hhs0dp5Y5gAqqzkg_PNmDkZ-FFYLzoEM4lc-ULFcEbe9XUKZJWeXPo1U

ஆண் பெண் உறவுகளை முறையே அறிமுகப்படுத்தும் பொறுப்பு யாருடையது?

இருபாலர் படிக்கும் பள்ளியில் படித்தால் காதல் லவ் அஃபேர் என்று எதையாவது செய்துவிடுவார்கள் என்று ஆண் பிள்ளைகளை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலோ பெண் பிள்ளைகளை பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலோ சேர்த்து விடுவார்கள். ஒருவேளை இருபாலர் படிக்கும் பள்ளியாக இருந்துவிட்டால் மாணவர்களுக்கு தனி வகுப்பறை அல்லது தனி ப்ளாக், மாணவிகளுக்கு தனி வகுப்பறை தனி ப்ளாக். சக மாணவிகளை மாணவர்களை மிக இயல்பாக யதார்த்தமாக எதிர்கொள்வது எப்படி என்று சொல்லித்தர வேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள் எதிர்பாலின ஈர்ப்பை ஏன் இவ்வளவு கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்கள் என்று யோசித்துப் பாருங்கள். பொறுப்புத்துறப்பு மனோபாவமும், பொறுப்பின்மையும், பொருளாதார நெருக்கடிகளும்தான் இப்படியெல்லாம் மாணவர்களையும் மாணவிகளையும் பிரித்து வைத்து கல்லூரி வரை கொண்டுவந்து பிறகு நழுவிக்கொள்வார்கள். ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டால் அதற்கும் காரணம் பள்ளியின் அதீத அழுத்தம் என்று பெற்றோர்களும், மாணவருக்கு காதல் இருந்து அது தோல்வியுற்றதால் தற்கொலை செய்துகொண்டார் என பள்ளித்தரப்பும் மாற்றி மாற்றி பழி போட்டுக்கொண்டே இருப்பதை நாம் பார்க்காமல் இல்லை. அவர்கள் பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் எடுத்தால் மட்டும் அதில் பள்ளிக்கும் பெற்றோர்களுக்கும் பெரும் பங்கு உள்ளது என வரிந்து கட்டிக்கொண்டு வருவார்கள். செத்துப்போனால் அது அவரவர் இயலாமை. இதுதான் பொறுப்புத்துறப்பு மனோபாவம். கல்வியை வியாபாரமாக்கியதின் விபரீதம்.

இது போதாதென்று சினிமா அதன் இஷ்டத்திற்கு மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடி வைக்கிறது. எது கெத்து என்று சினிமா சொல்கிறதோ அதைத்தான் வாழ்நாள் முழுவதும் பின்பற்றுகிறார்கள் இளம் வயதினர். இந்த மாயையில் இருந்து மீள, கல்லூரி முடித்து வேலைக்கு சென்று சகப் பெண்களிடம் ஆண்களுக்குரிய கெத்தைக் காட்டி, வீட்டில் மனைவியிடம் கெத்தைக் காட்டி, செய்தித்தாள்களின் பெரும்பாலன பக்கங்களில் பெண்கள் மீதான வன்முறைகள்தான் தினமும் அச்சிடப்பட்டு வருகின்றன. பெற்றோர்கள்தான் ஆண் பெண் உறவுகளை முறையே அறிமுகப்படுத்த சரியானவர்கள். காதல் காமம் இரண்டையும் பெற்றோர்கள் சொல்லித்தருவதே நல்லது. பள்ளிக்கல்வித்துறை மற்றும் அரசு இணைந்து ஆலோசித்து ஆண் பெண் என இருபாலரும் படிக்கும் பள்ளிகளையே நடத்த வேண்டும். இருபாலர் பள்ளிகளுக்கே அனுமதியும் அளிக்க வேண்டும். பார்ன் வலைப்பக்கங்களை முடக்கிய அரசாங்கத்தினால் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நடக்கும் காதல் கதை போன்ற படங்களை தடுத்து நிறுத்த முடியாதா என்ன? டாஸ்மாக்கையே மூடாத அரசாங்கத்திடம் இதையெல்லாம் எதிர்பார்ப்பது கற்பனைக்கும் அதிகம்தான். ஆனால் இந்தப் பிரச்சனைகளின் பொறுப்பு அரசுதான்.

சினிமாவிற்கு இணையாக ஸ்மார்ட்ஃபோன் செயலிகளும் களத்தில் குதித்துள்ளன. போட்டிப்போட்டுக்கொண்டு அடுத்த தலைமுறையை சீரழிப்பதில்தான் எத்தனை லாபம் இந்தப் பணத்திற்கு அடித்துக்கொள்ளும் ஆறறிவு மானுடர்களுக்கு! இந்தக் கிட்ஸ்களெல்லாம் வளர்ந்து ஆளாகி திருமணம் செய்து பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும்போதாவது ரியாலிட்டியை தலை நிமிர்ந்து பார்ப்பார்களா என்று காத்திருக்கிறேன். அல்லது அதையும் ஆன்லைன் யுடியுப் என டிஜிட்டலைஸ் ஆக்கினால் ஒன்றும் சொல்வதற்கில்லை.

நட்சத்திரம் நகர்கிறது சொல்லும் வாழ்வியல் என்ன?

இந்தப் படம் பேசிய விசயங்களில் ஆண்-பெண் உறவு, பொதுபுத்தி, தன்பாலீர்ப்பாளர்கள், ஆணவக்கொலை என எல்லாமும் முக்கியமானவை. ஒருசில தமிழ் இயக்குநர்களுக்காவது பாலின பேதத்தைக் களைய வேண்டும் என்கிற அக்கறை இருப்பது மகிழ்ச்சிக்குரியது. இன்னும் ஆயிரம் படங்கள் இந்த ஜானரில் வரவேண்டும். யதார்த்த வாழ்க்கையில் ஒருவர் சந்திக்கும் பேசமுடியாத பிரச்சனைகளைப்பற்றி பேச கலைத்துறையில் போதிய கலைஞர்கள் இல்லையென்றே உணர்கிறேன். இருப்பினும் இந்தப்படத்திலும் ஒரு முக்கியமான விசயத்தை குறிப்பிட மறந்துவிட்டார்கள். அதுதான் இந்தப்படத்தைப் பார்த்து தவறாக ஊக்கமடைவதில் இருந்து தடுத்திருக்கும். சில பக்குவமில்லாத இளைஞர்கள் செய்யும் அதே தவறை பா.ரஞ்சித்தும் செய்திருப்பது வருத்தமளிக்கிறது. அவர் தவறவிட்டது வேலை. வேலைதான். கலை வேலை அல்ல. கலை சிலருக்கு தொழிலாக இருக்கலாம். ஆனால் கலை ஒரு போதும் வேலையாக இருக்க முடியாது.

சற்று யோசித்துப்பாருங்கள், பா.ரஞ்சித்தின் முதல் படமான அட்டக்கத்தியில் ஹீரோ இறுதியில் ஒரு வக்கிலாகிவிடுவார். இரண்டாவது படம் மெட்ராஸ் ஹீரோ ஒரு ஐ.டி கம்பெனியில் வேலை செய்வார். அடுத்து வந்த இரண்டு ரஜினி படங்களிலும் ரஜினி என்ன வேலை செய்வார்? டான் வேலையில் இருந்தால் வேறு எந்த வேலையும் செய்ய முடியாது. சார்பட்டா பரம்பரை படத்தில் ஹீரோ ஒரு கூலித்தொழிலாளி. நட்சத்திரம் நகர்கிறதில் வரும் கதாப்பாத்திரங்கள் என்ன வேலை செய்கிறார்கள். எல்லோரும் ஒன்று கூடுகிறார்கள் ஒரு நாடகத்தை உருவாக்குகிறார்கள். அரங்கேற்றுகிறார்கள். ஆனால் அவர்களின் வாழ்வியலுக்கு எது உதவுகிறது? யார் அவர்களின் அன்றாட செலவுகளை பார்த்துக்கொள்கிறார்கள். what do they do for a living? அது கதைக்கு முக்கியம் இல்லை என்று சொல்லி மூடி விடாதீர்கள். ஒருவன் என்ன வேலை செய்து அவனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்கிறான் என்பது மிக முக்கியம். அதை சொல்லாவிட்டால் படம் பார்க்கும் பக்குவம் இல்லாத இளம் வயதினர் சினிமாவின் மீதும் கலையின் மீதும் கண்மூடித்தனமான நம்பிக்கை கொண்டு சென்னையில் வந்து என்னவென்றே தெரியாமல் சுற்றிக் கொண்டிருப்பார்கள். எந்த ஒரு self assesment-உம் செய்து பார்க்காமல், வெறுமனே பரவசத்தினால் மட்டும் சென்னைக்கு கிளம்பி வந்து விடுவார்கள். பிறகு, நாட்களை ஓட்ட முடியாமல், என்னவெல்லாமோ செய்கிறார்கள். ஸ்விக்கி, டிரைவர், ஹோட்டல், டெக்ஸ்டைல்ஸ், என்று தொடங்கி, எண்ணில் அடங்காத வேலைபாடுகளை செய்து தீர்க்கிறார்கள். இதில் பக்குவத்துடன் இருந்து உழைத்து வாய்ப்பை பயன்படுத்தி வெற்றி பெருபவர்களும் இருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அது அனைவருக்கும் அமைவதில்லை.

நட்சத்திரம் நகர்கிறது போல சினிமாவைப் பற்றியோ, கலையைப் பற்றியோ, படம் எடுக்கும்போது அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பணத்திற்கு என்ன செய்தார்கள் என்பதையும் காட்டுங்கள். ரூம் வாடகை தர முடியாமல், நண்பர்களின் காசில் எத்தனை மாதங்கள் இருக்க முடியும் என்று காட்டுங்கள். குடும்பம் பொருளாதாரரீதியாக உதவுமா என்பதைக் காட்சிப்படுத்துங்கள். ரெனே என்ன செய்கிறாள்? அர்ஜுனைப் போல ரெனேவிற்கும் அவளது குடும்பம் பெரும் பின்னனி கொண்டதாக தெரியவில்லை. அவள் சொல்லும் கதையில் அவள் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணாகத்தான் தெரிகிறாள். பொருளாதார பின்னனி இல்லாமல் எப்படி அவள் வாழ்கிறாள். வேலைக்கு போகிறாள் என்றால் என்ன வேலை. அலுவலகமா? freelancer ஆ? சுயத்தொழில் எதுவும் செய்கிறாளா? இப்படி எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் ஒரு பெண், அவள் பெயர் ரெனெ என்று மட்டும் சொன்னால், நிஜத்தில் ரெனேக்களினால் கவரப்படும் பெண்கள் ரெனெவைப் போலவே புரட்சிகரமான வசனங்களைப் பேசிக்கோண்டு எந்த இடத்தில் வாழ முடியும் என்பதையும் யோசித்துப் பாருங்கள். ருத்ரையா இதில் தெளிவுடன் இருந்திருக்கிறார். மஞ்சு அவளுக்கென ஒரு வேலையையும் தேடிக்கொண்டு அதன் மூலம் தன் தேவைகளையும் பூர்த்தி செய்து கொண்டு வாழ்கிறாள். தன்னுடைய தேவைகளுக்காக யாரிடம் வழிந்து நிற்கவோ, கெஞ்சவோ, கொஞ்சவோ, காலில் விழவோ, கண்ணீர் விடவோ, படுக்கவோ தேவை இல்லை. இந்த விசயத்தில் ரெனேவை இன்னும் கொஞ்சம் டீட்டெயில் செய்திருந்தால் ஒரு முழுமையான ஓவியமாக மிளிர்ந்திருப்பாள்.

நட்சத்திரம் நகர்கிறது மட்டும் இல்லை. படித்து வேலைக்கு போவதை விடவும் கலைத்துறையில் சாதிப்பதோ அல்லது பிரபலமடைவதோதான் உண்மையான வெற்றி என்று போலியாக நம்பவைக்கும் படங்கள் ஏராளம். மீசைய முறுக்கு, 96, மயக்கம் என்ன, விண்ணைத்தாண்டி வருவாயா, டான், தோனி, என பட்டியல் நீண்டுக்கொண்டே போகும். Target audience என்றோரு வார்த்தை உள்ளது. அதாவது ஊதாரித்தனமாக இருப்பவனை ஹீரோவாக வைத்து செக்கச் செவேலென்று ஒரு ஹீரோயினைப் போட்டு, இருவருக்கும் காதல் மலர்வது போன்ற காட்சியமைத்து ஒரு கிளுகிளுப்பு ஊட்டினால்தான் முதல் நாள் முதல் காட்சி வந்து படம்பார்க்கும் மைனர் குஞ்சுகளுக்கு ஒரு பரவசம் ஏற்படும். கல்லா கட்டும். நாள் முழுக்க உழைத்து ஒரு குடும்பத்தின் தேவைகளை பார்த்து பார்த்து நிறைவேற்றும் அப்பாக்களும் அம்மாக்களும்தான் எனக்கு ஹீரோக்களாகத் தெரிகிறார்கள். அவர்கள் செய்யும் வேலை அவர்களது ஃபேஷன் இல்லைதான். ஆனால் அலுக்காமல் செய்கிறார்கள்.

புடிச்சத பண்ணு, புடிச்சத பண்ணுன்னு சினிமாக்காரனுங்க சொல்லிட்டு போயிருவானுங்க. நாமளும் பின்னாடியே போனா ஜெயிச்சரலாம்னு கண்மூடித்தனமா போனா, வாழ்க்கைல சில பல வருஷங்கள் அப்டியே போயிரும்னு யார் சொன்னாலும் கேட்க மாட்டாங்க.

இந்த கிட்ஸ்சின் அம்மாக்களும் அப்பாக்களும் இவர்களைப்போலவே புடிச்சதை செய்துக்கொண்டிருந்தால் கிட்ஸ்கள் அனைவரும் படிப்புக்கும், சோத்துக்கும் என்ன செய்திருப்பார்கள்? அதனால் இது போன்ற படங்கள் எடுக்கும் போது அதீத கவனம் தேவை. நாம் ஒரு விசயத்த விளக்கும் போது அதோட அடிப்படை ஆதாரத்தையும் சேர்த்தே விவரிக்க வேண்டும். ஒரு நீண்ட நெடிய போராட்டம் எப்படி சாத்தியப்பட்டுது என்றும் சொல்ல வேண்டும். சொல்லவில்லை என்றால் நிறைய இளைஞர்களின் வாழ்க்கையை அது புரட்டிப்போட்டுவிடும் அபாயம் உள்ளது.

ஏன் கலைக்கூடம்?

படம் நடக்கும் தளம் ஒரு மேடை நாடகம் நடத்தும் ஒரு தன்னார்வக் குழுவினரின் கூடாரம். இந்தக் கதையை ஏன் ஒரு கலையரங்கில் அரங்கேற்றினார்கள்? இப்படத்தில் நடந்த அனைத்து சம்பவங்களும் ஒரு கார்ப்பரேட் ஆஃபிசில் நடக்கலாம் அல்லவா? ஒரு கெட்டுகெதரில் சக நண்பர்களுக்கிடையே நடக்கலாம் அல்லவா? ஒரு குடும்ப நிகழ்வில் நடக்கலாம் அல்லவா? ஒரு கோவில் திருவிழாவில் நடக்கலாம். ஏன் நாடக மேடை? நாடகக்காதலை மறுத்துப்பேச நாடகமேடையே பொருத்தமானதாக இருந்துவிட்டதாக நான் உணரவில்லை. நாடகக் காதல் என்பதெல்லாம் எதுவும் இல்லை என்பதைக்கூட நாடகமாடித்தான் நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் என்ன வந்தது.

ஏன் பாண்டிச்சேரி?

பாண்டிச்சேரி நகரம் முழுவதும் ஆங்காங்கே கலையின் கைவண்ணங்கள் ஓவியங்களாக அங்குள்ள மக்களின் ரசனைத்தன்மையையும், கலையார்வத்தையும் உணர்த்திக்கொண்டே இருக்கும். மேலும் சென்னையை விட்டு சினிமா கொஞ்சமாவது வெளியில் வந்தால் நல்லது என்றே எண்ணுகிறேன்.

அவ்வப்போது சில தரமான நல்ல சினிமாக்களும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் ஒட்டுமொத்தமாக அனைத்து படங்களையும் வைத்து அடுத்த தலைமுறையையும் வைத்து பார்க்கும் போது சினிமா வளர்க்கும் எதிர்காலம் சற்று அச்சமூட்டுவதாகவே இருக்கிறது. இது போன்ற பல அபத்தங்களைப் பேசி ஒரு தெளிவுக்கு வருவதற்காகவே ஆயிரம் நட்சத்திரங்கள் நகரட்டும்.

References

https://www.ndtv.com/india-news/copying-horror-movie-arundhati-that-he-watched-several-times-23-year-old-dies-for-salvation-in-karnataka-3249204

https://www.newindianexpress.com/nation/2022/sep/02/kgf-inspired-19-year-old-tribal-an-ex-waiter-turns-out-to-be-mp-serial-killer-2494184.html

https://telanganatoday.com/inspired-by-money-heist-on-netflix-gang-pulls-off-kidnaps-in-hyderabad

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-1/4 ஆணவக்கொலைகள்

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-2/4 LGBTQIA+

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-3/4 ரெனேக்களும் காதலும்

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-2/4 LGBTQIA+

இந்த தலைப்பும் சற்று சென்சிடிவான தலைப்பு. எனவே, அடிப்படையில் இருந்து அலசி பார்த்தோமேயானால் ஒரு தெளிவுக்கு வரலாம்.

பூமியில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னார் முதன் முதலில் உயிர் தோன்றியபோது அது ஆணாக இருந்ததா? பெண்ணாக இருந்ததா? அல்லது இரண்டுமாக இருந்ததா? அல்லது இரண்டும் இல்லாமல் வேறு ஒரு பாலின வகையில் இருந்ததா? பதில் யாருக்கும் தெரியாது. ஆனால் யூகத்தின் அடிப்படையில் அவரவருக்கு ஒரு கருத்தும் நம்பிக்கையும் இதுதான் உண்மை என்று நேரில் பார்த்தது போல சத்தியம் செய்து எல்லாம்கூட சொல்லுவர்.

90களின் முடிவில் எனது ஊரில் சர்ச்சில் திரை கட்டி ஒரு படம் ஓட்டினார்கள். அதில் மண்ணில் இருந்து ஒரு மணிதன் தோன்றுவான் (ஆதாம்). அவன் தனியாக காட்டில் திரிந்து கொண்டிருப்பான். பிற விலங்குகள் எல்லாம் அதனதன் இணையோடு இருப்பதைக்கண்டு அவன் தனக்கொரு துனை இல்லை என்று ஏங்குவான். பிறகு எங்கிருந்தோ இன்னொரு பெண் ஒருத்தி (ஈவ்) வருவாள். இதைத்தான் மனிதனின் தோற்றம் என்று எத்தனை நாள் நம்பினேன் என்று தெரியவில்லை. ஆனால், டார்வினின் தியரி விரைவில் என்னை வந்தடைந்து நம்பும்படியான ஒரு கதையைத் தந்தது.

இப்போது இருக்கும் சூழ்நிலையில் பலரும் உண்மை என்று நம்பும் ஒரு கூற்று ஆணும் பெண்ணும் இனைந்தால் தானே இன்னொரு உயிர் தோன்றும் என்பது. ஆனால் ஒரு உயிர் தோன்ற ஆணும் பெண்ணும்தான் தேவை என்பது நூறு விழுக்காடும் அவசியம் இல்லை. உதாரணத்திற்கு நத்தை இனங்கள் ஒரே சமயத்தில் ஆணாகவும் பெண்ணாகவும் இருக்கும். இணை சேரும்போது எதோ ஒன்று ஆணாகவும் மற்றொன்று பெண்ணாகவும் பங்காற்றி இனப்பெருக்கச் சேர்க்கையில் ஈடுபடும். எந்த ஒரு நத்தையாலும் விந்தணுக்களையும் உற்பத்தி செய்ய முடியும், கரு முட்டைகளையும் உற்பத்தி செய்து இனச்சேர்க்கையின் மூலம் கருக்களையும் சுமக்க முடியும். அதாவது நத்தை ஆணாகவும் இருக்கும், பெண்ணாகவும் இருக்கும், சமயத்திற்கேற்ப சூழ்நிலைக்கேற்ப ஆணாகவும் நடந்து கொள்ளும், பெண்களாகவும் நடந்து கொள்ளும். ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா? இதைவிட ஆச்சர்யம், நன்கு வளர்ந்த சில நத்தைகளால் தானாகவே கருவுற முடியும். இன்னொரு நத்தையின் துணை தேவையில்லை. இவ்வகை உயிரினங்களை hermophrodites என்பார்கள். மண் புழுக்களும் இவ்வகையைச் சார்ந்தவைகள் தான். ஆனால், அவைகளால் சுயமாக கருவுற முடியாது.

சில உயிரினங்கள் இதற்கு நேர்மாரானவை. ஒன்று ஆணாக இருக்கும் அல்லது பெண்ணாக இருக்கும். இரண்டு பாலுறுப்புகளையும் ஒரே உயிர் கொண்டிருக்காது. அவ்வகை உயிரினங்களை gonochoristic species என்பார்கள். விலங்குகளில் 95 விழுக்காடு gonochoristic தான். முதுகெலும்பு கொண்ட 99% உயிரினங்கள் gonochoristic தான். அது ஏன் 99% என்கிறார்கள் என்றால், மனிதர்களில் சிலர் அரிதாக இரண்டு பாலுறுப்புகளுடனும் இருப்பது உண்டு. அவர்களை true hermophordites அல்லது intersex என்றழைக்கிறார்கள். ‘LGBTQIA+’ல் உள்ள ‘I’ எழுத்து intersex ஐ குறிப்பதாகும். இவர்களுக்கு இரண்டு பாலுறுப்புகள் இருந்தாலும் ஏதேனும் ஒன்றுதான் முழு பயன்பாட்டில் இருக்கும். இவர்களை பலசமயங்களில் transgender/திருநர் என குழப்பிக்கொள்வார்கள்.

trioecy என சொல்லப்படும் உயிரினங்களில் male ஆண் இனங்கள் இருக்கும், female பெண் இனங்கள் இருக்கும், இந்த இரண்டு பாலுறுப்புகளும் கலந்த hermophrodites களும் இருக்கும்.

இவ்வளவு விளக்கங்கள் எதற்காக என்று யோசித்திருப்பீர்கள். ஒருவர் யாராக இருக்க வேண்டும், யாராக இருக்கப் போகிறார் என்ற முடிவு கருவில் இருக்கும் போது முடிவாவது. அது ரசாயன செயல். எந்தெந்த ஹார்மோன்கள் எவ்வளவு சுரக்க வேண்டும் என்பது யார் ஒருவரும் முடிவு செய்வதில்லை. அது இயற்கை. அதை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். “அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது, அதனினும் அரிது கூன், குருடு, செவிடு, பேடு இன்றி பிறத்தல் அரிது.” – கந்தன் கருணை படத்தில் இருந்து ‘அரியது கேட்கும்’ பாடல் வரிகள். இந்தப் பாடலை நாம் நிச்சயம் கேட்டிருப்போம். இதில் வரும் பேடு என்ற சொல் hermaphrodites ஐக் குறிக்கும் சொல். இந்த பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன் அவர்கள். ஒரு உயிர் முறையே முழு ஆணாகவோ அல்லது முழு பெண்ணாகவோ பிறத்தல்தான் அரிது என்கிறார். ஏனென்றால் அதுதான் இனப்பெருக்கத்திற்கான வழி. ஆனால், வாழ்தல் என்பது வெறும் இனப்பெருக்கத்தை மட்டுமே மையப்படுத்தியது அல்ல. வாழ்க்கை என்பது பலவாறானது.

சில ஆண்களிடம் பெண்மைக்கான பண்புகள் சற்று அதிகமாக இருக்கும். சில பெண்களிடம் ஆண்களுக்கான பண்புகள் சற்று அதிகமாக இருக்கும். அவர்களை அவர்களாகவே ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் புரிதலும் எந்தக்காலத்திலும் மனிதர்களுக்கு இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் இப்போது அதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு கலை கலைஞர்களில் கைகளில் வந்திருக்கிறது. இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு உள்ளதை உள்ளபடி எடுத்துரைத்து மக்களிடையே விழுப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கடமை அனைவருக்கும் இருக்கிறது.

L G B T Q I A +

‘L’ என்றால் Lesbian. தன்பாலீர்ப்பு கொண்ட ஒரு பெண்ணைக் குறிக்கும் சொல். இது உணர்வு சார்ந்த விடயம். ஒரு பெண்ணுக்கு எப்படி இன்னொரு பெண்ணைப் பிடிக்கும் என்பதுதான் இன்னமும் பலரது கேள்வி. இக்கேள்விக்கு பதில் கிடைக்காமல் இல்லை. பதில்களை ஏற்றுக்கொள்ளும் புரிந்துகொள்ளும் தன்மையே இல்லாதவர்களால் இதனை எளிதில் கடந்து வர முடியாது. தாராளமாக ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண்ணைப் பிடிக்கலாம். இது உடல்சார்ந்த விடயம் அல்ல. முழுமையான பெண்களுக்கும் இன்னொரு பெண்ணின் மீது காதலும் வரும்.

‘G’ என்றால் ‘Gay’. தன்பாலீர்ப்பு கொண்ட ஒரு ஆணைக் குறிக்கும் சொல். லெஸ்பியன்கள் போலதான் இவர்களும். ஒரு ஆணுக்கு இன்னொரு ஆணின் மீது காதலும் காமமும் ஏற்படலாம். இவர்களும் உடல் அளவில் முழு ஆணாக இருப்பார்கள். சிலர் gay என்ற சொல் பொதுவாக தன்பாலீர்ப்பு கொண்டவர்களை குறிக்கும் எனவும் விளக்குகின்றனர்.

‘B’ என்றால் ‘Bisexual’. சிலருக்கு ஆண் பெண் இருபாலர் மீதும் ஈர்ப்பு இருக்கும். இவர்கள் ஆணாகவும் இருக்கலாம். பெண்ணாகவும் இருக்கலாம். திருநங்கையாகவும் இருக்கலாம். இதுவும் அவரவர் மனதின் விருப்பத்தைப்போன்றது.

‘T’ என்றால் ‘Transgender’. இந்த வார்த்தை நம்மில் பலருக்கு தெரிந்ததுதான். ஆணாகப்பிறந்து, பெண்ணாகவோ அல்லது பெண்ணாகப் பிறந்து ஆணாகவோ மாறிவிடுவார்கள். இவர்களை இழிவாக சித்தரித்தே தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட காட்சிகள் காமெடி என்று வடிவமைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக ஒரு ஆண் பெண்போல வேடமிட்டாலோ, நடந்துகொண்டாலோ அதனை நக்கலடிக்காமல் இருக்க யாருலும் முடியாது. அலி, பொட்ட, ஒம்போது என பலவாறான இழி பெயர்களை தவறாமல் அடுத்தத்த தலைமுறைகளுக்கு கடத்திவந்தனர். சமீப வருடங்களில்தான், இவர்களுக்கான பொதுப்பெயராக, திருநங்கை transwoman, திருநம்பி transman, இவர்கள் இருவரையும் குறிக்கும் பெயராக திருநர் transgender ஆகியவை வழக்கத்திற்கு வந்தன. ஒரு ஆணின் மனம் பெண்ணில் உடலில் சிக்கிக் கொண்டால் எவ்வளவு சிரமப் படுமோ, அதே சிரமம்தான் ஒரு பெண்ணாக உளமாற உணர்பவர்களும் பிறப்பால் ஆணின் உடலில் சிக்கிக்கொள்வர். தான் ஒரு தவறான உடலில் இருப்பதாக உணர்வார்கள். இது க்ரோமோசோம்களின் கலவையே அன்றி தனிப்பட்ட நபர்களின் கேரக்டர் இல்லை. சமூகத்தில் இவர்களும் நல்ல நல்ல பதவிகளில் கால்பதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குறியது.

‘Q’ என்றால் ‘questioning’. இவ்வகை நபர்கள், தனக்கு யார் மீது ஆர்வம் மிகுதியாய் இருக்கிறது என்று குறிப்பிட்டு சொல்லத்தெரியாதவர்கள். அல்லது அதைக்கண்டரியும் நோக்கில் பயனப்படுபவர்கள். ‘Q’ என்றால் ‘Queer’ என்றும் குறிப்பிடுகிறார்கள். gay என்றால் ஒரு ஆண் இன்னொரு ஆண்மீது ஈர்ப்பு கொள்வதாக எடுத்துக்கொள்ளலாம். குயிர் என்பதும் ஆணின்மீது வரும் ஈர்ப்புதான் ஆனால் தான் எந்த பாலினத்தைச் சேர்ந்தவர் என்ற அடையாளம் அற்று தனது விருப்பத்தை மட்டும் வெளிப்படுத்த உதவும் ஒரு தனிச்சொல்.

‘I’ என்றால் ‘Intersex’. இவர்கள் சற்று அரிய வகையினர். முழுமையான ஆணும் அல்லாமல், பெண்ணும் அல்லாமல், இரண்டும் கலந்து, பிறப்புறுப்பு, க்ரோமோசோம்கள், இனப்பெருக்க உறுப்புகள் என்று அனைத்திலும் சின்ன சின்ன மாற்றங்களுடன் மொத்தம் முப்பது வகையாக இவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் ‘Intersex” என்ற ஒற்றை வார்த்தைக்குள் கொண்டுவருகிறார்கள். ஏனென்றால் மேலே உள்ள ஐந்து வகையினரும் LGBTQ தனித்தனியாக குறிப்பிட்ட உடல் பண்புகளைக் கொண்டிருப்பார்கள். ஆனால் இண்டர்செக்ஸ் எனப்படுபவர்களுக்கு பலவாறான உடல் பண்புகள் இருக்கின்றன. கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தி இவர்களைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்.

https://www.slideshare.net/balogunwasiu/hermaphroditism-45763096

‘A’ என்றால் ‘Asexual’. இவர்களுக்கு ஊடலில் குறைவான ஆர்வமோ அல்லது கொஞ்சம் கூட ஆரவமில்லாமலோ இருக்கும். இவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆண், பெண், திருநர், இண்டர்செக்ஸ்.

இப்படி பலவாரன உடல் அமைப்புகளையும், பாலின ஈர்ப்புகளையும், உணர்வுகளையும் உள்ளடக்கிய பல வகுப்பினர் இங்கு இருக்கிறார்கள். இந்தப்பட்டியல் இப்படி நீண்டு கொண்டே செல்வதாலும், இவர்களுக்கென தனியே ஒரு + குறியீட்டை பயன்படுத்துகின்றனர்.

‘+’ என்றால் மேலே குறிப்பிட்ட வகுப்பினரும் அல்லாது ஏனையோரைக் குறிப்பது ஆகும். இதில் Pansexual, Allosexual, Aromantic, Demiromantic, Demisexual, Dyke, Faggot, Androsexual, Gynesexual, Polyamorous, skoliosexual, sapiosexual, reciprosexual, இத்யாதி இத்யாதி வகுப்பினர் உண்டு. அதனால் ‘+’ குறியீட்டை பயன்படுத்துகின்றனர். ‘+’ல் வகைப்படுத்தப்படும் பட்டியலில் சிலவகுப்பினர் இடம்பெற மாட்டார்கள். அவர்கள் heterosexual/straight- எதிர்பாலின ஈர்ப்பு கொண்டவர்கள் மற்றும் cisgender- பிறப்பால் எந்த பாலினத்தவரோ அதே உணர்வுடன் வாழ்பவர்கள். ஆணாகப் பிறந்து உடலிலும் உணர்விலும் முழு ஆணாக இருந்து ஒரு பெண்ணின் மீது ஈர்ப்பு கொள்பவர்கள் அல்லது பெண்ணாகப் பிறந்து உடலாலும் உணர்வாலும் முழு பெண்ணாக இருந்து ஒரு ஆணின் மீது ஈர்ப்பு கொள்பவர்கள். இவர்கள் ‘+’ல் இடம்பெற மாட்டார்கள்.

ஏன் இவ்வளவு தனித்தனிப்பெயர்கள்? ஏன் இவ்வளவு பெருமை இதில்? இதில் பெருமைகொள்ள என்ன இருக்கிறது? என்று பலரும் கூறக்கேட்டிருக்கிறேன். அதுவும் ப்ரைட் வாக்கின் போது வரும் சகிக்கவியலாத பேச்சுகளுக்கு குறைவே இல்லை. அதற்கான பதிலும், மேலே வகைப்படுத்தப்பட்ட தனிப்பெயர்களுக்கான தேவையும் இதோ. இங்கு பெரும்பாண்மை என்னவாக இருக்கிறதோ அதுவாகத்தான் சிறுபாண்மையும் இருக்கவேண்டும் என்ற திணிப்பும் அப்படி இல்லையேல் அதை வதைகளுக்கும், இழிவுகளுக்கும், குற்றவுணர்வுக்கும் உட்படுத்த முற்படும் மிருகத்தனம்தான் வளர்க்கப்பட்டு வருகிறது. ஒருவரை அவரது பாலின அடையாளத்தை வைத்து சிறுமை படுத்த முயற்சிக்கும் போது, குற்றவுணர்வுக்கு ஆட்படுத்தும்போது, தன்போன்றோரைத்தேடி தனக்கான குரலை பதிவு செய்து, தனக்கான அடிப்படை மரியாதையேக் கோரவும், “தனது பாலினத்தாலும், தனது பாலீர்ப்பாலும் தான் குறைவாக உணரவில்லை, நிறைவாகத்தான் உணர்கிறேன். சரியாகத்தான் உணர்கிறேன்.” என்பதை உரக்கச் சொல்வதற்கும் ‘எனது சுயத்தில் நான் வெட்கப்பட ஏதுமில்லை” என்பதை உலகுக்கு உணர்த்த இந்தப் பெயர்களும், முத்திரைகளும், pride-உம் அவசியம் தேவைப்படுகிறது.

சரி இவ்வளவு விசியங்களையும் பெரும்பாண்மையான பொதுப் புத்திக்காரர்கள் புரிந்துக் கொள்வார்கள் என்று நாம் எதிர்பாக்கலாமா? இதை பொதுமக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்று யோசியுங்கள். இத்தனை நாட்கள் முகம்சுளித்தே பழகியவர்கள், இழிவுபடுத்தி பழகியவர்கள், நகைத்துப்பேசி மட்டுமே பழிகியவர்கள், அசிங்கம், கேவலம், என்று பலவாறு அறுவருப்புடன் பேசியவர்களால் முழுமனதுடன் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் வரும் தலைமுறையினருக்கு இதனை முறையே நல்வழியில் அறிமுகப் படுத்த முடியும். அதற்கு இன்னும் ஆயிரம் நட்சத்திரங்கள் நகரவேண்டும். நகரும் என்று நம்புவோம்.

None of your business. இதைத்தான் நான் சொல்லவிரும்புகிறேன். நான் யாருடன் உறவுகொள்ள விரும்புகிறேன் என்பதோ, நான் யாரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்பதோ, நான் ஆணா பெண்ணா திருநங்கையா திருநம்பியா என்பதோ, நான் யாராக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகிறேன் என்பதோ நான் மட்டுமே கவலைப்படவும் மற்றும் நான் மட்டுமே முடிவெடுக்க வேண்டிய விஷயம். அதைத் தீர்மானிக்க எனது குடும்பத்தினருக்கோ, சொந்தக்காரர்களுக்கோ, நண்பர்களுக்கோ, ஊரார்களுக்கோ யாருக்கும் உரிமை இல்லை. Stereotype-களாகத்தான் வாழவேண்டும் என்று நிர்பந்திக்க யாருக்கும் உரிமை இல்லை. None of your business.

ஆனால், நான் யாரக இருக்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அக்கறைகொள்ளும் நபர்களும் என்னோடு சேர்ந்து பெரும் போராட்டத்தை எதிர்கொள்ள நேரிடும். odd man out-ஆக ஒருவரை இச்சீர்மிகு சமூகம் புறக்கணிக்கும். இதைவெல்ல போதுமான மனத்திண்மை பாதிக்கப்படுவோர்களிடம் இருப்பது அரிது. வரலாற்றை திரும்பிப் பார்த்தால், பெண்களுக்கான வாக்குரிமையே சமீப ஆண்டுகளில்தான் நாம் பெற்றுள்ளோம். feminism-ஐ சரிவரப் புரிந்துகொள்ளவே (ஆண்களுக்கும் பெண்களுக்கும்) இன்னும் பல ஆண்டுகள் தேவைப்படலாம். இவர்களிடம் “LGBTQIA+” என்றால், “அப்டினா?” என்பார்கள்.

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-1/4 ஆணவக்கொலைகள்

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-3/4 ரெனேக்களும் காதலும்

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-4/4 படங்கள் வளர்க்கும் எதிர்காலம்

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-1/4 ஆணவக்கொலைகள்

Preview in new tab

Watch Natchathiram nagargiradhu movie here in Netflix

படம் சுமார்தான். ஆனால் படத்தில் பேசுபொருட்களாக எடுத்துக்கொண்ட தலைப்புகள் மிக முக்கியமானவை. இந்தப்படத்தை நான்கு பாகங்களாகப் பிரித்துக் கொள்ளலாம். ஒவ்வொன்றும் பெரிய தலைப்புகள்தான்.

  1. ஆணவக்கொலைகள்
  2. LGBTQIA+
  3. ரெனேக்களும் காதலும்
  4. படங்கள் வளர்க்கும் எதிர்காலம்

பகுதி-1 ஆணவக்கொலைகள்

தமிழ்நாட்டில் ஆணவக்கொலைகள் ஆங்காங்கே அரங்கேறுவது புதிதல்ல. அதன் பின்னனி முழுக்க 100 விழுக்காடும் ஜாதிப்பற்று அல்ல. அதில் ஒரு உளவியல் சார்ந்த சிக்கலும் இருக்கிறது.

உதாரணத்திற்கு ஒரு பொருளாதாரத்தில் நடுத்தர வர்க்கம் என்று குறிப்பிடப்படும், ஒரு டிபிக்கல் குடும்பத்தை எடுத்துக்கொள்ளலாம். சொந்த வீடு, லோன் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். ஒரு கார். இரண்டு அல்லது மூன்று பைக்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீட்டின் அப்பா ஒரு இயல்பான மனிதர் என்றே கொள்வோம். அவர் தினசரிகளில் வழக்கமாக செல்லும் இடங்கள் என்று சில இடங்களும், அங்கே வழக்கமாக சந்திக்கும் நபர்களும் இருப்பார்கள். நண்பர்கள் தெரிந்தவர்கள் என தினம் ஒரு பத்து பேரிடமாவது குறைந்தது ஐந்து நிமிடங்கள் ஏதேனும் பேசிவிட்டு வருவார். இந்த பேச்சுதான் அவரை இயல்புநிலையில் வைத்துக்கொள்ள உதவும். எதுவும் முக்கியமான பேச்சுகள்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

“நேத்து நல்ல மழை, நைட்டு ஐம்பது நிமிஷம் கரண்ட்டே இல்ல. உக்ரேன்ல போர் நிறுத்திட்டாங்க. குஜராத்ல வெள்ளம். இந்த முறையும் ரெட்டலதான் வரும். வெயில் இப்பலாம் ஜாஸ்தி.”

இப்படியாக நியுஸ்பேப்பரிலும், அக்கம் பக்கத்தில் இருந்தும் அறிந்து வைத்திருந்த மேட்டர்களை பகிர்ந்து கொள்வர். இதுதான் இன்றளவும் தமிழ்நாட்டின் பெரும்பாலான குடும்பஸ்தர்களின் ராஜபோதை. இந்த நாலு பேரு மதித்து பேசும்படி இவரும், இவர் நின்று மதித்து பேசும்படி அந்த நான்கு பேர்களும் வாழ்ந்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள். இதற்காகவே சாராயம் தொடாதவர்களும் அதிகம் இருக்கிறார்கள். குடிச்சா யாரும் மதிக்க மாட்டாங்க என்பதால். இதற்காகவே டீ கடைகளில் டீ குடிப்பவர்களும் அதிகம். அங்குதான் நட்பு வெகுவாக பாராட்டப்படும்.

அந்தக் குடும்பத்தின் அம்மாவை எடுத்துக் கொள்வோம். இரண்டு பிள்ளைகளை வளர்த்த களைப்பு இன்னும் இருக்க, அதனோடே கணவனுக்கு மாத்திரைகளை எடுத்து கொடுத்து அவரையும் குழந்தைப்போல பார்த்துக்கொள்ளும் ஒரு அம்மாவின் மாபெரும் ஆறுதலே அவரைப்போன்ற மற்றோரிடம் பேசித்தீர்ப்பதுதான். அவர்களுக்குள்ளும் எப்போதுமே முக்கியமான பேச்சுக்கள் மட்டுமே இருக்காது. வாணி ராணி தொட்டு, பிக்பாஸ் வந்து, அமெரிக்காவில் இருந்து லீவில் வந்துவிட்டுப்போன சொந்தக்கார பையனைப்பற்றி பேசி, இன்னிக்கு என்ன டிஃபன் வரை எல்லா விசியங்களையும் சகஜமாகப் பேசி சிரிக்க ஒவ்வொரு சமயத்திலும் யாரேனும் ஒருவர் கிடைப்பர். இவர்களிடம் பேசுவதனாலே அம்மாக்களின் மனம் ஆசுவாசப்படும்.

இந்த சூழ்நிலையில் மகளோ மகனோ காதல் திருமணம் செய்துகொண்டால், அது வேறு ஜாதியில் இருந்தால், அந்த தினசரிகளில் இவர்கள் சந்திக்கும் மனிதர்களே இவர்களிடம் இயல்பாகப் பழக மாட்டர்கள். லாக்டவுன் காலத்தில் கொரோனா வந்த வீட்டின் முன்பு பச்சை நோட்டீஸ் ஒட்டுவார்கள் அல்லவா, அதைப்போலவே இவர்களது வீட்டின் விசியமும் ஏனையோர்களுக்கும் ஒரு பேச்சுபொருளாகிவிடும். இவர்களது வீடு பேச்சுபொருளாக ஆகியிருக்கிறது, அதற்கு காரணம் நடந்த காதல் திருமணம்தான் என்னும் தகவலை அந்த ஏனையோர்களில் சிலர் இந்த பெற்றோரிடமே சொல்லி அரிப்பை ஆர்கஸமாக்கிக் கொள்வர்.

இப்படிப்பட்ட சமூகத்தில்தான் நாம் வாழ்ந்து வருகிறோம். இந்த பெற்றோர்களும் தெரிந்தோ தெரியாமலோ பிறர் வீட்டில் காதல் திருமணம் நடக்கும் போதும் இதையேதான் செய்வர். இந்த சுற்றத்தாரின் பார்வை, சொல் தாங்காமலோ, தாங்கமுடியாது என்று பயந்தோதான், காதல் திருமணம் செய்த பிள்ளைகளை பெற்றோர்கள் இன்னும் சேர்த்துக்கொள்வதில்லை. யாரையும் பார்க்க முடியாமல், யாரிடமும் பேச முடியாமல், டிவிகளில் ஓடும் நியுஸ் சேனல்களையும், சீரியல்களையும் பார்த்து நாட்களை கடத்துவர். பிள்ளைகளது வாழ்க்கை அவர்களுக்கு பிடித்தது போல் இருப்பதில் இவர்களுக்கு எந்தப்பிரச்சனையும் இல்லைதான். ஆனால், சமூக அங்கீகாரம் கிடைக்கப்பெறாததால், அப்பாக்களின் தினசரிகளும், அம்மாக்களின் தினசரிகளையும் ஒரு காதல் திருமணம் சிதைத்து விடுகிறது. காமன் மேன்களால் இந்த உளவியல் சவாலை சமாளிக்கமுடியாமல் தினறவேண்டியதாக உள்ளது. இதைப்பற்றி பிள்ளைகள் கவலைப்பட்டு அப்பா அம்மாவிற்காக காதல் திருமணத்தை தவிர்க்க வேண்டியதில்லை. அந்த சவால்களை எளிதாக எதிர்கொள்ள பிள்ளைகள்தான் உடனிருந்து சொல்லிக்கொடுக்க வேண்டும். அந்த ஜெனேரஷன் கேப்பை நிறப்ப நிறைய விசியங்களை வெளிப்படையாக பேசவேண்டும். அவர்களின் சம்மதத்தோடு அதே காதல் திருமணம் சுற்றமும் நட்பும் சூழ நடக்க வேண்டும்.

எனது காதுகளில் நன்கு கேட்கிறது. இது எல்லோரது வீடுகளிலும் நடக்க வாய்ப்பு இல்லை. அதுவும் ஜாதி மூலமாகவே ஒரு கெளரவத்தையும் சொத்துகளையும் சேர்த்து வைத்த பெரிய மனிதற்களின் குடும்பத்தில் இது நடக்க வாய்ப்பே இல்லை.

அளவுக்கு அதிகமான பணமும் பிறர் மீதான அதிகாரமும் ஒருவனுக்கு பிறப்பின் காரணமாக மட்டுமே கிடைத்து அதையும் அவன் சிறுவயது முதலே அனுபவித்து வளர்ந்து திடீரென தன் மகனோ மகளோ வந்து பிற ஜாதியில் ஒருவரை திருமணம் செய்து வையுங்கள் என்று சொன்னாலே போதும், பாயாசத்தை ரெடி செய்ய தொடங்கிவிடுவார்கள். அந்த அளவிற்கு இமேஜினால் மட்டுமே வாழ்ந்து வந்திருக்கிறார்கள். தன்னால் சுயமாக சம்பாதிக்க முடியாத இயலாத சொத்தையும் மரியாதையையும் இந்த ஜாதியில் பிறந்த ஒரே காரணத்தினாலே granted ஆக அணுபவித்து வந்திருக்கிறார்கள். இப்போது அந்த சகல செளகரியத்தை யாருக்காக விட்டுத்தருவார்கள்? யாருக்காகவும் விட்டுத்தர மாட்டார்கள். இவர்களின் தினசரி வாழ்க்கையை வசதியாக நடத்த பத்துக்கும் மேற்பட்ட கூலி ஆட்களை வேலைக்கு வைத்திருப்பர். மிகக் குறைந்த சம்பளத்தில் இவர்கள் எளிதில் கிடைப்பர். இவர்களை அடக்கி ஆள்வதில்தான் எத்தனை போதை இந்த பணம்படைத்த சாதிக்காரர்களுக்கு. இப்படி இருக்க தன் மகனோ மகளோ பணமில்லாத சாதியில் ஒருவரை காட்டி அவரையே திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்பது கூலிக்காரனை சம்பந்தி ஆக்குவதில்லையா? வாசலில் நின்று கைகட்டி பேசிய வேலைக்காரன், தோளில் துண்டு போட்டுக்கொண்டு நடுவீட்டில் உட்கார்ந்து சம்பந்தம் பேசுவது போன்ற காட்சிகளை கனவிலும் நினைத்துப் பார்க்காதவர்கள். இப்படிப்பட்ட சூழலில் பெற்றோர்கள் இருக்க, சரியான சமயத்தில் சக ஜாதிக்கார சொந்தங்கள், நண்பர்கள், பங்காளிகள் வந்து வேதம் ஓதுவார்கள். சாதிப்பெருமை, சாதிப்பற்று, சாதி வெறி, என அனைத்து கோணங்களிலும் ஒரு அப்பனையும் அம்மாவையும் நொடித்து பேசி, இதை சரிசெய்ய எந்த எல்லைக்கும் செல்லத்தான் வேண்டும் என்று நம்பவைத்துவிடுவர். பல சமயம் பணக்கார வீட்டு பிள்ளைகளை பலிகொடுப்பதில்லை. பணம் இல்லாதவர் வீட்டு பிள்ளையை பலி கொடுத்து பணம்படைத்த வீட்டு பிள்ளைகளை கலங்கப்படாமல் காப்பாற்றிவிடுவார்கள். கோகுல்ராஜ், இளவரசன் போன்றவர்களின் படுகொலைதான் வெளியில் பலருக்கும் தெரிந்திருக்கிறது. வெளியில் தெரியாத பல பெயர்கள் இன்னமும் உண்டு.

ஜாதிகளில் இருக்கும் படிநிலைகளை சமன்செய்ய ஜாதிக்கலப்பு திருமணம் ஒரு முழுமையான தீர்வாக அமையாது. ஏனென்றால், ஜாதி கலப்பு திருமணங்களில் பிறக்கும் பிள்ளைகளை அரசாங்கத்தின் சலுகைகள் கிடைக்கவேண்டியோ அல்லது ஆணாதிக்கத்தாலோ அப்பாக்களின் ஜாதியையே பிள்ளைக்கும் பதிவிடுகின்றனர். ஆகவே, கலப்பு திருமணம் எவ்வளவு செய்தாலும் ஜாதி ஒழியாது. ஒரு ஜாதியினரின் பிள்ளை வேறு ஜாதியினரின் பட்டியலில் சேர்க்கப்படுவதினால் ஜாதி மாறுகிறதேத் தவிற ஜாதி அழிவதில்லை.

பின்பு எங்கிருந்து இதனை சரி செய்வது?

பொருளாதாரம். பொருளாதாரத்தினால் மட்டுமே வீழ்த்தப்பட்டார்கள். சோற்றுக்கே வழி இல்லாத சூழலில் அடிமைப்பட்டு உயிர்பிழைத்ததை நினைவில் கொண்டு, நிகழ்காலத்தில் கிடைக்கும் அத்தனை வாய்ப்புகளையும் பயன்படுத்தி படித்து, தொழில்தொடங்கி, தொழில் தொடங்க உதவி, பொருளாதாரத்தில் தன்னிறைவடைய வேண்டும். கோடி ரூபாய் இருந்துவிட்டால் மட்டும் கீழ் ஜாதி எனப்படுவோருக்கு மேல் ஜாதி எனப்படுவோர் தத்தம் மகனையோ மகளையோ திருமணம் செய்து கொடுப்பார்களா? நிச்சயமாக இல்லை! ஆனால், அதற்கான தகுதி உங்களுக்கு இருக்கும். நாடகக் காதல் என்ற பொய் குற்றம் சாட்ட வாய்ப்பிருக்காது. மாறாக வரட்டு கெளரவம்தான் திருமணத்திற்கு தடையாக இருக்கிறது என்ற உண்மையை மேல் ஜாதி எனப்படும் குடும்பத்தினர் உணர நல்ல வாய்ப்பு உள்ளது. ஆனாலும், இவை அனைத்து ஒரே நாளில் நிறைவேறாது. பொருளாதார ரீதியாக மேம்பட இன்னமும் ஒரு தலைமுறை காலமாக ஆகும் என அனுமானிக்கிறேன்.

சில சமயங்களில் ஒடுக்கப்பட்ட மக்களில் சிலருக்கு, மேல் சாதிக்காரனுக்கு பணத்தினால்தானே இத்தனை திமிர் என்று உணர்ச்சிவசப்பட்டு, பணம்படைத்தோரின் பணத்தையும் செல்வத்தையும் சூறையாடுவது மட்டுமே வழி என்று தப்பு கணக்கு போட்டுவிடுகின்றனர். அதன் விளைவே, கட்ட பஞ்சாயத்தின் போது, பணம் படைத்தவர்களை பணத்தை இழக்க வைக்க பேரம் பேசி பெரிய தொகையை பெற்று விடுகிறார்கள். இதுவும் சமூகத்தில் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது. பொருளாதாரத்தில் சமனடைய பணம் வைத்திருப்பவர்களிடம் அடாவடியாக பறிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இக்காலத்தில் பலரும் திறம்பட உழைத்து நிறைய பொருள் ஈட்டுகிறார்கள். நமக்கான வசதியை நாம் உருவாக்கிக்கொள்ள வேண்டும். யாரிடம் இருந்தும் இலவசமாகவோ அடாவடியாகவோ பெறக்கூடாது.

ஆணவக்கொலைகள் அனைத்தும் கேட்க ஆளில்லாத நசுக்கப்பட்டவர்களின் மீது மட்டுமே நிகழ்த்தப்படுவது ஒன்றை தெளிவாக விளக்குகிறது. ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இன்னொரு சமுதாயத்தைச் சேர்ந்தவரை என்ன வேண்டுமானாலும் செய்யத்துணிகிறார்கள். அந்தத் துணிவு, ஆணவம் எப்படி வந்தது? அவர்களிடம் இருக்கும் பணபலத்தை நீக்கிவிட்டாலும் இதே போல வெறிகொண்டு எழுந்து வருவார்களா? கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பம் வசதிவாய்ப்புடன் இருந்திருந்தால், கொலை செய்ய துணிந்திருப்பார்களா? ஒரு உயிரைப் பறிகொடுத்த குடும்பம் அந்தக் குற்ற வழக்கை எடுத்து தொடர்ச்சியாக நடத்தக்கூட வசதியில்லாத நிலைமை குற்றவாளிகளுக்கு எவ்வளவு சாதகமாக அமைகிறது. அறியாமையையும், ஏழ்மையையும் களையத்தான் கல்வியும், சலுகைகளும் பெற்றுத்தந்துள்ளார் அன்னல் அம்பேத்கர். ஆணவத்தை அறிவுகொண்டு அடக்கிவிட முடியும். அடக்கிவிடுவோம். அறிவின் பின்னால் நாம் செல்வோம், நம் பின்னால் பொருளாதாரம் வரும், பொருளாதாரத்தின் பின்னால் சுதந்திரம் வரும். அடக்குமுறைகள் அக்கிரமங்கள் அற்ற முழு சுதந்திரம்.

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-2/4 LGBTQIA+

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-3/4 ரெனேக்களும் காதலும்

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-4/4 படங்கள் வளர்க்கும் எதிர்காலம்

பாலியல் தொழிலும் ஒரு தொழில்தான் – உச்சநீதிமன்றம்

பாலியல் தொழில் குற்றமல்ல என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சட்டம் அனுமதிக்கும் எல்லாமும் சரியும் அல்ல, சட்டம் தடைவிதித்த அனைத்தும் தீங்கும் அல்ல. குறிப்பாக பாலியல் தொழில் ஒரு குற்றமல்ல என்று கருதியிருக்கும் உச்ச நீதிமன்றம், இதில் உள்ள அனைத்து விளைவுகளையும் எண்ணி தொலைநோக்கு பார்வையுடன்தான் இந்த தீர்ப்பை வழங்கியிருக்க வேண்டும். இதன் ஒரு முனையை தொட்டால் இன்னும் பல பிரச்சனைகளும் இதில் சம்மந்தப்படும். இது ஒரு தனி பிரச்சனை அல்ல. பாலியல் தொழில் என்பது ஒரு சமூகம் நேர்த்தியாக செயல்பட முடியாமல் தோற்றுப்போனதற்கான முத்திரையாகவே நாம் புரிந்து கொள்ள வேண்டும். பாலியல் தொழில் சரியா தவறா தேவையா தேவையில்லையா என்ற முடிவுக்கு வரவேண்டுமென்றால் முதலில் வருங்கால சமுதாயத்தை நிரப்பவிருக்கும் மாணவர்களிடம் இருந்துதான் வரவேண்டும்.

வரும் தலைமுறையினரின் கல்வி:

ஏற்கனவே அரசு இயற்றியுள்ள புதிய கல்விக்கொள்கையினால் எத்தனை மாணவர்கள் மேற்படிப்புகளுக்கு செல்லப்போகிறார்கள் என்ற அய்யம் எனக்குண்டு. தொழில் முனைவோர்கள் நமது சமுதாயத்திற்கு வேண்டும்தான். ஆனால், கல்லூரி படிப்பினை முடிக்காமல் ஆரம்பிக்கும் ஒரு தொழிலை அவர்களால் எந்த உயரத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்று எண்ணிப்பாருங்கள். ஓயோ (oyo) நிறுவனர் போன்று உதாரணங்களை நம்மிடம் தூக்கிக்கொண்டு வந்து நிற்பார்கள். நம்பாதீர்கள். இந்த நூற்றாண்டில் மொத்தமே சில ஆயிரம் நிறுவனர்கள்தான் அப்படி கல்லூரி படிப்பை முடிக்காமல் மல்டி மில்லியனர் ஆக முடியும். பெரும்பாலான மாணவர்களுக்கு அது சாத்தியம் இல்லை.

இந்த புதிய கல்விக்கொள்கை நிறைய கூலிக்காரர்களையும் ஒப்பந்தத் தொழிலாலர்களையும் ‘non skilled’ லேபர்ஸ் என்று சொல்லப்படும் தினக்கூலிகளையும்தான் உருவாக்கும். பிறகு அவர்களது தகுதி அதுதான் என்று நமக்கே புத்தி போதிக்கும். ஜாதிக்கொரு வேலை என்றாக்கி குடும்பத்தொழிலையே மகனும் மகளும் ஏற்றுக்கொள்ளும் நிலை வரும்.

கல்வி என்பது ஒருவனது தகுதியை மேம்படுத்ததானே தவிற, ஏற்கனவே ஒருவனது தகுதி இதுதான், ஒரு படிப்பினை படிக்கும் அளவிற்கு ஒருவன் தகுதியில்லாதவன் என்பது எத்தகைய கயமம் என்று எண்ணிப்பாருங்கள். டாக்டர் ஆவதற்கு ஒருவனுக்கு என்ன தகுதி வேண்டும் என்பது அதற்கான புத்தகங்களைப் படித்துப்பார்த்தப் பிறகுதான் அவனுக்கு பரிட்சை வைக்க வேண்டும். நீட் போன்ற தகுதித்தேர்வுகள் சற்றும் அறமற்றது.

மாணவர்கள் குடும்ப சூழல் காரணமாக வேலைக்கு செல்வது ஒரு கொடுமை என்றால், (அரசாங்கம் என்பது இந்த இடத்தில்தான் மாணவர்களுக்கு கை கொடுக்க வேண்டும். ஆனால்?) படிப்பதற்கு வழி இல்லை, சட்டம் இல்லை, வாய்ப்பு இல்லை, இடம் இல்லை என்பதற்காக வேலைக்கு போவது கொடுமையிலும் கொடுமை.

இப்படி பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான கதவுகளை அரசாங்கம் ஒவ்வொன்றாக மூட, மாணவர்களும் வேறு ஒரு பக்கம் திசை திருப்பப்படுகின்றனர்.

புடிச்சத பண்ணுஎனும் மாய மந்திரம்:

கடந்த இருபது ஆண்டுகளில் மாணவர்களின் காதுகளில் தேனாக வந்து விழும் வார்த்தை “புடிச்சத பண்ணு”.

எனக்கு இதில் வியப்பு என்னவென்றால் எல்லாருக்கும், சினிமா சம்மந்தப்பட்ட வேலைதான் பேசனாக புடிச்சதாக இருக்கிறது.

முதல் தேர்வாக போட்டோகிராப்பர், டைரெக்டர், ஆக்டர், யுடியூபர்.

இரண்டாம் தேர்வாக பாடகர், பாடலாசிரியர், கேமராமேன், எடிட்டர்.

ஒரு வித்தியாசத்தை மாணவர்கள் நன்கு உள்வாங்கிக் கொள்ள வேண்டும். I like one thing. I’m good at one thing. இரண்டும் ஒன்றாக இருக்கவேண்டிய கட்டாயம் ஏதும் இல்லை.

Self assessment test நிறைய மேற்கொள்ளுங்கள்.

கண்டிப்பாக உங்களுக்குள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட திறமைகள் ஒளிந்திருக்கக்கூடும், அதை தேடிக் கண்டு பிடியுங்கள். ஆனால், அதற்கான விலையாக உங்களது பட்டப்படிப்பை கொடுக்காதீற்கள். ஒரு வேளை உங்களுக்கு எந்த வாய்ப்பும் கிடைக்காமல் போய்விட்டால், நீங்க படித்த படிப்புதான் உங்களுக்கு கை கொடுக்கும்.

உங்களைப் பரவசமூட்டும் வேலைகளை கையில் எடுத்துக்கொண்டு இதுதான் என் திறமை என்று உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள்.

Humans can be easily manipulated thru movies.

Movie dialogues are not true. They are fantasy.

படிப்பது கடினம்தான். அதுவும் கவனமாகப் படிப்பது மிகக்கடினம்தான். அதற்காகத்தான் டாக்டர்கள் அதிகக்கட்டனத்தை வசூலிக்கிறார்கள். மருத்துவச்செலவை சற்று கவனியுங்கள். அவர்கள் கஷ்டப்பட்டு படித்ததற்கு சன்மானம் நாம்தான் வழங்கிக்கொண்டிருக்கிறோம்.

வேலை என்பது சற்றும் ரசமில்லாத, அலுப்பான, கடியான, தலைவலியான, வெறியேற்றக்கூடிய, எத்தகைய வேலையாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதை செய்வதன் மூலமாகத்தான் எனது குடும்ப சந்திக்கும் சிரமங்கள் குறையும் என்றால் நான் தாரளமாக அந்த வேலையை செய்வேன். ஆனால் அதில் அறம் இருத்தல் வேண்டும். காசுக்காக எதை வேண்டுமானலும் செய்யலாம் என்று போனால், ஜங்கில் ரம்மி, ரம்மி சர்கிள், போன்ற சூதாட்டத்தில்தான் நிற்போம். சூதாட்டத்தில் ஒருவனுக்கு மட்டுமே வெற்றி அவன் அந்த சூதாட்டத்தை நடத்துபவனே. சில கிரிக்கெட் மொபைல் ஆப்களும் இதே ரகத்தில் இருப்பதாக அறிகிறேன். 11team என்பது போன்ற பெயரில். இன்னும் டிரேடிங், போன்ற ஆப்கள் மூலம் சம்பாரிப்பதையும் நான் காண்கிறேன். இதுவும் நிலையற்ற அறமற்ற வருமானம்தான்.

என்ன வேலை செய்வது?

வேலை என்பது இரண்டு வகைதான். சேவை மற்றும் உற்பத்தி. Service and Product.

நீங்கள் செய்வது சேவையாக இருத்தல் வேண்டும். அல்லது ஒரு பொருளை நீங்கள் உற்பத்தி செய்தல் வேண்டும். இது இரண்டும் இல்லாத எதுவும் திருத்தமான சம்பாத்தியத்தில் வராது. நல்ல சேவை வழங்கி அதன் மூலம் வரும் வருமானத்தில் வாழலாம். நல்ல தரமான பொருட்களை உருவாக்கி அதன் மூலமாக வரும் வருமானத்தில் வாழலாம். இவ்விரண்டில் நீங்கள் தொழிலாளியோ முதலாளியோ எதுவாக இருந்தாலும் உங்களுக்கு அது திருப்தியாக இருக்கும்.

மாணவர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் கொண்டாடப்பட வேண்டும் என்று நினைக்கிறார்களா என்று தெரியவில்லை. பிரபலமாக இருந்தால்தான் வாழ்வில் வெற்றிபெற்றவராக ஒருவர் மதிக்கப்படுவர் என்ற எண்ணம் வேறூன்றி இருப்பதாக நினைக்கிறேன். அதன் காரணமாகவே மக்கள் கொண்டாடும் சினிமாத்துறையையே தங்களது தனித்திறன் என்று போலியாகவோ மாயையிலோ நம்பிக்கொண்டிருக்கிறார்கள். உங்களை கொண்டாட வேண்டியது நீங்கள்தான். வேறு யாரும் இல்லை. உங்கள் குடும்பம், நண்பர்கள், சொந்தங்கள் உங்களைக் கொண்டடினால் போதும். செலபிரிட்டியாக ஆகி மக்கள் உங்களிடம் வந்து செல்பி எடுக்க ஆசைப்படும் அளவிற்கு வளர்ந்தால்தான் வெற்றியாளர் என்ற எந்த நிற்பந்தமும் இங்கு இல்லை. fame light விழும் இடத்தை தேடிச்செல்லாதீர்கள். நீங்கள் செய்யும் வேலை நன்கு செய்தால், fame light உங்களைத்தேடி வரும்.

இதற்கும் செக்ஸ் வொர்க்குக்கும் என்ன சம்மந்தம் என்று இன்னேரம் நீங்கள் எண்ணி இருக்கலாம்.

பொருளாதாரம் முக்கியம் தம்பி:

ஒரு குடும்பம் என்பது நிலையான வருமானம் இருந்தால் சீராக வளரும். நிலையான வருமானம் இல்லையென்றால் குடும்பத்தில் நிறைய குழப்பங்கள் வரும். பொருளாதார நெருக்கடியினால் தூக்கில் தொங்கிய குடும்பங்களின் எண்ணிக்கை அரசாங்கத்திடம் கூட இருக்காது. குடும்பத்துடன் தீயிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட நிகழ்வு இன்னும் நமது மனதில் இருந்து நீங்கி இருக்காது என்றே நம்புகிறேன்.

ஆணோ பெண்ணோ குடும்பத்தை பார்த்துக்கொள்ள நிலையான வருமானம் இருவருக்கும் இல்லை எனக்கொள்க, குழந்தைய வளர்க்க செக்ஸ் ஒர்க் ஒரு லாவகமான வழி என்ற சூழல் மிக சாதாரனமாக உருவாகிக்கொண்டிருக்கிறது. இதில் அந்த பெண்ணுக்கும் எந்த பாதுகாப்பும் இருக்காது. அந்த பெண்ணுடன் இருக்கும் குழந்தைக்கும் எந்த பாதுகாப்பும் இருக்காது.

பொது சேவைக்காக எந்தப் பெண்ணும் தனது உடலை தடிமாடுகளுக்கு வாடகைக்கு விடப்பொவது இல்லை. பணத்திற்காகத்தான், செக்ஸ் வொர்க் லீகல் என்று அறிவிற்க ஒரு நாடு வெக்கப்பட வேண்டும். அவர்களுக்கான குடும்பத்தை அவர்களால் நிலைநாட்டிக்கொள்ள முடியாத அளவிற்கு பொருளாதர சூழல், வேலை இன்மை இருந்தால் அதை சரி செய்ய வேண்டிய கடமை அரசினுடையது.

“பிழைக்க வழி இல்லை என்றால் உடலை விற்று பிழைத்துக்கொள் நாங்கள் யாரும் எதுவும் (தேவிடியா என்று) சொல்ல மாட்டோம். மரியாதையாக நடத்துவோம். பணம் கொடுத்து படுத்துவிட்டு செல்வோம்.” என்பதாகத்தான் என் காதுகளில் கேட்கிறது.

சுள்ளான் படத்தில் வரும் காட்சி

சுள்ளான் படத்தில் பஸ்ஸில் ஒரு ஆண் ஒரு பெண்ணை உரசிக்கொண்டே வருவான், அந்தப்பெண் பொறுமை இழந்து, வா கல்யாணம் பண்ணிக்கலாம் என்று சொன்னால், ஆண் ஜகா வாங்கி விடுவான்.

அப்படி ஒரு குடும்பத்தை மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நிறைவாக கொண்டுசெல்லமுடியாத ஆண்கள் நிறைந்த காலகட்டம் வருவதற்குள், தன்னை உரசிப் பார்க்கும் ஆண்களிடம் பெண்களே வந்து “ஒரு நைட்டுக்கு ரெண்டாயிரம் ரூபாதான்” என்று சொல்லக்கூடிய காலகட்டம் வருவதற்கு எல்லா திசைகளிலும் வழிவகைகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

வாழ்வதற்கே வேறு வழியின்றி பாலியல் தொழிலை செய்யும் பெண்களுக்கு தற்காலிகமாக இந்த சட்டம் பாதுகாப்பளிக்கலாம். நீண்ட கால நோக்கத்தில் பார்க்கும் போது இது அடுத்த தலைமுறைக்கு தவறான அறமற்ற வாழ்க்கை முறைக்கு வாசலை திறந்து வைப்பதாகவே இருக்கிறது.

வரும் தலைமுறை மாணவர்களுக்கு தேவை தெளிந்த நல்லறிவு. திசை மாற்றி விட்டால், வட மாநிலங்களைப் போன்ற முட்டாள் ரவுடிக்கூட்டம் நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு மாறுவது நிச்சயம்.

குடும்பம் என்ற கட்டமைப்பு கனிசமாகக் குறைய, நிலையான வருமானம், இல்லறம் பற்றின அறிவு, இரண்டும் இல்லாத ஆணும், பெண்ணும் போதும்.

பெண்களில் பலர் வேசிகளாவர். ஆண்களில் பலர் கூலிகளாவர். இதை சரி செய்யக்கூடிய இடத்தில் இருப்பது பெற்றோர்களும், அரசும்தான். அபாயகரமான ஒரு எதிர்காலம் இருக்கிறது. விதி அந்தப்பக்கம் செல்லாமல் நல்வழிப்படுத்த போராடுவோம். உழைப்போம் உயர்வோம், அறத்துடன் வாழ்வோம்.

-சூர்யதேவன். 8.50 pm 27-05-2022